
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
|வெள்ளி நிலா முற்றத்திலே #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
#பி_யு_சின்னப்பா
இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார்.
முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. படம் பெரு வெற்றி பெற்றது.
சின்னப்பாவின் காதல் திருமணம்
1939-ம் ஆண்டு ஆர்யமாலா என்ற திரைப்படத்தை கே.எஸ். நாராயண அய்யங்கார் மற்றும் எஸ்.எம்.ஶ்ரீராமுலு நாயுடு இருவரும் இணைந்து தயாரித்தனர். இதில் காத்தவராயனாக பி.யு. சின்னப்பா நடித்தார். படத்தின் படப்பிடிப்பு கோவை பக் ஷி ராஜா ஸ்டுடியோவில் நடந்தது. (கோவையில் ''கந்தன் ஸ்டியோ" என்ற பெயரில் செயல்படாமல் கிடந்த ஸ்டியோ வளாகத்தை ஶ்ரீராமுலு நாயுடு விலைக்கு வாங்கி ''பட்சிராஜா' என்று பெயர் மாற்றம் செய்தார் எஸ்.எம்.ஶ்ரீராமுலு). இப்படத்தில் நடித்த ஏ. சகுந்தலா என்ற நடிகை நல்ல அழகி, படப்பிடிப்பில் அடிக்கடி சந்தித்து கொண்ட சகுந்தலாவுக்கும் பி.யு. சின்னப்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு சகுந்தலாவின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆர்யமாலா திரைப்படத்தில் அரும்பிய அவர்கள் காதல், பிருதிவிராஜ் படப்பிடிப்பு தளம் வரை தொடர்ந்தது. இதற்கிடையில், மார்டன் தியேட்டர்ஸின் மனோன்மணி திரைப்படத்தில் பி.யு. சின்னப்பா புருஷோத்தமனாகவும் ஏ.சகுந்தலா வாணி என்ற பாத்திரத்திலும் நடித்தனர். பி.யு.சின்னப்பாவுடன் மனோன்மணியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். படப்பிடிப்பு சேலத்தில் 1942 ஆம் ஆண்டு தொடங்கியது. படப்பிடிப்புக்கு சகுந்தலா காலதாமதமாக வர ஆரம்பித்தார். வந்தாலும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
பி.யு.சின்னப்பா - ஏ.சகுந்தலா காதல் குறித்து முன்னமேயே அறிந்திருந்த டைரக்டர் டி.ஆர். சுந்தரம், பி.யு. சின்னப்பாவை அழைத்து உடனே சகுந்தலாவை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். சகுந்தலாவின் தாய் எதிர்ப்பையும் மீறி அவரை 1943ஆம் ஆண்டு சேலத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார் பி.யு.சின்னப்பா. டி.ஆர்.சுந்தரத்திற்கும் பிரச்னை தீர்ந்தது. படத்தில் பி.யு. சின்னப்பாவும் சகுந்தலாவும் வெகு நேர்த்தியாக நடித்தனர். படம் வெற்றி பெற்றது.
பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் ஆறு படங்கள் தமிழ் திரையுலகில் மீண்டும் தயாரிக்கப்பட்டன. 1958-ல் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஒன்று. சின்னப்பா நடித்த 6 படங்களின் கதைகள் மீண்டும் படங்களாக்கப்பட்டன. உத்தம புத்திரன் (1940), ஆர்யமாலா (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944) ஆகிய சின்னப்பா நடித்த படங்கள் முறையே, உத்தம புத்திரன் (1958 சிவாஜி), காத்தவராயன் (1958 சிவாஜி), பூம்புகார் (1964 எஸ்.எஸ்.ஆர்) ராணி சம்யுக்தா (1962 எம்.ஜி.ஆர்.), ஜெகதல ப்ரதாபன் (1963 என்.டி.ராமாராவ்), ஹரிச்சந்திரா (1968 சிவாஜி) ஆகிய பெயர்களில் வெளிவந்தன.
மதுப்பழக்கத்தினாலும் அசைவ உணவு பண்டங்களை அளவுக்கு அதிகமாக புசித்ததாலும், குறுகிய காலத்திலேயே இவர் உடல் பெருத்து தடிமனாகி விட்டார். குள்ளமாய் இருந்த இவர் உடல் குண்டாகி பெருத்துப் போனதால் முன் போல் இவரால் படத்தில் நடிக்க இயலவில்லை. உடம்பு பெருத்ததால் சினிமா வாய்ப்பு சிறுத்து போய் விட்டது. 26 படங்களுக்கு மேல் நடிக்க முடியவில்லை. அவர் நடித்த அவரது கடைசி படமான சுதர்ஸன் அவரது சாவிற்குப் பின்னர்தான் திரைக்கு வந்தது.
