Vinoth Kumar
596 views
3 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் போளூரில் 140 ஆவது மே தின விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 140 ஆவது மே தின விழா இன்று மாலை 5மணியளவில் ஒருங்கிணைப்பாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போளூர் எல்ஐசி அலுவலகம் எதிரில் சி ஐ டி யு சார்பில்ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் அண்ணா பூங்கா அருகில் நிறைவு பெற்றது. அதன் பின் திறந்தவெளி அருகில் கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் கேட்டு பேரிழ்ச்சியோடு போராடினார்கள் பின்னாளில் மற்ற நாடுகளுக்கும் தொழிலாளர்கள் எழுச்சி என்பது ஏற்பட்டது இந்தப் போராட்டமே தொழிலாளர்களின் உரிமை போராட்டத்திற்கு வழி வகுத்தது இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு சிந்தனை சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின விழா என்பது எழுச்சியோடு கொண்டாடப்பட்டது இன்றளவும் கூட முதலாளிகளின் லாப வேட்டைக்கு தொழிலாளர்களை சுரண்டுகின்ற போக்கு நீடிக்கிறது.