
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
எஸ்.எம்.சுப்பையா நாயுடு; நீ எங்கே என் நினைவுகள் அங்கே
#எஸ்_எம்_சுப்பையா நாயுடு;
மதிமலர்
சிங்காரவேலனே தேவா.. கொஞ்சும் சலங்கை படத்தில் இந்த பாடலுக்கு சாவித்திரியையும் ஜெமினி கணேசனையும் பார்த்திருப்போம். இப்பாடலைப் பாடுவதற்கு முதலில் பி.லீலாவைத் தான் அழைத்தார்கள். காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்துடன் இசைந்து பாடவேண்டிய இப்பாடலை தன்னால் பாடமுடியாது என்று சொல்லிவிடவே அதன்பின்னால் இதைப் பாடும் வாய்ப்பு எஸ்.ஜானகிக்கு வந்தது. ஆபேரி ராகத்தில் அப்பாடல் இறவாப்புகழ் பெற்றுவிட்டது. இந்த பாடலுக்கு இசைஅமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. தமிழ்சினிமாவின் ஆரம்பகால இசையமைப்பாளர்களில் ஒருவர்.
இசைக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் இவர். சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்து தஞ்சா வூரில் ஒரு நாடக்குழுவில் சேர்ந்து பின்னர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனிக்குத் தாவி, அங்கிருந்தே பதினாறு வயதுக்குமேல் இசை கற்றவர். அவர் அடைந்த உயரம் பிரமிக்கவைக்கிறது.
1935-ல் வெளிவந்த பக்தராமதாஸ் படத்தில் ஹார்மோனியக் கலைஞராக திரையுலகில் நுழைந்தார் சுப்பையா நாயுடு. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் நாடகமே பக்தராமதாஸ். பின்னர் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் மாதசம்பளத்துக்கு ஹார்மோனியக் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார்.
பின்னர் ஜி.ராமநாதன் இசையமைத்த சில படங்களில் ஹார்மோனியக் கலைஞராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் ஒரே படத்துக்கு பல இசையமைப்பாளர்கள் ஆளுக்கு சில பாடல்கள் என்று பிரித்துக்கொண்டு வேலை செய்வார்கள். பின்னணி இசைக்கென்று தனியாக வாத்தியக் குழு இருக்கும்.
இந்நிலையில் ஜுபிடர் பிக்சர்ஸ் சென்ட்ரல் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுக்க அதில் இசையமைப்பாளராக மாதச் சம்பளத்துக்கு சுப்பையா நாயுடு சேர்ந்தார்.
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தை ஜூபிடர் பிக்சரஸ் தயாரித்தது. கதை வசனம் மு.கருணாநிதி. அப்படத்தின் முழுப்பாடல்களுக்கும் இசை அமைத்தவர் சுப்பையா நாயுடுதான்.
இந்தப் படத்தில்தான் பின்னணிப்பாடகர்கள் கதாநாயகனுக்காகப் பாடுவது என்பது அறிமுகம் ஆயிற்று. திருச்சி லோகநாதனும் எம்.எம்.மாரியப்பாவும் பின்னணிப்பாடகர்கள் ஆனார்கள். அவர்களை அறிமுகப் படுத்திய பெருமை இவருக்கு வந்தது. உடுமலை நாராயண கவிராயரின் வரிகளுக்கு அருமையாக மெட்டமைத்து பாடல்களைப் பிரபலமாக்கினார் அன்று இளைஞராக இருந்த சுப்பையா நாயுடு.
அடுத்து ஜுபிடர் பிக்சர்சஸ் தயாரித்த அபிமன்யுவில் சுப்பராமனுடன் இணைந்து இசை அமைத்தார்.
இதை அடுத்து பட்ஷிராஜா ஸுடுடியோஸ் தயாரித்த ஏழை படும் பாடு(1950) படம் வெளியாகி சுப்பையா நாயுடுவுக்கு நிலைத்த புகழைத் தந்தது. இதுதான் அவருக்கு முக்கியத் திருப்பம். இந்த கட்டத்தில் வந்த கன்னியின் காதல் முக்கியமாகச் சொல்லவேண்டும். இதில்தான் கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்றவாறு கவியரசு கண்ணதாசன் பாடலாசிரியராக சுப்பையா நாயுடுவின் இசையில் பாட்டெழுதினார். இதற்கடுத்து சில படங்களுக்கு அப்புறம் வந்ததுதான் மலைக்கள்ளன். இப்படம் நாயகன் எம்ஜிஆருக்கும் திருப்புமுனை. இசை அமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் புகழ் உச்சிக்கு ஏறினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியான படம் அது. அதில்வரும் “எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இந்த நாட்டிலே” என்ற பாடல் இன்னும் பலகாலத்துக்கு நிலைத்திருக்கும். பாடலை டி.எம்.சவுந்தரராஜன் எம்ஜிஆருக்காக பாடினார். அதன் பின்னர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆரின் குரலாகவே மாறிப்போனார். ஆபேரி ராகத்தில் அருமையாக இப்பாடலுக்கு இசை சேர்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு.
எம்.ஜி.ஆர். அடுத்து தயாரித்து இயக்கிய படம் நாடோடிமன்னன். ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெதிலே சொல் என் தோழா’- சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் தியாகி லஷ்மணதாஸ் எழுதிய ராகமாலிகைப் பாடல், பட்டுக்கோட்டையாரின் ‘மானைத் தேடி மச்சான் வரப் போறார்’ ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’ - ‘தூங்காதே தம்பி தூங்காதே’ஆகிய பாடல்களும் சுப்பையா நாயுடு இசை கோர்த்தவைதான். உவமைக் கவிஞர் சுரதாவின்,‘கண்ணில்வந்து மின்னல் போல் காணுதே.. உயர் காவியக் கலையே ஓவியமே..’ என்ற பாடல் என்றும் மறக்கமுடியாத டூயட் பாடல்.
கவி காமு ஷெரிப்பின், ‘அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.. அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..’ என்ற அன்னையின் ஆணை படப்பாடல். டி.எம்.எஸ். குரலில் இதயங்களை என்றென்றைக்கும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது.
மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை படத்தில் குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே என்று சந்திரபாபு பாடும் பாடல் சுப்பையாநாயுடு இசையில் புகழ்பெற்ற பாடல். ஆனால் இதன் பின்னால் ஒரு சர்ச்சையும் உண்டு. இந்த பாட்டின் மெட்டு டி.ஜி.லிங்கப்பாவினுடயது. அதை சந்திரபாபு, சுப்பையா நாயுடுவிடம் சொல்லி போட வைத்துவிட்டார் என்பது.
1961-ல் வெளிவந்த திருடாதே படமும் சுப்பையா நாயுடு இசைதான். ‘திருடாதே பாப்பா திருடாதே..’ இந்தப் பாடலைக் கேட்டு ஆடாத தலையே தமிழ்மண்ணில் இல்லை. அதே ஆண்டு வந்த படம்தான் கொஞ்சும் சலங்கை. அதில் வெளிவந்த சிங்கார வேலனே தேவா படம் பற்றித்தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.
அறுபதுகளுக்குப் பின்னர் ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் நடித்த பல படங்கள் இசை அமைத்தார் சுப்பையாநாயுடு. அதில் முத்துச்சிப்பி என்ற ஜெய்சங்கர்-ஜெயலலிதா நடித்தப் படத்தில் வரும் பாடல்களில் ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக. கண் பட்ட இடம் பூமலரும் பொன்மகளே வருக - நீ வருக’ என்ற பாடல் இன்று அதிமுக மேடைகளில் அந்த இசையமைப்பாளரின் மேன்மையைச் சொல்லி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மன்னிப்பு என்ற படத்தில் வரும்,‘நீயெங்கே என் நினைவுகள் அங்கே..’ என்ற பாடலை இரவுகளில் கேட்டிருக்கிறீர்களா? சுப்பையா நாயுடுவை நினைத்து நன்றி சொல்லுங்கள்.
