நாளை 3.3. 2026 அன்று சந்திர கிரகணம் மாலை 3.30 க்கு ஆரம்பித்து மாலை 6.47 க்கு முடிவடைகிறது.
கர்ப்பிணி பெண்கள் வயது மூத்தோர்கள் உடல் நலிவுற்றோர் கிரகணம் முடியும் வரை வெளியில் வர கூடாது.
கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம் , சிம்மம், கன்னி, தனுசு. கும்பம்
நட்சத்திரம் : மகம், பூரம், உத்திரம். பூராடம் பரணி
செய்ய கூடாதவை
மாமிசம் உண்ண கூடாது . 3.30 ல் இருந்து 6.30 வரை . உறக்கம் கூடாது
கிரகணம் முடிந்ததும் அவசியம் தலை ஸ்நானம செய்து விளக்கேற்ற வேண்டும்.
பரிகார மந்திரம்
இதை ஒரு பேப்பரில் எழுதி சட்டை பையில் வைத்து கொள்ளவும்
"இந்த்ரோ அனலோ யமோ ரிக்ஷோ வருணோ வாயு ரேவச்சம், குபேர , ஈசோக்னந்து இந்து உபரக உதவ்யதாம் மம" |
கிரகணம் முடியும் வரை ராகு கேது சந்திர பகவான் ஸ்லோகம் சொல்லவும். ஓம் நமோ நாராயணாய
நம நமச்சிவாய என உச்சரிப்பதும் நன்மை.
கிரகணம் நேரத்தில் ஜபம் செய்வது மனசுத்தி மற்றும் ஆன்மீக பலன் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ராகு – கேது தோஷ நிவாரணம் மற்றும் மன அமைதிக்காக கீழே உள்ள ஸ்லோகங்கள் சொல்லப்படுகின்றன. ராகு பரிகார ஸ்லோகம்
அர்தகாயம் மகாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்
சிம்ஹிகாகர்ப சம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்
பலன்:
ராகு தோஷம் குறையும், பயம் மற்றும் மன கலக்கம் நீங்கும்.
கேது பரிகார ஸ்லோகம் :
பலாச புஷ்ப சங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
பலன்:
தடை நீக்கம், ஆன்மீக முன்னேற்றம்.
🌙 சந்திரன் ஸ்லோகம் (சந்திர கிரகணம் போது முக்கியம்) சொல்லவும்
ததிஷங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ சம்பவம்
நமாமி சசினம் சோமம்
சம்போர் மகுட பூஷணம்
பலன்:
மன அமைதி, உடல் நலம், குடும்ப சாந்தி.
மறுநாள் காலை அருகில் உள்ள சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும்
Savittri Raju💐
#சந்திர கிரகணம்
வெயிலுக்கு ஏற்ற நெல்லிக்காய் ஹெல்தி ஜூஸ்
தேவையான பொருட்கள்.
நெல்லிக்காய் – 3
கறிவேப்பிலை – ஒரு பிடி
மல்லித்தழை – ஒரு பிடி
சீரகம் 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
வெல்ல சர்க்கரை – ¼ ஸ்பூன்
நீர் – 2–3 டம்ளர்
செய்வது எப்படி
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கவும்.
நெல்லிக்காய் + கறிவேப்பிலை + மல்லித்தழை + இஞ்சி சேர்த்து மிக்ஸியில் போடவும்.
1 டம்ளர் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டியில் வடிக்கவும்.
மீண்டும் சிறிது நீர் சேர்த்து அரைத்து மறுபடியும் வடித்து 3 முறை நீர் ஊற்றி அரைப்பது நல்லது
இறுதியாக உப்பு மற்றும் வெல்ல சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
குளிர்ச்சியாக குடிக்கலாம்.
☀️ வெயில் காலத்தில்
உடல் சூட்டை குறைக்கும்.
உடல் நீர்ச்சத்து (Hydration) அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சோர்வு, தலைசுற்றல் குறையும்
ஜீரணம் நல்லபடியாகும்
தோல் பிரகாசமாகும்
–நெல்லிக்காயில் Vitamin-Cமிக அதிகம்.
