🌹 🌿 மனிதனின் முப்பது கடமைகள்!
🌹 🌿 நாரதர் கூறிய 30 கடமைகள்
🌹 தர்மபுத்திரருக்கு ஒரு முறை தர்ம சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தன. தனது சந்தேகங்களைத் தீர்க்க வல்லவரான நாரதைரை அவர் தரிசித்தார்.
நாரதரிடம் தனது சந்தேகங்களைக் கேட்க அவர் ஒவ்வொன்றாக விளக்குகிறார்.
பாகவதத்தில் ஏழாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு தர்மங்கள் நாரதரால் விளக்கப்படுகின்றன.
🌹 தர்ம ரகசியத்தை எனக்கு விளக்கி அருள்வீராக என்று யுதிஷ்டிரர் கேட்க நாரதர் விளக்கும் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டிய முப்பது கடமைகள் விளக்கப்படுகிறது.
🌹 அந்த முப்பது கடமைகளாவன:-
🌹 🌿 1) அனைத்துப் பிராணிகளுக்கும் இதம் செய்வதாகிய ஸத்யம்
2) பிறர் துக்கம் கொண்டு பொறுக்காமல் இருக்கும் தயை
3) உபவாசம் முதலிய தவம்
4) பொறுமை
5) விவேகம்
6) உள்ளே இருக்கும் இந்திரியமான மனத்தை அடக்குதல்
7) வெளி இந்திரியங்களை, அதாவது புலன்களை, அடக்குதல்
8) மனோ வாக்கு காயங்களால் மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்காமை
9) தகாத காலங்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளாமை
10) லோபம் இல்லாமை
11) முறைப்படி மந்திர ஜபம் செய்தல்
12) மனோ வாக்கு காயங்கள் ஒன்றாக இருத்தல்
13) தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கும் அன்னம் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றிருத்தல்
14) எல்லாவற்றையும் பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று சமமாய்ப் பார்க்கும் பெரியோர்களைப் பணிதல்
15) ப்ரவிருத்தி கர்மங்களிலிருந்து மீளுதல்
16) பயனற்ற காரியங்களைச் செய்யலாகாது என்று நிரூபித்து நிர்ணயித்தல்
17) வீண்பேச்சுப் பேசாமல் மிதமாகப் பேசுதல்
18) தேகத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் சொருபத்தை ஆராய்தல்
19) பிராணிகளுக்கு உரியபடி அன்னம் முதலியவற்றைக் கொடுத்தல்
20) அனைத்து பூதங்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும்
அமைந்திருக்கின்றார்கள் என்ற நினைவு கொண்டிருத்தல்
21) அனைத்து பூதங்களும் தன்னைப் போன்றவை என்றும், பரப்ரம்ம சொரூபங்கள் என்றும் பாவித்தல்
22) மனிதரிடத்தில் அந்த நினைவு எப்போதும் மாறாது நிறைந்திருத்தல்
23) பெரியோர்கள், “நமக்கு இவனே கதி” என்று பாவித்து வணங்கும் பகவானுடைய குணங்களைக் கேட்டல்
24) பகவானுடைய நாமங்களைக் கீர்த்தனை செய்தல்
25) அவனது சொரூப ரூப குண விபூதிகளை நினைத்தல்
26) அவன் பாதங்களைப் பணிதல்
27) அர்க்யம் , பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதித்தல்
28) அவனை வணங்குதல்
29) அவனுக்கு எல்லாவிதத்திலும் அநுகூலனாய் இருத்தல்
30) அவனிடத்தில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல்
🌹 இந்த முப்பதும் மனிதர்கள் அனைவரும் சாதாரணமாக அனுஷ்டிக்க வேண்டிய மேலான தர்மம் என்று நாரதர் யுதிஷ்டிரருக்கு விளக்கி அருளுகிறார்.
#💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #💪இலட்சிய கனவு 💭