பழைய பேப்பர்!
இந்துஸ்தான் கல்லூரிக்கு 2 முறை போன விஜய்!
கோவை இந்துஸ்தான் கல்லூரிக்கும் விஜயின் சினிமா பயனத்திற்கும் பந்தம் உண்டு. இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர் குழுவால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து அமுதன் கல்லூரி நிர்வாகத்திடமும், போலீஸிடம் புகார் அளித்தற்காக கொல்லப்பட்டார் என அமுதன் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தவெக அரசோ, மாணவர்கள் கோஷ்டி மோதல் என சொல்கிறது.
அந்த இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான இன்னொரு கல்லூரியான இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்தான் விஜயின் 2 சினிமா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 2011 டிசம்பர் 23-ஆம் தேதி அந்த கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் வான்வழியாக விஜய் மேடைக்கு வந்தார். நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் அந்த விழாவில் பங்கேற்றது.
அடுத்ததாக இதே கல்லூரியில்தான் 2014 அக்டோபர் 27 அன்று விஜய்யின் 'கத்தி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் பலரும் மேடையில் பங்கேற்றனர். விஜய், விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்து விழாவில் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
இதன் காரணமாகதான் அமுதன் கொலையை அரசு மூடி மறைக்கிறது என குற்றச்சாட்டு படிக்கப்படுகின்றன. விஜய் தனது திரைப்படங்களின் ப்ரோமோஷன் மற்றும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக உதவிய இந்துஸ்தான் கல்லூரியை காப்பாற்ற் அரசு முயல்கிறதா? என்ற கேள்விகள் எழுப்பபடுகின்றன.
#TVKVijay #tvk #kovai #oldnewspaper #பழையபேப்பர் #politicalpodimas #journalistbarakathali
#விஜய் #தமிழக வெற்றி கழகம் (TVK) #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல்