Follow
MUTHUPANDIAN RAMKUMAR
@152583866
10,213
Posts
11,663
Followers
MUTHUPANDIAN RAMKUMAR
156 views
28 minutes ago
AI indicator
#பெருமாள் வரம் அருளும் பெருமாள் : ஒடிஷா பொதுவாக வைணவ ஆலயங்களில் மகாவிஷ்ணுவை நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் நாம் தரிசிக்கலாம். திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் 24 தலங்களில் சயனக் கோலத்திலேயே மகாவிஷ்ணு சேவை சாதிக்கிறார். இத்தகைய சயனங்களில் ஜலசயனம், தலசயனம், புஜங்கசயனம், வீரசயனம் என்று 10 வகைக் கோலங்கள் உண்டு. இவற்றில் கோயில் என்று வைணவர்கள் போற்றும் திருவரங்கம், மகாவிஷ்ணுவின் சயன கோலத்திற்குரிய மிகப் பிரபலமான தலமாகத் திகழ்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், திருச்செந்தூர் சுப்பிரமண்யர் ஆலயம் போன்றவற்றில் அனந்தசயனக் கோலத்தில் மிகப்பெரிய வடிவில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் சந்நதிகள் உள்ளன. ஒடிஷா மாநிலத்தில் வித்தியாசமான அனந்தசயனரை தரிசிக்கலாம். ஆமாம், வெட்ட வெளியில் பாறையில் பிரமாண்டமாக அந்த மூர்த்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா மாநிலம் தென்கானல் மாவட்டம், பிராமணி ஆற்றங்கரையில், சாரங்கா என்ற இடத்தில் 51 அடி நீளம், 23 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்ட அனந்தசயன விஷ்ணு இந்தியாவிலேயே மிக பிரமாண்டமானவராகக் கருதப்படுகிறார். கோயில் அமைப்பு ஏதும் இன்றி வெட்ட வெளியில் சயனித்திருக்கும் இந்த மூர்த்தியின் பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும், முன் இருகரங்களில் கதையும், தாமரை மலரும் காணப்படுகின்றன. இதே ஒடிஷா மாநிலம், ஆங்குல் மாவட்டத்தில் பீமகுண்ட் என்ற இடத்திலும் இன்னொரு மிகப் பெரிய அனந்தசயனப் பெருமாள் திருமேனி உள்ளது. இதுவும் பிராம்மாணி ஆற்றங்கரையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெட்ட வெளியில் காட்சி தரும் 42 அடி நீளமுள்ள இந்த விக்கிரகம் 8-9வது நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கு ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க, அனந்தசயன மூர்த்தி சயனித்த நிலையில் முன் இடக்கையை இடது தொடை மீது வைத்து, பின் இடக்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். வலப்பக்கக் கரங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. வலக்காலை இடக்காலின் மீது மடித்து வைத்திருக்கிறார். ஏகாதசி, பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் பீமகுண்ட் அனந்தசயனப் பெருமாளைத் தரிசிக்க வருகின்றனர். அனந்த சயனம் என்பது மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது, பாற்கடலில் பள்ளி கொண்ட காட்சியைக் காட்டுவதாகும். தண்ணீரில் எப்போதும் சயனத் திருக்கோலத்தில் திகழும் பெருமாள் ஜலசயனப் பெருமாளாகப் போற்றப் படுகிறார். இவ்வாறு ஜல சயனக் கோலத்தில் பக்தர்கள் தரிசிக்கின்ற வகையில் சிற்பிகள் ஆற்றைத் தொட்டவாறு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வகையில் இச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன! மத்திய இப்பகுதியில் வைணவத்தை ஆதரித்து வந்த பௌமகார் மன்னர்கள் பீமகுண்ட் மற்றும் சாரங்கா அனந்த சயன பெருமாள் சிலைகளை உருவாக்கியிருக்கின்றனர். ஒடிஷா அந்த சயனர் சிலைகளைப் போன்றே நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் புதாநீல்கண்ட் என்ற இடத்தில் 17 அடி நீள ஜலசயன விஷ்ணு நாராயண் என்ற அனந்த சயனப் பெருமாளைத் தரிசிக்கலாம். 7-8 நூற்றாண்டுகளில் லிச்சாவி மன்னர்களால் அமைக்கப்பட்ட இந்த அற்புதமான திருஉருவம் 40 அடி நீளம் கொண்ட குளத்திற்குள் கலை நுணுக்கத்தோடு திகழ்கிறது.