1936- ல் சந்திரகாந்தாவில் தொடங்கிய சின்னப்பாவின் திரையுல வாழ்க்கை சுதர்ஸன் (1951) படத்துடன் முடிவுக்கு வந்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 26. திரைப்பட நடிகராக வெற்றிகரமாக இவர் உலா வந்தது சுமார் 15 ஆண்டுகள். சின்னப்பா நடித்தது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்த தமிழ் படங்கள் ஆர்யமாலா, கண்ணகி, மனோன்மணி, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், விகடயோகி ஆகியவை.
10 வேடத்தில் நடித்த முதல் நடிகர்
ஒரே நடிகர் இரு வேடங்களில் நடிக்கும் தமிழ் சினிமா மரபு பி.யு சின்னப்பா இரு வேடங்களில் தோன்றி நடித்த உத்தம புத்திரன் படத்திலிருந்துதான் தொடங்குகின்றது. மூன்று வேடங்களில் முதன்முதலில் நடித்தவரும் சின்னப்பாதான். படத்தின் பெயர் மங்கையர்க்கரசி.
1965- ஆம் ஆண்டு வெளிவந்த ''திருவிளையாடல்" படத்தில் வரும் ''பாட்டும் நானே" என்ற பாடலை பாடிய சிவாஜிக்கு முன்னோடியாக ஜெகதல ப்ரதாபன் என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் 5 வேடங்களில் நடித்தவர் பி.யு.சின்னப்பா. நவராத்திரி 1964 படத்தில் 9 வேடங்களில் சிறப்பாக நடித்த நடிகர் திலகம் சிவாஜிக்கும் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் தோன்றிய கமல்காசனுக்கும் முன்னோடியாக ஆர்யமாலா என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார்
பி.யு. சின்னப்பா.
நடித்த திரைப்படங்கள்:
சந்திரகாந்தா (1936), ராஜமோகன் (1937), பஞ்சாப் கேசரி (1938), யயாதி (1968), அனாதைப் பெண் (1938), மாத்ரு பூமி (1939) உத்தம புத்திரன் (1940), ஆரியமாலா (1941), தர்மவீரன் (1941) தயாளன் (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), மனோன்மணி (1942), குபேர குசேலா (1943), மஹா மாயா (1945), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944), அர்த்தநாரி (1946), விகடயோகி (1946), துளஸி ஜலந்தர் (1947), பங்கஜ வல்லி (1947), கிருஷ்ண பக்தி (1948), மங்கையர்க்கரசி (1949), ரத்னகுமார் (1949), வனசுந்தரி (1951) சுதர்ஸன் (1951).
குபேரகுசேலா, மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களில் திருவாளர் பி.யு. சின்னப்பா அவர்களுடன் நடித்திருக்கிறேன். சின்னப்பா அவர்களை ஒரு சாதாரன நடிகர் என்று சொல்லி நிறுத்தி விட முடியாது. அவர் ஒரு பிறவி நடிகர். வசனம் சொல்வதிலும் சரி, பாட்டிலும் சரி, கத்தி சண்டை சிலம்பு சுற்றுதல், சுருள் பட்டா வீசுதல் ஆகியவற்றிலும் சரி அவர் ஈடு இணையற்றே விளங்கினார்” என 1963- ஆனந்த விகடன் பேட்டியில் டி.ஆர்.ராஜகுமாரி புகழ் சூ்ட்டினார்.
