Savittri Raju
ShareChat
click to see wallet page
@1146601529ke
1146601529ke
Savittri Raju
@1146601529ke
வாழ்வில் உயர உழைப்பு வேண்டும்
ஜோதிடமும் பக்தியும்🙏 விதியை மாற்றும் ஆன்மிகக் கதை ஒரு கிராமத்தில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சொல்லும் வார்த்தைகளையும், கூறும் பரிகாரங்களையும் மக்கள் ஆழமாக நம்பினர். பலரும் அதனால் நன்மை பெற்றதாக கூறினர். இதைக் கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி தன் வாழ்க்கையை நினைத்து மனம் நொந்தான். விளைச்சல் இல்லை… லாபம் இல்லை… குடும்பம் துன்பத்தில் தவித்தது. “நாமும் அந்த ஜோதிடரைச் சந்தித்து பார்க்கலாம்” என்று முடிவு செய்தான். “என் தலைஎழுத்து எப்போது மாறும்?” என்ற ஏக்கத்துடன் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரைச் சந்தித்தான். ஜோதிடர் அவன் ஜாதகத்தை பார்த்தார். சில நொடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, “நாளைக்கு வா… சொல்லுகிறேன்,” என்று அனுப்பிவைத்தார். அதை கவனித்த அவரது மகள் கேட்டாள்: “அப்பா, நீங்கள் எல்லோருக்கும் உடனே ஜாதகம் கணித்து சொல்வீர்கள். இவரை மட்டும் ஏன் நாளைக்கு வரச் சொன்னீர்கள்?” ஜோதிடர் கனத்த குரலில் கூறினார்: “அவனுடைய ஜாதகப்படி, நாளை விடியற்காலையில் அவன் உயிருடன் இருக்க மாட்டான். அவனுடைய ஆயுள் முடிவடைகிறது.” “பரிகாரம் இல்லையா, அப்பா?” என்று கேட்டாள் மகள். “ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் ஆயுள் பலப்படும். அதோடு அவன் மிகப் பெரிய பணக்காரனாகவும் உயர வாய்ப்பு உண்டு. ஆனால் அவன் பரம ஏழை… அது அவனால் சாத்தியமில்லை…” என்றார். இதற்கிடையில் அந்த ஏழை மனம் உடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கடும் காற்று, மழை, இடி முழங்கியது. “மழையில் நனைந்தால் உடம்பு கெடும். மருத்துவரிடம் செல்ல பணமில்லை…” என்று எண்ணி அருகில் இருந்த ஒரு பாழடைந்த பழைய சிவன் கோவிலில் ஒதுங்கினான். அந்த கோவிலைப் பார்த்து அவன் மனம் உருகியது. “அட கடவுளே… உன்னை வசதி உள்ளவர்கள் கூட கவனிக்கவில்லை. என்னிடம் பணம் இருந்தால் இந்த கோவிலை சீர்செய்து உனக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பேன்…” என்று மனதார நினைத்தான். அவன் மனக்கண்களில் அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெறுவது போல கண்டு ஆனந்தமடைந்தான். மழை நின்றது. அவன் கோவிலின் படிகளை இறங்கி வெளியே வந்ததும் — அந்த நொடியிலே பயங்கரமான இடி கோவிலின் மீது விழுந்தது! கோவில் சிதறி சரிந்தது! அவன் சில நொடிகள் நடுங்கினான்… பிறகு உணர்ந்தான் — “கடவுளே, நீயே காப்பாற்றினாய்!” என்று கண்ணீர் மல்க நன்றி கூறி வீடு சென்றான். மறுநாள் காலையில் அவன் உயிருடன் எழுந்தான். நேராக ஜோதிடர் வீட்டிற்கு சென்றான். ஜோதிடர் அவனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். “நேற்று என்ன நடந்தது?” என்று கேட்டார். அவன் நடந்ததையெல்லாம் கூறினான். அப்போது ஜோதிடர் உணர்ந்தார்: “இவன் மனதார ஆண்டவருக்காக நினைத்தான். அந்த சுத்தமான எண்ணமே அவனுடைய விதியை மாற்றியது.” அந்த ஏழை விவசாயி பின்னர் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெற்று செழிப்புடன் வாழ்ந்தான். அவன் உண்மையிலேயே அந்த கோவிலைச் சீர்செய்து கும்பாபிஷேகம் செய்து, கடவுளுக்கு நன்றி செலுத்தினான். கதையின் உண்மை தலைஎழுத்தைக் கூட மாற்றும் சக்தி நாம் செய்யும் புண்ணிய காரியங்களுக்குண்டு. பயந்து தர்மம் செய்யாதீர்கள். பலன் எதிர்பார்த்து செய்யாதீர்கள். அன்பால் செய்யுங்கள். ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் உணவு அளியுங்கள். கோவில் சீரமைக்கும் பணிக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உழவாரப்பணி செய்பவர்களை மதித்து உதவுங்கள். இறப்பை தவிர்க்க முடியாது. ஆனால் நாம் செய்யும் புண்ணியங்கள் சில துன்பங்களைத் தள்ளிப் போடக் கூடும். திருவாசகம், திருப்புகழ், தேவாரம் பாராயணம் செய்வது மனத் துன்பத்தை நீக்கும். ஏழையின் சிரிப்பில் மகேசனை காணலாம். தாய் தந்தைக்கு செய்யும் சேவையில் நாராயணனை காணலாம். கிரகங்கள் ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். நாம் செய்யும் பாவ–புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கிறது. திருச்சிற்றம்பலம் — Savittri Raju ✨ #ஆன்மீக கதைகள் #ஆன்மீக கதைகள்
ஆன்மீக கதைகள் - Savillri Raju Savillri Raju - ShareChat
#நம் வாழ்க்கை
நம் வாழ்க்கை - X X "நேரத்தை மதிக்கும் மனிதன் வாழ்க்கையில் உயர்வான் தன்நம்பிக்கை உள்ளவன்வலிமை பெறுவான் பெற்றோரை மதிப்பவன் கடவுளின் அருட்பார்வைக்கு பாத்திரமாவான் Savittri Raju X X "நேரத்தை மதிக்கும் மனிதன் வாழ்க்கையில் உயர்வான் தன்நம்பிக்கை உள்ளவன்வலிமை பெறுவான் பெற்றோரை மதிப்பவன் கடவுளின் அருட்பார்வைக்கு பாத்திரமாவான் Savittri Raju - ShareChat
10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கல்வி தொடர்பான அறிவுரை. : 1. திட்டமிட்டுப் படியுங்கள். தினமும் ஒரு அட்டவணை போட்டுப் படிக்க வேண்டும். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் தினமும் சிறிது சிறிதாக படிக்க வேண்டும். 2. படித்ததை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாகும் . எழுதுவதைப் போன்ற சிறந்த பயிற்சி எதுவும் இல்லை. 3. உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிலும் நண்பர்களிடமும் பகிர்ந்து அறிந்து கொள்ளுங்கள். 4. முக்கியமான பகுதிகளை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 5. பயம் வேண்டம் . தேர்வு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஆனாலும் அதுவே உங்களை வாழ்நாள் முழுதும் காப்பாற்றும் கவசம். 6. போதிய தூக்கம் தேவை. அவசியம் குறைந்தது 7 மணி நேரம் தூங்க முயற்சி செய்யுங்கள். 7. சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள். காய்கறி , பழம், பருப்பு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். 8. ஐஸ்கிரீம், ஜங்க் உணவு, காரம், புளிப்பு, குளிர் பானம் அவசியம் தேர்வு முடியும் வரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். 9. தினமும் 15 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள் எந்த வித சிந்தனையும் இன்றி நாங்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் என்ற எண்ணத்துடன். 10. மொபைல், டிவி, தேவையற்ற சமூத வலைத்தளங்களை அவசியமதவிர்த்து விடுங்கள். 11. அதிகாலை 4.30 ல் இருந்து 6 மணிவரை படிக்க முன்வாருங்கள். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால், இந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளுங்கள் பாஸ் என்பது ஆறுதல் வாரத்தை மட்டுமே. அதிக மதிப்பெண் என்பது மட்டுமே உங்களை வெற்றிப்பாதையின் உயர்வில் நிறுத்தும். 12. உங்களுக்குள் சொல்லிக் . என்னால் முடியும் , உயர்ந்த மதிப்பெண் என்னுடைய லட்சியம் என சொல்லிக் கொள்ளுங்கள். 13. முக்கியமான ஒன்று தெய்வ நம்பிக்கை கொள்ளுங்கள். உழைப்பு மட்டும் முக்யம் அல்ல பிராத்தனையும் முக்கியம். 14. மதிப்பெண் முக்கியம் அப்போது தான் மனிதர் மதிப்பு பெற முடியும். உன்னிடம் செல்வம் இல்லாமல் இருக்கலாம் . கல்வி அது போதும் மதிப்பு தானாக வந்தடையும் . 15. அப்துல் கலாம் ஏழைதான். ஆனால் அவரை அடையாளம் காட்டியது அவரது கல்வியும் அவரது கடின உழைப்பும் , முயற்ச்சியும் தான். தோல்வி என்பது முடிவு அல்ல அது ஒரு தொடக்கம் பெற்றோர்கள் உங்களை அறிவுறுத்துவது மதிப்பெண் கருதி அல்ல உங்களின் உயர்வுக்காகவே உங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையவே எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உங்களை நேசிக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். உங்கள் வெற்றி உங்கள் முயற்ச்சியில் தான் உங்கள் மகிழ்ச்சி உங்களிடம் மட்டுமே வேறு யாரிடமும் இல்லை. தாய் தந்தையிடம் நிரூபியுங்கள் நான் கல்வியில் சிறந்து வருவேன் என்று. அவர்கள் வாழ்வதற்காக உங்களை படிக்க வைக்கவில்லை. பலன் எதிர்ப்பார்த்தும் இல்லை உங்களின் எதிர்கால நன்மைக்காகவே. தாய் தந்தை பட்ட கஷ்டம் பிள்ளைகள் பட கூடாது என கருதியே புரிந்து கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் மாணவ மணிகளே. பள்ளி தேர்வு நேரத்தில் பெற்றோர்க்கான அறிவுரை படிக்க சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டாம் மற்றவர்களுக்காக புகழுக்காகவும் அவர்களை மிகவும் தொந்தரவு செய்ய வேண்டாம். தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தரும். அவர்களை உற்சாகப்படுத்துங்க அவர்களுக்கு தேர்வு நேரத்தில் வீட்டு பணிகளை சுமத்தாதீர்கள். மற்ற மாணவ மாணவிகளுடன் ஒப்பிட்டு பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமை கொண்டவர்கள். அமைதியான சூழல் உருவாக்குங்கள் வீட்டில் சண்டை, சத்தம் இல்லாமல் அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள். அடுத்தவர்கள் வாழ்க்கை பற்றி அவர்கள் முன் வாதாடாதீர்கள். உணவு & தூக்கம் கவனிக்கவும். சத்தான உணவு, நேரமான தூக்கம் ஆகியவற்றை கவனியுங்கள். இரவு முழுவதும் விழித்து படிக்க ஊக்குவிக்க வேண்டாம். அதிகாலை நேரம் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். உற்சாக மூட்டுங்கள் சூடான பால் தேநீர் போன்றவற்றை அளியுங்கள். அன்பாக பேசுங்கள் தினமும் சில நிமிடங்கள் குழந்தைகளுடன் அமைதியாக பேசுங்கள். அவர்களின் பயம், கவலை ஆகியவற்றை கேட்டு புரிந்து கொள்ளுங்கள். தோல்வியை பயமுறுத்த வேண்டாம் “தோற்றால் என்ன ஆகும்?” என்று பயமுறுத்தாமல், “தோல்வி வந்தாலும் நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று