Follow
Sri Sudar
@2978773636
177
Posts
345
Followers
Sri Sudar
478 views
1 days ago
https://astrology-tamilcube-com.translate.goog/parrot-astrology/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc #⚡ஷேர்சாட் அப்டேட்
Sri Sudar
859 views
23 days ago
Take a look at this Safar Enterprises Kongi Rabbit 12 L No Backpack on Flipkart https://www.shopsy.in/safar-enterprises-kongi-rabbit-12-l-no-backpack/p/itm138b1a2fe7b6f?pid=XSPGKX62HE6QGQM9&marketplace=FLIPKART&cmpid=product.share.pp&_refId=PP.fec940b5-b1f0-4ceb-8e46-449a4380d8f8.XSPGKX62HE6QGQM9&_appId=in.mohalla.sharechat #⚡ஷேர்சாட் அப்டேட்
Sri Sudar
661 views
1 months ago
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/gNlgTx #📺வைரல் தகவல்🤩 ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal சிறப்பு கட்டுரைகள் கோடி நன்மை தரும் குலதெய்வ வழிபாடு.. வீட்டிலிருந்தபடி எப்படி குலதெய்வ வழிபாடு செய்யலாம்?.. ✨நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  ✨அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் 'குலதெய்வங்கள்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வத்தின் சிறப்பு : ✨குலதெய்வங்கள் பொதுவாக காடு, மலை, வயல் மற்றும் சாலை வசதி இல்லாத இடங்களில் தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகை தெய்வங்களின் வழிபாட்டு இடம் இருக்கும். ✨மேலும் குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோயில் அமைப்பாக தான் இருக்கும். இவ்வகை கோயில்கள் முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும். ✨இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோயில்களில் இடம் பெற்றிருக்கும். குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்? ✨ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும். ✨ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ✨ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும், குலதெய்வ வழிபாடு கோடி நன்மை தரும் என்றும் சொல்லப்படுகிறது. ✨பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். ✨உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம். வீட்டிலிருந்தபடி எப்படி குலதெய்வ வழிபாடு செய்யலாம்? ✨நமக்கு வரக்கூடிய தீர்க்கமுடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். ✨அப்படி கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்யலாம்? ✨குலதெய்வத்திற்கு உகந்த நாளை இந்த பூஜைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். ✨பூஜையை காலை 6 மணி அளவில் செய்வது சிறப்பாக இருக்கும். அதிகாலை வேளையிலேயே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை, குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதாக நினைத்து மனதார, மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். ✨பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என்று மண் அகல் விளக்கில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால் குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நைவேத்தியமாக வைக்கலாம். ✨ஒரு மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை வைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாக இந்த காணிக்கையை வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை அமையவில்லை, எப்போது குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அந்த சமயம் இந்த காணிக்கையை உண்டியலில் சேர்த்து விடுகிறோம்' என்று சொல்லி அந்த காணிக்கையை முடிந்து பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். ✨இப்படி வருடம்தோறும் உங்களுடைய குலதெய்வத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்களோ, அதை மஞ்சள் துணியில் வைத்து, குலதெய்வத்திற்கு நீங்கள் செய்யும் வேண்டுதல்களை செய்துவிட்டதாக நினைத்து, மஞ்சள் துணியை முடிந்து பூஜை அறையில் வைத்தால் போதும் அந்த வேண்டுதல் குலதெய்வத்தை சேர்ந்துவிடும். ✨அடுத்தமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது, இந்த மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்திருக்கும் காணிக்கையை குலதெய்வ கோயிலில் சேர்த்து விட வேண்டும். Follow Us :  தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/gNlgTx ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
Sri Sudar
570 views
1 months ago
சமையல் எண்ணெய் பற்றி அறிய வேண்டியவை !!!  🌻 நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. எந்த எண்ணெய்யில் கொலஸ்ட்ரால் குறைவு, எவ்வளவு பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 🌻 நம்முடைய இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் வகையில் டுனுடு என்னும் கெட்ட கொழுப்புசத்து குறைவாகவும் ர்னுடு என்னும் நல்ல கொழுப்புசத்து அதிகமாகவும் இருக்க வேண்டும். இதுவே ஆரோக்கியமான உடலுக்கு சிறந்தது. இந்த இரத்த கொலஸ்டிரால் வகைகள் அனைத்தும் எண்ணெய் மற்றும் எண்ணெய் மூலம் சமைக்கப்படும் உணவிலிருந்தே அதிகமாகப் பெறப்படுகின்றது. 🌻 பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய்களை அப்படியே நீண்ட நாட்களுக்கு வைக்காமல் உடனே எவர் சில்வர் பாத்திரத்தில் மாற்றி வைப்பது நல்லது. பிளாஸ்டிக் கேன்களில் அப்படியே வைத்து பயன்படுத்த கூடாது. டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகள் எந்த விதமான எண்ணெய்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம். 🌻 நீரிழிவு நோயாளிகளுக்கு எண்ணெய் அதிகமாக சேர்க்கக் கூடாது. மேலும் வறுத்தது, பொரித்தது போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே இரத்தத்தில் தேங்கி நிற்கும் சர்க்கரையால் பாதிக்கப்பட்ட இரத்தக்குழாயில், கொழுப்பும் சேர்ந்து விட்டால் அது இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். 🌻 இந்த அதிகப்படி கொழுப்பை உண்டாக்குவது எண்ணெய் தான். எந்த எண்ணெய்யை உபயோகிப்பது என்பதைவிட எவ்வளவு எண்ணெய்யை உபயோகிக்கிறோம் என்பது தான் முக்கியம். 🌻 கொழுப்புச்சத்துகள் எண்ணெய்யில் நிறைந்திருப்பதால் எண்ணெய்யை ஒதுக்க வேண்டாம். உடலுக்கும் ஓரளவு கொழுப்பு சத்து தேவை. தினசரி உணவிலிருந்து உட்கொள்ளும் அளவில் 250 மி.கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். 🌻 கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் முட்டைக் கரு, மாமிசங்கள், வெண்ணெய், நெய் போன்றவற்றை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு 4 லிருந்து 6 தேக்கரண்டி அளவு எண்ணெய் தினசரி போதுமானது. 🌻 உடல் பருமன் அதிகமாக இருந்தால் 3 தேக்கரண்டி எண்ணெய் போதுமான அளவு. தோசையை விட இட்லி சிறந்த உணவு. பு+ரியை விட சப்பாத்தி நல்லது. காய்கறிகளில் வேக வைத்து சமைப்பது சிறந்தது. ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. 🌻 மேலும், வெண்ணெய், நெய் இவை பு+ரித கொழுப்புகள் (ளுயவரசயவநன கயவள). எனவே இவற்றை குறைக்க வேண்டும். ஹைட்ரஜன் செறிந்த வனஸ்பதி போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. 🌻 சன்பிளவர் எண்ணெயில் பாலியன்சேச்சுரேட்டட் என்னும் கொழுப்பு சத்து உள்ளது. ஆனால் இவை நம் உடலில் இருக்கும் கெட்ட மற்றும் நல்ல கொலஸ்டிரால்கள் அனைத்தையும் குறைத்து விடுகின்றது. 🌻 இதை அதிகமாக உபயோகபடுத்தும் போது மூட்டு வலி, படபடப்பு, மயக்கம், போன்றவை ஏற்படுத்தக்கூடும். இவை அனைத்தும் உடலுக்கு தேவையான கொழுப்புசத்தினை கிடைக்க விடாமல் செய்வதால் ஏற்படுகிறது. எனவே, இதனை பயன்படுத்தும் அளவு முறை மிதமாக இருக்க வேண்டும். #📺வைரல் தகவல்🤩