வெற்றி கொடி நாட்டிய கண்ணகி
ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் கண்ணகி திரைப்படத்தை 1942ல் தயாரித்தனர். இளங்கோவலன் கதைவசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர். கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியா பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தில் கதாநாயகன் பி.யு. சின்னப்பா பெற்ற ஊதியம் ரூ.10000/- ஆனால் கதாநாயகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு கொடுத்த ஊதியம் ரூ.20000/- குறைந்த ஊதியத்திற்கு பி.யு. சின்னப்பா நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் அவர் ஜூபிடர் பிக்சர்ஸ் மேல் வைத்திருந்த மரியாதை. அதுமட்டுமன்று பி.யு.சின்னப்பாவை முதன் முதலில் 'சந்திரகாந்தா" படத்தில் நடிக்க வைத்த நிறுவனம் என்பதால் ஜூபிடர்ஸ் நிறுவனத்தின் கருத்தில் கொண்டே இப்படத்தில் குறைந்த ஊதியத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
கண்ணகி படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் விளக்கணைப்புச் செய்யப்படும் மாலை ஆறு மணிக்கு மேல் ஊரங்குச் சட்டம் அமலில் இருந்தது. அதனால் பகலிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துக் கொண்டு, நடிக, நடிகையர்களை, காஞ்சிபுரத்திற்கும், செங்கல்பட்டிற்கும், திருவள்ளுருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது. பி.யு.சின்னப்பா படப்பிடிப்பு முடிந்து சென்னையிலிருந்து செங்கற்பட்டுக்கு வந்து இரவு தங்கி விட்டு மறுநாள் புறப்பட்டுச் சென்று சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். இந்த சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தில் நடித்துக் கொடுத்தார் பி.யு.சின்னப்பா.
படம் ஓடிய ஊர்களுக்குகெல்லாம் பி.யு.சின்னப்பா நேரில் சென்று படம் எப்படி ஓடுகிறது என்று மதிப்பீடு செய்தார். மதுரையில் கண்ணகி படம் பார்த்து முடிந்து ஜனங்கள் தியேட்டரை விட்டு வெளியே வருகிற வேலையில் அந்தச் சாலைக்குள்ளேயே நுழைய முடியாது! அவ்வளவு கூட்டம் இதுதான் சின்னப்பா நடிப்பிற்கு மக்கள் வழங்கிய உண்மையான அங்கீகாரம்.
பாரதி புகழ்பாடிய சின்னப்பா
பாரதியார் பாடல்களில் சின்னப்பாவுக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு முதன் முதலில் தமிழ் திரையில் பாரதியின் பாடல்களை பாடியவரும் இவர்தான். ''உத்தம புத்திரன்" என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ' செந்தமிழ் நாடேனும் போதினிலே' என்ற பாடல் பெரிய ஹிட். இப்பாடலுக்கு அன்றைய ஆங்கிலேய அரசு (1940 ஆம் ஆண்டு) தடை விதித்தது. சுதந்திரம் பெற்ற பின்தான் அத்தடை நீக்கப்பெற்றது.
எட்டைய புரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்ட ரூ.1000/- நிதியுதவி செய்தார். பிருதிவிராஜ் படத்தில் ''அச்சமில்லை" "பாரத சமுதாயம் வாழ்கவே" "வெற்றியெட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே" ஆகிய மூன்று பாடல்களை பாடினார். தயாளன் படத்திலும் பாரதியார் பாடலை பாடியுள்ளார். தமிழ் நடிகர்களில், அதிக எண்ணிக்கையில் பாரதி பாடல்களை திரையில் பாடி சாதனை படைத்துள்ளார் சின்னப்பா.
"கட்டபொம்மு" என்ற படத்தை தயாரிப்பதாக 1948ஆம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் விளம்பரம் வெளியிட்டனர். பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடிக்க போகிறார் என்றும் விளம்பரம் சொல்லியது. ஆனால் எக்காரணத்தினாலோ படம் வெளிவரவில்லை. '' ஒருவேளை பி.யு. சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் திரைக்கு வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது மட்டும் சர்வம் நிச்சயம் என்கிறார் திரைப்பட வரலாற்று ஆய்வாளர் திரு.அறந்தை நாராயணன்.
எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு
ஜுபிடரின் மஹாமாயா (1944) படத்தில் கதாநாயகனாக வில்லன் உருவில் பி.யு. சின்னப்பா நடித்தார். கண்ணம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எல்.சரோஜா, சஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்கரபாணி ஆகியோர் நடித்தனர். சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சோமுவை பார்ப்பதற்காகவும், படப்பிடிப்பை கண்டு களிப்பதற்காகவும் எம்.ஜி.ஆர். ஜூபிடரின் படப்பிடிப்பு தளத்திற்கு அப்பொழுது வருவதுண்டு. தனது பழைய சீடர் எம்.ஜி.ஆரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்த சின்னப்பாவுக்கு அவரை எப்படியாவது அந்த திரைப்படத்தில் (மஹாமாயா) நடிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு அப்படத்தில் ஒரு வேடம் கொடுக்கும்படி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார். ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும், பி.யு. சின்னப்பாவின் ஏற்று ஒரு சிறு வேடம் எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கித் தரப்பட்டது. படத்தில் ''அஸ்வபாலன்" என்ற வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
தமிழகத்தின் தவ நடிகர் பி.யு சின்னப்பா என்பதில் ஐயமில்லை! #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
சிவகாமி உமையவளே
முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு
முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று
வாழ்த்து கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேணும்
கோட்டை ஏறி #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனில்லே
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனில்லே
அதை மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே
மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
#பட்டிக்காடா_பட்டணமா_வெளிவந்த_நாள்_இன்று
(மே 6 1972)
நகரத்து நாகரீக மனைவிக்கும் கிராமத்து பண்பாட்டு கணவனுக்கும் நடக்கிற சண்டையெல்லாம் சினிமாவுக்குப் புதிதில்லைதான். ஆனால் படம் வந்த சமயத்தில் இது ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. ‘இப்படியும் கூடவா மாமியார்க்காரி இருப்பாள்’ என அதிர்ச்சியடையச் செய்தது. சோழவந்தானையும் மூக்கையாவையையும் இன்னும் மறந்துவிடவில்லை மக்கள். ‘பட்டிக்காடா பட்டணமா’வையும் ‘என்னடி ராக்கம்மா’வையும் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
லண்டனில் இருந்து படித்துவிட்டு சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார் ஜெயலலிதா (கல்பனா). அவரை வரவேற்க, அப்பா வி.கே.ராமசாமியும் அம்மா சுகுமாரியும் விமானநிலையத்துக்கு வந்து அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர்களின் சொந்தக்காரப் பையன் குடியுடனும் இடுப்பில் கைவைத்து அணைத்தபடி ஒரு பெண்ணுடனும் வருகிறான்.
இதையடுத்து, மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற சோழவந்தானில் இருந்து, கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி, தாய்மாமா வி.கே.ஆருக்கு கடிதம் போடுகிறார் மூக்கையா சேர்வை (சிவாஜி). ‘அந்த குடுமிமாமாவை பாத்து ரொம்ப வருஷமாச்சு. கிராமத்தையும் சுத்திப் பாக்கலாம்’ என்று கல்பனா விரும்புகிறாள்.
எல்லோரும் சோழவந்தானுக்கு வருகிறார்கள். ஊரில் சிவாஜிக்கும் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அவரின் வீரத்தையும் அவருக்கு பயந்து நடுங்குகிறார்கள் என்பதையும் கண்டு ரசிக்கிறார் ஜெயலலிதா. வியக்கிறார்.
‘நான் மட்டும் லண்டன்ல படிச்சிருந்தேன்னா, உங்க பொண்ணுக்கு இந்நேரம் தாலி கட்டிருப்பேன்’ என்று விளையாட்டாகச் சொல்கிறார் சிவாஜி.
மதுரைக்கு வந்தவர்கள், தன் சொந்தத்தில் இருக்கிற அந்த குடிகாரப் பையனை, பெண்ணுடன் வந்தவனை தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார் சுகுமாரி. இதைக் கண்டிக்கிறார் வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் தெரிவிக்கிறார். அந்தக் கல்யாணத்தின் போது வந்து, ஜெயலலிதாவை தூக்கிக்கொண்டு சோழவந்தானுக்கு வருகிறார். ‘நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’ என்கிறார். ஆனால் ஊர்மக்களும் உறவுக்காரர்களும் ‘மணமேடைலேருந்து அவளைத் தூக்கிட்டு வந்தே. இனி அவளை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க’ என்கிறார்கள். ‘நீயே கட்டிக்கோ’ என்கிறார்கள்.
இதற்கு ஜெயலலிதாவிடம் சம்மதம் கேட்க, அவரும் சரியென்கிறார். திருமணம் நடக்கிறது. அவள் நாகரீகமாக இருக்க, சோபா, ஏ.ஸி, பாத்ரூமெல்லாம் கேட்க, அவற்றையெல்லாம் செய்துகொடுக்கிறார் சிவாஜி. மாடர்ன் டிரஸ்ஸில் இருப்பவருக்கு புடவைக் கட்டிவிடுகிறார்.
