பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
🌹🌿முருகன் 125 பெயர்கள் 🌿🌹
🌹 🌿 முருகன் என்றால் அழகு, இளமை என்று பொருள்படும். தமிழ்ச் சமுதாயத்தில் முருக வழிபாடு தொடர்பான சான்றுகள் ஏறக்குறைய தொல்காப்பிய காலத்திலிருந்து இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. உணவை உற்பத்தி செய்யும் காலத்தில் அல்லாமல், உணவைத் தேடி அலையும் காலத்தில் தோன்றிய கடவுள் முருகன் என்றும் சொல்லப்படுகிறது. இயற்கையை வணங்கிய கால கட்டம் அது.
🌹 கடவுளை வணங்குவதற்கு ஒரு உருவத்தை தேடினார்கள் மக்கள். அப்போது கூட ஒரு மனித உருவத்தை அவர்கள் வணங்க முற்படவில்லை. உணவைத் தேடி மிருகங்களை வேட்டையாடவும், அம்மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் அவர்கள் வடிவமைத்திருந்த கருவி தான் வேல். அதனால் வேலை வணங்க ஆரம்பித்தார்கள். வேலைப் பயன்படுத்துபவன் வேலன். இந்த வேலன் தான் பின்னர் முருகன், முதல் உருவ வணக்கம் வேலில் தான் தோன்றியது.
🌹 இந்தியாவில் இந்துக் கடவுள்களை குறிக்கக்கூடிய ஆறு விதமான சமயங்கள் இருக்கின்றன. அவை, சைவம் - சிவன் வழிபாடு, சாக்தம் - சக்தி வழிபாடு, காணாபத்யம் - கணபதி வழிபாடு, வைணவம் - திருமால் வழிபாடு, கௌமாரம் - முருகன் வழிபாடு. சௌரம் - சூரிய வழிபாடு என ஆறு வகையான சமயங்கள் இருக்கிறது. ஜோதிடம், ஆன்மீகம்,இன்றைய பஞ்சாங்கம் இன்றைய நட்சத்திர பலன், வார ராசி பலன்கள் குறித்த தகவலை அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
🌹 கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது. முருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயமே கௌமாரம் என்று கூறப்படுகிறது.
🌹 பூமியிலே முதலில் தோன்றியது மலை. மலையும், மலை சார்ந்த பகுதியையும், ‘குறிஞ்சி நிலம்’ என்று அழைப்பது தமிழர் மரபு. அந்த குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுள் முருகன். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று கூறுவார்கள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த தமிழுக்கு முதல்வன் சிவன். அந்த சிவன் முதலில் ஞானத்தைப் போதித்தது முருகனுக்கே என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்புகளும், தனித்துவமும் வாய்ந்த முருகப்பெருமானுக்கு பல அழகிய பெயர்கள் உண்டு. அவற்றில் சில பெயர்களை இக்கட்டுரையில் காண்போம்.
🌹 🌿 முருகப்பெருமானின் பெயர்கள்:
1. சக்திபாலன்
2. சரவணன்,
3. சுப்ரமண்யன்,
4. குருபரன்,
5. கார்த்திகேயன்,
6. சுவாமிநாதன்,
7. தண்டபானி,
8. குக அமுதன்,
9. பாலசுப்ரமணியம்,
10. நிமலன்,
11. உதயகுமாரன்,
12. பரமகுரு,
13. உமைபாலன்,
14. தமிழ்செல்வன்,
15. சுதாகரன்,
16. சத்குணசீலன்,
17. சந்திரமுகன்,
18. அமரேசன்,
19. மயூரவாஹனன்,
20. செந்தில்குமார்,
21. தணிகைவேலன்,
22. குகானந்தன்,
23. பழனிநாதன்,
24. தேவசேனாபதி,
25. தீஷிதன்.
26. கிருபாகரன்,
27. பூபாலன்,
28. சண்முகம்,
29 .உத்தமசீலன்,
30. குருசாமி,
31. திருஆறுமுகம்,
32. ஜெயபாலன்,
33. சந்திரகாந்தன்,
34. பிரபாகரன்,
35. சௌந்தரீகன்,
36. வேல்முருகன்,
37. பரமபரன்,
38. வேலய்யா,
39. தனபாலன்,
40. படையப்பன்,
41. கருணாகரன்,
42. சேனாபதி,
43. குகன்,
44. சித்தன்,
45. சைலொளிபவன்,
46. கருணாலயன்,
47. திரிபுரபவன்,
48. பேரழகன்,
49. கந்தவேல்,
50. விசாகனன்.
