ஃபாலோவ்
AMANLATCHOUMY
@amanlatchoumy637
1,737
போஸ்ட்
25,155
பின்தொடர்பவர்கள்
AMANLATCHOUMY
919 காட்சிகள்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மரகத மேனி தரிசனம் தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை மிகவும் சிறப்புடையது இங்குள்ள நடராஜர் சிலையும் அதை சுற்றி நடக்கும் நிலைகளும் அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட மிகப்பெரிய பெரும் மர்மம் இங்குள்ள நடராஜர் சிலை சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது விலைமதிப்பற்ற தூய பச்சை மரகதக் கல்லால் ஆனது உலகில் இவ்வளவு பெரிய மரகத சிலை வேறு எங்கும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது மரகதம் ஒரு மென்மையான கல் இது ஒலி ஒளி மற்றும் காற்று ஆகியவற்றின் அதிர்வுகளால் விரிசல் அடைய வாய்ப்பு உள்ளது இந்த சிலையை பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும் மேளதாளங்கள் கூட இந்த சிலைக்கு அருகில் இசைக்கக் கூடாது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் அன்று காலை சந்தனம் களையப்படும் அன்று ஒரு நாள் மட்டுமே சிலையை பச்சை நிற மரகத மேனியில் தரிசிக்க முடியும் அப்போது சிலையின் மீது சூரிய ஒளி படும்போது சிலை உயிருடன் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் மிகவும் நுணுக்கமாக கவனித்தால் சிலையின் உடலில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற நரம்புகள் தெரிவதை இன்றும் காணலாம் இதுதான் இந்த சிலையின் மிகப்பெரிய அதிசயம் மரக சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும்போது அந்த புனித நீர் மற்றும் சந்தனம் பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்தாகும் குறிப்பாக சிலையில் இருந்து எடுக்கப்படும் பழைய சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது மண் தோன்றிய போது மங்கை தோன்றியது என்பது இக்கோயிலின் பழமை சொல்லும் வாசகம் அதாவது பூமி உருவான காலத்திலிருந்து இந்த தலம் இருப்பதாக நம்பப்படுகிறது ராவணன் ஈசனை வழிபட்டு தான் வரங்களைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன அறிவியல் விதிகளையும் தாண்டி நம் முன்னோர்களின் சிற்பக்கலையும் ஆன்மீக ரகசியமே இந்த மரகத நடராஜ சிலையில் ஒளிந்துள்ளது வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய அற்புதமான தரிசனம் ஈசனை வழிபடுவோம் ஈசன் அருளை பெறுவோம் #🙏ஆன்மீகம்
AMANLATCHOUMY
598 காட்சிகள்
விழுப்புரம் அருகே பிரம்மாண்டமான தட்சணாமூர்த்தி தலம் உள்ளது பொதுவாக சிவன் கோயில்களில் கருவறை சுவரில் சிறிய சிலையாக காட்சியளிக்கும் குரு பகவான் இங்கு 12 அடி உயரத்தில் கம்பீரமாக அருள் புரிகிறார் மாமல்லபுர சிற்பிகளால் செதுக்கப்பட்ட 12 அடி உயர தட்சிணாமூர்த்தி சிலை மெய்சிலிர்க்க வைக்கிறது 27 நட்சத்திரங்களை குறிக்கும் விதமாக இந்த கோயில் கருவறை கோபுரம் 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே குரு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யலாம் எங்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு கோயில் வாசலில் நாகத்துடன் கூடிய அபூர்வ விநாயகரை தரிசிக்கலாம் கல்வியில் மேன்மை அடைய திருமண தடை நீங்கி நல்ல வரன் அமைய உத்திர பாக்கியம் ஏற்பட வேலை வாய்ப்புகள் கிடைக்க ராகு கேது மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி நம்பிக்கை வெளிப்பட நன்மைகள் உண்டாகும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பையூர் கிராமம் இது தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விழுப்புரம் அல்லது திருக்கோவிலூர் நகரப் பேருந்துகள் மூலமாக வையுறை அடையலாம் திருவெண்ணைநல்லூரில் இருந்தும் எளிதாக செல்லலாம் #🙏ஆன்மீகம்
See other profiles for amazing content