பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்
பொதுவாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு விரதம் இருப்பார்கள் ஆனால் தன் பிள்ளைகளாகிய பக்தர்கள் நலனுக்காக அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி சமயபுரம் மாரியம்மன் விரதம் இருக்கும் அதிசய நிகழ்வு
மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சமயபுரத்தில் மிக விசேஷமானது அன்றுதான் உலகப் புகழ்பெற்ற பூச்சொரிதல் விழா தொடங்குகிறது பலடன் கணக்குல ஆன நறுமண மலர்கள் அம்மன் மீது சொரியப்பட்டு மாரியம்மன் மலர்க்கோலத்தில் காட்சியளிப்பாள் இந்த நறுமண திருவிழாவோடு அம்மனின் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது
உலகைக் காக்கும் அன்னை மாசி மாதம் கடைசி ஞாயிறு வரை 27 நாட்கள் வேத மேற்கொள்கிறாள் இந்த விரத காலத்தில் அன்னைக்கு நிவேதனம் செய்யப்படுவதில்லை ஒருவேளை மட்டும் அன்னைக்கு பானகங்கள் நைவேத்தியமாக படைக்கப்படும் இளநீர் மோர் பானகம் சொல்லுமாவு குளிர்ச்சி தரும் வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை மட்டுமே அன்னைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன
அம்மா பட்டினியாக இருக்கும்போது பிள்ளைகள் மட்டும் உண்பார்களா அம்மன் விரதம் இருக்கும் அதே 27 நாட்களும் சமயபுரம் சுற்றுப்புற மக்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள் அம்மனின் திருமேனியில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கவே குளிர்ச்சியான பொருள்கள் படைக்கப்படுகின்றன
இத்தல அம்மன் சோம்புகாக உருவானவர் இங்குள்ள மூலவர் திருமேனி மூலிகைகளால் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும் , சமயபுரத்தாளை வழிபடுவோம் நன்மைகளை அடைவோம்
#🙏ஆன்மீகம்