சளி, காய்ச்சல், வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்க உதவும்.
கறிவேப்பிலை – ரத்த சுத்தம் Vitamin D
மல்லித்தழை – உடல் குளிர்ச்சிக்கும்
இஞ்சி – ஜீரண சக்தி உண்டாகும் வாய்வு நீக்கும் #ஜுஸ்
காலை வெறும் வயிற்றில் அல்லது மதியம் வெயிலில் இருந்து வந்த பிறகு
குடிக்கலாம்
குடும்ப ஒற்றுமை பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேர கிருஷ்ண மந்திரம்
ஸ்ரீ கிருஷ்ணம் கமல பத்ராட்ச்சம் திவ்ய ஆபரண பூக்ஷிதம்...
த்ரிபங்கி லலிதா காரம் அதி சுந்தர மோகனம்....
பாகம் தட்ஷிணம் புருஷம் அந்ய ஸ்திரீ ரூபிணம் ததா .....
சங்கி சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்...
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஷாஷ்டனக ....
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம்
புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ....
ஸர்வ காமார்த்த சித்யார்த்தம் மோகனம் ஸ்ரீ கிருஷ்ண மாஸ்ரயே ....
___ .Savittri Raju
#ஸ்ரீ கிருஷ்ணா
ஜோதிடமும் பக்தியும்🙏
விதியை மாற்றும் ஆன்மிகக் கதை
ஒரு கிராமத்தில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் சொல்லும் வார்த்தைகளையும், கூறும் பரிகாரங்களையும் மக்கள் ஆழமாக நம்பினர். பலரும் அதனால் நன்மை பெற்றதாக கூறினர்.
இதைக் கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி தன் வாழ்க்கையை நினைத்து மனம் நொந்தான்.
விளைச்சல் இல்லை… லாபம் இல்லை… குடும்பம் துன்பத்தில் தவித்தது.
“நாமும் அந்த ஜோதிடரைச் சந்தித்து பார்க்கலாம்” என்று முடிவு செய்தான்.
“என் தலைஎழுத்து எப்போது மாறும்?” என்ற ஏக்கத்துடன்
தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரைச் சந்தித்தான்.
ஜோதிடர் அவன் ஜாதகத்தை பார்த்தார்.
சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
பிறகு,
“நாளைக்கு வா… சொல்லுகிறேன்,” என்று அனுப்பிவைத்தார்.
அதை கவனித்த அவரது மகள் கேட்டாள்:
“அப்பா, நீங்கள் எல்லோருக்கும் உடனே ஜாதகம் கணித்து சொல்வீர்கள்.
இவரை மட்டும் ஏன் நாளைக்கு வரச் சொன்னீர்கள்?”
ஜோதிடர் கனத்த குரலில் கூறினார்:
“அவனுடைய ஜாதகப்படி, நாளை விடியற்காலையில் அவன் உயிருடன் இருக்க மாட்டான்.
அவனுடைய ஆயுள் முடிவடைகிறது.”
“பரிகாரம் இல்லையா, அப்பா?” என்று கேட்டாள் மகள்.
“ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் ஆயுள் பலப்படும்.
அதோடு அவன் மிகப் பெரிய பணக்காரனாகவும் உயர வாய்ப்பு உண்டு.
ஆனால் அவன் பரம ஏழை… அது அவனால் சாத்தியமில்லை…” என்றார்.
இதற்கிடையில் அந்த ஏழை மனம் உடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென கடும் காற்று, மழை, இடி முழங்கியது.
“மழையில் நனைந்தால் உடம்பு கெடும்.
மருத்துவரிடம் செல்ல பணமில்லை…” என்று எண்ணி
அருகில் இருந்த ஒரு பாழடைந்த பழைய சிவன் கோவிலில் ஒதுங்கினான்.
அந்த கோவிலைப் பார்த்து அவன் மனம் உருகியது.
“அட கடவுளே…
உன்னை வசதி உள்ளவர்கள் கூட கவனிக்கவில்லை.
என்னிடம் பணம் இருந்தால்
இந்த கோவிலை சீர்செய்து உனக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பேன்…”
என்று மனதார நினைத்தான்.