நம்பிக்கை அளியுங்கள். மொபைல் கட்டுப்பாடு வேண்டும் அதை முற்றிலும் கோபமாக சொல்லாமல் காரணம் சொல்லி புரிய வையுங்கள். நீங்களும் பிள்ளைகளின் நலன் கருதி தேர்வு முடியும வரை தொலைபேசி மற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள். நமக்காக நம்மை பெற்றவர்களும் தியாகம் செய்கிறார்கள் என்ற உள்ளுணர்வு அவர்களுக்கு புத்துணர்ச்சியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மதிப்பெண் மட்டுமே இலக்கு அல்ல மதிப்பெண் முக்கியம், ஆனால் அதைவிட முக்கியம் குழந்தையின் மனநலம் மற்றும் தன்னம்பிக்கை முக்கியம். நம்பிக்கை வார்த்தைகள் சொல்லுங்கள். “நாங்கள் உன்னை நம்புகிறோம்” – இந்த ஒரு வார்த்தை குழந்தைகளுக்கு மிகப் பெரிய பலம். மதிய நேரம் படிக்க வேண்டிய நேரம் இல்லை மனதிலும் அவர்களுக்கு பதியாது. ஓய்வு எடுக்க சொல்லுங்கள். நேரம் உள்ள போது ஆலயம் அழைத்து செல்லுங்கள் . வெற்றியும் தோல்வியும் சமமாக பாவிக்க எடுத்துறையுங்கள். பிள்ளைகளின் கல்வியில் தேர்ச்சி அவர்களிடம் மட்டும் இல்லை நம்மிடமும் உள்ளது . ஜெய் ஹிந்! வெற்றி நமதே. #தேர்வு ...... Savithri Raju
தேர்வு - _^~^ == 22 Z _^~^ == 22 Z - ShareChat
Homemade Face Glow Serum – Preparation Method Ingredients: One carrot 3 Evion E tablets One cup coconut oil One spoon Vaseline Method:Grate the carrot finely like flower shreds. Take a small pan and pour one cup of coconut oil. When it becomes slightly warm, cut the Evion tablets and pour the oil from the capsules into the coconut oil. Then add one spoon of Vaseline and mix well. After that, add the grated carrot and keep it on low flame to boil gently. When the coconut oil changes to carrot color, switch off the flame and filter the oil. Store it in a bottle. Usage:Once in 3 days, take this oil and apply it on the face and neck. Massage gently for 5 minutes. Wash it in the morning after waking up. Regular use helps to give glow to the face and reduces wrinkles on the face and neck. Uses of Ingredients: Evion Tablet (Vitamin E):Vitamin E nourishes the skin, helps in reducing dryness, supports skin repair, and gives a healthy glow. Carrot:Carrot contains Vitamin A and antioxidants which help improve skin texture, brighten the skin, and support anti-aging. Vaseline:Vaseline helps to lock in moisture, prevent dryness, and keep the skin soft and smooth. #beauty tips Savittri Raju
beauty tips - Vaseline Vaseline - ShareChat
"அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை" வள்ளலார் இராமலிங்க அடிகள் தை பூசம் அன்று ஜோதியில் இரண்டர கலந்தார். . இந்த தினத்தில் அவர் இயற்றிய திருவருப்பாவை சொல்ல நன்மை உண்டாகும் . வடலூர் இராமலிங்க ஸ்வாமிகளை 9வது வயதில் தான் அவரது சகோதரர் சபாபதி அவரை பள்ளிக்கு அனுப்பினார். வகுப்பில் மாணவர்கள் தினசரி ஸ்துதியான ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தனர் ஆனால் இராமலிங்கர் மட்டும் எதுவும் சொல்லாமல் கண் மூடி