சிவகுமார் சுப்புராமன்
507 views
1 days ago
‘சோஷியல் மீடியா மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால் சோஷியல் மீடியா மூலம் ஆட்சியை நடத்த முடியாது’ என்பதை இன்று விஜய் உணர்ந்திருப்பார். தயாரிக்கப்பட்ட உரையை ஒரு தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசலாம்; சட்டமன்றத்தில்கூட பேசலாம். ஆனால் சட்டமன்றத்தில் மாற்றுக்கட்சிகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல டைமிங் சென்ஸ் வேண்டும். இன்று எப்படியும் தங்கள் அரசை யாராவது ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்று சொல்வார்கள், குதிரை பேரம் என்று சொல்வார்கள் என்று யூகித்து அதற்கான அளவான இரண்டு பஞ்ச் டயலாக்குகளுடன் வந்துவிட்டார் விஜய். ஆனால் வன்னி அரசு உரையில் கல்புர்கி, கௌரி லங்கேஷ், தமிழீழம் தொடங்கி பிரேமலதா, உதயநிதி வரை சுற்றிவளைத்த தாக்குதல்களால் அவர் திணறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ‘குதிரை பேர’த்துக்கு ‘குதிரை வேகம்’ பஞ்ச் டயலாக். ஆனால் அவருடைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, யாருமே ‘சிறுபான்மை அரசு’, ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்றெல்லாம் சொல்லவில்லை. இருந்தாலும் எழுதி வந்த ஸ்கிரிப்டை வீணாக்க வேண்டாமே என்று பேசிவிட்டு, சிலமணி நேரங்களுக்குப் பிறகு உதயநிதிக்கு சோஷியல் மீடியாவில் பதில் அளித்திருக்கிறார். அவர் பேசிய ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்குக்கும் முன்னுதாரணம் கலைஞர்தான் என்பதையாவது விஜய் தெரிந்துகொள்ளவேண்டும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி எம். எல்.ஏ ஒருவர் ‘’உங்கள் அரசு மூன்றாந்தர அரசு’’ என்று விமர்சித்தார். உடனே ‘’இது மூன்றாந்தர அரசு அல்ல; நாலாந்தர அரசு. வர்ணாசிரமப் படிநிலையில் நான்காவது வர்ணமான சூத்திரர்களின் அரசு’’ என்று பதில் அளித்தார். இந்த வரலாறு தெரிந்த ஒருவர்தான் விஜய்க்கு அந்த ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்கை எழுதிக்கொடுத்திருக்கிறார். ஆனால் கலைஞருக்கு இருந்த டைமிங் சென்ஸ்தான் அவரை அந்த பதிலைக்கூற வைத்தது. விஜய்க்கு டைமிங் சென்ஸ் இல்லாததால் சட்டசபையில் பதில் கூற முடியாமல் தோற்றிருக்கிறார். பனையூருக்கு எல்லோரையும் வரவைக்கலாம். ஆனால் சட்டசபையை சோஷியல் மீடியாவில் கூட்ட முடியாது சி. எம் சார்! #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #ஈகரை