1975- எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு மணிவிழா. எம்.எஸ்.வி, கண்ணதாசன் இருவரும் இணைந்து ஏற்பாடு செய்ய எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே கலந்துகொண்டார்கள். 1976-ல் இவர் இசை அமைத்த குலகௌரவம் இவரது கடைசிப்படம். 1979-ல் இந்த மாபெரும் இசைக்கலைஞர் மரணம் அடைந்தார். குழந்தைகள் இல்லை என்பதால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் அவர் மீது பேரன்பு வைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்!
இணையதள பக்கத்தில் இருந்து Natesan Subramani #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது
#Malaimurasu #Newsupdate #ECI #தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 🗳️
🔴Live : தமிழ்நாடு சட்டமன்றதேர்தல் தேதி அறிவிப்பு | Tamilnadu Election Date | Election 2026
#malaimurasu #breakingnews #electionnews #தேர்தல் திருவிழா 2026 #தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 🗳️
நடிகர் சந்திரபாபு நடித்த போக்கிரி ராஜா பாடல் தெலுங்கு
#tamilvideo #tamil #tamillyrics #tamilstatus #tamilsonglyrics #tamilsongs #tamilbgm #tamillovesong #tamilactress #tamilsong #tamilmusic #tamilcinema #tamilmusically #tamillove #tamillovestatus #tamilmovie #tamilactors #thalapathy #tamily #tamilan #tamilmemes #tamilnadu #vijaytv #kollywood #love #tamillovesongs #tamillovefailure #lovefailure #tamilwhatsappstatus #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
ராஜா ராணி திரைப்படம் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #😍Old மூவிஸ்
வைர நெஞ்சம் திரைப்படம் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
#நாடோடி_மன்னன்.
எம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.
எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.
1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.
எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!
வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!
படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!
காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!
மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு.
தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!
அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.
சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!
சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.
படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.
எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.
A Celebration
வலைதளத்தில் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
#எதிர்பாராதது
சிவாஜி நடித்த பல படங்களின் கதையை கேட்டால், அப்பவே எந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்கிறார்கள் என மூக்கில் விரல் வைக்கத் தோன்றும். அப்படியொரு படம் தான் எதிர்பாராதது. படத்தின் பெயருக்கு ஏற்ப கதையும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக இருக்கும்.
எதிர்பாராதது படத்தில் சிவாஜி திருச்சியில் படித்துக் கொண்டிருப்பார். அவர் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள் பத்மினி. சிவாஜியும், பத்மினியும் காதலிப்பார்கள். இதில் பத்மினியின் தந்தைக்கு உடன்பாடுதான். படிப்பை முடித்த சிவாஜி சென்னையில் இருக்கும் தந்தையிடம் அனுமதி வாங்கச் செல்வார்.
அந்த நேரம், அமெரிக்காவில் படிப்பதற்கு சிவாஜிக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். எளிதில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்பதால் சிவாஜியின் தந்தை - இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நாகையா - சிவாஜி அமெரிக்கா சென்று இரண்டு வருட படிப்பை முடித்த பின் பத்மினியை மணக்கலாம் என்பார். சிவாஜியும் இந்த விஷயத்தை பத்மினி மற்றும் அவரது தந்தையிடம் சொல்லி அனுமதி வாங்கி, அமெரிக்கா செல்வார். இப்போதுதான் முதல் எதிர்பாராதது நடக்கும்.
சிவாஜி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் மரணமடைந்ததாக செய்திவரும். அனைவரும் உடைந்து போவார்கள். சிவாஜியின் தந்தை அனைத்து சொத்துக்களையும் விற்று திருச்சிக்கு இடம் மாறுவார். அவரது நண்பர் அவரை வற்புறுத்தி, இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்வார். கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ளவும் யாராவது வேண்டுமே. முதலில் மறுப்பவர் பிறகு சம்மதிப்பார்.