அமர்ந்திருந்தார். இதை கண்ட ஆசிரியர் நீ மட்டும் ஏன் சொல்லவில்லை என வினவ அதற்கு இராமலிங்கர் ஆசிரியரே இந்த ஸ்துதியில் யாரை வணங்கி சொல்ல வேண்டும் என்று கேட்க அதற்கு ஆசிரியர் முருக பெருமானை நினைத்து என்று கூறினார். குருவே இந்த ஸ்துதியில் எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று இருக்கே என சொன்னார் ஆசிரியரும் சரி நீ வேண்டும் வேண்டும் என ஒரு பாடலை பாடேன் என்றார். 9 வயதான இராமலிங்கம் கொஞ்சம் கூட தாமதிக்காமல் மடை திறந்த வெல்லம் போல ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்..... உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்..... பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்.. பொய்மை பேசாதிருக்க வேண்டும் .. பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....... மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் ... உனை மறவாதிருக்க வேண்டும்.... மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்..... நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..... தரும மிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே... தண்முக துய்யமணி யுன் முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே..... இந்த பாடலை கேட்ட ஆசிரியர் தமக்கு அவருக்கு உபதேசம் செய்யும் அருகதை இல்லை என நினைத்து அவரை வாழ்த்தினார். இந்த தை பூச திருநாளில் திருவருட்பா பாடி முருகனின் அருளுக்கும் இராமலிங்க ஸ்வாமிகளின் அன்புக்கும் பாத்திரமாவோம் #தைபூசம் ..... Savittri Raju🙏
தைபூசம் - Raju Savitri Raju Savitri - ShareChat
கனு பசுமஞ்சள் தீற்றும் போது சொல்ல வேண்டியது #கானும் பொங்கல் . தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும் பேரும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் சிறிய வயதில் தாலி கட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று கொண்டவன் மனம் மகிழ தையல் நாயகி போல தொங்க தொங்க தாலி கட்டி தொட்டிலும் பிள்ளையுமாக மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மாமியும் போற்ற பிறந்த கத்தோர் பெருமை விளங்க பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி புதுமாப்பிள்ளை மருமகளோடு புது புது சந்தோஷம் பெருகி ஆல் போல் தழைத்து அருகு போல் ஏரோடி என்றென்றும் வாழனும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கனும் ... என சொல்லி முகத்தில் மஞ்சள் பூசனும்.🌺 கனு பொடி வைக்கும் போது. இஞ்சி கொத்து இலை பரப்பி அதில் முதல் நாள் செய்த சர்க்கரை பொங்கல், கூட்டு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் கலந்த சாதம், கரும்பு துண்டு , வெற்றிலை வாழைப்பழம் வைக்க வேண்டும். விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றி கீழ் கண்டவாக்யத்தை சொல்ல வேண்டும். சூரியன் உதிப்பதற்குள் கனு வைக்க வேண்டும். ஏன் என்றால் பறவைகள் அதிகாலை 4 மணிக்கே எழுத்து விடும். காக்காய் பொடி வைத்தேன்... கனுப்பொடி வைத்தேன்... காக்காய் கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாது இருக்கனும்.. காக்காய் பொடி வச்சேன் கனுப்பொடி வச்சேன் காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் குருவிக்கு எல்லாம் கொண்டாட்டம் ... காக்கா கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாது இருக்கனும் என சொல்லி பிராத்தனையாக உடன் பிறந்தோர் ஆயுள் ஆரோக்யம் பெற்று வாழவும் , தன் குடும்ப ஒற்றுமைக்கும் வேண்டி தீபாரதனை காட்டி நமஸ்கரிக்க வேண்டும். ..... SavittriRaju
கானும் பொங்கல் - ShareChat
புண்ய ஸ்லோகோ நளோ ராஜா । புண்ய ஸ்லோகோ யுதிஷ்டிர । புண்ய ஸ்லோகோ ச வைதேஹீ புண்ய ஸ்லோகோ ஜனார்த்தன: ॥ நளன் என்ற அரசனும் புண்ணியப் புகழுடையவர். தர்மராஜன் யுதிஷ்டிரனும் புண்ணியப் புகழுடையவர். சீதாதேவியும் புண்ணியப் புகழுடையவள். ஸ்ரீகிருஷ்ணன் (ஜனார்த்தனன்) புண்ணியப் புகழுடையவர். 👉 இவர்களின் பெயர்களே புண்ணியம் தரக்கூடியவை, அவற்றை தினம் 3 முறை சொல்லி வந்தாலும் நினைத்தாலும் மனம் சுத்தமாகும் . - Savittri Raju #ஆன்மீகம்
ஆன்மீகம் - पुण्यस्लोको नलो राजा पुण्यस्लोको युथिव्दिरः पुण्यस्लोका च वैदेही पुण्यस्लोको जनार्ददनः I। पुण्यस्लोको नलो राजा पुण्यस्लोको युथिव्दिरः पुण्यस्लोका च वैदेही पुण्यस्लोको जनार्ददनः I। - ShareChat
https://youtube.com/watch?v=Kc5IaCDOYJs&si=jB5cUpVeSyPpw_gv #நேர்மறை எண்ணங்கள்
youtube-preview
“சண்முக நவக்கிரக பாமாலை” சண்முக நவக்கிரக பாமாலை என்பது, கிரக தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் உயர்வு பெறவும் முருகப்பெருமானின் ஆறுமுகனைப் போற்றிப் பாடும் ஒரு சக்திவாய்ந்த பக்திப் பாடலாகும். இதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது) தனித்தனியாக முருகனின் வெவ்வேறு திருநாமங்கள் மற்றும் பெருமைகளைப் போற்றி, அவற்றின் பாதிப்புகளை நீக்கி, அருளைப் பெறுவதற்குப் பாடப்படுகிறது. இது ஒரு மந்திரம் போன்றது; தினமும் காலையில் முருகனை நினைத்து மனமுருகப் பாடினால், வாழ்வில் ஏற்றம், புகழ், செல்வம் பெருகி, அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: நோக்கம்: நவக்கிரகங்களின் கெட்ட பலன்களை நீக்கி, நல்ல பலன்களைப் பெறுதல், வாழ்வில் உயர்வை அடைதல், புகழ் மற்றும் செல்வத்தைப் பெறுதல். பாடும் முறை: தினமும் காலையில் அல்லது விரும்பும் நேரங்களில் முருகனின் புகழைப் பாடுவது. பயன்கள்: முருகனைப் போற்றுவதன் மூலம், ஒன்பது கிரகங்களும் நம்மைப் பாதுகாக்கும், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக: சூரிய திசை: முருகப்பெருமானின் ஆறு கரங்களால் அருள்புரிந்து, சீரிய வாழ்வு தரும் செந்தில் வேலனைப் போற்றுவது. ஒன்பது கிரகங்கள்: முருகனைப் போற்றுவதன் மூலம், ஒன்பது கிரகங்களும் ஓடிவந்து காக்கும். சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்! ஒன்பான் கிரமுமே ஓடிவந்து காப்பாற்றும்! கண்ணான வேழமுகம் காப்பு செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய் ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன் இன்பமெல்லாம் கூட்டும் இனி! சூரியதிசை: ஆறிரு கரங்கள் கொண்டு அடியார்க்கு அருள் வழங்கி சீரிய வாழ்வு நல்கும் செந்திலே பழநி வேலா! சூரிய திசையிலே உன்னை துதிட்டேன் காக்க வாராய்! காரியம் யாவினுக்கும் கை