Dr.Ganapathi - siddha doctor
584 views
5 days ago
பெரியார் தமிழினத்தை அழிக்கச் செய்த செயல்கள் 1965 ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியார் செய்த துரோகமும்!! 1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக் காலத்தில் ஆதிக்க இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றவர் தி.க. நிறுவனர் ஈ.வே.ரா. அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து மறியல்கள் பல தி.க. நிறுவனர் ஈ.வே.ரா. முன்னெடுக்கப்பட்டது. 1938 இல் நடந்த போராட்டத்தையும், 1948 இல் நடந்த போராட்டத்தையும் பொத்தாம் பொதுவாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்ல முடியாது. இவை இரண்டும் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்தவை அல்ல.மாறாக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிர்த்துத் தான் நடத்தப்பட்டவை. தி.க. நிறுவனர் ஈ.வே.ரா. எதிர்த்ததெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம் என்பதைத் தான். இது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது. 1965ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியே இந்திய அரசின் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டமாகும். TDYC - 9943909495 #😁தமிழின் சிறப்பு