Savittri Raju
ShareChat
click to see wallet page
@1146601529ke
1146601529ke
Savittri Raju
@1146601529ke
வாழ்வில் உயர உழைப்பு வேண்டும்
பொக்கிஷம் நம்மை பெற்றவர்கள், நம் தவறான செயல்களை சுட்டிக்காட்டும் போது, சில நேரங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகத் தோன்றுவார்கள். சில உண்மைகளை உணர்த்தும் போது கூட, நாம் அவர்களைத் தள்ளி வைக்கிறோம். அவர்களின் அன்பான கோரிக்கைகளும், நமக்கு திருமணம் ஆன பிறகு தொந்தரவாக மாறக்கூடும். சிறுவயதில் நாம் கேட்டதெல்லாம் உடனே வாங்கித் தந்தவர்கள், முதுமை பருவத்தில் தங்களுக்கு தேவையான சிறிய விஷயங்களுக்கே மாதக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. “இன்று கிடைக்கும்… நாளை கிடைக்கும்…” என்று நம்பிக்கையுடன் நம் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். சில சமயம் அவர்கள் கேட்டதே நாமே மறந்துவிடுகிறோம். சிறுவயதில் எது உகந்த உணவு, எது வேண்டாம் என்று பார்த்து பார்த்து நமக்கு உணவு கொடுத்தவர்கள், இன்று அவர்களே குழந்தை போல ஆகி, பல உணவுகளை உடல் ஏற்காமல் தவிக்கிறார்கள். முதுமையின் பிடியில், தரையில் அமரவும், பேருந்தில் ஏறவும் கூட சிரமப்படும் நிலையில் இருப்பார்கள். அவர்களின் நிலையை உணராமல் நாம் கோபப்படவும் செய்கிறோம். சிறுவயதில் பெற்றோருடன் ஒட்டிக் கொண்டு வாழ்ந்த நாம், திருமணத்திற்குப் பிறகு அவர்களிடமிருந்து விலகி வாழத் தொடங்குகிறோம். ஆனால் அப்போது கூட, தாய் தந்தையின் மனம் நம்மை கருணையுடன் தான் பார்க்கும். அவர்களுடன் பேசுவதற்குக் கூட சிறிது நேரம் ஒதுக்காதது மிகப் பெரிய கொடுமை. இழப்புகள் இருக்கும் போது உணரப்படுவதில்லை — இழந்த பின்பு தான் அதன் மதிப்பு தெரியும். இந்த உறவு ஒரு சங்கிலி போன்றது. நாம் எப்படி நடத்துகிறோமோ, அது நம் சந்ததியினரிடமும் தொடரும். அவர்கள் இருக்கும் போதே, அவர்களுக்காகவும் வாழ கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் தேவைகள் பெரியதாக இருக்காது — நம்முடைய அன்பும், அரவணைப்பும் தான். முதுமையில் அவர்கள் அதிகம் சாப்பிட முடியாது. ஆனால் குழந்தையைப் போல அடிக்கடி பசி வரும். அதை புரிந்து கொண்டு, எளிதாக செரிமானமாகும் சத்தான உணவுகளை கொடுங்கள். உங்களுக்குப் பிடித்த உணவு, அவர்களுக்கு ஏற்றதாக இருக்காமல் இருக்கலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப, அவர்களை இயற்கை சூழலுக்கும், ஆலயங்களுக்கும் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை அவர்களுடன் நெருக்கமாக இருக்க அனுமதியுங்கள். அவர்கள் ஒரு பொக்கிஷம் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களை இழந்து விடாதீர்கள். நீங்கள் அவர்களாக மாறும் முன்பே — மாற்றிக் கொள்ளுங்கள். அப்போது கால சக்கரத்தின் தண்டனையிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். #பொக்கிஷம் – Savittri Raju
பொக்கிஷம் - Savittri Raju Savittri Raju - ShareChat
தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம் தீராத நோய்களைக் குணப்படுத்தி, ஆரோக்கியமான நீண்ட ஆயுளைத் தரும் சக்தி வாய்ந்த மந்திரம் சப்த சிரஞ்சீவி மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை தினசரி உச்சரிப்பதன் மூலம் நோய்களில் இருந்து காப்பாற்றபடுவோம் சப்த சிரஞ்சீவி மந்திரம் அஸ்வத்தாம பலிர்வ்யாஸோ ஹனுமாம்ஸ்ச விபீஷணக க்ருப பரசுராமஸ்ச சப்தைதே சிரஞ்ஜீவின: சப்தைதான் சம்ஸ்மரேந்நித்யம் மார்க்கண்டேய மதாஷ்டமம் ஜீவேத்வர்ஷசதம் ஸோபி சர்வவ்யாதி விவர்ஜிதக.. மந்திரத்தின் பொருள்:அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகளையும், எட்டாவதாக மார்க்கண்டேயரையும் தினமும் நினைப்பவர், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு, நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வார்.வழிபடும் முறை:எப்போது: தினமும் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, இந்த மந்திரத்தை 7 நம்பிக்கையோடு அல்லது 11 முறை ஜெபிக்கவேண்டும். ஆன்மிக வழி SavitriRaju #ஆன்மீகம் அறிவோம்
ஆன்மீகம் அறிவோம் - Savittri Raju Savittri Raju - ShareChat
நவக்கிரஹ த்யானம் ✨✨✨✨✨✨✨ ஆரோக்யம் ப்ரததாது நோ தினகர சந்த்ரோ யசோ நிர்மலம் பூமிம் பூமிஸுதாம் சு தனயஹ ப்ராஜ்யம் குருடர் கௌரவ காவ்ய கோமள வாக் விலாஸ மதுவும் மந்தோமுதம் ஸர்வதா ராஹுர் பாஹுபலம் விரோத சமயம் கேது குலஸ்யோன்னதிம் ஓம்... இந்த ஸ்லோகத்தை தினம் 9 முறை சொல்லிவர ஜாதக கட்டங்களில் உள்ள நவக்கிரங்களின் தோஷங்களில் இருந்து விடுபட்டு நன்மை பெறலாம் . கோவிலுக்கு சென்றால் நவகிரகங்களை 9 முறை சுற்றி வரும் போதுசொல்ல வேண்டும் தமிழ் விளக்கம் எல்லோருக்கும் ஆரோக்யத்தை அருளும் சூர்ய பகவானே, கீர்த்தியை குறைவின்றி வழங்கும் சந்திரனே, ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் , நல்ல புத்தியை நல்கும் புத பகவானே, நல்ல மதிப்பை அருளும் குரு பகவானே, பிறர் போற்றும் வண்ணம் அழகிய பேச்சு திறமையை வழங்கும் , சுகத்தை குறைவின்றி தரும் சனி பகவானே ,நல்ல உடல் பலத்தையும் விரோதிகள் மேல் வெற்றியும் நல்கும் ராகுவே ,குல அபிவிருத்தி அருளும் கேதுவே உங்கள் அனைவர்க்கும் நமல்களும் நவ கிரகங்களும் நற்பேறுகளை அளிப்பீர்களாக ...... ஆன்மீகம் வழி #நவக்கிரஹம் Savittri Raju
நவக்கிரஹம் - நவகிரகங்கள் சந்திரன் செவ்வாய் சக்கிரன் சி சரிபன் ராகு கேசு புதன் Cantu Savittri Raju நவகிரகங்கள் சந்திரன் செவ்வாய் சக்கிரன் சி சரிபன் ராகு கேசு புதன் Cantu Savittri Raju - ShareChat
சித்ரா பௌர்ணமியின் சிறப்பு🌝 சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாள். 50 ஆண்டுகள் கழித்து வரும் இது மிகவும் புண்ணியமான தினமாக கருதப்படுகிறது. 🌕 முக்கியத்துவம் இந்த நாளில் சித்திரகுப்தன் என்பவர் வழிபடப்படுகிறார். அவர் மனிதர்களின் பாவ–புண்ணிய கணக்கை வைத்திருப்பவர் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த நாளில் நாம் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் கேட்டு வழிபடுவது முக்கியம். 🪔 என்ன செய்ய வேண்டும்? அதி காலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும். சித்திரகுப்தனுக்கு நிவேதனமாக (வெல்லம், பழம், பால் போன்றவை) வைக்கலாம் தீபம் காட்டி பிரார்த்தனை செய்யலாம். வீடுகளில் தெய்வீகமணம் கமழவிடவேண்டும் சித்ரகுப்தன் மூல மந்திரம்💐 "சித்ர குப்தம் மஹா ப்ராக்ஞம் லேகணி பந்த தாரிணம் சித்ர ரக்னாம் பரதரம் மத்யஸ்த்தம் ஸர்வ தேஹினாம்" இதை மூன்று முறை கூற வேண்டும். அடுத்து மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரனை (நிலா) பார்த்து வழிபடுவது மிகவும் சிறப்பு . கன்னி பெண்கள் திருமணம் வேண்டியும் , குழந்தை பாக்யம் வேண்டியும், உத்யோகம், செல்வம் வேண்டியும் சந்திரனை வணங்கி பிராத்தனை செய்தால் அனைத்து விருப்பமும் நிறைவேற்றி வைப்பார். அன்றைய தினம் அன்னதானம், தானம் செய்வது புண்ணியம் தரும். 🌙 சந்திர வழிபாட்டில் இரவில் நிலவை பார்த்து: குங்குமம், பூ, பழம் ஊதுபத்தி ஒரு ரூபாய் நாணயம் கையில் வைத்து மனதார வேண்டிக் கொண்டால் மனசுக்கு அமைதி, பாப நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை 🧘‍♀️ சித்ரா பௌர்ணமி சிறந்த தினமாகும் “நாம் செய்த நல்லதும் கெட்டதும் எல்லாம் கணக்கில் இருக்கிறது. இதெல்லாம் நீங்க காலையில் சித்ர குப்தனையும் மாலையில் சந்திர பகவானையும் வேண்டி பிராத் |தனை செய்ய வேண்டும். சந்திர பகவான் மந்திரம்: பத்மத் துவஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்த்ர ப்ரசோதயாத்" இதை மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும் அடுத்து " சந்திர மௌளீஸ்வராய நமஹ" என 21 முறை சொல்லி வணங்கி நம் கோரிக்கையை வைக்க சந்திர தேவர் மிகவும் மனம் குளிர்ந்து வேண்டியதை தருவர். மேலும் மன குழப்பம் நீங்கவும் ஞாபக சக்தி பெருகவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் சநதிரன் முன்பு 20 நிமிடம் அமர்ந்து கொள்ள வேண்டும் மொட்டை மாடியிலோ அல்லது வாசலிலோ சந்திரன் தெரியும் வகையில் அமர வேண்டும் . வாழ்க வளமுடன் #🟡சித்ரா பெளர்ணமி 🙏 Savittri Raju🙏
🟡சித்ரா பெளர்ணமி 🙏 - R R - ShareChat
Standing before the mirror, an elderly woman speaks to herself… I stand before the mirror and ask myself… Why have you changed like this? Why do my hands refuse to obey me now… Why do my legs plead with me not to stand for long… The strands of hair on my head seem to ask, Why don’t you care for me like before… The clothes neatly arranged in the cupboard seem to smile and ask, What happened… why don’t you choose and wear us anymore… The stomach that could digest anything, Why does it now refuse even simple food like idli… The body that once sat comfortably on the floor listening to stories, Why does it now search for a chair… The eyes that once challenged the brightness, Why do they now seek the comfort of darkness… The heart that longed for relationships, Why does it now prefer solitude… The once courageous heart, Why has it become so fragile… The tongue that relished spicy and sweet delicacies, Why does it now refuse to taste them… The hands that once worked like a spinning top, finishing tasks in no time, Why do they now move so slowly… The lips that always said “I am fine” to everyone who asked, Why do they now say, “I am just somehow managing”… Everything that once felt joyful, Why does it now feel exhausting… Journeys that once felt pleasant, Why do they now feel like a burden… The children I raised with love, Why do they now seem to have cast me aside… The eyes that once refused to sleep, Why do they now beg for rest… Why is there a tremor in the hands that once held strength… Why does the heart that beat steadily now flutter with unease… Why this forgetfulness… Why these pains… For all these questions, the single strand of grey hair that fell on my face whispered the answer: “Old age .... #life — Savittri Raju💐
life - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - Iwish to my heart out  Speak But there is no one to listen with care $0, talk to myself Sharing my thoughts with me alone] Yes the solace 1 give myself Dont worry . everything will be alright  deep voice from within me getle whispers | these words Only 1 can hear ity Because It is the voice of God | Rajw | Savittri Iwish to my heart out  Speak But there is no one to listen with care $0, talk to myself Sharing my thoughts with me alone] Yes the solace 1 give myself Dont worry . everything will be alright  deep voice from within me getle whispers | these words Only 1 can hear ity Because It is the voice of God | Rajw | Savittri - ShareChat
