Follow
Savittri Raju
@1146601529ke
95
Posts
326
Followers
Savittri Raju
579 views
10 days ago
தாமதமாக புரியும் உண்மைகள்💔 ஒரு வயதான தந்தை, தனது மகனுக்கு தினமும் ஒரு தொலைபேசி அழைப்பு செய்தார். ஒவ்வொரு முறையும் மகன், "இப்போது வேலை பிஸி... பிறகு பேசலாம்" என்று கூறி அழைப்பை விரைவாக முடித்துவிடுவான். சில முறை அழைப்பை எடுப்பதும் இல்லை. ஒரு நாள் அந்த அழைப்பு வரவில்லை. மறுநாள் கூட இல்லை. அவன் அப்போது கூட அவர் அழைத்து தொல்லை செய்வதற்குள் தானே அழைக்கலாம் என அழைத்தபோது, மறுமுனையில் ஒரு உறவினர் அமைதியாக சொன்னார்: "நேற்று அவர் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்..." அந்த ஒரு நிமிடத்தில், பல ஆண்டுகளாக கவனிக்காமல் விட்ட அன்பின் மதிப்பு அவனுக்குப் புரிந்தது. ஆனால் அந்த உண்மையை மாற்றுவதற்கு நேரம் திரும்பி வரவில்லை. வாழ்க்கையில் சில உண்மைகள் சரியான நேரத்தில் புரிவதில்லை. நாம் அவற்றைப் புரிந்துகொள்ளும்போது, அந்த மனிதர்களோ, அந்த வாய்ப்புகளோ, அந்த நாட்களோ ஏற்கனவே நம்மை விட்டு விலகியிருக்கும். அதனால்தான் சில உண்மைகள் அறிவாக அல்ல, வருத்தமாக நம் மனதில் பதிகின்றன. பெற்றோர்கள் சிறு வயதில் உங்களை நிறைய திட்டியிருக்கலாம் ஏன் உங்களை கவனிக்க முடியாத நிலையில் கூட வேலை பளுவில் தள்ளப்படலாம் அவர்கள் அந்த ஏழ்மையிலும் உங்களை நன்றாக கவனித்திருக்கலாம் உங்கள் மனதை பாதிக்கும் சில தவறுகள் சில செயல்கள் கூட உங்கள் மனதை பதித்திருக்கலாம் அதை கருத்தில் கொண்டு அவர்களை வளர்ந்த காலம் கடந்து நீங்கள் உதாசீனம் செய்யாதீர்கள் . அடுத்து நாம் சிறியவர்களாக இருக்கும்போது பெற்றோரின் கண்டிப்பை வெறுக்கிறோம். அவர்கள் நம்மை புரிந்துகொள்வதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் வாழ்க்கை நம்மையும் அதே பொறுப்புகளின் முன் நிறுத்திய பிறகுதான், அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்று புரிகிறது. அப்போது அவர்களிடம் சென்று "நீங்கள் சரிதான்" என்று சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஆனால் சில நேரங்களில் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. நம்மை உண்மையாக நேசித்த மனிதர்களை, அவர்கள் எப்போதும் நம்முடன் இருப்பார்கள் என்று நினைத்து சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அவர்களின் அக்கறை, நேரம், பொறுமை எல்லாம் இயல்பானது என்று நம்புகிறோம். அவர்கள் விலகிய பிறகுதான், நம்மிடம் இருந்தது எவ்வளவு அரிய ஒன்று என்று புரிகிறது. பணம், பதவி, புகழ் போன்றவற்றைத் தேடி ஓடும் பயணத்தில், உடல்நலம், மன