Follow
Islamic Way ❤️ Of Life
@islamicwayoflifeofficial1
1,038
Posts
2,769
Followers
Islamic Way ❤️ Of Life
531 views
7 days ago
பொறுமை என்பது பலவீனம் அல்ல!! 🤍 அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: தான் கூறுவது உண்மையாக இருந்தாலும், வீண் விவாதத்தைக் கைவிடுகிறவருக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டிற்கு நான் பொறுப்பேற்கிறேன்.”» (அபூதாவூத் : 4800) 🌿 சத்தியத்திற்கு குரல் கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை… 🚫 அசத்தியத்திற்கு ஒருபோதும் கைதட்டி விடாதீர்கள்!! 🤲 பொறுமை என்பது பலவீனம் அல்ல… அது ஈமானின் அழகும், அறிவின் அடையாளமும்! #IslamicReminder #Sabr #Patience #Hadith #IslamicPost #TamilIslamicPost #⚡ஷேர்சாட் அப்டேட்
Islamic Way ❤️ Of Life
680 views
2 months ago
"அய்யாமுத் தஷ்ரீக் 🕋🌙✨ உண்ணும், பருகி கொண்டாடும் நாட்கள்!! 'மே 29 முதல் மே 31 அஸர் வரை இன் ஷா அல்லாஹ் 📌✨ "துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை விட அய்யாமுத் தஷ்ரீக் மூன்று நாட்கள் மிகச் சிறந்தது. "தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் ரழி அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். நூல்: புகாரி 4/123. கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது சிறப்புடன் விரும்பத்தக்கது. "தக்பீரின் வாசகங்கள் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து. அல்லாஹு அக்பர் கபீரா வல் ஹம்து லில்லாஹி கசீரா வ சுபஹானல்லாஹி புக்ரதவ் – வ அ-சீலா லா இலாஹ இல்லல்லாஹு வலா ந(ஹ்க்புது இல்லா இயாஹு முஹ்லிசீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன் லா இலாஹ இல்லல்லாஹு வஹதா , சதக வஹதா, வ நசர அப்தா வ அஸ்ஸ ஜூ(ன்)ந்தா – வ ஹஸமல் அஹ்ஸாப வஹதா லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ருல்லாஹு அக்பர் , வ லில்லாஹில் ஹம்து இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். '(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல' என்று "அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் வல்லமைமிக்க அல்லாஹ்வை நினைவு கூர்வது (திக்ர் செய்வது) சுன்னத்தாகும். மேலும், அந்நாட்களில் நோன்பு நோற்பது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் என்பவை உண்பதற்கும், பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்குரிய (திக்ர் செய்வதற்கான) நாட்களாகும்." (ஸஹீஹ் முஸ்லிம்: 1141) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "ஹஜ்ஜின் போது குர்பானி பிராணி கிடைக்காதவர்களைத் தவிர, ஏனையோருக்கு அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்க அனுமதி அளிக்கப்படவில்லை." (ஸஹீஹ் புகாரி: 1998) குறிப்பு 📌✨ ● அய்யாமுத் தஷ்ரீக் என்பது துல் ஹிஜ்ஜா மாதத்தின் 11, 12, மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களாகும் (ஹஜ் பெருநாளை அடுத்த மூன்று நாட்கள்). ● இந்த நாட்களில் இறைவனை அதிகமாகத் துதிப்பதும், நோன்பு நோற்காமல் சாப்பிட்டு மகிழ்வதும் அவசியமாகும். ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்க வசதி இல்லாதவர்கள் மட்டுமே இந்த நாட்களில் நோன்பு நோற்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. *துல்ஹிஜ்ஜாவுடைய தக்பீர் எங்கே!? - அஷ்ஷைஃக் முஹம்மத் பாமூஸா ஹஃபிதஹுல்லாஹ்* சிலர் வெட்கப்படுகின்றனர், (துல்ஹிஜ்ஜாவின்) பத்தில் தக்பீர் முழங்க நான் வெட்கப்படுகிறேன் என்று கூறுகின்றனர்! சுப்ஹானஹல்லாஹ்! பாடகன் பாடுவதற்கு வெட்கப்படவில்லை, இராகத்துடன் படிப்பவன் இராகமாக படிக்க வெட்கப்படவில்லை, நடனமாடுபவன் நடனமாட வெட்கப்படவில்லை, புல்லாங்குழல் வாசிப்பவன் புல்லாங்குழல் வாசிப்பதற்கு வெட்கப்படவில்லை, மேளக்காரன் மேளம் அடிப்பதிலிருந்து வெட்கப்படவில்லை, பொய்யன் பொய்யிலிருந்து வெட்கப்படவில்லை மற்றும் பலர்… அல்லாஹ்வை நினைவு கூர்பவரோ வெட்கப்படுகின்றார், நான் வெட்கப்படுகிறேன் என்று கூறுகின்றார்! சுப்ஹானல்லாஹ்! உன்னுடைய குரலை உயர்த்துவாயாக. இந்த தக்பீரானது சஹாபாக்களுடைய காலத்தில் இருந்தது, ஸலஃபுகளுடைய காலத்தில்; அதனைக் கொண்டு சந்தைகள் நடுநடுங்கும், அதனைக் கொண்டு சந்தைகள் நடுநடுங்கும். மேலும் அவ்வாறே அய்யாமுத் தஷ்ரீகில் மினாவிலும், சஹாபாக்களுடைய - ரதியல்லாஹு அன்ஹும் - தக்பீரினால் கூடாரங்கள் நடுநடுங்கும்; இது அவர்களிடமிருந்து உறுதியாகியுள்ளது. இந்த தக்பீரானாது இன்றைய தினம் எங்கே!? அல்லாஹ் ரஹ்மத் செய்தவர்களைத் தவிர (மற்றவர்கள் விட்டு விட்டனர்). #🎉பக்ரீத் ஸ்டேட்டஸ்🕌 #🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 #⚡ஷேர்சாட் அப்டேட் #🌙ஈத் கோட்ஸ்☪ #🕌பக்ரீத் முபாரக் 🌙
Islamic Way ❤️ Of Life
821 views
2 months ago
"Wish You Happy Eid Al Ad'ha Mubarak 🕋❤️✨ "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து பொருள்: அல்லாஹ் மிகவும் பெரியவன், அல்லாஹ் மிகவும் பெரியவன், அல்லாஹ் மிகவும் பெரியவன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன், அல்லாஹ் மிகவும் பெரியவன். எல்லாப் புகழ்களும் அல்லாஹ்வுக்கே. 💫 தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் 💫 "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ❤️ உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக!! "இன் ஷா அல்லாஹ் ❤️ ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்!! #🌙ஈத் கோட்ஸ்☪ #⚡ஷேர்சாட் அப்டேட் #🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 #🎉பக்ரீத் ஸ்டேட்டஸ்🕌
Islamic Way ❤️ Of Life
2.2K views
2 months ago
"ஈத் அல் அள்ஹா 🕋❤️✨ முபாரக்!! "அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 💐💐 "உங்கள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ நாம் அனைவருடைய நல் அமல்களையும் பொருந்திக் கொண்டு நாம் அனைவருடைய இம்மை மறுமை வாழ்வை செழிப்பான அவன் பொருந்திக் கொண்ட வாழ்க்கையாக ஆக்கி வைப்பானாக!! "தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் 💫 உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக!!! "நாம் அனைவருடைய இல்லத்தையும் உள்ளத்தையும் ❤️ பெருநாள் தினத்தைப் போல மகிழ்ச்சி நிறைந்த தினமாக மாற்றுவானாக அதை என்றென்றும் நிலைக்கச் செய்வானாக!!! "உங்களுடைய துஆவில் எங்களையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் ❤️ என்னுடைய துஆவில் என்றென்றும் உங்களையும் இந்த உம்மத்துக்களையும் சேர்த்துக் கொள்வேன்!! "இன் ஷா அல்லாஹ் ❤️ 💫 ஈத் அல் அள்ஹா முபாரக் 💫 தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123. கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது சிறப்புடன் விரும்பத்தக்கது. தக்பீரின் வாசகங்கள்: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து… அல்லாஹு அக்பர் கபீரா வல் ஹம்து லில்லாஹி கசீரா வ சுபஹானல்லாஹி புக்ரதவ் – வ அ-சீலா லா இலாஹ இல்லல்லாஹு வலா ந(ஹ்க்புது இல்லா இயாஹு முஹ்லிசீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன் லா இலாஹ இல்லல்லாஹு வஹதா , சதக வஹதா, வ நசர அப்தா வ அஞ்ச ஜூ(ன்)ந்தா – வ ஹஸமல் அஹ்ஸாப வஹதா லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் ருல்லாஹு அக்பர் , வ லில்லாஹில் ஹம்து ❤️رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏❤️ "என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தும் கொள்வாயாக! 