அவருக்கு பிறந்தநாள் வருகிறது. ஊரில் இருந்து நண்பர்களையெல்லாம் வரவழைக்கிறார். கேக் ரெடியாக இருக்கிறது. ஒரு பஞ்சாயத்துக்குச் சென்றிருக்கிறார் சிவாஜி. காத்திருக்கிறார்கள். பிறகு கேக் வெட்டுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் குடித்துவிட்டு ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் பதைபதைத்துப் பார்க்க, சிவாஜி வந்து கடும் கோபமாகிறார். சாட்டையால் எல்லோரையும் விளாசித் தள்ளுகிறார். விரட்டுகிறார். மனைவி ஜெயலலிதாவுக்கு சாட்டையால் வெளுத்தெடுக்கிறார்.
விடிந்ததும் ஜெயலலிதாவைக் காணவில்லை. மதுரைக்குச் சென்று அழைக்கிறார். விடமாட்டேன் என்கிறார் சுகுமாரி. வீட்டுக்கு வந்த சிலநாளில், வக்கீல் நோட்டீஸ் வருகிறது. திரும்பவும் சென்று கெஞ்சுகிறார். ‘ஊர்ல எனக்குன்னு மிகப்பெரிய மரியாதை இருக்கு. இதுவரைக்கும் கோர்ட் படியை நான் மிதிச்சதே இல்ல. இனி அடிக்கமாட்டேன். உன் இஷ்டத்துக்கு நடந்துக்கோ’ என்று கெஞ்சுகிறார். இதற்கு அம்மாக்காரி சுகுமாரியும் சம்மதிக்கவில்லை. மனைவி ஜெயலலிதாவும் மனமிரங்கவில்லை.
அடுத்தகட்டமாக, மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கே, ‘கணவர் எங்கே’ என்று கேட்க, ‘அவர் லண்டனில் இருக்கிறார்’ என்கிறார்கள். ‘பெயர் முகேஷ்’ என்கிறார்கள். இதையெல்லாம் கண்டு கொதிக்கிற வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் சொல்கிறார். அங்கே, சென்னையில் குடுமியும் கடுக்கனுமாய் மூக்குத்தியுடன் இருந்த சிவாஜி, ஹிப்பி கிராப்பும் பேண்ட்டுமாக ஸடைலாக வருகிறார். அன்றிரவு வீட்டுக்குள் புகுந்து, மனைவியின் சம்மதமில்லாமல், முரண்டு பிடிக்க, மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார். இதில் அவர் கர்ப்பமாகிறார்.
ஒரு பார்ட்டியில், ஜெயலலிதா தலைசுற்றி மயக்கமாக, அங்கே உள்ள பெண் மருத்துவர் சோதித்துப் பார்த்து கருவுற்றிருக்கிறார் எனும் விஷயத்தைச் சொல்ல,அங்கே வரும் சிவாஜி, ‘லண்டனில் மாப்பிள்ளை. இங்கே மனைவி கர்ப்பம். எப்படி?’ என்று கேள்வி எழுப்புகிறார். ‘அதானே’ என்கிறார்கள் அனைவரும்.
ஆனால், சிவாஜியின் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.மனமொடிந்து ஊர் திரும்புகிறார். இங்கே, சென்னையில், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறக்கிறது. பிறந்த கையுடன் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டு போட்டுவிடுகிறார். குழந்தை எங்கே என்று ஜெயலலிதா கேட்க, அம்மாக்காரி விஷயத்தைச்சொல்ல, கோபமாகி, அழுகையுடன் ஆஸ்ரமத்துக்கு ஓடுகிறார். அங்கே குழந்தையைக் கேட்கிறார். தத்து கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். எங்கே, யார், விலாசம் என்ன என்று கேட்க, ‘மூக்கையா , சோழவந்தான்’ என்கிறார்.
இந்தசமயத்தில், சிவாஜி சென்னைக்கு வருகிறார். சொந்தக்காரப் பெண் ‘ராக்கம்மாவுக்கு கல்யாணம்’ என்கிறார். பத்திரிகை கொடுக்கிறார். அதில் மணமகன் மூக்கையன் என்றிருக்க, அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்தநிலையில், தன் குழந்தையைக் கொடுங்கள் என்று கேட்க, சோழவந்தான் வருகிறார் ஜெயலலிதா. அப்போது திருமணம். ஊரும் உறவும் திரண்டிருக்க, ‘முதல் மனைவி நானிருக்கும்போது இவர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்கிறாரே நியாயமா?’ என்று முறையிடுகிறார். அப்போதுதான் மணமகனின் பெயரும் மூக்கையன், அவர் வேறொருவர் என்பது தெரியவருகிறது. சிவாஜியும் ஜெயலலிதாவும் ஒன்றுசேருகிறார்கள். மாமியார் சுகுமாரியும் மனம் மாறி மன்னிப்புக் கேட்கிறார்.
