சரவணகுமார்©183
556 views
18 days ago
கடந்த திமுக ஆட்சி காலத்தில் இருந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வைக்க அறப்போர் பல்வேறு புகார்களையும் கோரிக்கைகளையும் கொடுத்து வருகிறது. தொடர்ந்து 2 வருடங்களாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சேகரித்து வருகிறது. அறப்போர் இயக்கத்தின் தொடர் புகார்களை அடுத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு பேராசிரியர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடர்ந்து பல கடிதங்களை அனுப்பி வருகிறார். 14/02/2025 பதிவாளர் கடிதம்: 17/02/2025க்குள் பேராசிரியர் விவரங்களை பதிவேற்றுங்கள். இந்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதி உள்ள பேராசிரியர்கள் மட்டுமே செய்முறை தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்துதல் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள். 15/04/2025 பதிவாளர் கடிதம்: 17/02/2025க்குள் எந்த கல்லூரியும் பேராசிரியர் விவரங்களை பதிவேற்றம் செய்யவிலை என்பதால் உடனடியாக பேராசிரியர்கள் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு அனுப்பி வைத்து அதன் நகலை பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் கல்லூரி இணையதளத்திலும் இந்த பட்டியலை வெளியிட கேட்டுக் கொள்கிறோம். 29/07/2025 பதிவாளர் கடிதம்: 08/08/2025க்குள் பேராசிரியர் விவரங்களை அனுப்பி வைக்காத கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 14/05/2026 பதிவாளர் கடிதம்: 20/05/2026க்குள் பேராசிரியர் விவரங்களை அனுப்பி வைக்காத கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 22/05/2026 பதிவாளர் கடிதம்: சில கல்லூரிகள் கால நீட்டிப்பு கேட்டுள்ளதால் 27/05/2026க்குள் பேராசிரியர் விவரங்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறோம். இன்றைக்கு தேதி 06/06/2025. இந்நேரம் பதிவாளர் அடுத்த கடிதத்தை எழுதிக் கொண்டு இருப்பார் என்று நினைக்கிறோம். நம்முடைய மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அருகதை இது தான். இந்த கல்லூரிகளில் பயிற்சி எடுத்து வரும் ஆசிரியர்களின் தகுதி எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். மாதா மாதம் ரியாஸ்கான் அடித்தாலும் தொடர்ந்து சேட்டை செய்து அடி வாங்கும் வடிவேலு போல, பல்கலைக்கழகம் தொடர்ந்து கடிதம் எழுதி எச்சரிக்கை கொடுத்தாலும் அதை துச்சமாக எண்ணி அலட்சியப்படுத்தும் இந்த கல்லூரிகளை கட்டுக்குள் கொண்டு வரப்போவது யார்? பல்கலைக்கழகத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த பயிற்சி கல்லூரிகளை திமுக அரசு போல TVK அரசும் வேடிக்கை பார்க்க போகிறதா? அல்லது கடும் நடவடிக்கை எடுத்து வழிக்கு கொண்டு வரப்போகிறதா? உண்மையிலேயே மாணவர்களால் நலனில் அக்கறை இருந்திருந்தால் இந்நேரம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே. இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? Chief Minister of Tamil Nadu பல்கலைக்கழக அங்கீகார ஆய்வு சம்மந்தமான மோசடிகள் பற்றிய தகவல் தொடர்பாக அறப்போர் whatsapp குழுவில் இணைய - https://chat.whatsapp.com/JJTzH1z4fDqFfWRdhEufsJ உங்கள் கல்லூரியில் போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பிக்கப்படுகிறது என்றால் தொடர்புக்கு : arappor.it@arappor.org #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்