அமைதி, குடும்பம், நண்பர்கள் ஆகியவற்றின் மதிப்பை பலர் பின்னால்தான் உணர்கிறார்கள். நீங்கள் எத்தனை தவறுகள் #👉வாழ்க்கை பாடங்கள் செய்தாலும் உங்களை ஒரு போதும் ஒதுக்கவோ வெறுக்கவோ மாட்டார்கள் இதை உணர முடியவில்லை என்றாலும் அன்பை செலுத்த வேண்டும் அவர்களுடன் இருக்கும் நேரத்தை நெருக்கமாக்கி கொள்ள வேண்டும் ஒரு மருத்துவமனை அறை, ஒரு தனிமையான இரவு, அல்லது ஒரு பெரிய இழப்பு, பல ஆண்டுகளாக நாம் கவனிக்காத உண்மைகளை சில நிமிடங்களில் கற்றுக்கொடுத்துவிடுகிறது. ஆனால் தாமதமாக புரியும் எல்லா உண்மைகளும் சோகத்திற்காக மட்டுமல்ல. அவை நம்மை மாற்றுவதற்காகவும் வருகின்றன. கடந்த காலத்தை மாற்ற முடியாது. கடந்த காலத்தை சுற்றி உள்ளவர்கள் நண்பர்களிடம் பகிரப்படும்போது பாதிப்பு இரட்டிப்பாகின்றனது. நீங்கள் ஏதேனும் ஒரு செயலில் வெற்றி பெற்றால் அது நம்மால்தான் என்று பெருமிதம் அடைகிறீர்கள் ஆனால் தோல்வி எதிலாவது அடைந்தாலோ கஷ்ட்டம் வந்தாலோ அது தாய் தந்தையால் தான் என்று பழியை அவர்கள் மீது சுமத்துவீர்கள். ஏன்? இந்த பூமியில் நீங்கள் நடமாட காரணமே அவர்கள் தான் இதை மறுக்க முடியாது இன்று யாரையாவது மதிக்கலாம். இனியாவது நன்றி சொல்லுங்கள் அவர்களின் ஒரு அழைப்பை ஏற்று கொள்ளுங்கள். இன்று மன்னிக்க கற்று கொள்ளுங்கள். நம்முடைய அன்பை வெளிப்படுத்தலாம். வாழ்க்கை நமக்கு பாடங்களை முதலில் சொல்லிவிட்டு தேர்வு வைப்பதில்லை. முதலில் தேர்வை வைக்கிறது. அதன் பிறகுதான் பாடத்தை புரிய வைக்கிறது. அதனால்தான் சில உண்மைகள் தாமதமாக புரிகின்றன. ஆனால் அந்த தாமதமான புரிதல், மற்றொருவரின் வாழ்க்கையில் தாமதமாகாமல் இருக்க உதவுமானால், அதுவே அந்த வலியின் மிக அழகான அர்த்தமாக மாறிவிடும். காலம் கடமை உங்கள் கையில் மாற்றங்கள் மனதிற்கு அல்ல நம்முடைய செய்கைகளுக்கே ........ யாரோ ஒருவர்
Savittri Raju
1.1K views
12 days ago
ஆதி சங்கரர் அருளிய சிவ சங்கர ஸ்தோத்திரம்💐 அதிபீஷண கடுபாஷண யமகிங்கர படலீ க்ருத தாடன பரிபீடன மரணாகம ஸமயே । உமயா ஸஹ மம சேதஸி யமசாஸன நிவஸம் சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ... அஸதிந்த்ரிய விஷயோதய ஸுக ஸாத்க்ருதே தஸுக்ருதே பரதூஷண பரிமோக்ஷண க்ருத பதக விக்ருதே... ஸமனானன பவ கானன நிர தேர்பவ ஸரணம் ஸிவ சங்கர ஸிவ சங்கர ஹர மே ஹர துரிதம் ...... விஷயாபித படி ஸாயுத பிஸிதாயுதஸுகத: மகராயித மதி ஸந்ததிக்ருத ஸாஹஸ விபதம் பரமாலய பரிபாலய பரிஸாபித மநிஸம் சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ...... தயிதா மம துஹிதா மம ஜனனீ மம ஜனக : மம கல்பித மதி ஸந்ததி மரு பூமிஷு