அந்தக் காலத்தில், மிகச்சிறந்த கதாசிரியர் என்று பெயர் பெற்றவர் பாலமுருகன். இவரின் கதை வசனம் என்றாலே படம் சூப்பர் என்பது முடிவாகிவிடும். அந்த அளவுக்கு நேர்த்தியாகக் கதை சொல்லுவதிலும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் வசனம் எழுதுவதிலும் கில்லாடி என்று பேரெடுத்தவர். ‘பட்டிக்காடா பட்டணமா’வுக்கு கதை, வசனம் பாலமுருகன் தான்!
அதேபோல், அந்தக்காலத்தில் சிவாஜி, பி.மாதவன், பாலமுருகன் கூட்டணி என்றாலே அது சக்ஸஸ்தான் என்பார்கள். சிவாஜியை ரசித்து ரசித்து படமாக்குவார் இயக்குநர் பி.மாதவன். சிவாஜி, ஜெயலலிதா, வி.கே.ராமசாமி, சுகுமாரி, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.என்.லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி முதலானோர் நடித்திருந்தார்கள்.
கணவனுக்கு அடங்காமல் இருக்கிற ஜெயலலிதா, கணவனை அடக்கியாளும் சுகுமாரி, கணவனைத் தேடி சென்னையில் அலையும் மனோரமா என்று அழகாகக் கேரக்டர் பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு முறை வி.கே.ஆர். பொங்குவதும் பிறகு தோற்றுப்போவதும் பார்க்கிற வீட்டுப் பணியாள் சாமிக்கண்ணு திக்குவாய். ‘என் பொண்டாட்டி மட்டும் இப்படிச் செஞ்சிருந்தா அவளைக் கொன்னுபோட்டிருப்பேன்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவதும் கடைசியில் வி.கே.ஆர்., சுகுமாரியை சாட்டையால் விளாசியதும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும் இன்னொரு டச்.
ஊரில் மைனராக அடாவடி பண்ணும் எம்.ஆர்.ஆர்.வாசுவை மனோரமாவுக்கு கட்டிவைப்பதும் இதனால் அவர் சோழவந்தானிலிருந்து சென்னைக்கு ஓடிவிடுவதும் அவரைத் தேடிப் பிடிக்க மனோரமா வருவதும் காமெடிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
படித்த திமிர், பணக்காரத் திமிர், நவநாகரீக நங்கை, எதிலும் அலட்சியம் என்பதெல்லாம் ஜெயலலிதாவின் கேரக்டர்கள். ஒவ்வொரு தருணத்திலும் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘குடுமி அங்கிள் குடுமி அங்கிள்’ என்று சிவாஜியைக் கொஞ்சுவதாகட்டும், திட்டியதையும் அடித்ததையும் பொறுக்கமாட்டாமல் இங்கிலீஷில் புலம்புவதாகட்டும், குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பதற்கு தவிக்கிற தவிப்பாகட்டும்... ஜெயலலிதாவின் திரை வாழ்வில் முக்கியமான படம் இது.
குடுமியும் முழங்காலுக்கு சற்றே கீழே வரை கட்டிக்கொண்டிருக்கிற வேஷ்டியாகட்டும், சில்க் ஜிப்பாவாகட்டும், காதில் கடுக்கனும் மூக்கில் மூக்குத்தியும் கொண்டு சோழவந்தான் மூக்கையா சேர்வையாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி. அப்பத்தாவுக்கும் ஊர்மக்களுக்கும் தாய்மாமாவுக்கும் கொடுக்கிற மரியாதையும் பண்பும் மதுரைக்காரராகவே அவர் நடை உடை பாவனையெல்லாம் காட்டியிருப்பது அசத்தல். ஜெயலலிதாவைப் போலவே சிவாஜியின் இன்னொரு முறைப் பெண் (புதுமுகம் சுபா) ராக்கம்மாவுடன் விளையாடுவதும் விகல்பமில்லாமல் பழகுவதும் நெகிழவைக்கும்.
மனைவிக்கு விட்டுக்கொடுப்பதும் கலப்பையைக் கொல்லையில் போட்டதால் மனைவியிடம் கோபம் கொள்வதும் பிரிந்து சென்றதும் வருந்திக் கெஞ்சுவதும் குடுமியும் கடுக்கனும் எடுத்துவிட்டு, நவநாகரீக வாலிபனாக கிடாருடன் பாடுவதும் ‘உன் மனைவி கூட வாழமுடியலை. நீ பஞ்சாயத்து பண்றியா?’ என்று ஊர்மக்கள் அவமதிப்பதைக் கேட்டு புழுங்கிப் போவதும் என சிவாஜிக்கு ப்ளேட் ப்ளேட்டாக கொடுத்ததையெல்லாம் மனிதர், அல்வா சாப்பிடுகிற மாதிரி அசத்தியெடுத்திருப்பார்.
டைட்டிலில் கட்டியம் கூறுவது போல் ஒரு பாடல். அதில் கொஞ்சம்கொஞ்சமாக சிவாஜியைக் காட்டும் ரசனை. டைட்டில் முடிந்ததும் ‘அம்பிகையே ஈஸ்வரியே’, அடுத்து ‘என்னடி ராக்கம்மா’, ‘கேட்டுக்கோடி உருமிமேளம்’, ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’ என்று எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. தன் இசையால் மாபெரும் ஹிட்டாக்கினார்.
மதுரை பாஷையில் சிவாஜி பிரமாதப்படுத்தியிருப்பார். மனோரமாவுக்கு சொல்லவா வேண்டும். சோழவந்தானில் முக்கால்வாசி படப்பிடிப்பு. நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்த ஊர் இதுதான். இங்கே படப்பிடிப்பு நடத்த பல உதவிகள் செய்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஆகவே, டைட்டிலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கும்.
1972ம் ஆண்டு, மே மாதம் 6ம் தேதி வெளியாகி, பல ஊர்களில் நூறுநாட்களைக் கடந்து ஓடியது ‘பட்டிக்காடா பட்டணமா’. அந்த சோழவந்தான் கிராமத்தை அழகாகப் படம்பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம். படத்தின் சண்டைக்காட்சிகளும் மலைக்கவைக்கும்.
சென்னையில், சிவாஜியை காரிலேற்றிக்கொண்டு, ஒவ்வொரு இடமாகக் காட்டி அடிப்பார்கள். ‘இதான் எல்.ஐ.சி’ என்று ஒரு அடி. ‘இதான் சாந்தி தியேட்டர்’ என்று ஒரு அடி. பிறகு சிவாஜி அடிக்கும் போது, ‘சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?’ என்று வெளுப்பார். அட்டகாசமான கிராமத்துப் படமாக, அழகான குடும்பப்படமாக, பிரமிக்க வைக்கும் சிவாஜி படமாக, வியக்கவைக்கும் பி.மாதவன் படமாக வந்து பட்டையைக் கிளப்பியது ‘பட்டிக்காடா பட்டணமா’.
இணைய தொகுப்பு
Natesan Natesan . #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
எளியவர்களுக்கும் இறையுணர்வு ஊட்டிய #சிவாஜி_கணேசன்...
#பக்திப்_பாடங்கள்.
சிவாஜி கணேசன்... உச்சரிக்கும்போதே தனி மரியாதையை ஏற்படுத்தும் பெயர். நடிப்புக்கு இலக்கணம்... இந்திய சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை... நடிப்புக்கலையில் சமுத்திரம்... கலைத்துறை என்றென்றும் ஜொலித்து மின்னும் நட்சத்திரம்... எவரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தவர்... என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் சிவாஜி கணேசன். குழந்தை நட்சத்திரம் முதல் சூப்பர் ஸ்டார் வரை 'சிவாஜி கணேசன்தான் எங்கள் ஆதர்சம்' எனச் சொல்லும் ஒப்பற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
சிவாஜி, விநாயகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்திகொண்டவர். திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சை மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்கும் யானையைப் பரிசாக வழங்கியவர். இவர் வெள்ளித்திரையில் கால்பதிப்பதற்கு முன்னர் நடித்தது நாடகத்தில். திரைத்துறைக்கு வந்த பிறகும்கூட, அவ்வப்போது நாடகத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் நடித்த முதல் நாடகம் `ராமாயணம்.’ அப்போதே அவரின் உயிர்ப்புள்ள நடிப்புத் திறனை வெகுவாகப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் தந்தைப் பெரியார்.