MUTHUPANDIAN RAMKUMAR
3.9K views
29 minutes ago
AI indicator
#வரலட்சுமி ௮ம்மன் #எங்க வீட்டு வரலட்சுமி பூஜை #வரலட்சுமி பூஜை தின நல்வாழ்த்துக்கள் 🌺🙏 #வரலட்சுமி பூஜை அலங்காரம் #வரலட்சுமி விரதம் 🙏🙏 விரதம் ஸ்பெஷல்* 🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿. 🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺🕊🌺 🌹சகல ஐஸ்வர்யங்களை பெற்று தரும் வரலட்சுமி விரதம் !🌹 🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕 🌿 வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். 🌿 கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். 🌿 நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அன்னை மகாலட்சுமியை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள். ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். 🌿 லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். 🌿லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளி ல் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 🌿அன்னை மகாலட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், 🌿பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மாவதி என்றும், 🌿 அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும் 🌿 , ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், 🌿ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், 🌿 பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்ற ப்பட்டமையால் சீதை என்றும் 🌿 பாற்கடலிலிருந்து தோன்றிய தால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 🔥எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.இதனால் தான் திருமணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். 🔥 மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம். ⭐ லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன. 🍒 மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள். 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🍒 வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும். 🌺 செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிட லாம். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். 🌿 லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது. 🌳 நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது. 🍑 பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். 🌺 மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். 🌿 நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார். 🌿 மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமி யின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படு கின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். 🌿 வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமி க்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறை வோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 🌿 மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். 🌿 பட்டுத்துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. 🌿 கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சு போடவேண்டும். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். 🌿 பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு,வளையல், ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. 🌿 லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக் கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கிய மாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும். 🌿 இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கிய மாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர். 🙏🙏🙏 வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவரு க்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதே போல் அதில் கலந்து கொள்பவர்களுக்கும் சிறப்பு வந்து சேரும். இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒🌾🍒 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 🍁#இங்குதான்_நிரந்தரமாக #இருப்பேன்: #லஷ்மி_பரந்தாமனிடம் #சொன்ன_இடம் ? #ஒரு_முறை #வைகுண்டத்தில்_ஸ்ரீமந் #நாராயணனும்.. #மகாலஷ்மியும்_பேசிக் #கொண்டிருந்தார்கள்.. 🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋 🌺 பேச்சு அப்படியே பூலோகம் பற்றி வந்தது.. பரந்தாமனுக்கு தேவியை கோபப்படுத்தி பார்க்க ஆசைவந்தது. எப்போதும் சதா கேள்வி கேட்டு துளைக்கும் மகாலஷ்மியை இன்று நாம் கேட்கலாம் என்று நினைத்தவர்... ”தேவி உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா” என்றார்.. ”என்னிடம் தாங்கள் என்ன கேட்க போகிறீர்கள்? .. சுவாமி... கேளுங்களேன் எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன்” என்றாள்.. 