``பக்திப் படங்களின் வருகை குறைந்தது எதனால்?!"
பொதுவாகவே கடவுள் பற்றிய தமிழர்களின் கற்பனைகளும், வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. நட்டக்கல்லையும் வணங்குவார்கள், கலைநயம் மிக்க கோயில்களுக்குச் சென்றும் வழிபட்டு வருவார்கள். கூடவே, ஆன்மிகம் குறித்த கதைகளைக் கேட்பதில் பேரார்வம் கொண்டவர்கள். கிராமியத் திருவிழா தொடங்கி, பெருநகரங்கள் வரை நாடகங்களாக மக்கள் விடிய விடிய பார்த்துக் களிப்பார்கள்.
பக்திப் படம் 'சம்பூர்ண ராமாயணம்'
பக்திப் படம் 'சம்பூர்ண ராமாயணம்'
குறிப்பாக, நூறாண்டுகளுக்கு முன்பு புராணகாலக் கதைகளான ராமாயணம், மகாபாரதம் ஆகட்டும், மண்வாசனைக் கதைகளான `நல்ல தங்காள்', `கண்ணகி சபதம்' வரை பல வகையான நாடகங்கள் தமிழகத்தின் மேடைகளில் தினமும் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறிக்கொண்டே இருந்தன.
கூத்து நாடகமாகி, நாடகம் சினிமாவாக மாறிய பிறகும், ராமாயணம், மகாபாரதமும் அவற்றின் துணைக் கதைகளும், ராஜா - ராணிக் கதைகளுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
கிட்டப்பா, பி.யூ.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் எனப் பாடல்கள் பாடுவதில் வல்லமை பெற்றவர்களின் படங்கள் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தன. `ஹரிதாஸ்' ஒரே தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கொண்டாடியது.
சிவாஜி - நாகேஷ்
சிவாஜி - நாகேஷ்
1952-ல் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த `பராசக்தி'யின் வெற்றி, தமிழ் சினிமாவின் பார்வையை சமூகப் படங்களின் பக்கம் முற்றிலுமாகத் திருப்பியது. ஒன்றிரண்டு பக்திப் படங்கள் வந்தாலும், பெரிதாக வெற்றி பெறவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர் நடித்த `மதுரை வீரன்' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதுநாள் வரை கறுப்புக் கோயிலில் காவல் தெய்வமாக வழிபட்டுவந்த கிராம மக்கள் `மதுரை வீர'னைத் திரையில் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.
தியேட்டர்களெல்லாம் திருவிழாக் கோயில்களாயின. மக்கள் அருகிலிருந்த நகரங்களுக்கு மதிய சாப்பாட்டை முடித்ததும் மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு ஆறு மணி காட்சியைப் பார்க்க வந்தனர். தியேட்டரைச் சுற்றியிருந்த பகுதிகளில் 100, 150 வண்டிகளில் குடும்பம் குடும்பமாக அழைத்து வந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு, சரித்துவிடப்பட்ட வண்டிக்கருகே காளை மாடுகள் வைக்கோலை மென்றுகொண்டிருந்தன.
1958-ல் வெளிவந்த `சம்பூர்ண ராமாயணம்' சென்னையில் 26 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. ராமராவ் ராமனாகவும், சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்திருந்தனர். படைப்பை முன்னே நிறுத்தி சிவாஜி எனும் ஆளுமை பரதனாக பின்னே நின்றார். `சக்கரவர்த்தி திருமகன்' என ராமாயணத்தை எழுதிய ராஜாஜி, `பரதனைக் கண்டேன்' எனப் படத்தைப் பெரிதும் பாராட்டினார்.
கதை, வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். சிவாஜியின் நாடககால நண்பர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
ரவிவர்மா சிவன் - பார்வதி - விநாயகர், லட்சுமி, சரஸ்வதி என ஓவியங்களில் கடவுள்களைப் படைத்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். எல்லோரது வீட்டுப் பூஜையறையில் இன்றும் ரவிவர்மா வரைந்த லட்சுமி, சரஸ்வதி படங்களே ஆட்சி செய்கின்றன.
அப்படியொரு தாக்கத்தைத் திரையில் ஏற்படுத்திக் காட்டியவர், ஏ.பி.நாகராஜன். `திருவிளையாடல்', `சரஸ்வதி சபதம்', `கந்தன் கருணை', `திருவருட்செல்வர்', `திருமால் பெருமை', `அகத்தியர்', `கிருஷ்ண லீலா' ஆகிய படங்கள் இந்துக் கடவுள்களை மக்களின் கண்முன் நிறுத்தின. பட வெளியீட்டின்போது திரையில் தோன்றிய கடவுள்களுக்கு, விளக்கேற்றி பூஜை செய்தார்கள் ரசிகர்கள்.
குறிப்பாக, `திருவிளையாடல்' திரைப்படம் எக்காலத்தையும் வென்று தனித்துவம் பெற்று இன்றளவும் திகழ்கின்றது. எல்.பி ரெக்கார்டுகளில், கிராமபோன் இசைத்தட்டில் `திருவிளையாடல்' கதை, வசனம் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை என்கிற அளவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.
`திருமலை தென்குமரி' எனும் இவரது படம், திருப்பதி தொடங்கி கன்னியாகுமரி வரை பேருந்திலேயே பயணிக்கும் யாத்திரை படமாக அமைந்து, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.
`வீரபாண்டி கட்டபொம்ம'னை இயக்கிய பி.ஆர்.பந்துலு, `கர்ணன்' திரைப்படத்தைத் தயாரித்து, மகாபாரதக் கதைக்குப் புகழ் சேர்த்தார்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரை வைத்துப் பல படங்கள் எடுத்த முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர், `துணைவன்', `தெய்வம்', `திருவருள்' எனப் பல படங்களைத் தயாரித்து, பக்திப் பயிர் வளர்த்தார்.
`கற்பகம்', `பணமா பாசமா' போன்ற குடும்பப் பாங்கான படங்களை இயக்கி வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் சாமிப் படங்களின் மீது பார்வை திரும்பியது.
`ஆதிபராசக்தி' படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. பெண்கள் திரள் திரளாகப் புறப்பட்டுவந்து `ஆதிபராசக்தி'யை வழிபட்டுச் சென்றனர். 80-களின் மத்தியில் ஶ்ரீமன் நாராயணனின் பத்து அவதாரங்களையும் `தசாவதாரம்' எனும் பெயரில் இயக்கினார், படம் பெரும் வெற்றி பெற்றது.
இந்த நேரத்தில் `அன்னக்கிளி', `16 வயதினிலே', `உதிரிப்பூக்கள்', `மவுன கீதங்கள்' போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை நவீன சினிமாவை நோக்கி நகர்த்தின. எம்.ஜி.ஆர் அரசியலுக்குச் சென்றுவிட்டார். சிவாஜிக்கும் அத்தனை சிறப்பான படங்கள் அமையாத நேரம்.
1978-ல் கே.சங்கர் இயக்கிய `வருவான் வடிவேலன்' திரைப்படம் புராணப் படமாக இல்லாமல், நடப்பு வாழ்க்கையில் முருகக் கடவுள் தன் பக்தைக்கு எப்படி உதவினார் என்பதை மலேசியா வரை சென்று பறைசாற்றியது. பக்திப் படங்களில் பெரும் வெற்றியைக் குவித்த படம் இது. பிறகு இவரின் இயக்கத்தில் வெளிவந்த `தேவி தரிசனம்', `தாய் மூகாம்பிகை', `மீனாட்சி திருவிளையாடல்', ராஜரிஷி', `ஆயிரம் கண்ணுடையாள்', `முப்பெரும் தேவியர்', `வெற்றி விநாயகர்' எனப் பல பக்திப் படங்களை இயக்கினார்.
80-களில் ஆக்ஷன் ஹீரோ படங்கள், சமூகப் படங்கள் மற்றும் கிராமியப் படங்களை நோக்கி ரசிகர்கள் சென்றுவிட்டனர். அத்தி பூத்தாற்போல வந்த பக்திப் படங்களும் சுத்தமாக ஓடவில்லை.
ஆடிவெள்ளிக்குப் பால்குடம் தூக்குகிற பெண்கள்தான் பக்திப் படங்களுக்குக் கை கொடுப்பவர்கள். அவர்கள் அனைவரும் டிவி முன்பாக உட்கார்ந்துவிட்டனர்.
வலைல் பிடித்தது
அ முதல் அஃகு வரை. #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #❤️எங்கேயும் காதல் #🎬 சினிமா
கன்னத்தில் என்னடி காயம்..
இது வண்ணக்கிளி செய்த மாயம்..
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #❤️எங்கேயும் காதல்
பழத்தை கடிக்கும் அணிலே
இன்று பசிக்கின்றதோ? பழம் ருசிக்கின்றதோ?
பாட்டு படிக்கும் குயிலே
நீ படித்ததுண்டோ? சொல்லி கொடுத்ததுண்டோ?
நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும்
நினைத்த படியே நடக்கவேண்டும் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
வெத்திலை பாக்கு வச்சு
அதிலே ஊரை வரவழைச்சு
குத்து விளக்கு வச்சு
நடுவே கோலம் வரைஞ்சு வச்சு
குத்து விளக்கு வச்சு
நடுவே கோலம் வரைஞ்சு வச்சு
மாவிலைப் பந்தலில் மாப்பிள்ளைப் பையன்
மாலையிடுவானாம்
வண்ணச் சேலை அணிந்தவள்
மாலை கொடுத்தவன் காலைத் தொடுவாளாம் #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️எங்கேயும் காதல்
மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து,
புகாருடன் வாழ்ந்து,
ஏமாற்றத்துடன் இறக்கின்றான். #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ
உன்னால் பயன் கிடைக்கும் வரை
நீ நல்லவன் வல்லவன்
அமைதியானவன் பொறுமையானவன்
உன்னால் எந்த வித பயனும் இல்லை என்றால்
நீ கெட்டவன்... இது தான் மனித குணம்... #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ
முகத்தை காட்டி காட்டி மூடி #😍Old மூவிஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎵Lyrical Status
ப்ரியா திரைப்படம் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #❤️எங்கேயும் காதல் #💝இதயத்தின் துடிப்பு நீ #🎵Lyrical Status #😍Old மூவிஸ்