இவரின் முதல் படமான 'பராசக்தி' 1952-ம் ஆண்டில் வெளியானது. ஆனாலும், இவர் பக்திப் படங்களில் பாதம் பதிக்க ஆறு வருடங்கள் ஆனது. 1958-ம் ஆண்டுதான் முதன்முதலில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நடித்தார் சிவாஜி.
சிவாஜி நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் பக்திப் படங்கள் தனித்துவமானவை. அப்பர்,
சுந்தரர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்
போன்ற ஆன்மிகப் பெரியவர்களை பாமரர்களும் அறியும்படி செய்தது அவர் நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர்,
மார்கழி மாத காலை நேரங்களில்,
சிவாஜி நடித்த `திருவிளையாடல்’, `சரஸ்வதி சபதம்’ ஒலிச் சித்திரங்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கம்பீரமான குரல் தூய தமிழை உச்சரிக்கும் அழகே அலாதியானது. அந்தச் சந்தர்ப்பத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவை பக்திப் படங்களே!
நடிகர் திலகம் நடித்த பக்திப்படங்கள் சில
* திருவிளையாடல்
1965-ம் ஆண்டு வெளியானது. சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் 'சிவாஜி - நாகேஷ் (புலவர் - தருமி)' காம்பினேஷன் சீன் இன்றும் அனைவரின் ஆல்டைம் ஃபேவரைட். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியிடம், ``இந்தக் காட்சியில் உங்களைவிட நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். எனவே, இதை படத்திலிருந்து நீக்கிவிடலாம்’’ என்று கூறினாராம். ``வேண்டாம்! அதுதான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் பரிசு’’ என்று கூறினாராம் சிவாஜி. இதைத்தான் பேசிய எல்லா மேடைகளிலும் சொல்லத் தவறியதில்லை நடிகர் நாகேஷ்.
* கந்தன் கருணை
1967-ம் ஆண்டில் வெளியானது. `வீரபாகு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற இவரின் ஸ்டைலிஷான நடை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது..
* சரஸ்வதி சபதம்
இரட்டை வேடம். வித்யாபதி, நாரதர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். `அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற பாடல் என்றும் மறக்க முடியாத இனிய கீதம்.
* திருவருட் செல்வர்
1967-ம் ஆண்டில் வெளியானது. திருநாவுக்கரசர் (அப்பர்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, காஞ்சி பெரியவா சிவாஜி கணேசனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
* திருமால் பெருமை
1968-ம் ஆண்டில் வெளியானது. பெரியாழ்வார் கதாபாத்திரத்தில் நடித்து இவர் பாடியதாக வரும் 'ஹரி ஹரி கோகுல ரமணா...' பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்.
* சம்பூர்ண ராமாயணம்
1958-ம் ஆண்டில் வெளியானது. பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ராமாராவ் கலக்கியிருப்பார். ஆனாலும், பரதனாக பட்டையைக் கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன். 'பரதனை நேரில் கண்டது போலவே இருந்தது' என்று அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ராஜகோபாலாச்சாரி பாராட்டியிருந்தார்.
* ஶ்ரீவள்ளி
1961-ம் ஆண்டில் வெளியானது. முருகப் பெருமான் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருந்திப் போயிருந்தார் சிவாஜி.
* கர்ணன்
1964-ம் ஆண்டில் வெளியானது. கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமாயணத்தில் பரதனாக பட்டையைக் கிளப்பியிருந்தவர், மகாபாரதத்தில் கர்ணனாகக் கலக்கியிருப்பார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' என்ற கர்ணனின் மரணக் காட்சியில் வரும் பாடல் சிவாஜியின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல். #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
நல்ல மனைவி நல்ல பிள்ளை
நல்ல குடும்பம் தெய்வீகம்
தெய்வீகம் அது தெய்வீகம்
தன்னை இழந்து கடமை மறந்து
தவறும் இல்லம் அலங்கோலம் (நல்ல)
கள்ளிப்பூவில் முல்லை மணத்தை
காணத்திரியும் ஒருப் பிள்ளை
கானல் நீரில் தாகம் தீர
ஓடித்திரியும் ஒருப்பிள்ளை
உள்ளவரையில் ஆடிப்பார்த்து
உறங்க துடிக்கும் ஒருப்பிள்ளை
உறவை மறந்து உரிமை மறந்து
பிள்ளைப்போலே ஒரு அன்னை
பிள்ளைப்போலே ஒரு அன்னை (நல்ல)
#நம்ம_வீட்டு_லட்சுமி #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃










