இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
#🙋♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #புரட்சியாளன் சீமான்