இந்தக் கதைக்கு இணையாக பத்மினியின் அண்ணனின் கதை சொல்லப்படும். பெங்களூருவில் டாக்டராக இருக்கும் பத்மினியின் அண்ணன் சூதாட்டத்தால் சொத்துக்களை இழந்து தலைமறைவாகியிருப்பார். அவரது மனைவி திருச்சியில் உள்ள பத்மினியின் வீட்டில் தஞ்சமடைவார். கடன் தொல்லையின் காரணமாக பத்மினி திருமணம் செய்ய சம்மதிப்பார். இதுதான் ரசிகர்கள் எதிர்பார்க்காத இரண்டாவது எதிர்பாராதது. பத்மினி மணக்க சம்மதிப்பது நாகையாவை. தனது மகனின் காதலி பத்மினி என்பதோ, தனது காதலனின் தந்தை நாகையா என்பதோ இருவருக்கும் தெரியாது.
திருமணம் நடக்கும் நாளில், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாத பத்மினியின் தந்தை இறந்து போவார். தான் செய்த தவறை உணர்ந்து நாகையா மொத்த சொத்தையும் பத்மினி பெயருக்கு எழுதி வைத்துவிட்டு காசி, ராமேஸ்வரம் என ஆன்மிகச் சுற்றுலாச் செல்வார். கணவன் சொல்லிக் கொள்ளாமல் சென்றாலும், எங்கோ இருக்கும் அவர் நினைவாக வாழ்ந்து வருவார் பத்மினி. இந்த இடத்தில் மூன்றாவது எதிர்பாராதது வரும்.
இதையறியும் நாகையா, தான் இறந்துவிட்டதாக ஒரு கடிதம் எழுதி அனைவரையும் நம்ப வைப்பார். புருஷன்தான் போய்விட்டானே என்று மீண்டும் சிவாஜி பத்மினியிடம் ப்ரப்போஸ் செய்வார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தறியா என்று பத்மினி சிவாஜியை விளாசிவிடுவார். இந்த நேரத்தில் ஓடிப்போன பத்மினியின் அண்ணன் திரும்பி வந்து, அறுவை சிகிச்சை மூலம் சிவாஜிக்கு பார்வை கிடைக்கச் செய்வார். பத்மினியைப் பார்க்க அவரது வீட்டிற்கு வருகையில், பத்மினியை திருமணம் செய்தது வேறு யாருமில்லை, தனது தந்தைதான், பத்மினி இப்போது தனது ஸ்டெப் மதர் என்பதை உணர்வார் சிவாஜி.
தந்தையின் மரண போர்ஜரியை அறிந்து அவரை மீண்டும் அழைத்துவர சிவாஜி சென்றால், நான்காவது எதிர்பாராதது. நாகையா ஏற்கனவே இறந்திருப்பார். பத்மினி இப்போது விடோ. கட்டிவன் இறந்தாலும் கடைசிவரை அவனே மணாளன் என பத்மினி அறதியிட்டுக்கூற, சிவாஜியும் அதனை உணர்ந்து, ஸ்டெப் மதரின் ஆசியுடன் அமெரிக்காவுக்கு மீண்டும் மேல் படிப்புக்காகச் செல்வார்.
படம் நெடுக எதிர்பாராத ட்விஸ்ட்களைக் கொண்ட இந்தப் படத்தின் கதை, வசனத்தை ஸ்ரீதர் எழுத, நாராயணமூர்த்தி படத்தை இயக்கியிருந்தார். இசை சி.என்.பாண்டுரங்கன். 69 ஆண்டுகளுக்கு முன் 1954 டிசம்பர் 9 வெளியான எதிர்பாராதது திரைப்படம் 100 நாள்கள் ஓடி வெற்றிப் படமானது. பிறகு இந்தப் படம் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
நீயூஸ் 18 #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ்