51. சிவகுமார்,
52. ரத்னதீபன்,
53. லோகநாதன்,
54. தீனரீசன்,
55. சண்முகலிங்கம்,
56. குமரகுரு,
57. முத்துக்குமரன்,
58. அழகப்பன்,
59. தமிழ்வேல்,
60. மருதமலை
61. சுசிகரன்,
62. குமரன்,
63. தயாகரன்,
64. ஞானவேல்,
65. சிவகார்த்திக்
66. குஞ்சரிமணாளன்,
67. முருகவேல்,
68. குணாதரன்,
69. அமுதன்,
70. செங்கதிர்செல்வன்,
71. பவன்கந்தன்,
72. திருமுகம்,
73. கதிர்காமன்,
74. வெற்றிவேல்,
75. ஸ்கந்தகுரு.
76. பாலமுருகன்,
77. மனோதீதன்,
78. சிஷிவாகனன்,
79. இந்திரமருகன்,
80. செவ்வேல்,
81. மயில்வீரா,
82. குருநாதன்,
83. பழனிச்சாமி,
84. திருச்செந்தில்,
85. சங்கர்குமார்,
86. சூரவேல்,
87. குருமூர்த்தி,
88. சுகிர்தன்,
89. பவன்,
90. கந்தசாமி,
91. ஆறுமுகவேலன்,
92. வைரவேல்,
93. அன்பழகன்,
94. முத்தப்பன்,
95. சரவணபவன்,
96. செல்வவேல்
97. கிரிசலன்,
98. குலிசாயுதன்,
99. அழகன்,
100. தண்ணீர்மலயன்.
101. ராஜவேல்,
102. மயில்பிரீதன்,
103. நாதரூபன்,
104. மாலவன்மருகன்,
105. ஜெயகுமார்,
106. செந்தில்வேல்,
107. தங்கவேல்,
108. முத்துவேல்,
109. பழனிவேல்,
110. கதிர்வேல்,
111. ராஜசுப்ரமணியம்,
112. மயூரகந்தன்,
113. சுகதீபன்,
114. குமரேசன்,
115. சுப்பய்யா,
116. கார்த்திக்,
117. சக்திதரன்,
118. முத்துக் குமரன்,
119. வேலவன்,
120. கதிர் வேலன்,
121. விசாகன்,
122. கந்தன்,
123. விசாகன்,
124. குமாரன்,
125. அக்னி பூ.
🌹முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது. #முருகன் #முருகன் பக்தி பாடல்
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும்
பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#எம்_ஜி_ஆர்க்கு பின் படங்களில் நடித்த நடிகர்கள்
(1979_1981)
1979ம் ஆண்டு, எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழக முதல்வராகிவிட்டார். எனவே எம்ஜிஆர் - சிவாஜி என்பது போய், சிவாஜி மட்டுமே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அதேபோல், எம்ஜிஆர் - சிவாஜிக்கு அடுத்து, கமலும் ரஜினியும் ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகிவிட்டனர்.
எண்பதுகளில்தான் கமலும் ரஜினியும் கொடிநாட்டத் தொடங்கினர் என்றாலும் அதற்கான ஆரம்பக் காலம் என்பது இந்த வருடங்கள்தான்.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ’இமயம்’, ‘கவரிமான்’, ‘திரிசூலம்’, ‘ நல்லதொரு குடும்பம்’, ’நான் வாழ வைப்பேன்’ , ‘பட்டாகத்தி பைரவன்’, ‘வெற்றிக்கு ஒருவன்’ என பல படங்களில் நடித்தார். இவற்றில், ’நான் வாழ வைப்பேன்’, ‘பட்டாகத்தி பைரவன்’, ‘திரிசூலம்’ ஆகியவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, ’பலே பாண்டியா’, ‘தெய்வமகன்’ படங்களைப் போலவே சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த, ‘திரிசூலம்’ வசூலை வாரிக்குவித்தது. திரையிட்ட பல தியேட்டர்களில் ,200 நாட்களைக் கடந்து ஓடியது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப்படத்தை, கே.விஜயன் இயக்கினார்.
கமல், ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘சிகப்புக்கல் மூக்குத்தி’, ‘கல்யாணராமன்’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘மங்களவாத்தியம்’, ‘நீயா’ ஆகிய படங்களில் நடித்தார். இதில், ‘சிகப்புக்கல் மூக்குத்தி’ படமும் ‘மங்களவாத்தியம்’ படமும் படுதோல்வியைச் சந்தித்தன. ‘கல்யாணராமன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பேய், ஆவி கதை என்பதை ஜாலியாகவும் கேலியாகவும், நல்ல ஆவியாகவும் காட்டிய இந்தப் படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. பஞ்சு அருணாசலம் தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குநராக இருந்த ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். இதுதான் இவருக்கு முதல் படம்.
தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கே.பாலசந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படமும் பாடல்களும் இன்று வரை செம ஹிட். இந்தி ‘நாகின்’ திரைப்படம் தமிழில் ‘நீயா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீப்ரியா தயாரித்து பாம்பாக நடிக்க, துரை இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தது. இவற்றைக் கடந்து, பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்தார் கமல். இதுதான் பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம்.
இதேபோல், ’குப்பத்து ராஜா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘தர்மயுத்தம்’ முதலான படங்களில் நடித்தார் ரஜினி. இதில், ‘அன்னை ஓர் ஆலயம்’ படமும் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ’தர்மயுத்தம்’ தனித்துவமான வெற்றியைப் பெற்றது. ‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார் ரஜினி.
சிவகுமார், ‘என்னடி மீனாட்சி’, ‘ஏணிப்படிகள்’, ‘கடவுள் அமைத்த மேடை’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என படங்களில் நடித்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம்... ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ சிவகுமாருக்கு நூறாவது படம். மிகப்பெரிய வெற்றிப்படம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘அடுக்குமல்லி’யும் ஸ்ரீதரின் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படமும் வெற்றியைப் பெற்றதும் இந்த ஆண்டில்தான். பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ இந்த வருடம் வெளியானது.
விஜயகாந்த் நடித்த ‘அகல்விளக்கு’, ‘இனிக்கும் இளமை’ என இரண்டு படங்கள் வந்தன. ஆனாலும் பெரிதாக எடுபடவில்லை. ஜெய்சங்கரின் ‘கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன’, ‘ஆடு பாம்பே’, ‘குழந்தையைத் தேடி’ என படங்கள் வந்தன.
விஜயகுமார் நடித்த ‘நீதிக்கு முன் நீயா நானா?’, ‘பகலில் ஓர் இரவு’ என படங்கள் வந்தன. இதில் ‘பகலில் ஓர் இரவு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தவிர, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ படமும் ‘ஓரம்போ ஓரம்போ’ பாடலும் மறக்கவே முடியாது. ‘சக்களத்தி’யும் ‘திசை மாறிய பறவைகள்’ படமும் ’புதிய வார்ப்புகள்’ திரைப்படமும் ‘நிறம் மாறாத பூக்கள்’ படமும் ‘நீச்சல் குளம்’ திரைப்படமும் தனியிடம் பிடித்தன. இதில் மறக்க முடியாத படம் ‘பசி’.
மிக முக்கியமாக, மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ வெளிவந்தது. அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் மீளமுடியாதவை.
இந்த வருடத்தில்தான், ‘அப்போதே சொன்னேன் கேட்டியா’, ‘அன்பே சங்கீதா’, ‘காளி கோயில் கபாலி’, ‘சித்திரைச்செவ்வானம்’, ‘சுப்ரபாதம்’, ‘மாம்பழத்து வண்டு’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என ஜெய்கணேஷ் வரிசையாக படங்கள் பண்ணினார். #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
படம் : சத்யா
பாடல் : வளையோசை
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
சிவந்த பவளப் பெட்டியில்
எந்தன் தேவை கொள்ள வந்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன் #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள்
காதல் திராட்சை கொடியிலே
கள்ளொடு ஆடும் கனியிலே
ஊரும் இன்ப கடலிலே
உன்னோடு நானும் ஆடவா
அப்போது நெஞ்சம் ஆறுமா
எப்போதுமே கொண்டாடுமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா












![😍Old மூவிஸ் - De UK3( காதன்தியிாட் திராட்சை கள்ளொடு ஆடும் கனியிலே ] இன்ப ஊ ரும் கடலிலே உன்னோடு நானும் ஆடவா அப்போது நெஞ்சம் ஆறுமா 6TLIGLIITEIGu கொண்டாடுமா De UK3( காதன்தியிாட் திராட்சை கள்ளொடு ஆடும் கனியிலே ] இன்ப ஊ ரும் கடலிலே உன்னோடு நானும் ஆடவா அப்போது நெஞ்சம் ஆறுமா 6TLIGLIITEIGu கொண்டாடுமா - ShareChat 😍Old மூவிஸ் - De UK3( காதன்தியிாட் திராட்சை கள்ளொடு ஆடும் கனியிலே ] இன்ப ஊ ரும் கடலிலே உன்னோடு நானும் ஆடவா அப்போது நெஞ்சம் ஆறுமா 6TLIGLIITEIGu கொண்டாடுமா De UK3( காதன்தியிாட் திராட்சை கள்ளொடு ஆடும் கனியிலே ] இன்ப ஊ ரும் கடலிலே உன்னோடு நானும் ஆடவா அப்போது நெஞ்சம் ஆறுமா 6TLIGLIITEIGu கொண்டாடுமா - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_81191_c25872d_1775392074341_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=341_sc.jpg)