அவன் மனக்கண்களில் அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் நடைபெறுவது போல கண்டு ஆனந்தமடைந்தான்.
மழை நின்றது.
அவன் கோவிலின் படிகளை இறங்கி வெளியே வந்ததும் —
அந்த நொடியிலே பயங்கரமான இடி கோவிலின் மீது விழுந்தது!
கோவில் சிதறி சரிந்தது!
அவன் சில நொடிகள் நடுங்கினான்…
பிறகு உணர்ந்தான் —
“கடவுளே, நீயே காப்பாற்றினாய்!”
என்று கண்ணீர் மல்க நன்றி கூறி வீடு சென்றான்.
மறுநாள் காலையில் அவன் உயிருடன் எழுந்தான்.
நேராக ஜோதிடர் வீட்டிற்கு சென்றான்.
ஜோதிடர் அவனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
“நேற்று என்ன நடந்தது?” என்று கேட்டார்.
அவன் நடந்ததையெல்லாம் கூறினான்.
அப்போது ஜோதிடர் உணர்ந்தார்:
“இவன் மனதார ஆண்டவருக்காக நினைத்தான்.
அந்த சுத்தமான எண்ணமே
அவனுடைய விதியை மாற்றியது.”
அந்த ஏழை விவசாயி பின்னர் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெற்று செழிப்புடன் வாழ்ந்தான்.
அவன் உண்மையிலேயே அந்த கோவிலைச் சீர்செய்து கும்பாபிஷேகம் செய்து,
கடவுளுக்கு நன்றி செலுத்தினான்.
கதையின் உண்மை
தலைஎழுத்தைக் கூட மாற்றும் சக்தி
நாம் செய்யும் புண்ணிய காரியங்களுக்குண்டு.
பயந்து தர்மம் செய்யாதீர்கள்.
பலன் எதிர்பார்த்து செய்யாதீர்கள்.
அன்பால் செய்யுங்கள்.
ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் உணவு அளியுங்கள்.
கோவில் சீரமைக்கும் பணிக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
உழவாரப்பணி செய்பவர்களை மதித்து உதவுங்கள்.
இறப்பை தவிர்க்க முடியாது.
ஆனால் நாம் செய்யும் புண்ணியங்கள்
சில துன்பங்களைத் தள்ளிப் போடக் கூடும்.
திருவாசகம், திருப்புகழ், தேவாரம் பாராயணம் செய்வது
மனத் துன்பத்தை நீக்கும்.
ஏழையின் சிரிப்பில் மகேசனை காணலாம்.
தாய் தந்தைக்கு செய்யும் சேவையில் நாராயணனை காணலாம்.
கிரகங்கள் ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.
நாம் செய்யும் பாவ–புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கிறது.
திருச்சிற்றம்பலம்
— Savittri Raju ✨
#ஆன்மீக கதைகள் #ஆன்மீக கதைகள்




![😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - Ceelings Suddenly ] felt the touch of finger: tiny; tender As if it was you touching I71& It felt like you had come rustling Even the ofthe leaves Sounded like your whispers geute Yes even the breeze Made me feel your within me presence waiting [am For the moment When you will come] Savittu Raju Ceelings Suddenly ] felt the touch of finger: tiny; tender As if it was you touching I71& It felt like you had come rustling Even the ofthe leaves Sounded like your whispers geute Yes even the breeze Made me feel your within me presence waiting [am For the moment When you will come] Savittu Raju - ShareChat 😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - Ceelings Suddenly ] felt the touch of finger: tiny; tender As if it was you touching I71& It felt like you had come rustling Even the ofthe leaves Sounded like your whispers geute Yes even the breeze Made me feel your within me presence waiting [am For the moment When you will come] Savittu Raju Ceelings Suddenly ] felt the touch of finger: tiny; tender As if it was you touching I71& It felt like you had come rustling Even the ofthe leaves Sounded like your whispers geute Yes even the breeze Made me feel your within me presence waiting [am For the moment When you will come] Savittu Raju - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_711837_1540fdc8_1775182706757_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=757_sc.jpg)