கொடுத்து உதவுவாயே! சந்திர திசை: இந்திரன் முதலானோர்கள் இளமையாய் விளங்கும் உந்தன் மந்திரம் சொல்லி நல்ல மகத்துவம் பெற்றது உண்டு! சந்திர திசையில் உன்னை சந்தித்துப் போற்றுகின்றேன்! வந்திடும் செல்வமெல்லாம் வரத்தினால் வழங்குவாயே! செவ்வாய் திசை: ஒளவைக்கு நெல்லி தந்தாய்! அருணகிரி நாதருக்கும் திவ்வியக் காட்டி தந்தாய் திருவருள் கொடுப்பதற்கே செவ்வாயின் திசையில் உன்னை சேவித்துப் போற்றுகின்றேன்! வையகம் புகழும் நல்ல வாழ்க்கையை வழங்கு வாயே! புதன் திசை: கதம்பமும் முல்லை மல்லி கனிவுடன் சூடும் கந்தா சதமென ஆயுள் நல்கி சகலமும் அருளுவாயே! புதன் திசை நடக்கும் நேரம் போற்றி நான் வணங்குகின்றேன்! இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே! வியாழதிசை: ஆறுமுகம் கொண்ட செல்வா! அழகிய வள்ளி நேசா! பெருமைகள் வழங்கி நாளும் பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றேன்! திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே! சுக்ரதிசை: தக்கதோர் வாகனங்கள் தனி இல்லம் மனைவி மக்கள் அக்கறை கொண்டு நாளும் அசுரகுரு வழங்கு மென்பார் சுக்கிரதிசையில் நாளும் சுப்பிரமணியன் உன்னை சிக்கெனப் பிடித்த தாலே சிறப்பெலாம் வழங்குவாயே! சனிதிசை: பிணியெலாம் அகலவேண்டிய பெரும் பொருள் கிடைக்க வேண்டி அணிதிகழ் வாழ்வு வேண்டி அல்லல்கள் அகல வேண்டி சனிசென்னும் திசையில் நாளும் சண்முகா உனைத் துதித்தேன்! கனிவுடைத் தெய்வம் நீயே காட்சி தந்தருளுவாயே! இராகுதிசை: நாகமாய் வடிவில் நின்று நடந்திடும் தோஷம் நீக்கி போகத்தை வழங்குதற்கே பூமியில் அருள் கொடுக்கும் இராகு எனும் திசையில் உன்னை இருகரம் கூப்பி வணங்குகிறேன்! பாகென இனிக்கும் கந்தா பதினாறு பேறும் தாராய்! கேதுதிசை: ஆதரவு வழங்குதற்கும் அண்டிய வழக்கு எல்லாம் தீதின்றி மாறுதற்கும் திறமைகள் தெரிவதற்கும் கேது திசையில் உன்னை கீர்த்தியாய் வணங்குகின்றேன் சாதனை செய்த வேலா சண்முகா அருளுவாயே! சண்முக நவக்கிரக பாமாலை பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் எழுதப்பட்டது நன்றி வாழ்க நலமுடன் வளமுடன். #ஆன்மீகம்
ஆன்மீகம் - ShareChat
குசேலர் தினம் மார்கழி 2 December 17.12.25 நாளை புதன் கிழமை மார்கழி மாதத்தில் கிருஷ்ண. பகவானுக்கு பிடித்த தினம் மார்கழி மாதம் ஆன்மிகத்திற்கு உகந்ததாகும் குசேலர் தினம் அன்று கிருஷ்ணரை வழிபட அவர் மகிழ்ந்து நன்மை அருள்வார். இந்த நாளில குசேலர் கிருஷ்ண பகவானுக்கு அவல் முடிந்து வைத்து கொடுத்து மிகவும் ராஜ யோகம் பெற்றார். குசேலரின் உண்மையான பெயர் சுதாமா . மிகவும் வருமையில் வாழ்ந்து வந்தார் அவர் உடுத்தும் உடை கூட மிகவும் கிழிந்து இருக்கும். கண்ணனும் சுதாமாவும் குருகுலத்தில் ஒன்றாக படித்தவர்கள். சுதாமர் செல்வத்தின் மீது பற்று இல்லாமல் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தியுடன் இருந்தார். அவரை போலவே அவரது மனைவியும் தெய்வ பற்று உள்ளவள். அவள் குழந்தைகளின் நலன் கருதி சுதாமாவிடம் உங்கள் நண்பரிடம் சென்று நம் வருமை நிலை எடுத்து கூறி அவரிடம் ஏதேனும் உதவி பெற்று வாருங்கள் என கூறினாள். வேறு வழியில்லாமல் கண்ணனை பார்க்க புறப்பட்டார். ஆனால் அவருக்கு எதுவும் எடுத்து செல்ல முடியவில்லை அத்தனை வருமை. உடனே சுதாமாவின் மனைவி வீட்டில் இருந்த சிறிது அவலை ஒரு சிவப்பு நிற அழுக்கு துணியில் முடிந்து கொடுத்து அனுப்பினாள். கிருஷ்ணனை தேடி துவாரகா வந்தார். அங்கு வந்ததும் மலைத்து போனார். மாளிகை மிகவும் பிரம்மாண்டமாய் இருந்தது . வைகுண்டத்துக்கு வந்ததை போன்று உணர்ந்தார். அவர் கண்ணனின் பால்ய சிநேகிதன் அல்லவா நல்ல வரவேற்ப்பு திக்கு முக்காடி போனார். கண்ணன் அவரை வாரி அணைத்தார். தனக்கு என்ன கொண்டு வந்தார் என கண்களால் தேடுகிறார் பரந்தாமன். சுதாமா கூனி குறுகி நெளிந்த போது சுதாமா இடுப்பில் சிவப்பு நிற துணி கண்ணில் பட்டது அதை ஆர்வத்தோடு பிடிங்கி முடிச்சை அவிழ்த்தார் அதில் இருந்த அவலை ஒரு பிடி எடுத்து வாயில் போட்டு மறு பிடி அவலை எடுக்கும் போது லஷ்மி தடுத்து போதும் என்றாள். அதாவது இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று அர்த்தமாகும். இது சுதா மாவிற்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் பழைய கதைகளை பேசி கொண்டு மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை கண்ணனிடம் விடை பெற்று சுதாமா புறப்பட்டார். போற வழி எல்லாம் மிகவும் சஞ்சலப்பட்டு கொண்டே சென்றார் நாம் கண்ணனிடம் உதவி கேட்க சென்று கேட்காமல் போனால் மனைவியிடம் என்ன சொல்வது என்று. குழந்தைகள் ஆர்வத்துடன் இருப்பார்களே என நினைத்து கொண்டே மனதெல்லாம் வலியுடன் கண்ணனை பார்த்த்த சந்தோஷத்தில் கவலை மறந்து வீடு சென்றார் அங்கு வீடு ரத்தினங்களால் மின்னிய ஒரு பெரிய மாளி கையாய் தெரிந்தது. ஒரு வேளை கண்ணனை நினைத்து வந்ததால் மாறி வந்து விட்டோமோ என நினைத்தார். ஆனால் அந்த மாளிகையில் இருந்த ரத்தினம் ஆபரணம் அணிந்து சிரித்த முகத்துடன் வெளிவந்த தன் மனைவியை கண்டார். குழந்தைகளும் பட்டு உடை உடுத்தி ஆபரணம் அணிந்தும் பலகாரம் தின்று கொண்டு வருவதை பார்த்து கண்ணன் கேட்காமலே வாரி வழங்கியதை உணர்ந்தார். அந்த பத்தியில் மிகவும் மெய்மறந்து நின்றார். இந்த நிகழ்வும் மார்கழி முதல் புதன் கிழமை அன்றுதான். அதனால் தான் இந்த மார்கழி புதன் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. வாசலில் இரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ண தீபமோ ஏற்ற வேண்டும். கண்ணன் எதையும் கேட்காமலேயே வாரி வழங்கும் வள்ளல் நாம் இந்த நாளில் குருவாயூர் கண்ணனுக்கு சிவப்பு துணியில் அவல் வெல்லம் ஏலம் கலந்து துணியில் முடிந்து நைவேத்யமாக வைக்கப்படுகிறது. அதோடு பால், வாழை பழம் வைக்கலாம். அதே போல் நாமும் அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் சிறிய அளவில் சிவப்பு துணியில் அவல் வெல்லம் ஏலம் கருது முடிந்து வைத்து நைவேத்யம் செய்ய அதீத நற்பலன் பெற்று நோய் நொடி இன்றி செல்வந்ததராய் வாழலாம். பிறகு அந்த அவலை நாம் பிரசாதமாக பகிர்ந்து சாப்பிடலாம். . சிவப்பு துணி இல்லை என்றால் ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து படைக்கலாம். நம் வருமை நீங்கும். குழந்தை வரமும் பெறலாம். இந்த கதையை படிப்போரும் கேட்ப்போரும் கிருஷ்ணனின் அன்புக்கு பாத்திரமாவர்கள் ...... Savittri Raju #ஆன்மீகம் அறிவோம்
ஆன்மீகம் அறிவோம் - DhinamC DhinamC - ShareChat