Follow
குமரேசன் கவிதை ரசிகன்
@16226471
2,934
Posts
2,752
Followers
குமரேசன் கவிதை ரசிகன்
406 views
12 hours ago
##உலக சிறுநீரக தினக் கவிதை -கவிதை ரசிகன் குமரேசன் உங்கள் உடல்நாட்டில் நான்தான் இரத்த சுத்தகரிப்பு ஆலை.... நான் ஒரு தானியங்கி இயந்திரம்..... நானும் தாவரங்களும் ஒன்றுதான் போதுமான தண்ணீர் இல்லை என்றால் இறந்து விடுவோம்..... மது குடும்பத்தை 'வலுவிழக்க ' செய்ததோடு மட்டுமல்லாமல் எங்களை 'செயலிழக்கவும்' செய்துவிடுகிறது..... பாஸ்ட்புட் உங்கள் உணவை டேஸ்ட்டாக்கியது ஆனால் எங்கள் தொழிலை லாஸ்ட் ஆக்கியது..... நான் ஒரு துப்புரவு தொழிலாளி தானே என்று அலட்சியம் செய்யாதே! நான் இல்லை என்றால் உங்களுக்கு "சங்கு ஊதி "விடுவார்கள்..... உடல் இரத்த அழுத்தத்தை கவனித்துக் கொள்ளும் குடும்ப மருத்துவர்..... ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வண்டியான சிவப்பணுக்களை எனது கம்பெனி தான் உருவாக்குகிறது..... எலும்பு தேசத்தை வலிமை உடையதாக வைத்திருக்கும் 'படைத்தளபதி' நானே....! என்னை தெய்வத்தோடு ஒப்பிட்டாலும் தவறேதும் இல்லை ஆம்....! "மனித உயிர்கள்" உருவாவது என்னால் தானே...!!! - கவிதை ரசிகன் குமரேசன் #💖நீயே என் சந்தோசம்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓 #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #🧓பிரதமர் மோடி
குமரேசன் கவிதை ரசிகன்
669 views
1 days ago
🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸 *பனித்துளிகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸 பூக்கள் இரவில் கொண்ட புணர்ச்சியினால் உருவான வேர்வைத் துளிகளோ ? மொட்டுக்கள் பெரிய மனுஷியானதாள் குளித்திருக்கிறதோ....? அட ! புற்களுக்கு யார் போட்டு விட்டது வைர அணிகலன்கள்......? காலை கதிரவனக்கு விருந்து வைக்க மரங்கள் இலைகளுக்குத் தண்ணீர் தெளித்து தயாராக வைத்திருக்கிறதோ ? ஓ......!!! மரங்களுக்கும் தமிழர் பண்பாடு தெரிந்திருக்கிறதோ....? கதிரவன் வந்ததும் பனித்துளிகள் காணாமல் போகிறதே கதிரவன் என்ன காவலரா ? பனித்துளி என்ன இரவு கள்வர்களா....? ஏழைகளைப் போல் இந்தத் தாவரங்களும் அல்லும்பகலும் உழைப்பதால் உண்டான வியர்வை துளிகளோ...? செடி கொடி மரங்களின் மீது இயற்கை எழுதிய "துளி"ப்பாக்களா....? ஒரு துளியில் பெரிதாக என்ன செய்து விட முடியும் என்று கேட்டு விடாதீர்கள்.... இந்த பிரபஞ்சமே ! ஒரு துளி பனித்துளிக்குள் அடங்கி விடுகிறது.... நிறையப் பூக்களை பார்த்திருக்கிறேன் அட ! இது என்ன நீர் பூக்களா......? சிற்பிக்குள் முத்துகள் உருவாகும் என்பார்கள் பிறகு எப்படி புற்களில் உருவாகிறது...? விளம்பரத்தை பார்த்து இந்த பூக்களும் புற்களும் முகக்கிரீம் வாங்கி போட்டது வந்த முகக்கொப்பளங்களோ ? பனித்துளிகள் மரம் செடி கொடிகளின் கண்ணீர் துளிகளோ..? - *கவிதை ரசிகன்* 🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷 #💖நீயே என் சந்தோசம்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓 #💞Feel My Love💖 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
See other profiles for amazing content