விடிவதற்கு முன்பாகவே முதலாவதாக வந்த ஆவின் பால் டெலிவரி செய்ய வரும் நபரின் டிவிஎஸ் சூப்பர் எக்ஸல், ஆங்கில இந்து நாளேடு கொண்டு வரும் ஊழியனின் பஜாஜ் பல்சர், ஒரு காபியை குடித்துவிட்டு தெரு முனைக்கு பொடி நடையாக சென்ற போது மாநகர பேருந்து வர, நம்மை கடந்து போக எதிர் திசையில் திருவள்ளூரில் இருந்த விவசாயி கொண்டு வந்த அரைக்கீரை, வாங்கியபடி வீட்டில் தந்துவிட்டு, பூங்காவுக்கு சென்று சற்று முனைப்போடு நடைப்பயணம் செய்துவிட்டு, அவசர அவசரமாக குளித்து, உணவு உண்டு வாடகை கார் பிடித்து இரண்டு மணிநேர பயணத்தில் பல்வேறு பாலங்களை கடந்து, டைடல் பூங்கா தாண்டி பெருங்குடியில் அமைந்துள்ள வாடிக்கையாளரின் பத்துமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள அலுவலகத்துக்குள் சென்று பணியை 25 நிமிடங்களில் முடித்தபடி அடுத்த வேலையாக மீண்டும் கார் பிடித்து அடையாறு வழியே, அம்பேத்கர் மணிமண்டபம் கடந்து சென்று புனித ஜார்ஜ கோட்டையை கடந்து பாரிமுனை சென்று ஒரு ஆவணத்தை தந்துவிட்டு அந்த வேலையையும் முடித்தபடி உயர்நீதிமன்ற மெட்ரோ பிடித்து அண்ணாநகர் கோபுரம் மெட்ரோவில் இறங்கி அருகில் உள்ள உணவகத்தில் பகல் உணவு எடுத்துக்கொண்டு, அடுத்த பயணமாக ஆட்டோ பிடித்து பாடி மேம்பாலம் கடந்து அம்பத்தூர் சென்று மற்றும் ஒரு அலுவலகம் சென்று ஒரு மணிநேரம் காத்திருப்புக்கு பின் ஒரு மணிநேர வேலைகளை முடித்துக் கொண்டு அருகில் உள்ள மின்சார ரயில் நிலையம் நோக்கி அசதியில் நடக்கமுடியாமல் ஆட்டோ பிடித்து ரயிலடி வந்து மின்சார வண்டியில் மாலையில் வீடு திரும்பினேன்.
ஆம் இந்த நாளில் தலைவர் கலைஞர் ஆட்சியில் உருவான சிட்கோ, சிப்காட் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்ட வாகன உதிரி பாகங்கள், தனியாரிடம் இருந்து கையகப்படுத்தி அரசுடமையாக்கப்பட்ட பேருந்து, உழவர் சந்தையில் இருந்து வந்த கீரை, பூங்கா, மேம்பாலம், டைடல் பூங்கா, சாலைக் கட்டுமானங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, மெட்ரோ, இந்யியாவின் மிகச்சிறந்த திட்டவடிவாக்கம் பெற்ற அண்ணாநகர், கோபுரம், பாடி மேம்பாலம் என ஒவ்வொரு நாளும் கலைஞர் அரசு தந்த திட்டங்களால், சட்டங்களால், அடிப்படை வசதிகளால், உட்கட்டமைப்புகளால், போக்குவரத்து, கல்வி, மருத்துவ கல்லூரிகள், மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் போன்ற பல பல வசதிகள் மூலமாக நாம் விரும்புகிறமோ இல்லையோ, நம்முடைய அன்றாட வாழ்வில் அவர் நம்மோடு பயணிக்கிறார். எல்லா நாட்களிலும் அவரைப் பற்றிய நினைவுகள் வரும் வராமலும் இருக்கும். அவருடைய செயல்பாடுகள் காற்று, வானம், நிலம், தண்ணீர், மழை, நெருப்பு போன்றவை புவியில் வியாபித்து உள்ளது போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் 80 ஆண்டுகால பொதுவாழ்வில் நம்மோடு இயங்கி, மக்களுக்காக அளித்ததன் மூலமாக வியாபித்துள்ளார்
என்றும் எங்களுடைய நினைவில் வாழும் தலைவர் கலைஞர்.
"ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பது அவர் இறந்துபோன நாளில் கணக்கிடப்படுவதில்லை; அவர் வாழ்ந்த காலத்தில் செய்த செயல்கள் மற்றும் சாதனைகளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது"-
முத்தமிழ்அறிஞர் கலைஞர்.
#தெரிந்துகொள்வோம் ##💪தி.மு.க கலைஞர் மு கருணாநிதி அவர்கள்
https://www.facebook.com/share/1HFim4as2R/