#🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 இன்று வரையிலும்
அவள் மேல்
காதல் கொள்கிறேன்..
நான் உதிரமாய் அவளிடம் உறவாடிய போதே
நான் ஆணா, பெண்ணா என்று அறியாமல் என்மேல்
காதல் கொண்டவள்..
என் உடலின் அத்தனை அசைவுகளையும் அழகாய்
புரிந்து கொண்டவள் அவள்...
என்னை காண
ஒவ்வொரு நாட்களையும்
எண்ணி எண்ணி என்மேல்
காதல் கொண்டவள் அவள்...
என் பஞ்சு மேனி மேல் அவளின் ஸ்பரிச விரல் நுணிகள் தீண்ட
நான் மெல்ல சிலிர்த்தேன்...
அத்தருணத்திலும் கண்களில் கண்ணீர் தவழ,
புன்னகை பூ பூத்து
என் மேல் காதல் கொண்டவள் அவள்...
என் மேல் உயிராகவும்,
எனக்கு மெய்யாகவும் வாழ்வதால் தான் அவளை உயிர் மெய் எழுத்தால் நித்தமும் அழைத்து காதல் கொள்கிறேன்...
ஆம் ,
அவள் தான் என் " அம்மா "....
இந்த மகனின் அன்பு "வாழ்த்துகள்"