ஃபாலோவ்
AMANLATCHOUMY
@amanlatchoumy637
1,744
போஸ்ட்
25,166
பின்தொடர்பவர்கள்
AMANLATCHOUMY
638 காட்சிகள்
வாழ்வில் திரு தடைகள் திருமண தாமதம் தீராத நோய்களால் அவதிப்படுதல் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் புத்திர தோஷம் இதற்கெல்லாம் மிக சிறந்த தீர்வாக திகழ்கிறது கும்பகோணம் அருகில் உள்ள திரு பம்பரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் புராண காலத்தில் ஒருமுறை பாம்புகளின் அரசன் ஆதிசேஷன் சிவபெருமானை வழிபட விரும்பினார் ராகு மற்றும் கேது இருவரும் ஒரே உடலாக இணைந்து சிவனை நோக்கி தவம் தவம் செய்த தலம் இதுவாகும் சிவபெருமானின் அருளால் ராகுவும் கேதுவும் தங்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் இருந்து விடுபட்ட இடம் என்பதால் இது தென்காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது மற்ற ராகு கேது தலங்களைவிட திருப்பாம்புரம் ஏன் தனித்து உள்ளது இங்கே ராகுவும் கேதுவும் தனித்தனியாக இல்லாமல் ஒரே உடலாக இணைந்து ஈசனை வணங்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர் இந்த ஊரில் பாம்புகள் யாரையும் கடித்தது இல்லை என்றும் அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாது என்ற அசைக்க முடியாத தீராத நம்பிக்கை இருக்கிறதே இழந்த பதவி செல்வம் மற்றும் நிம்மதியை மீண்டும் பெற இத்தலம் சிறந்த இடமாக விளங்குகிறது காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்கள் மேலும் அவரவர் ஜாதகத்தில் இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு இந்த இடங்களில் ராகுலுக்கு கேது இருப்பவர்கள் திருமணம் தள்ளிக் கொண்டே போகும் ஆண் மற்றும் பெண் இவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கனவில் அடிக்கடி பாம்புகளை காண்பவர்கள் கோயிலுக்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு அவ்வாறு இயலாவிட்டால் கை கால்களை அலம்பிக் கொள்ளலாம் ராகு கேது சன்னதியில் வெள்ளி நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்படும் அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள ஒரு அதிசயமாகும் ராகுவுக்கு பிடித்த உளுந்து பொடி சாதம் கேதுவுக்கு பிடித்த கொள்ளு பொடி சாதம் இவற்றை நிவேதனமாக படைத்து வழி பட வேண்டும் ராகுவுக்கு கருப்பு அல்லது நீலநிற ஆடையும் கேதுவுக்கு பலவண்ண ஆடையும் அணிவித்து அர்ச்சனை செய்யலாம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் கோயில் அமைந்துள்ளது காரைக்கால் கும்பகோணம் மார்க்கத்தில் இக்கோயில் உள்ளது காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மாலை நாலு மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும் ராகுகாலம் நேரங்களில் இங்கு பரிகாரம் செய்வதே விசேஷமானது #🙏ஆன்மீகம்
AMANLATCHOUMY
626 காட்சிகள்
பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் பொதுவாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு விரதம் இருப்பார்கள் ஆனால் தன் பிள்ளைகளாகிய பக்தர்கள் நலனுக்காக அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி சமயபுரம் மாரியம்மன் விரதம் இருக்கும் அதிசய நிகழ்வு மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சமயபுரத்தில் மிக விசேஷமானது அன்றுதான் உலகப் புகழ்பெற்ற பூச்சொரிதல் விழா தொடங்குகிறது பலடன் கணக்குல ஆன நறுமண மலர்கள் அம்மன் மீது சொரியப்பட்டு மாரியம்மன் மலர்க்கோலத்தில் காட்சியளிப்பாள் இந்த நறுமண திருவிழாவோடு அம்மனின் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது உலகைக் காக்கும் அன்னை மாசி மாதம் கடைசி ஞாயிறு வரை 27 நாட்கள் வேத மேற்கொள்கிறாள் இந்த விரத காலத்தில் அன்னைக்கு நிவேதனம் செய்யப்படுவதில்லை ஒருவேளை மட்டும் அன்னைக்கு பானகங்கள் நைவேத்தியமாக படைக்கப்படும் இளநீர் மோர் பானகம் சொல்லுமாவு குளிர்ச்சி தரும் வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை மட்டுமே அன்னைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன அம்மா பட்டினியாக இருக்கும்போது பிள்ளைகள் மட்டும் உண்பார்களா அம்மன் விரதம் இருக்கும் அதே 27 நாட்களும் சமயபுரம் சுற்றுப்புற மக்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள் அம்மனின் திருமேனியில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கவே குளிர்ச்சியான பொருள்கள் படைக்கப்படுகின்றன இத்தல அம்மன் சோம்புகாக உருவானவர் இங்குள்ள மூலவர் திருமேனி மூலிகைகளால் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும் , சமயபுரத்தாளை வழிபடுவோம் நன்மைகளை அடைவோம் #🙏ஆன்மீகம்
See other profiles for amazing content