நான் யாருக்கும் அட்வைஸ் செய்வதுமில்லை.....
நான் யாருக்காவது அட்வைஸ் செய்தால் அவர்கள் கேட்கப் போவதும் இல்லை.....
நாம சொல்லி யாரும் கேட்க போறாங்க......
நானே காய்ச்சலில் ஒரு வாரமா படுக்கையில தலைவலி உடம்பு முடியாம படுத்துட்டு இருந்தேன்....
நான்கு நாட்களாக மொபைல் பக்கமே போகவில்லை அந்த அளவிற்கு எனக்கு முடியவில்லை.....
நேற்று ஈவினிங் தான் நான் மொபைல் எடுத்துப் பார்த்தேன்....
பகீரென்று இருந்தது எனக்கு........
இங்கேயே ஏகப்பட்ட பிரளயம் எத்தனை உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது எத்தனை வீடுகள் எத்தனை வாயில்லா ஜீவன்கள் எத்தனை பேர் காணாமல் போயினர் இன்னும் எத்தனை பேர் எங்கெங்கு சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை இதற்கு நடுவில் இந்த காட்டாற்று வெள்ளத்திற்கு நடுவே
இந்த ஆள் இங்கு பயணம் செய்திருக்கிறார்..,..
போதாக்குறைக்கு அந்தப் பயணத்தின் பதிவில் ஓரிரு வரிகள் அது அதைவிட பதபதைக்கும் வரிகள்.....
என்னடா இந்த ஆளுக்கு இத்தனை நாள் இங்கு வர தோணவில்லையோ இந்த பேய் மாறி மழையிலும் காட்டாற்று வெள்ளத்திற்கும் நடுவில் தான் இந்த ஆளுக்கு பயணம் செய்யத் தோணுதோ ஏன் தான் இந்த ஆளுக்கு இப்படி புத்தி போகுதோ என்று கோபம் வருகிறது .......
இங்கேயே சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் நிறுவனங்கள் அலுவலகங்கள் என விடுமுறை விடுத்து அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.......
இந்த நேரத்தில்தான் இந்த ஆளுக்கு இங்கு பயணம் செய்யத் தோன்றியதோ.......???
#📝என் இதய உணர்வுகள்