Follow
Savittri Raju
@1146601529ke
59
Posts
223
Followers
Savittri Raju
7.2K views
4 days ago
சித்திரை புத்தாண்டு இதுதமிழர்களின் மிக முக்கிய பாரம்பரிய பண்டிகையாகும். வசந்த காலத்தின் தொடக்கத்தையும், சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதையும் குறிக்கிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி தீபமேற்ற வேண்டும். சித்திரை மாதம் செவ்வாய் கிழமையாகும். இது வெறும் கால மாற்றம் மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்த, புதிய நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும் விதைக்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகும். வரலாற்று மற்றும் வானியல் சிறப்பு சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே சித்திரை 1-ஆம் நாளாக கணக்கிடப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கமாக (இளவேனில் பருவம்) கருதப்படுகிறது, மா, பலா, வாழைகாய்த்து குலுங்கும் அப்போதுதான் செடி, கொடிகள் துளிர்த்து பூத்துக் குலுங்கும். இதுவே தமிழ் ஆண்டு பிறப்பு என்பது வழக்கில் உள்ளது. கனி காணல்: புத்தாண்டு முன்தினம் இரவு கோலம் போட்டு கனிகள், பூக்கள், நகைகள், பணம், கண்ணாடி, மற்றும் அரிசி வெற்றிலைஆகியவற்றை ஸ்வாமி முன்பு ஒரு தட்டில் வைத்து, புத்தாண்டு அதிகாலையில் எழுந்து அதாவது காலை 4.30 to 6 மணிக்குள் பார்ப்பது, ஆண்டின் சுபிட்சத்திற்கு காரணமாக நம்பப்படுகிறது. சுமங்கலி பெண்கள் தலை நிறைய பூ வைத்து பொட்டோடும் கைவளை கல கல என வலம் வர மஹாலக்ஷ்மியின் ஆசி கிட்டும். கன்னி பெண்கள் புத்தாடை அணிந்து தாய் தந்தை சகோதர சகோதரிகளின் ஆசி பெற வேண்டும். அதிகாலையில் அனைவரும் கோயில்களுக்குச் சென்று இறைவனை குடும்பத்துடன் வழிபட வேண்டும். பாயசம் , வடை , வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி தயிர் பச்சடி போன்ற இனிப்பு, கசப்பு, புளிப்பு கலந்த உணவுகள் சமைக்கப்படும், இது வாழ்க்கையின் அனைத்து சுவைகளையும் சமமாக ஏற்க வேண்டும் என்ற தத்துவத்தைக் உணர்த்துகிறது. உறவினர் சந்திப்பு: வீடுகளில் பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வர். சமூக முக்கியத்துவம் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கத்தைக் குறிக்கிறது. இது உழவர்களுக்கான நாளாகவும், புதிய விவசாயப் பணிகளைத் தொடங்கும் நாளாகவும் குறிப்பாக கேரளாவில் விஷு மிகவும சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பூக்களால் கோலமிட்டு வழிபடுவர். இது பழைய கசப்புகளை மறந்து, புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க உதவும் ஒரு நன்னாளாகும். தமிழர்களின் கலாச்சார அடையாளமான சித்திரைப் புத்தாண்டு, ஒற்றுமை, அன்பு மற்றும் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இந்த இனிய நாளில் புதிய இலக்குகளை நிர்ணயித்து, மகிழ்ச்சியுடனும், சுபிட்சத்துடனும் வாழ உறுதி ஏற்போம். சித்திரை மகளை சந்தோஷமாய் வரவேர்ப்போம். அந்த மாதம் முழுவதும் சிறந்த மாதமாக விளங்கும் ஐய்யமில்லை . Savittri Raju #தமிழ் புத்தாண்டு
Savittri Raju
1.1K views
1 months ago
நாளை 3.3. 2026 அன்று சந்திர கிரகணம் மாலை 3.30 க்கு ஆரம்பித்து மாலை 6.47 க்கு முடிவடைகிறது. கர்ப்பிணி பெண்கள் வயது மூத்தோர்கள் உடல் நலிவுற்றோர் கிரகணம் முடியும் வரை வெளியில் வர கூடாது. கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்: மேஷம் , சிம்மம், கன்னி, தனுசு. கும்பம் நட்சத்திரம் : மகம், பூரம், உத்திரம். பூராடம் பரணி செய்ய கூடாதவை மாமிசம் உண்ண கூடாது . 3.30 ல் இருந்து 6.30 வரை . உறக்கம் கூடாது கிரகணம் முடிந்ததும் அவசியம் தலை ஸ்நானம செய்து விளக்கேற்ற வேண்டும். பரிகார மந்திரம் இதை ஒரு பேப்பரில் எழுதி சட்டை பையில் வைத்து கொள்ளவும் "இந்த்ரோ அனலோ யமோ ரிக்ஷோ வருணோ வாயு ரேவச்சம், குபேர , ஈசோக்னந்து இந்து உபரக உதவ்யதாம் மம" | கிரகணம் முடியும் வரை ராகு கேது சந்திர பகவான் ஸ்லோகம் சொல்லவும். ஓம் நமோ நாராயணாய நம நமச்சிவாய என உச்சரிப்பதும் நன்மை. கிரகணம் நேரத்தில் ஜபம் செய்வது மனசுத்தி மற்றும் ஆன்மீக பலன் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ராகு – கேது தோஷ நிவாரணம் மற்றும் மன அமைதிக்காக கீழே உள்ள ஸ்லோகங்கள் சொல்லப்படுகின்றன. ராகு பரிகார ஸ்லோகம் அர்தகாயம் மகாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம் சிம்ஹிகாகர்ப சம்பூதம் தம் ராகும் ப்ரணமாம்யஹம் பலன்: ராகு தோஷம் குறையும், பயம் மற்றும் மன கலக்கம் நீங்கும். கேது பரிகார ஸ்லோகம் : பலாச புஷ்ப சங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம் ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் பலன்: தடை நீக்கம், ஆன்மீக முன்னேற்றம். 🌙 சந்திரன் ஸ்லோகம் (சந்திர கிரகணம் போது முக்கியம்) சொல்லவும் ததிஷங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ சம்பவம் நமாமி சசினம் சோமம் சம்போர் மகுட பூஷணம் பலன்: மன அமைதி, உடல் நலம், குடும்ப சாந்தி. மறுநாள் காலை அருகில் உள்ள சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும் Savittri Raju💐 #சந்திர கிரகணம்
Savittri Raju
660 views
1 months ago
வெயிலுக்கு ஏற்ற நெல்லிக்காய் ஹெல்தி ஜூஸ் தேவையான பொருட்கள். நெல்லிக்காய் – 3 கறிவேப்பிலை – ஒரு பிடி மல்லித்தழை – ஒரு பிடி சீரகம் 1 ஸ்பூன் இஞ்சி – சிறிதளவு உப்பு – தேவைக்கு வெல்ல சர்க்கரை – ¼ ஸ்பூன் நீர் – 2–3 டம்ளர் செய்வது எப்படி நெல்லிக்காயின் கொட்டையை நீக்கவும். நெல்லிக்காய் + கறிவேப்பிலை + மல்லித்தழை + இஞ்சி சேர்த்து மிக்ஸியில் போடவும். 1 டம்ளர் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்ததை வடிகட்டியில் வடிக்கவும். மீண்டும் சிறிது நீர் சேர்த்து அரைத்து மறுபடியும் வடித்து 3 முறை நீர் ஊற்றி அரைப்பது நல்லது இறுதியாக உப்பு மற்றும் வெல்ல சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கவும். குளிர்ச்சியாக குடிக்கலாம். ☀️ வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்கும். உடல் நீர்ச்சத்து (Hydration) அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சோர்வு, தலைசுற்றல் குறையும் ஜீரணம் நல்லபடியாகும் தோல் பிரகாசமாகும் –நெல்லிக்காயில் Vitamin-Cமிக அதிகம். சளி, காய்ச்சல், வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்க உதவும். கறிவேப்பிலை – ரத்த சுத்தம் Vitamin D மல்லித்தழை – உடல் குளிர்ச்சிக்கும் இஞ்சி – ஜீரண சக்தி உண்டாகும் வாய்வு நீக்கும் #ஜுஸ் காலை வெறும் வயிற்றில் அல்லது மதியம் வெயிலில் இருந்து வந்த பிறகு குடிக்கலாம்