தவெக கட்சியின் தற்போதைய நிலை மற்றும் திரு விஜய் என்ன செய்ய வேண்டும்.
தமிழக அரசியல் இன்று மிகவும் நுணுக்கமான மற்றும் தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் அரசியல் முயற்சியிலேயே மக்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை திரு.விஜய் ஒரு இடத்தில் தவறவிட்டுள்ளார். மக்கள் அவரை ஏற்றுக் கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை என்றாலும், அரசியல் என்பது பொறுமையையும் பக்குவத்தையும் சோதிக்கும் மேடை என்பதை இந்நிலை காட்டுகிறது.
தொடக்கத்தில் அமமுக கட்சியின் ஒரே உறுப்பினர் ஆதரவு கடிதம் அளித்ததாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த கையெழுத்து போலியானது, AI மூலம் உருவாக்கப்பட்டது என கூறப்பட்டு FIR வரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கூட்டணி அரசியலின் குழப்பங்களையும் மறைமுக விளையாட்டுகளையும் வெளிப்படுத்துகிறது.
அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள்.கம்யூனிஸ்ட்கள் IMUL போன்ற கட்சியின் ஆதரவும் உறுதியான எழுத்து மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனவே அந்த ஆதரவும் தெளிவற்ற நிலையில் உள்ளது. அவர்கள் திமுக கூட்டணியில் தொடருவதாகவும் வெளியில் இருந்து tvk கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு என்று தெரிவித்து ள்ளார்கள்.
இதற்கிடையில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் தங்களது அரசியல் கணக்குகளை அமைதியாக நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களும் முதல்வராகும் முயற்சியில் உள்ளார். வெளியில் இருந்து திமுக ஆதரவு கிடைத்தால் அவர்களும் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆளுநர், அனைத்து கட்சிகளின் முறையான கையெழுத்துகளுடன் கூடிய ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவை சரிபார்க்கப்பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் விஜய் அவசரப்படாமல் அமைதியாக சிந்திக்க வேண்டும்.
முதல்வர் பதவிக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை. தேவையற்ற நிபந்தனைகளுக்கு தலைகுனிய வேண்டியதில்லை. அவர் அரசியலுக்கு வந்ததன் நோக்கம், புதிய சிந்தனையையும் மாற்றத்தையும் கொண்டு வருவதாகும். ஆரம்பத்திலேயே சமரசங்களிலும் அழுத்தங்களிலும் சிக்கிக் கொண்டால், அவர் நினைக்கும் சுதந்திரமான ஆட்சி சாத்தியமாகாது.
நிலையற்ற ஆதரவின் மீது அமைந்த அரசு எப்போதும் அச்சத்துடனும் குழப்பத்துடனும் இருக்கும்.
அதற்குப் பதிலாக, விஜய் வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மக்களின் நம்பிக்கையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது.
மக்கள் ஏற்கனவே அவருக்கு அபாரமான வரவேற்பை வழங்கியுள்ளனர். அவர் பொறுமையுடனும் மரியாதையுடனும் உறுதியாக நின்றால், எதிர்கால தேர்தலில் இன்னும் அதிகமான இடங்களுடன், யாரிடமும் சாராமல், தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
இன்று பதவிக்காக தலைகுனியாமல் நிற்பது, நாளை unquestioned தலைவராக உயர்வதற்கான அடித்தளமாக மாறலாம்.
விஜய்க்கும் TVK-க்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
#laljidesai #mukulwasnik #vijaythalapathy #PriyankaGandhi #kcvenugopalmp #AdmkFailsTN #TVKITWING #DMKFailsTN #dindigulcongress #girishchodenkar #tvk
#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