தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க எம்.பி-கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது விஜய் அரசு. இதற்குப் பதிலாக, காவிரி, மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்திருக்கிறது.
இந்த இடத்தில் நாம் ஃபிளாஷ்பேக்கிற்கு போக வேண்டும்.
ஸ்டாலின் ஆட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முறைக்கு (SIR) எதிராக 2025 நவம்பரில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தவெகவிற்கும் திமுக அழைப்பு விடுத்தது. ஆனால், கூட்டத்தில் பங்கேற்காமல் தவெக புறக்கணித்தது.
அன்றைக்கு அதுபற்றி அறிக்கை விட்ட விஜய், ’தேர்தல் நெருக்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக அரசு மீதான ஊழல் புகார்களில் இருந்து மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியல் ஆகும்’’ என்றார்.
திசைதிருப்பும் அரசியல் (Diversion Tactics), சுய அரசியல் லாபம் என அன்றைக்கு சொன்ன தவெகதான், அதே ஆயுதத்தை இப்போது எடுத்திருக்கிறது. காவிரி, மேகதாது விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகள் பேக்ஃபயர் ஆனது. கர்நாடகாவிற்கு சென்று விஜய் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றதும் கடைசியில் விஜய் வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் சொன்னாதும். குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காததும் விஜய் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. விவசாய சங்கங்களை சந்திக்கவில்லை. காவிரி, மேகதாதுவிற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. இப்படியான சிக்கல்களில் இருந்து திசை திருப்பும் வேலையாகதான் தொகுதி மறுவரையறைக்காக எம்.பி-கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள்.SIR-ல் Diversion Tactics-ஐ சொன்ன விஜயே Diversion Tactics கையில் எடுத்திருக்கிறார்.
#🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #விஜய் #🚨கற்றது அரசியல் ✌️