saravanan
576 views
15 days ago
#sinthippom thozargale.. வாழ நம் அனைவருக்குமே ஆசை தான். ஆனால் எப்படி என்பது தான் மிக முக்கியக் கேள்வி. நம் கையில் உள்ள பணத்தை எப்படி செலவழிக்கிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம்... நம் செலவினம் எப்படி மேற்கொள்கிறோம் என்பதைச் சற்று கூர்ந்து அலசிப் பார்ப்போமே. அவசிய செலவுகள் அனைத்துமே செய்து தான் ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒவ்வொரு செலவையுமே இது அவசியம் தானா என ஒரு நொடி யோசித்தப் பின் அதனை செய்தால் போதும். நம் செலவினங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்.. கோடி கோடியாய் செலவழிக்க நமக்கு தகுதி இருக்கலாம்... ஆனால் தேவையற்ற செலவுகளை செய்யப் பழக்கப்பட்டு விட்டோமானால் அனைத்து செல்வமும் சில காலத்தில் காணாமல் போய் விடும் என்பதை உணர்ந்து நம் வரவு செலவு வழக்கங்களை ஒரு வரையறைக்குள் வைக்கப் பழகுவோம். இனிதாக வாழ்வோம். வாழ்த்துகள்... 😊😊😊