🌺 “பக்தர்கள் படும் பாட்டை காண சகியாமல் எப்போதும் உங்கள் பக்தன் நல்லவன்.. அவன் இப்படிச் செய்கிறான். இவன் இப்படி இருக்கிறான் என்று பூலோகப் பெண்கள் போல் புலம்புகிறாயே.. நீ ஒரு நாள் இவர்களையெல்லாம் பார்த்துக் கொள்ள கூடாதா? நான் சற்றேனும் ஓய்வெடுப்பேனே?” என்றார்.. ”அது எப்படி முடியும் சுவாமி.. அவ்வளவு பெரிய சுமையை என்னால் சுமக்க முடியுமா..?” என்று தயங்கினாள் மகாலஷ்மி.. ”சரி ஒரு நாள் வேண்டாம்.. ஒரு மணி நேரம்..” என்றார்... அதற்கும் சம்மதிக்கவில்லை மகாலஷ்மி... ”ஒரு நிமிடம்” என்றார் மீண்டும் விடாமல்... ”என்னை நம்பி இவ்வளவு பெரிய சுமையை கொடுக்கிறீர் களே” என்று சொன்னாலும் ஏற்றுக்கொண்டாள் லஷ்மி தேவி.. ஒரு நிமிடத்தில் என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது அவளுக்கு... 🌺 ஆனால் ஒரு நாழிகை போதுமே பிரளயம் வருவதற்கு.. பக்தர்களின் புலம்பல் களும் வேண்டுதல்களும் துன்பங்களும் துயரங்களும் ரீங்காரமாக தேவியின் செவிகளில் விழுந்தது..ஒன்றா இரண்டா ஓராயிரமா முடியவில்லை ”சுவாமி” என்று ஸ்ரீமந் நாராயணனிடம் அடைக்கலமானாள்.. புன்னகையுடன் பரந்தாமன் கேட்டார். ”என்னாயிற்று தேவி..” என்றார். ”இவ்வளவு சுமையெல்லாம் என்னி டம் கொடுக்காதீர்கள்.. 🌺 எனக்கு பிடித்த பக்தர்களின் வீட்டில் நான் வசித்துக் கொள் கிறேன் என்றாள்.. 🍒 ”நீ வசிக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பு கிறாய்?” என்று கேட்டார் பரந்தாமன். 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 🍒 ”தர்மம் செய்பவர்கள், 🍒இரக்க குணம் உள்ளவர்கள் 🍒, பிற உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்கள், 🍒 பொய் சொல்லாதவர்கள், 🍒 கர்வமில்லாதவர்கள், 🍒 கடவுள் மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள், 🍒அமைதியும் அன்பும் கொண்டிருப் பவர்களின் வீட்டில் தான் நிரந்தரமாக வசிப்பேன்” என்றாள்.. 🍒 ஸ்ரீமந் நாராயணன் அகம் மகிழ்ந்து ”அப்படியே ஆகட்டும் தேவி” என்று வாக்களித்தார். உங்கள் வீட்டிலும் லஷ்மி வாசம் செய்ய முதலில் கடைப்பிடிக்க வேண்டியது மேலே சொன்னதுதான்.. 🌺 அன்பும் 🌺 , இரக்கமும், 🌺 பொறுமையும், 🌺 இறை நம்பிக்கையும் 🌺 ஶ்ரீ லஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் இடங்களே... 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
MUTHUPANDIAN RAMKUMAR
838 views
4 hours ago
AI indicator
[21/08, 3:54 am] +91 73388 81458: *🕉🌼🌼🌷🌷உ🌼🌼🌹🌹☸* *🕉️🔯🚩ௐ நமசிவாய🚩✡️🕉️* *꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘d𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜                                     *🛣   திருவெற்றியூரில்* *பக்தர்களின் பிணி தீர்க்கும்* *மருத்துவச்சியாக  திகழும்* *அருளே மஹா சக்தியான*        *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*           *🛕உடனுறை🐍* *💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி* *🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏* 🥥🥥🥥🥥            🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 ஆவணி:~ 𝟬𝟰 :-* *🌸 【 𝟮𝟭•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟲 】* *🌼 வெள்ளிக்கிழமை.* *🕉️ 1】வருடம்: ஸ்ரீ பராபவ:* *{ பராபவ நாம சம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்: தட்சிணாயணம்.* *🪵 3】ருது; வர்ஸ - ருதௌ.* *🔱 4】மாதம்;~ ஆவணி:-* *( சிம்ஹ -மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:* *🌙 வளர் -பிறை.* *♨️ 6】திதி:- நவமி:-* *நள்ளிரவு: 01.37 வரை, பின்பு தசமி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - நவமி.* *🌻 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~* *{ சுக்ர - வாஸரம் }* *சம -நோக்கு நாள்.*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *அனுஷம்: பிற்பகல்: 02.45 வரை பின்பு கேட்டை.* *🦋 11】நாமயோகம்:-* *காலை: 07.56 வரை ஐந்திரம், பின்பு வைதிருதி.* *💠 12】அமிர்தாதி- யோகம்:-* *பிற்பகல்: 02.45 வரை‌ சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.* *🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.* *பிற்பகல்: 12.43 வரை பாலவம், பின்பு நள்ளிரவு 01.37 வரை கௌலவம், பின்பு தைதுலம்.* *⏰ நல்ல நேரம்:* *காலை:~ 09.15 - 10.15 AM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🕰️ கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்:~ 12.15 - 01.15 PM.* *மாலை:~ 06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:* *காலை: ~ 10.30 - 12.00 PM.* *🐃 எமகண்டம்:* *பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM* *⛺ குளிகை:* *காலை: ~ 07.30 - 09.00 AM.* *⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.05 AM* *🌄 சூரிய- அஸ்தமனம்:*   *மாலை: ~ 06.23 PM.* *🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:*      *பரணி - கிருத்திகை.* *🏮 சூலம்:  மேற்கு.*               *🥮 பரிகாரம்:  வெல்லம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🔱 வரலட்சுமி - விரதம்.* *🏹 வளர்பிறை - நவமி.* 🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅 *🚩  தின- சிறப்புக்கள்:* 🚩 *═══════════════*        *🪔🪔 ஆவணி:-  𝟬𝟰 ~🎋🎋*              *🏖  𝟮𝟭•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟲 🪴*      *💎 வெள்ளிக்கிழமை.* 💎 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶 *🪩 சந்திராஷ்டம ராசி:-* *════════════* *💥 இன்றைய நாள் முழுவதும் மேஷம் ராசி.* 🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘 *🛕 ஸ்தல- விசேஷங்கள்;* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. விருஷபாரூட தரிசனம். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் கிளி வாகனத்தில் சுவாமி பவனி வரும் காட்சி.* *🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் திருக்கோவிலில் தங்க புஷ்ப பாவாடை தரிசனம்.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔱 ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரை வழிபட மங்களங்கள் மேம்படும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:-* *━━━━━━ॐ━━━━━━* *🌟 புதிய ஆடை ஆபரணங்கள் அணிய நல்ல நாள்.* *🌟 கல்வி கற்க ஏற்ற நாள்.* *🌟 விதை விதைக்க உகந்த நாள்.* *🌟 மனை பணிகளை தொடர ஏற்ற நாள்.* *🌟 செல்ல பிராணிகளை‌ வாங்குவதற்கு சிறந்த நாள்‌.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠 *_📜   தினம் ஒரு சாஸ்திர  தகவல்_★★★★📝* *═══════ॐ═════════* *🔱 இன்று வரலட்சுமி விரதம்:-* *🌼 இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்க முடியாதவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம்.* *🌺 அதிகாலையில் நீராடி வீட்டைச் சுத்தப்படுத்தி கோலமிட வேண்டும். கலசம் வைத்து, அதில் பச்சரிசி, நாணயம், மஞ்சள் மற்றும் நவதான்யங்கள் இட்டு, தேங்காய் மற்றும் மாவிலை வைத்து அம்பிகையை அலங்கரிக்க வேண்டும்.* *🔱 அஷ்ட லட்சுமிகளின் வடிவமாகக் கருதப்படும் வரலட்சுமியை மனதார நினைத்து கணபதி பூஜையுடன் வழிபாட்டைத் தொடங்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு மஞ்சள் கயிற்றை (நோன்பு கயிறு) கையில் கட்டிக்கொண்டு பிரசாதம் வழங்க வேண்டும்.* *🙏 வழிபாட்டிற்கு உகந்த நேரம் காலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை.* *💫 பிற்பகல் 12:00 மணி முதல் 02:00 மணி வரை.* 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵   *_♊ லக்ன -நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• ♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🦁 சிம்மம்- லக்னம்:-* *காலை: 05.56 - 08.00 AM வரை.* *👩‍🦰 கன்னி- லக்னம்:-* *காலை: 08.01 - 10.00 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *காலை: 10.01 - 12.00 PM வரை.* *🦂 விருச்சிகம் லக்னம்:-* *பகல்: 12.01 - 02.05 PM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *பகல்: 02.06 - 04.17 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *மாலை:- 04.18 - 06.23 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *இரவு: - 06.24 - 08.17 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *இரவு: 08.18 - 09.58 PM வரை.* *🐐 மேஷம் - லக்னம்:-* *இரவு: 09.59 - 11.40 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *இரவு: 11.41 - 01.34 AM வரை.* *👫 மிதுன - லக்னம்:-* *இரவு: 01.35 - 03.40 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 03.41 - 05.51 வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩வெள்ளிக்கிழமை - ஓரை* *⛲ஓரைகளின் காலங்கள்.* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅ 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 9-10. சனி..   ❤👈அசுபம் ❌ 10-11. குரு.     💚   👈சுபம்   ✅ 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅ *🎇 மாலை: 🔔🔔* 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 4-5. சனி..   ❤👈அசுபம் ❌ 5-6. குரு.     💚   👈சுபம்   ✅. 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [21/08, 3:54 am] +91 73388 81458: *╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.🌈 ஆவணி: 𝟬𝟰 🇮🇳 ꧂_*      *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*             *_📆 𝟮𝟭•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟲 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரப் பணிகளில் வேலை ஆட்களால் விரயங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️அஸ்வினி : தாமதம் ஏற்படும். ⭐️பரணி : அனுசரித்துச் செல்லவும். ⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_✡ ரிஷபம் ராசி: 🐂_* செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️கிருத்திகை : தடைகள் விலகும். ⭐️ரோகிணி : முடிவு கிடைக்கும். ⭐️மிருகசீரிஷம் : பணிகள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 மிதுனம் -ராசி: 👫_* வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் விலகும். தெளிவு பிறக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும். ⭐️திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️புனர்பூசம் : கவலைகள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 கடகம் -ராசி: 🦀_* ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் பிறக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும். ⭐️பூசம் : ஆதாயம் உண்டாகும். ⭐️ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 சிம்மம் -ராசி:  🦁_* அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகனப் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️மகம் : அமைதியான நாள். ⭐️பூரம் : எண்ணங்கள் ஈடேறும். ⭐️உத்திரம் : ஆர்வம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_* சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள். ⭐️உத்திரம் : தீர்வு கிடைக்கும். ⭐️அஸ்தம் : வாய்ப்புகள் அமையும். ⭐️சித்திரை : திருப்பம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 துலாம் -ராசி: ⚖_* மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கைகூடிவரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். ⭐️சித்திரை : குழப்பம் விலகும். ⭐️சுவாதி : ஒத்துழைப்பான நாள். ⭐️விசாகம் : அனுசரித்துச் செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 விருச்சிகம்- ராசி: 🦂_* மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை: கிழக்கு 💠அதிர்ஷ்ட எண்: 9 💠அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு. ⭐️விசாகம் : கருத்துகளை தவிர்க்கவும். ⭐️அனுஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். ⭐️கேட்டை : உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 தனுசு -ராசி: 🏹_* நண்பர்களின் வழியில் விரயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் மேம்படும். புதிய நபர்களின் கருத்துகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு. ⭐️மூலம் : விரயங்கள் உண்டாகும். ⭐️பூராடம் : சிந்தித்து முடிவெடுக்கவும். ⭐️உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 மகரம் -ராசி: 🐴_* உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பரிசுகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை: கிழக்கு 💠அதிர்ஷ்ட எண்: 8 💠அதிர்ஷ்ட நிறம்: இளநீலம். ⭐️உத்திராடம் : பொறுப்புகள் குறையும். ⭐️திருவோணம் : சோர்வு நீங்கும். ⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 கும்பம் -ராசி. ⚱_* உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் திருப்தி உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம். ⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும். ⭐️பூரட்டாதி : திருப்தி உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 மீனம் -ராசி: 🐠_* பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். உறவினர்களின் வழியில் மதிப்பு மேம்படும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உறுதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️பூரட்டாதி : நன்மை உண்டாகும். ⭐️உத்திரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும். ⭐️ரேவதி : மதிப்பு மேம்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️ #📅பஞ்சாங்கம்✨