Follow
Barakath Ali
@653257576
1,793
Posts
9,849
Followers
Barakath Ali
543 views
2 days ago
பழைய பேப்பர்! ’’2020-க்கு முன்பு போதைப் பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை. போதைப் பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான்’’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பேசியிருக்கிறார். விஜயபாஸ்கரை தவெகவில் சேர்த்த நிலையில் அவரிடம் கேட்டிருந்தாலே போதை பொருள் தகவலை சொல்லியிருப்பார். குட்கா ஊழல் வழக்கில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் 2018 செப்டம்பர் 5-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினார்கள். அதெல்லாம் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியானது. முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தா நாட்டுல என்ன நடக்குதுன்னு ஆதவ் அர்ஜுனாவுக்கு தெரிஞ்சிருக்கும்! அரைவேக்காடாக இருந்தால் இப்படிதான் சட்டமன்றத்திலேயே உளறி கொட்டுவார். அந்த குட்கா விஜயபாஸ்கரை சேர்த்து கொண்டு போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பீங்க ஆதவ் அர்ஜுனா? #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழக வெற்றி கழகம் (TVK) #விஜய்
Barakath Ali
786 views
3 days ago
பழைய பேப்பர்! இந்துஸ்தான் கல்லூரிக்கு 2 முறை போன விஜய்! கோவை இந்துஸ்தான் கல்லூரிக்கும் விஜயின் சினிமா பயனத்திற்கும் பந்தம் உண்டு. இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர் குழுவால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து அமுதன் கல்லூரி நிர்வாகத்திடமும், போலீஸிடம் புகார் அளித்தற்காக கொல்லப்பட்டார் என அமுதன் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தவெக அரசோ, மாணவர்கள் கோஷ்டி மோதல் என சொல்கிறது. அந்த இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான இன்னொரு கல்லூரியான இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்தான் விஜயின் 2 சினிமா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 2011 டிசம்பர் 23-ஆம் தேதி அந்த கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் வான்வழியாக விஜய் மேடைக்கு வந்தார். நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் அந்த விழாவில் பங்கேற்றது. அடுத்ததாக இதே கல்லூரியில்தான் 2014 அக்டோபர் 27 அன்று விஜய்யின் 'கத்தி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் பலரும் மேடையில் பங்கேற்றனர். விஜய், விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்து விழாவில் நெகிழ்ச்சியாகப் பேசினார். இதன் காரணமாகதான் அமுதன் கொலையை அரசு மூடி மறைக்கிறது என குற்றச்சாட்டு படிக்கப்படுகின்றன. விஜய் தனது திரைப்படங்களின் ப்ரோமோஷன் மற்றும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக உதவிய இந்துஸ்தான் கல்லூரியை காப்பாற்ற் அரசு முயல்கிறதா? என்ற கேள்விகள் எழுப்பபடுகின்றன. #TVKVijay #tvk #kovai #oldnewspaper #பழையபேப்பர் #politicalpodimas #journalistbarakathali #விஜய் #தமிழக வெற்றி கழகம் (TVK) #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல்
Barakath Ali
12.8K views
3 days ago
முதல்வர் விஜய் சட்டசபைக்குள் நுழையும் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என சொல்லியிருக்கிறார் அமைச்சர் ரமேஷ். இப்படியொரு நிகழ்வு நடப்பதை சட்டமன்ற நேரலையில் கூட காட்டவில்லை. அந்த அளவுக்கு விஜயின் மானத்தை காத்தார்கள். ஆனால், அமைச்சர் ரமேஷ் அதனை எக்ஸ்போஸ் செய்துவிட்டார். மரியாதை கொடுங்க என கெஞ்சிக் கொண்டிருக்கிறார். பாவம்டா முதல்வர்! #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழக வெற்றி கழகம் (TVK) #விஜய்
Barakath Ali
815 views
4 days ago
விஜய் சொன்ன பொய்கள்! விலையில்லாமல் வாசிக்கலாம்! விஜய் ஆட்சிக்கு வந்து 100-ஆவது நாளை கொண்டாடும் இந்த தருணத்தில் விஜய் சொன்ன பொய்கள் புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறேன். பொய் சொல்வதில் மோடிக்கு கொஞ்சமும் சளைத்தவன் அல்ல நான் என நிரூபித்திருக்கிறார் முதல்வர் விஜய். ஆட்சிக்கு வருவதற்கு வாக்குறுதிகள் மட்டுமல்ல, பொய்களும் மூலதனம் என்கிற அரசியல் அரிச்சுவடியை அறிந்து வைத்திருக்கிறார் விஜய். ‘’ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய் என்பதே திமுக தலைமையின் அறமற்ற அரசியல். பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் திமுக. தலைமையின் பொய்முக வரலாறு அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது’’ என 2025 ஏப்ரல் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருந்தார் விஜய். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர் முன்மொழிந்த இந்த வாக்கியங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே வழிமொழிந்து நடப்பதுதான் விந்தை! விஜய் மட்டுமல்ல, அவருடைய கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அதே பொய் பாதையில்தான் பயணிக்கிறார்கள். விஜய் சொன்ன 17 பொய்களும் தவெக நிர்வாகிகளும் அமைச்சர்களும் சொன்ன 12 பொய்களும் என 29 பொய்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்றும் நாளையும் மட்டும் இந்த புத்தகத்தை விலையில்லாமல் அமேசான் கிண்டிலில் வாசிக்கலாம். லிங்க்: https://surl.li/qcjwpq #விஜய் #தமிழக வெற்றி கழகம் (TVK) #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #tvk #tvkvijay
Barakath Ali
599 views
7 days ago
இந்த டெண்டர் எதற்குத் தெரியுமா? காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆட்சி செய்த முதல்வர் அறை விஜய்க்கு போதவில்லையாம்; பிடிக்கவில்லையாம்; வாஸ்துவாம் என காரணங்களை அடுக்கிறார்கள். அதனால் முதல்வர் அறையை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற சுமார் 5 கோடி ரூபாய்க்கு இன்று நாளிதழ்களில் டெண்டர் விட்டிருக்கிறார்கள். #🤭அரசியல் மீம்ஸ் #தமிழக வெற்றி கழகம் (TVK) #விஜய் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️
Barakath Ali
572 views
8 days ago
பழைய பேப்பர்! ஷோபாவும் நானும் - பாலுமகேந்திரா! ’ஷோபாவும் நானும்’ என்ற தலைப்பில் 'குமுதம்' வார இதழில் ஒரு தொடரை பாலுமகேந்திரா எழுதினார். 1980-ல் பிரபல நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பத்திரிகைகளில் பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவும், தங்களுக்குள் இருந்த உறவை விளக்கும் வகையிலும் பாலுமகேந்திரா அந்த தொடரை எழுதினார். ஷோபாவுடனான பாலுமகேந்திரா உறவும் அதன் பிறகு நடந்த திருமணமும் அதனைத் தொடர்ந்து ஷோபாவின் தற்கொலையும் அன்றைக்கு பேசுபொருளானது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷோபா தற்கொலை செய்துகொண்டபோது, அவரது மரணம் குறித்துப் பலத்த சர்ச்சைகள் எழுந்தன. அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் உட்படப் பலரும் பாலுமகேந்திரா மீது சந்தேகம் கொண்டனர். இந்தச் சூழ்நிலையில்தான் பாலுமகேந்திராவின் தரப்பு நியாயத்தையும் அவர்களின் காதலையும் உலகிற்கு உரக்கச் சொன்னது ’ஷோபாவும் நானும்’ தொடர். ஷோபாவுக்கும் தனக்குமான கலை சார்ந்த மற்றும் தனிப்பட்ட ஆத்மார்த்தமான உறவை உருக்கமாக விவரித்திருந்தார் பாலுமகேந்திரா.அழியாத கோலங்கள், மூடுபனி போன்ற படங்களின் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட நெருக்கத்தையும் இருவருக்குமான காதல் மற்றும் திருமணம் எப்படி நிகழ்ந்தது? என்பதையும் தொடரில் பகிர்ந்துகொண்டார். வதந்திகளால், தான் அடைந்த மனவேதனையையும் ஷோபாவின் இழப்பு தனக்கு ஏற்படுத்திய பெரும் பாதிப்யையும் பதிவு செய்திருந்தார். பாலுமகேந்திரா மீது பத்திரிகைகளும் பொதுமக்களும் வைத்த கடுமையான விமர்சனங்களையும் கொடூரமான வதந்திகளையும் ’ஷோபாவும் நானும்' தொடர் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தின. அன்றைய குமுதம் வாசகர்களிடையே தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாலுமகேந்திரா மீது ஒரு பரவலான அனுதாப அலையையும் உருவாக்கியது. இது வெறும் கட்டுரைத் தொடராக இல்லாமல், ஒரு கலைஞன் தன் காதலிக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலியாகவும், சுய வாக்குமூலமாகவும் பார்க்கப்பட்டது. ஷோபாவின் தற்கொலைக்கு பிறகு அவருடைய தயார் பிரேமாவும் மகள் இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். #🥰80s-90s கதாநாயகிகள் #🥰80s-90s கதாநாயகிகள் #🎬 சினிமா #🧑எனக்கு பிடித்த நடிகர் #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