பொக்கிஷம்
நம்மை பெற்றவர்கள், நம் தவறான செயல்களை சுட்டிக்காட்டும் போது, சில நேரங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகத் தோன்றுவார்கள்.
சில உண்மைகளை உணர்த்தும் போது கூட, நாம் அவர்களைத் தள்ளி வைக்கிறோம்.
அவர்களின் அன்பான கோரிக்கைகளும், நமக்கு திருமணம் ஆன பிறகு தொந்தரவாக மாறக்கூடும்.
சிறுவயதில் நாம் கேட்டதெல்லாம் உடனே வாங்கித் தந்தவர்கள்,
முதுமை பருவத்தில் தங்களுக்கு தேவையான சிறிய விஷயங்களுக்கே மாதக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது.
“இன்று கிடைக்கும்… நாளை கிடைக்கும்…” என்று நம்பிக்கையுடன் நம் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
சில சமயம் அவர்கள் கேட்டதே நாமே மறந்துவிடுகிறோம்.
சிறுவயதில் எது உகந்த உணவு, எது வேண்டாம் என்று பார்த்து பார்த்து நமக்கு உணவு கொடுத்தவர்கள்,
இன்று அவர்களே குழந்தை போல ஆகி, பல உணவுகளை உடல் ஏற்காமல் தவிக்கிறார்கள்.
முதுமையின் பிடியில், தரையில் அமரவும், பேருந்தில் ஏறவும் கூட சிரமப்படும் நிலையில் இருப்பார்கள்.
அவர்களின் நிலையை உணராமல் நாம் கோபப்படவும் செய்கிறோம்.
சிறுவயதில் பெற்றோருடன் ஒட்டிக் கொண்டு வாழ்ந்த நாம்,
திருமணத்திற்குப் பிறகு அவர்களிடமிருந்து விலகி வாழத் தொடங்குகிறோம்.
ஆனால் அப்போது கூட, தாய் தந்தையின் மனம் நம்மை கருணையுடன் தான் பார்க்கும்.
அவர்களுடன் பேசுவதற்குக் கூட சிறிது நேரம் ஒதுக்காதது மிகப் பெரிய கொடுமை.
இழப்புகள் இருக்கும் போது உணரப்படுவதில்லை — இழந்த பின்பு தான் அதன் மதிப்பு தெரியும்.
இந்த உறவு ஒரு சங்கிலி போன்றது.
நாம் எப்படி நடத்துகிறோமோ, அது நம் சந்ததியினரிடமும் தொடரும்.
அவர்கள் இருக்கும் போதே, அவர்களுக்காகவும் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
அவர்களின் தேவைகள் பெரியதாக இருக்காது —
நம்முடைய அன்பும், அரவணைப்பும் தான்.
முதுமையில் அவர்கள் அதிகம் சாப்பிட முடியாது.
ஆனால் குழந்தையைப் போல அடிக்கடி பசி வரும்.
அதை புரிந்து கொண்டு, எளிதாக செரிமானமாகும் சத்தான உணவுகளை கொடுங்கள்.
உங்களுக்குப் பிடித்த உணவு, அவர்களுக்கு ஏற்றதாக இருக்காமல் இருக்கலாம்.
உங்கள் வசதிக்கு ஏற்ப, அவர்களை இயற்கை சூழலுக்கும், ஆலயங்களுக்கும் அழைத்து செல்லுங்கள்.
உங்கள் குழந்தைகளை அவர்களுடன் நெருக்கமாக இருக்க அனுமதியுங்கள்.
அவர்கள் ஒரு பொக்கிஷம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அவர்களை இழந்து விடாதீர்கள்.
நீங்கள் அவர்களாக மாறும் முன்பே —
மாற்றிக் கொள்ளுங்கள்.
அப்போது கால சக்கரத்தின் தண்டனையிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
#பொக்கிஷம்
– Savittri Raju
தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்
தீராத நோய்களைக் குணப்படுத்தி, ஆரோக்கியமான நீண்ட ஆயுளைத் தரும் சக்தி வாய்ந்த மந்திரம் சப்த சிரஞ்சீவி மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை தினசரி உச்சரிப்பதன் மூலம் நோய்களில் இருந்து காப்பாற்றபடுவோம் சப்த சிரஞ்சீவி மந்திரம்
அஸ்வத்தாம பலிர்வ்யாஸோ ஹனுமாம்ஸ்ச விபீஷணக
க்ருப பரசுராமஸ்ச சப்தைதே சிரஞ்ஜீவின:
சப்தைதான் சம்ஸ்மரேந்நித்யம் மார்க்கண்டேய
மதாஷ்டமம்
ஜீவேத்வர்ஷசதம் ஸோபி சர்வவ்யாதி
விவர்ஜிதக..
மந்திரத்தின் பொருள்:அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகளையும், எட்டாவதாக மார்க்கண்டேயரையும் தினமும் நினைப்பவர், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு, நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வார்.வழிபடும் முறை:எப்போது: தினமும் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, இந்த மந்திரத்தை 7 நம்பிக்கையோடு அல்லது 11 முறை ஜெபிக்கவேண்டும்.
ஆன்மிக வழி
SavitriRaju #ஆன்மீகம் அறிவோம்











![👉வாழ்க்கை பாடங்கள் - நிதர்சனம் குறை சொல்லிப் பழகியவர்களுக்கு பாராட்டத் தெரியாது . காதலில் மூழ்கியவர்களுக்கு எதிர்காலம் தெரியாது . போது பணம் இருக்கும் உறவுகளின் மதிப்பு தெரியாது பெற்றோர் இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது . Savitbu Raju] மதிப்போம் உறவுகளை நன்றி நேரம் இருக்கும் ` மரியனதை | ன்று போதே மதிப்போம் ன்பே வாழ்க்கை நாளை வருத்தப்படாதீர்கள் . செலவம் உறவே பெருமை றோர் பெற் நிதர்சனம் குறை சொல்லிப் பழகியவர்களுக்கு பாராட்டத் தெரியாது . காதலில் மூழ்கியவர்களுக்கு எதிர்காலம் தெரியாது . போது பணம் இருக்கும் உறவுகளின் மதிப்பு தெரியாது பெற்றோர் இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது . Savitbu Raju] மதிப்போம் உறவுகளை நன்றி நேரம் இருக்கும் ` மரியனதை | ன்று போதே மதிப்போம் ன்பே வாழ்க்கை நாளை வருத்தப்படாதீர்கள் . செலவம் உறவே பெருமை றோர் பெற் - ShareChat 👉வாழ்க்கை பாடங்கள் - நிதர்சனம் குறை சொல்லிப் பழகியவர்களுக்கு பாராட்டத் தெரியாது . காதலில் மூழ்கியவர்களுக்கு எதிர்காலம் தெரியாது . போது பணம் இருக்கும் உறவுகளின் மதிப்பு தெரியாது பெற்றோர் இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது . Savitbu Raju] மதிப்போம் உறவுகளை நன்றி நேரம் இருக்கும் ` மரியனதை | ன்று போதே மதிப்போம் ன்பே வாழ்க்கை நாளை வருத்தப்படாதீர்கள் . செலவம் உறவே பெருமை றோர் பெற் நிதர்சனம் குறை சொல்லிப் பழகியவர்களுக்கு பாராட்டத் தெரியாது . காதலில் மூழ்கியவர்களுக்கு எதிர்காலம் தெரியாது . போது பணம் இருக்கும் உறவுகளின் மதிப்பு தெரியாது பெற்றோர் இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது . Savitbu Raju] மதிப்போம் உறவுகளை நன்றி நேரம் இருக்கும் ` மரியனதை | ன்று போதே மதிப்போம் ன்பே வாழ்க்கை நாளை வருத்தப்படாதீர்கள் . செலவம் உறவே பெருமை றோர் பெற் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_326347_86c7c6f_1778047324214_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=214_sc.jpg)

