#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
நீண்ட இடைவெளிக்குப் பின்
எதிர்பாரா சந்திப்பு
திகைப்பும் சந்தேகமும் ஒரு சேர
நிஜம் எதிரில் என் நெஞ்சை
நிரப்பியது
இயல்புக்கு திரும்ப சில நொடிகள்
எடுத்தது
பட்டென்று சுதாரித்து அவசரத்தை துணைக்கழைத்து
நல விசாரிப்பு சம்பிரதாய அழைப்பு
என
முற்றுப்புள்ளியோடு நீ விடைபெற
எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியோடு
அன்றில்லா நிதானத்தோடு நான்
நகர மீண்டும்
மனதிற்குள் பெரிய வெற்றிடம் சில நேரங்களில் இப்படி
ஒரு சோதனை எதற்கென்றே புரிவதில்லை