நிரதம் கிரிஜா ஸுக ஜனி தாஸுக வஸதிம் குரு ஸுகினம் ஸிவ சங்கர ஸிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ....... ஜனி நாஸன ம்ருதி மோசன ஸிவ பூஜன நிரதே அபிதோ த்ருஸமித மீத்ருஸ ஸமஹமாஹ வதி ஹா கஜ கச்சப ஜனித ஸ்ரம விமலீ குரு ஸுமதிம் சிவ சங்கர சிவ சங்கர ஹர மே ஹர துரிதம் ...... த்வயி திஷ்டதி ஸகலஸ்திதி கருணாத்மனி ஹ்ருதயே வஸு மார்கண க்ருபணேஷண மனஸா ஸிவ விமுகம் அக்ரு தாஹ்ணிக மஸு போஷக மவ தாத் கிரி ஸூதயா சிவ சங்கர சிவ சங்கர சிவமே ஹர துரிதம்..... பிதராவிதி ஸுகதாவிதி ஸிஷ்ணுனாக்ருத ஹ்ருதயெள ஸிவயா ஸக பயகே ஹ்ருதி ஜனிதம் தவ ஸுக்ருதம் இதி மேவ ஹ்ருதயம் பவ பவ தாத்தவ தயயா சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ..... ஸரணாகத பரணாஸ்ரித கருணாம்ருத ஜலதே ஸரணம் தவ சரணெள ஸிவ மம ஸம்ஸ்ரு திவ ஸ்தே பரிசின் மய கருணாமய பிஷஜேன சிராவ தாத் சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ..... விவிதாதிபி ரதிபீதர க்ருதாதிக ஸுக்ருதம் ஸத கோடிஷு நரகாதிஷு ஹத பாதக விவஸம் ம்ருட மாமவ ஸுக்ருதீபவ ஸிவயா ஸக க்ருபயா சிவ சங்கர சிவ சங்கர ஹாமே ஹர துரிதம்...... கலி நாஸன கரலாஸன கமலாஸன வினுத கமலாபதி நயனார் சித கருணாக்ருதி சரண கருணாகர முநி ஸேவித பவ சாகர ஹரண சிவ சங்கர சிவ சங்கர சிவமே ஹர துரிதம் ...... விஜிதேந்ரிய விபுதார்ச்சித விமலாம் புஜ சரண பவ நாயன பயநாஸன பஜிதாங்கித ஹ்ருதய பணி பூஷண முனி வேஷண மதனாந்தக ஸரணம் சிவ சங்கர சிவ சங்கர சிவமே ஹர துரிதம் ...... த்ரிபுராந்தக த்ரித ஸேஸ்வர த்ரிகுணாத்மிக ஸம்போ வ்ருஷ வாஹன விஷ தூஷண பதி தோத்தர ஸரணம் கனகாஸன கலி நாஸன கனகாம்பர ஸரணம் சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம்..... இதை சொல்வதால் வாழ்வில் வரும் தீவினைகள், பாவங்கள் மற்றும் தடைகள் நீங்கும் சிவபெருமானை வேண்ட இது சொல்லப்படுகிறது. மரண பயம், நோய் பயம் மற்றும் மனதில் உள்ள இனம் புரியாத அச்சம் போகும் சிவபெருமானின் பூரண அருளையும், உமையவளின் ஆசியையும் ஒருசேரப் பெற இது பாடப்படுகிறது.இதைச் சொல்வதன் பயன்கள்மன அமைதி: மனக் கவலைகள், அழுத்தங்கள் நீங்கி மனம் அமைதியும், தெளிவும் பெறும்உங்களைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் (Positive vibration) உருவாகி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.நோயற்ற வாழ்வு: உடல் நலம் மேம்படும், தீராத பிணிகள் மற்றும் நோய்களின் வீரியம் குறையும் சிரத்தையுடன் கூறி வர, சிவனின் அருள் பார்வை கிடைக்கும் இதை காலை அல்லது இரவு உறங்க போகும் முன் சொல்ல பயம் நீங்கும் ஆன்மீகம் Savittri Raju #ஆன்மீகம்