04_01_2026 #திருப்பாவை #திருப்பாவை திருவெம்பாவை #திருவெம்பாவை,திருப்பாவை
#மார்கழி_இருபதாம்_நாள்
திருப்பாவை, திருவெம்பாவை - 20
திருப்பாவை - 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்.
Margazhi month Tiruppavai Tiruvempavai pooja songs 20
பாசுர விளக்கம்: கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள்.
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
திருவெம்பாவை - 20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக என்று கூறி போற்றி பாடுகின்றனர்.
திடப்பொருளோ, திரவமோ, வாயுப் பொருளோ எல்லாவற்றிற்கும் மூலவித்து அவை எல்லாம் முடிந்து வந்து மக்கி மடிந்து போகிற இடம். எல்லா உயிருள்ளவைகளும் ஆரம்பமாகிற இடம். சிவனது தாமரைத் தளிர் போன்ற பொன்னிறத் திருவடிகள். பூவுக்குள் இருக்கும் தேன் மாதிரி சிவனது கணுக்கால் அணி கழல்களுக்குள்தான் இவ்வுலக இன்பங்கள் தோன்றுகின்றன. எல்லா உயிர்களின் முடிவும் சிவன் திருவடிகளில்தான் முடிவாகிறது. சிவனது திருவடிகளை பிரம்மாவும், திருமாலும் காண முடிவதில்லை. நம்மால் காண முடிகிறது. எப்படி நம் வாழ்க்கையை வளப்படுத்தி முக்தியை நோக்கி நம்மை அடிக்காமல் இழுப்பது அவன் திருவடிகள்தான். எல்லாவற்றிற்கும் கீழே இருப்பது அதல பாதாளம். அவற்றிற்கும் கீழே இருப்பது சிவனது திருவடிதான். அதனால் அது எல்லாவற்றிற்கும் மூலம். எனவே, அத்திருவடிகளைப் போற்றுவோம்! பனி நீராடும் இந்த மார்கழி மாதத்தில் சிவனைப் போற்றியபடி நீராடுவோம்!
#📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
#🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
சகலகலா வல்லவன் திரைப்படம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
- 62_ம் ஆண்டில் ‘#வீரபாண்டிய_கட்டபொம்மன்’
தலைமுறைகள் கடந்தும், இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். படத்தின் மேக்கிங்கைக் கண்டு வியந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவர் நடிப்பையும் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். அந்தப் படம்... ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.
1959-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியானது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. பத்மினி பிக்சர்ஸ் எனும் தன்னுடைய சொந்தக் கம்பெனி மூலம், படத்தைத் தயாரித்து இயக்கினார் பி.ஆர்.பந்துலு. கிராபிக்ஸெல்லாம் இல்லாத காலகட்டத்திலேயே, பந்துலு எடுத்த ‘பாகுபலி’ என்று இன்றைக்குப் படம் பார்க்கிற ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நெருப்பு வசனங்களை சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். ஜி.ராமநாதனின் மயக்கும் இசை, இன்னும் ரசிக்கவைத்தது. முக்கியமாக, சிவாஜிகணேசன், கட்டபொம்மனாகவே மாறியிருந்தார். ‘கட்டபொம்மன் இப்படித்தான் இருப்பார்’ என்று நம் கண்களுக்கு எதிரே உலவவிட்டார்.அவரின் பார்வை அன்பையும் ஆவேசத்தையும் கொட்டிக்காட்டியது. நடையும் நடையின் மிடுக்கும் இன்னும் அசரவைத்தன. குறிப்பாக, வெள்ளைக்காரர்கள், தூக்கிலிட அறிவித்ததும், இரண்டுபக்கமும் மக்கள் நிற்க, நடுவே மக்களைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தபடி, கம்பீரமாக நடந்துவரும்போது, அசந்துபோய் ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள்.
இந்த நடிப்பைக் கண்டுதான், வெளிநாட்டவரும் வியந்து, விருதை அள்ளிக்கொடுத்தார்கள். ஜெய்ப்பூர் அரண்மனையில் சிலகாட்சிகளை படமாக்கினார்கள். ‘சிவாஜி படமா’ என்று அங்கே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் கேவா கலர் அறிமுகமான சமயம்... ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமும் கேவா கலரில் எடுக்கப்பட்டது. அரண்மனை செட்டுகளும் மன்னர், மந்திரி வேடங்களுக்கான காஸ்ட்யூம்களும் செட் புராப்பர்ட்டீஸ் என்று சொல்லப்படுகிற அரண்மனைக்குள் இருக்கிற பொருட்களும் பிரமிக்க வைக்கும்.