📚(அல்குர்ஆன் : 14:40)📚 #⚡ஷேர்சாட் அப்டேட் #🌙ஈத் கோட்ஸ்☪ #🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 #🎉பக்ரீத் ஸ்டேட்டஸ்🕌 #🕌பக்ரீத் முபாரக் 🌙
Islamic Way ❤️ Of Life
552 views
2 months ago
உழ்ஹிய்யா கொடுப்பவர்: உழ்ஹிய்யா கொடுப்பவர் வெறும் மாமிசத்தைப் பங்கிடுவதை மாத்திரம் தனது இலக்காக் கொள்ளாமல் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது கடமையாகும். 01. இஹ்லாஸ் (மனத்தூய்மை): உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் புகழும், அவர் நல்லவர் என்ற எண்ணமும் சமுதாயத்தில் வளர்வது இயல்பானது. ஆனால், அதை அவர் எதிர்பார்க்கக்கூடாது. இறைவனின் திருப்தியை மட்டும் இலக்காக்கொண்டு அவனுக்காக என்ற கலப்பற்ற தூய்மையான எண்ணத்துடன் அதை நிறைவேற்றல் வேண்டும். இவ்வாறு செய்வதாலேயே இஸ்லாம் காட்டித் தந்த கடமையை நிறைவேற்றியவராக அவர் மாறமுடியும். மற்றவர்களின் புகழுக்காகவும் பெயருக்காகவும் செய்துவிட்டு இறைவனிடம் கூலியை எதிர்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. “உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02) “(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (22:37) இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் எனக்காக ஒரு அமலைச் செய்து பிறருக்கும் அதில் பங்கு கொடுக்கிறானோ அவனையும் அவன் செய்த அமலையும் நான் விட்டு விடுகிறேன்.” (முஸ்லிம்) “நான் உங்களிடத்தில் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: முகஸ்துதி என்று பதிலளித்தார்கள். இவ்வாறு முகஸ்துதிக்காக செயற்பட்டவர்களை நாளை மறுமையில் அல்லாஹ்: யாருக்கு காட்டுவதற்காக அவர்கள் அமல் செய்தார்களோ அவர்களிடமே செல்லுமாறும், அவர்களிடம் கூலி கிடைக்கிறதா என்று பார்க்குமாறும் கூறுவான்.” (அஹ்மத், பைஹகீ) #உழ்ஹிய்யா #குர்பானிசட்டங்கள் #🌙ஈத் கோட்ஸ்☪ #hajj #⚡ஷேர்சாட் அப்டேட்
Islamic Way ❤️ Of Life
4.4K views
2 months ago
''லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக்க லப்பைக் 🕋📌✨ #islam #arafahday #அரஃபாதினம் #hajj #🌙ஈத் கோட்ஸ்☪
Islamic Way ❤️ Of Life
2.9K views
2 months ago
"அல்லாஹ் நாடினால் நாமும் ஒருநாள் அரஃபா மைதானத்திற்கு செல்வோம் இன் ஷா அல்லாஹ் 🕋❤️‍🩹🤲🏻✨ #arafahday #அரஃபாதினம் #islam #அரஃபா நோன்பின் சிறப்பு
Islamic Way ❤️ Of Life
1.3K views
2 months ago
"அரஃபா ❤️💐 1.அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (முஸ்னத் அஹ்மத்) 2. நரக விடுதலை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'அல்லாஹ் தபாரக வ தஆலா அதிக அதிகமாக தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை விட வேறு தினம் இருக்க முடியாது' என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்) 3. சிறந்த துஆ அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'துஆக்களில் மிகவும் சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (திர்மதி முஸ்னத் அஹ்மத்) அஷ் ஷெய்க் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் இதை ஹஸன் என்று கூறியுள்ளார்கள். 4. அரஃபா தினம் நோன்பு வைப்பதன் சிறப்பு [ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள், "அரஃபா தினத்தன்று நோன்பு வைப்பது முன்சென்ற வருடத்திலும் பின் வரக்கூடிய வருடத்திலும் நிகழ்ந்து விடுகின்ற பாவங்களுக்கு பரிகாரமாக இருக்கின்றது" என்று கூறினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்] 5. அரஃபா தினம் - மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்ட தினம் அரஃபா தினம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கிறது. அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான். "சுப்ஹானல்லாஹ் ❤️✨ தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123. #islam #அரஃபாதினம் #அரஃபா நோன்பின் சிறப்பு #arafahday
Islamic Way ❤️ Of Life
1.4K views
2 months ago
*அரஃபா நாள்* *சூரியன் உதித்த நாட்களிலேயே மிகச் சிறந்த நாள்* *1. இதன் நோன்பு இரண்டு ஆண்டுகளின் பாவங்களை அழிக்கும்* *அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்:* *«அரஃபா நாளின் நோன்பு, அதற்கு முந்தைய ஓர் ஆண்டின் பாவங்களையும், அதற்குப் பிந்தைய ஓர் ஆண்டின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நான் எதிர்பார்க்கிறேன்.»* _(முஸ்லிம் 1162)_ *2. நரகத்திலிருந்து விடுதலை பெறும் நாள்* *அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்:* *«அரஃபா நாளை விட அதிகமான அடியார்களை அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை செய்யும் வேறு நாள் இல்லை. அவன் நெருங்கி வருகிறான், பின்னர் மலக்குகளிடம் அவர்களைக் கொண்டு பெருமைப்படுகிறான்.»* _(முஸ்லிம் 1348)_ *3. அரஃபா - துஆவின் நாள்* *அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்:* *«துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆ. நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறியதில் சிறந்தது: லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.»* _(திர்மிதீ 3585 - அல்பானீ ஹஸன் )_ #islam #குர்பானிசட்டங்கள் #அரஃபாதினம் #அரஃபா நோன்பின் சிறப்பு
Islamic Way ❤️ Of Life
641 views
2 months ago
"அரஃபா நோன்பு 🕋✨❤️📌 "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம் 1796 மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. 🌙 அரஃபா நாளின் பிறை விடயம்: 📜 கண்ணியமிக்க அஷ்-ஷெய்க் (முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது: 🖋 பிறை தென்படும் விஷயத்தில் வெவ்வேறு இடங்களுக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டின் காரணத்தினால், அரஃபா நோன்புடைய நாள் வேறுபட்டால் அப்போது, நாங்கள் எந்நாட்டில் இருக்கிறோமோ அந்நாட்டின் பிறைபார்ப்பை பின்பற்றி நோன்பு நோற்கவேண்டுமா அல்லது இரண்டு ஹரம் பள்ளிவாசல்களுடைய (சவுதி அரேபியாவுடைய) பிறைபார்ப்பை பின்பற்றி நோன்பு நோற்கவேண்டுமா? 📌 கண்ணியமிக்க அஷ்ஷெய்க் அவர்கள் பதில் கூறினார்கள்: இவ்விஷயம் உலமாக்களுக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஒரே பிறையா அல்லது பிறை தென்படும் இடத்திற்கு ஏற்ப பிறை வேறுபடுமா? இதில் சரியான கூற்று என்னவெனில் பிறை என்பது அது தென்படும் இடத்திற்கு ஏற்ப வேறுபடும். எடுத்துக்காட்டாக, மக்காவில் (துல்-ஹிஜ்ஜா மாதத்தின்) பிறை தென்பட்டு (அவர்கள் அம்மாதத்தை ஆரம்பித்து) அவர்கள் ஒன்பதாவது நாளில் (அரஃபா நாளில்) இருக்க, வேறு ஒரு நாட்டில் மக்காவிற்கு ