தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்
தீராத நோய்களைக் குணப்படுத்தி, ஆரோக்கியமான நீண்ட ஆயுளைத் தரும் சக்தி வாய்ந்த மந்திரம் சப்த சிரஞ்சீவி மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை தினசரி உச்சரிப்பதன் மூலம் நோய்களில் இருந்து காப்பாற்றபடுவோம் சப்த சிரஞ்சீவி மந்திரம்
அஸ்வத்தாம பலிர்வ்யாஸோ ஹனுமாம்ஸ்ச விபீஷணக
க்ருப பரசுராமஸ்ச சப்தைதே சிரஞ்ஜீவின:
சப்தைதான் சம்ஸ்மரேந்நித்யம் மார்க்கண்டேய
மதாஷ்டமம்
ஜீவேத்வர்ஷசதம் ஸோபி சர்வவ்யாதி
விவர்ஜிதக..
மந்திரத்தின் பொருள்:அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகளையும், எட்டாவதாக மார்க்கண்டேயரையும் தினமும் நினைப்பவர், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு, நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வார்.வழிபடும் முறை:எப்போது: தினமும் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, இந்த மந்திரத்தை 7 நம்பிக்கையோடு அல்லது 11 முறை ஜெபிக்கவேண்டும்.
ஆன்மிக வழி
SavitriRaju #ஆன்மீகம் அறிவோம்