ஜாக்ஸன் துரையாக நடித்திருக்கும் சி.ஆர்.பார்த்திபன், க்ளைமாக்ஸில் வரும் வெள்ளைக்கார துரை ஜாவர் சீதாராமன், கட்டபொம்மனின் மனைவியாக வரும் வரலட்சுமி, தம்பி ஓ.ஏ.கே.தேவர், வெள்ளையத்தேவனாக நடித்திருக்கும் ஜெமினி கணேசன், அவரின் காதல் மனைவியாக காளை வளர்க்கும் பத்மினி, எட்டப்பனாக வி.கே.ஆர். என படத்தில் வரும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பைச் செய்து, படத்தை மறக்கமுடியாத காவியமாக்கியிருப்பார்கள். இந்தப் படத்தில் பலே வெள்ளையத்தேவா’ என்று சிவாஜி இரண்டுமுறை தனக்கே உரிய பாணியில் கம்பீரமாகச் சொல்லுவார். எத்தனையோ வருடங்கள் கழித்து, அந்தத் தலைப்பிலேயே படம் வந்ததுதான் நமக்குத் தெரியுமே!
ஜெமினி நடித்த அந்தக் கேரக்டருக்கு முதலில் வேறொரு நடிகரைத்தான் போட்டிருந்தார்களாம். ஜெய்ப்பூருக்குப் போய் இறங்கி படப்பிடிப்பு நடப்பதற்கு முன்னதாக சில பிரச்சினைகளால், அந்த நடிகருக்குப் பதிலாக யாரைப் போடுவது என பந்துலு கேட்க, ‘கணேசனைப் போடலாம்’ என்று சிவாஜி சொன்னதுடன், அங்கிருந்து போன் போட்டார். சாவித்திரி எடுத்தார். ‘அம்மாடி... கணேசனை உடனே ஜெய்ப்பூருக்கு அனுப்பிவை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ல அவன் நடிக்கிறான்’ என்று சொல்ல, ஜெமினி கணேசனும் உடனடியாகக் கிளம்பினார். மிகப்பிரமாதமான நடிப்பை வழங்கினார்.
அரண்மனை மந்திரிகள், மக்கள், போர்க்காட்சிகள் என எல்லாவற்றையும் நுணுக்கி நுணுக்கி, பார்த்துப்பார்த்து செய்திருப்பார்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தைப் பார்த்த இந்திப்பட நடிகர்கள், சிவாஜியின் நடிப்பைக் கண்டு மிரண்டுபோனார்கள்.
சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம். அந்த வசனங்கள், சிவாஜியால் டெலிவரி செய்யப்படும் போது, அக்கினிக்குஞ்சுகளாக ஆர்ப்பரித்துப் பறந்தன. ‘நீர்தான் ஜாக்ஸன் துரையோ?’, ‘வரி, திரை, கிஸ்தி’, ‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை’ மட்டுமின்றி எத்தனையோ வசனங்கள், இன்றைக்கும் மனப்பாடம். அதிலும், சினிமாவில் நடிக்கச் சான்ஸ் கேட்டு வந்து, இன்றைக்கு மிகப்பெரிய நடிகர்களாக இருக்கும் பலரும், ‘எங்களோடு வயலுக்கு வந்தாயா,ஏற்றம் இறைத்தாயா, நாற்று நட்டாயா...’ வசனங்களைச் சொல்லி, ‘மாமனா மச்சானா மானங்கெட்டவனே... யாரைக் கேட்கிறாய் வரி, எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி’ என்று வசனம் பேசி, நடித்துக் காட்டி சான்ஸ் வாங்கினார்களாம். இதை பல நடிகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், காட்சி அமைப்பு, காஸ்டியூம்ஸ், சண்டைக் காட்சிகள், பாடல்கள், இசை என சகலத்துக்கும் உதாரணமாக, அருமையான கலவையாக அமைந்ததுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.
கட்டபொம்மனுக்கு இது 62 வது வருடம். நூறுவருடமாகும்போதும், கோடம்பாக்கத்தில் யாராவது ஒருவர், எங்கிருந்தாவது கிளம்பி வந்து, ‘வானம் பொழிகிறது பூமி விளைகிறது,உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?’, ‘அங்கே கொஞ்சிவிளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா மச்சானா?’ என்று வசனம் பேசி நடித்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள்.
சினிமா உள்ளவரை சிவாஜியின் புகழும் மங்காதிருக்கும். சிவாஜியின் சரிதம் சொல்லும்போதெல்லாம் கட்டபொம்மனும் மறக்காமல் இடம்பெறுவார்.
கட்டபொம்மனும் சிவாஜியும் சரித்திரம் படைத்தவர்கள். சரித்திர நாயகர்கள்!
.தி இந்து. #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
தேவரின் ஆட்டுக்கார அலமேலு #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
அதிகம் பகிரப்படாத பாடல்
நல்ல தங்காள் திரைப்படத்திலிருந்து V. T. ராஜகோபாலன் பாடிய அடி சீனி சக்கர கட்டி… என்ற பாடல்
#😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
ஆரவல்லி திரைப்படத்திலிருந்து சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் பாடிய திரும்பிப் பாரு தம்பி… என்ற பாடல்
#😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
#எம்_ஜி_ஆரின்_பிடிவாதம்!
பி.ஜி.எஸ்.மணியன்
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?
அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.
பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.
‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’
கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும்.
அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?
‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து
முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி’
அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.
‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’
எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.
‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி’
இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை.
ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா?
அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.
‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’
முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்.
இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.
ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்:
“படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்”
அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன? #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥







