Follow
Barakath Ali
@653257576
1,840
Posts
9,811
Followers
Barakath Ali
542 views
8 hours ago
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க எம்.பி-கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது விஜய் அரசு. இதற்குப் பதிலாக, காவிரி, மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த இடத்தில் நாம் ஃபிளாஷ்பேக்கிற்கு போக வேண்டும். ஸ்டாலின் ஆட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முறைக்கு (SIR) எதிராக 2025 நவம்பரில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தவெகவிற்கும் திமுக அழைப்பு விடுத்தது. ஆனால், கூட்டத்தில் பங்கேற்காமல் தவெக புறக்கணித்தது. அன்றைக்கு அதுபற்றி அறிக்கை விட்ட விஜய், ’தேர்தல் நெருக்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக அரசு மீதான ஊழல் புகார்களில் இருந்து மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியல் ஆகும்’’ என்றார். திசைதிருப்பும் அரசியல் (Diversion Tactics), சுய அரசியல் லாபம் என அன்றைக்கு சொன்ன தவெகதான், அதே ஆயுதத்தை இப்போது எடுத்திருக்கிறது. காவிரி, மேகதாது விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகள் பேக்ஃபயர் ஆனது. கர்நாடகாவிற்கு சென்று விஜய் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றதும் கடைசியில் விஜய் வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் சொன்னாதும். குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காததும் விஜய் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. விவசாய சங்கங்களை சந்திக்கவில்லை. காவிரி, மேகதாதுவிற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. இப்படியான சிக்கல்களில் இருந்து திசை திருப்பும் வேலையாகதான் தொகுதி மறுவரையறைக்காக எம்.பி-கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள்.SIR-ல் Diversion Tactics-ஐ சொன்ன விஜயே Diversion Tactics கையில் எடுத்திருக்கிறார். #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #விஜய் #🚨கற்றது அரசியல் ✌️
Barakath Ali
608 views
2 days ago
*தவெகவின் வெற்றி ஸ்டிக்கர்!* *சூறாவளி கிளம்பியதே…* *சிவதாண்டவம் தொடங்கியதே...!* #தமிழக வெற்றி கழகம் (TVK) #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
Barakath Ali
663 views
2 days ago
நிர்மல்குமார் நீங்க எல்லாம் பேசலாமா? ஸ்டார்ட் மியூசிக்! #tvk #tvkvijay #nirmalkumar #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #தமிழக வெற்றி கழகம் (TVK)
Barakath Ali
548 views
4 days ago
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்த தினம் இன்று! 1990 ஆகஸ்ட் 3-ஆம் தேதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அருகிலுள்ள காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான ஆயுதத் தாக்குதலை மறந்துவிட முடியாது. காத்தான்குடியில் உள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுசைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது 30 பேர் கொண்ட ஆயுதமேந்திய குழு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து, இயந்திரத் துப்பாக்கிகளாலும் கைக்குண்டுகளாலும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 147 முஸ்லிம்கள் துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். 70- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே மேற்கொண்டதாக இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டினர். புலிகள் இயக்கம் இதனை மறுத்தாலும் பின்னர் அதன் அரசியல் பிரிவுத் தலைவர்கள் ’தமிழ்-முஸ்லிம் உறவில் ஏற்பட்ட பெரிய தவறு’’ என இந்தப் படுகொலையைக் குறிப்பிட்டனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது உலகிற்குத் தெரிந்திருந்தாலும், உள்நாட்டுப் போர்ச் சூழல் மற்றும் அரசியல் காரணங்களால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவே இல்லை. 35 ஆண்டுகளைக் கடந்தும், இந்தக் கொடூரக் குற்றத்திற்கு எந்தவொரு தரப்பும் சட்டப்பூர்வமாகப் பொறுப்பாக்கப்படவோ முறையான விசாரணைகள் நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதுதான் பெரும் துயரம். பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதிமன்றங்களையோ அல்லது சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளையோ கோரி வந்தாலும், அதற்கான முறையான விசாரணைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படவில்லை. காத்தான்குடி படுகொலைகளின் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காத்தான்குடியில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் இன்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டு வடுக்களுடனேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அந்தத் துயரமான வரலாற்றையும், உயிரிழந்தவர்களின் நினைவையும் அடுத்த தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த வடுக்களை அப்படியே வைத்துள்ளனர். பள்ளிவாசலின் உட்புறச் சுவர்கள், தூண்கள் மற்றும் ஜன்னல் நிலைகளில் பாய்ந்த தோட்டாக்கள் ஏற்படுத்திய துளைகள் இன்றும் அப்படியே இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் பெயர்கள் அடங்கிய பெரிய நினைவுப் பலகை ஒன்று பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #📺அரசியல் 360🔴 ##🗞️வரலாற்றில் இதே நாள் 😲