சித்திரை புத்தாண்டு இதுதமிழர்களின் மிக முக்கிய பாரம்பரிய பண்டிகையாகும். வசந்த காலத்தின் தொடக்கத்தையும், சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதையும் குறிக்கிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி தீபமேற்ற வேண்டும். சித்திரை மாதம் செவ்வாய் கிழமையாகும். இது வெறும் கால மாற்றம் மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்த, புதிய நம்பிக்கைகளையும், மகிழ்ச்சியையும் விதைக்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகும். வரலாற்று மற்றும் வானியல் சிறப்பு சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே சித்திரை 1-ஆம் நாளாக கணக்கிடப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கமாக (இளவேனில் பருவம்) கருதப்படுகிறது, மா, பலா, வாழைகாய்த்து குலுங்கும் அப்போதுதான் செடி, கொடிகள் துளிர்த்து பூத்துக் குலுங்கும். இதுவே தமிழ் ஆண்டு பிறப்பு என்பது வழக்கில் உள்ளது. கனி காணல்: புத்தாண்டு முன்தினம் இரவு கோலம் போட்டு கனிகள், பூக்கள், நகைகள், பணம், கண்ணாடி, மற்றும் அரிசி வெற்றிலைஆகியவற்றை ஸ்வாமி முன்பு ஒரு தட்டில் வைத்து, புத்தாண்டு அதிகாலையில் எழுந்து அதாவது காலை 4.30 to 6 மணிக்குள் பார்ப்பது, ஆண்டின் சுபிட்சத்திற்கு காரணமாக நம்பப்படுகிறது. சுமங்கலி பெண்கள் தலை நிறைய பூ வைத்து பொட்டோடும் கைவளை கல கல என வலம் வர மஹாலக்ஷ்மியின் ஆசி கிட்டும். கன்னி பெண்கள் புத்தாடை அணிந்து தாய் தந்தை சகோதர சகோதரிகளின் ஆசி பெற வேண்டும். அதிகாலையில் அனைவரும் கோயில்களுக்குச் சென்று இறைவனை குடும்பத்துடன் வழிபட வேண்டும். பாயசம் , வடை , வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி தயிர் பச்சடி போன்ற இனிப்பு, கசப்பு, புளிப்பு கலந்த உணவுகள் சமைக்கப்படும், இது வாழ்க்கையின் அனைத்து சுவைகளையும் சமமாக ஏற்க வேண்டும் என்ற தத்துவத்தைக் உணர்த்துகிறது. உறவினர் சந்திப்பு: வீடுகளில் பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வர். சமூக முக்கியத்துவம் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கத்தைக் குறிக்கிறது. இது உழவர்களுக்கான நாளாகவும், புதிய விவசாயப் பணிகளைத் தொடங்கும் நாளாகவும் குறிப்பாக கேரளாவில் விஷு மிகவும சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பூக்களால் கோலமிட்டு வழிபடுவர். இது பழைய கசப்புகளை மறந்து, புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க உதவும் ஒரு நன்னாளாகும். தமிழர்களின் கலாச்சார அடையாளமான சித்திரைப் புத்தாண்டு, ஒற்றுமை, அன்பு மற்றும் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இந்த இனிய நாளில் புதிய இலக்குகளை நிர்ணயித்து, மகிழ்ச்சியுடனும், சுபிட்சத்துடனும் வாழ உறுதி ஏற்போம். சித்திரை மகளை சந்தோஷமாய் வரவேர்ப்போம். அந்த மாதம் முழுவதும் சிறந்த மாதமாக விளங்கும் ஐய்யமில்லை . Savittri Raju #தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு - சித்திரை புத்தாண்டு பொழ்த்துகள்! Savittri Rajw சித்திரை புத்தாண்டு பொழ்த்துகள்! Savittri Rajw - ShareChat