சமூகநீதி, சமுகநீதின்னே பேசுறீங்களே, அப்படின்னா என்ன? என பலரும் கேட்டு பார்த்திருக்கிறேன்!
அதற்கு இந்த புகைப்படம் தான் மிகச் சிறந்த உதாரணம்!
நான்கு பெண் குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர்,
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்
சாதிய சமூக அடுக்கில் அருந்ததியர் என்ற மிகவும் ஒடுக்கப்பட சமூகத்தில் பிறந்தவர்
அரசுப் பள்ளியில் படித்தார்
ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞரால் உருவாக்கப்பட்ட 3% உள் ஒதுக்கிட்டீல், நீட் இல்லாத காலத்தில் மருத்துவர் இடம் கிடைத்தது!
மருத்துவ கல்வி முடிந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவராகிறார்
இன்று 27 வயதில் அவினாசி தொகுதி திமுக வேட்பாளராக, எந்த தேர்தலிலுலே வெல்ல முடியாத, பாசிச பாஜகவின் பணம் படைத்த ஒன்றிய அமைச்சர எல். முருகனை எதிர்த்து நிற்கிறார்!
பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும், இளம்பெண் மருத்துவரை, பாஜக ஒன்றிய அமைச்தராக இருக்கும் ஒருவரை எதிர்த்து நிற்க வைக்கிறது திமுக! அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல் அமைச்சர் வருகிறார்! அவருடன் இணைந்து தெருவில் ஒன்றாக வாக்கு கேட்கிறார்!
சமத்துவத்திற்கான சமூகத்தை உருவாக்குவதில் திமுகவின் பங்களிப்பை மறுத்தோ, மறைத்தோ பேசும் எவருமே சமத்துவத்திற்கான எதிரி தான்!
திமுகவின் சட்டமன்ற வேட்பளார்களில் 63 பேர் புதிய முகங்கள், மருத்துவர், பொறியாளர், சட்டம் படித்தவர்கள் என அறிவுசார் படையே களத்தில் நிற்கிறது! வெற்றி பெற வைப்பது நம் கடமை!
அந்த படையில் ஒருவர் தான் எந்த பின்புலமுமற்ற எளிய பிண்ணனியில் படித்து மருத்துவரான கோகிலாமணி! அவரை அடையாளம் கண்டு தேர்தலில் வாய்ப்பளித்திருக்கிறது திமுக, அதுவும் 27 வயதிலேயே!
கோகிலாமணிகளின் வெற்றியில் தான் திமுகவின் வெற்றி இருக்கிறது, பெரியார்-அண்ணா-கலைஞரின் வெற்றி இருக்கிறது! தமிழ்நாட்டின் சமூகநீதி இருக்கிறது!
வெல்வார் கோகிலாமணி, சரித்திரம் படைப்பார்!
பிலால் அலியார்
20/04/2026
துபாய்-அமீரகம்
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #