முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள் முதலமைச்சர் விஜய் அவர்களே! ❤️
உங்களிடம் நான் வைக்கும் 15 அடிப்படை கோரிக்கைள் இதோ:
1. இலவசங்கள் முக்கியமல்ல - நீங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இலவசங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதுக்குப் பதில் மக்கள் கௌரவமாக உழைத்துச் சம்பாதிக்கும் வழிகளை உருவாக்குங்க. தமக்குத் தேவையானவற்றைத் தாமே வாங்கிக்கொள்ளும் பொருளாதாரச் சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்க.
2 த.வெ.க (TVK) என்ற பெயரைச் சொல்லியோ, கட்சிக் கொடியைக் காட்டியோ எவன் தப்பு பண்ணினாலும், அது யாராக இருந்தாலும் சரி... தயவு தாட்சண்யமே பார்க்காதீங்க. உடனடியா நடவடிக்கை எடுங்க. Non-Bailable சட்டத்துல தூக்கி உள்ள போடுங்க. கட்சிக்காரன் தப்பு பண்ணினா தண்டனை இன்னும் அதிகமா இருக்கட்டும்.
3. மது ஒழிப்பு - முதல் வேலையாகத் தமிழ் நாட்டுல உள்ள அத்தனை டாஸ்மாக்குகளையும் இழுத்து மூடி மது இல்லாத தமிழகத்தை உருவாக்குங்க.
4. போதை இல்லா தமிழகம் - எல் சால்வடார் ஜனாதிபதி Nayib Bukele பாணியில், ஒரு மிகச்சிறந்த Narcotics தனிப்படையை உருவாக்கி, தமிழகத்தில் ஒரு மில்லி கிராம் போதைப்பொருள் கூட இல்லாதவாறு வேரறுக்க வேண்டும். விற்பவன் எவனா இருந்தாலும் சரி, அவனுக்கு மரண பயத்தை காட்டுங்க.
5. ரவுடிசம் ஒழிப்பு - தமிழ்நாட்டில் ரவுடிசம் என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு அத்தனை கடுமையா இருக்கனும்.
6. குழந்தைகள் பாதுகாப்பு - குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் 'Zero Tolerance' கொள்கை இருக்க வேண்டும். குற்றம் செய்தவன் உடனடியாக தூக்கிலிடப்படவேண்டும்.
7. பெண்கள் பாதுகாப்பு - பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை எக்காலத்திலும் சிறையை விட்டு வெளியே வர முடியாதபடி non bailable act’இல் மிகக் கடுமையாக தண்டியுங்க.
8. கல்வி மற்றும் மருத்துவம் - புர்க்கினா பாசோ நாட்டின் அதிபர் இப்ராகிம் ட்ரொரே பாணியில், நம்மிடம் உள்ள வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி உயர்தர அரசுப் பள்ளிகளையும், தரமான அரசு மருத்துவமனைகளையும் அமையுங்க. காசு உள்ளவனும் இல்லாதவனும் ஒரே தரத்தில் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சையைப் பெறும் நிலையை உருவாக்குங்க.
9. நிர்வாகச் சீரமைப்பு - கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிரா பேசிக் கைதானவர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்து, உண்மையான குற்றவாளிகளைத் தூக்கி உள்ளே போடுங்க.
10. DMK அரசு வாங்கின கடனுக்கு ஒரு SIT அமைத்து விசாரணை நடத்துங்க. திமுக ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அதிகாரிங்க கிட்டயும் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்குக் கேளுங்க. ஒரு ரூபாய் கம்மியானாலும், அது எவனா இருந்தாலும் புடிச்சு ஜெயில்ல போடுங்க.
11. டெண்டர் முறைகேடுகள்- முந்தைய ஆட்சியில் திமுக ஜால்ரா கும்பலுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களை ரத்து செய்து, தகுதியுள்ள உண்மையான நேர்மையான நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கொடுங்க. அது தொடர்பான முறைகேடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க.
12. காவல்துறை மற்றும் உளவுத்துறை - போலீஸ் மற்றும் உளவுத்துறையை உங்கள் நேரடிப் கண்காணிப்பில் வைங்க. அவர்கள் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்யுங்க.
13. சைபர் கிரைம் அதிரடி - சைபர் கிரைம் புகார்களை அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்தத் துறையைப் பலப்படுத்துங்க. சமூக ஊடகங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு அட்டூழியம் செய்யும் கும்பல் மொத்தமாக முடக்கப்பட வேண்டும்.
14. தூய்மையான தமிழகம் - சிங்கப்பூர் பாணியில் அதிரடிச் சட்டங்களைக் கொண்டு வந்து, பொது இடங்களில் குப்பை போடுபவர்கள் மீது பாரபட்சமில்லாமல் அபராதம் விதித்து தமிழ் நாட்டை சுத்தமாக்குங்க.
15. ஆன்மீகம் & பண்பாடு - பழமையான கோவில்களைப் புதுப்பித்து, சிதிலமடைந்த நம் அடையாளங்களை மீட்டெடுங்க. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை ஒழித்து, சாமானிய மக்களுக்கும் எளிமையான தரிசனமும், தரமான அடிப்படை வசதிகளும் (குடிநீர், கழிப்பறை வசதிகள்) தடையின்றி கிடைக்க வழிவகை செய்யுங்க. அதேபோல் பல வருட பழமையான தேவாலயங்கள் மற்றும் மசூதிகளையும் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுங்க.
இது எல்லாமே நேற்று இரவு நான் எழுதியது. இன்று நீங்க முதலமைச்சரா பதவி ஏற்றதும் இதை பகிர காத்திருந்தேன். ஆனா நான் எழுதியதில் முக்கியமான மூனு விஷயங்களை ஆல்ரெடி நீங்க இன்னிக்கே உறுதி கொடுத்துட்டீங்க. நன்றி.
“இங்க ஒரே ஒரு Power Centre.. நான் மட்டும் தான் இங்க ஒரே Power Centre” அப்படீனு நீங்க சொன்னது தான் செம்ம மாஸ். கடைசி வரை அது அப்படியே தொடரட்டும்.
பல சவால்களும் சரித்திரங்களும் நிறைந்த ஐந்தாண்டுகளாக எதிர்வரும் 5 வருடங்கள் இருக்கப்போகிறது.
இதுவரை நீங்கள் காட்டிய அதே அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடனும், எதற்கும் அஞ்சாத துணிச்சலுடனும், மனவலிமையுடனும் இந்த பயணத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நீங்க ஒரு மாற்றத்திற்காக வந்தவர். அந்த மாற்றம் வெறும் ஆட்சியில் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
உங்களின் ஒவ்வொரு கையெழுத்தும் தமிழகத்தின் தலைவிதியைச் சிறப்பான வழியில் மாற்றட்டும்.
உங்கள் மேல் நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை, உங்கள் பொற்கால ஆட்சி மெய்ப்பிக்கட்டும்!
உங்கள் நல்ல கனவுகள் யாவும் நனவாகட்டும். அதற்கு அந்த முருகன் துணை நிற்கட்டும்.
வாழ்த்துகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களே!💐💐💐💐💐💐💐 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥#🙏நமது கலாச்சாரம்#💚I Love தமிழ்நாடு#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