திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு இரங்கல்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் விபத்தில் சிக்கி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகம் தொய்ந்து கிடந்த காலத்தில் திறமையான இளம் இயக்குனர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளித்தவர். அதன் மூலம் தமிழ்த் திரையுலகின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்து வாடும் நடிகர்கள் ஜீவா, இரமேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
##PMK2.0