சிந்தனை துளிகள்
ஒரு புகழ் பெற்ற ஓவியர் ஒரு படம் வரைந்து அதை மக்களின் மத்தியில் வைத்து இதில் உள்ள குறைகளை வட்டம் இடுங்கள் என்று எழுதி வைத்து பக்கத்தில் ஒரு மார்க்கர் பெண் வைத்தார். மக்களும் அந்த ஓவியத்தை பார்த்து குறைகளை வட்டம் இட்டு சென்றனர் மாலை வரை பொருத்திருந்து வந்து அந்த ஓவியத்தை பார்த்தார் ஓவியம் காணவில்லை முழுவதும் சிறு சிறு வட்டத்தால் ஓவியமே மறைந்துவிட்டது . அவர் உடனே ஒரு நிறை கூட இல்லையோ என நினைத்து தன் குருவிடம் கொண்டு காமித்து நடந்ததை சொன்னார் உடனே குருவும் இந்த ஓவியத்தின் மற்றொறு பிரதி இருக்கா என கேட்டார் . இருக்கு குருவே எனஅதை குருவிடம் காமித்தார். உடனே குரு இதே ஓவியத்தை அங்கு வைத்து இந்த ஓவியத்தில் உள்ள நிறைகளை மட்டும் வட்டம் இடவும் என எழுதி வை என கூறினார். இவரும் அதே போல் செய்தார் ஆனால் யாரும் நிறை வட்டம் இடவில்லை மாலையில் ஓவியம் அப்படியே இருந்தது. அதை அப்படியே குருவிடம் காமித்து என் ஒவியத்தில் ஒரு நிறை கூட இல்லையா என்றார் அதற்கு குரு உன் ஒவியத்தில் குறை இல்லை நிறைதான் உள்ளது . ஆனால் மக்கள் மனதில் எப்போதும் குறை மட்டுமே சுட்டுகாட்டும் மனோபாவம் உள்ளது. நிறைகள் எதுவும் யாருக்கும் கண்ணுக்கு தெரியாது ஏன் என்றால் அவர்கள் மனது அதே மனோபாவத்தில் ஊறிவிட்டது என்றார். இதில் இருந்து நாம் உணர வேண்டியது என்ன என்றால் ஒருவரின் குற்றங்களையோ குறைகளையோ விட்டு அவர்கள் நிறைகளை கண்டுபிடித்தால் வாழ்க்கையில் துன்பம் இல்லை. அது போல் அவர்களின் சிறிய சிறிய நல்ல செயல்களுக்கு மனதார பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். குறை கூட மறந்து நிறைவான வாழ்க்கை
வாழத் தோன்றும் .
#👉வாழ்க்கை பாடங்கள்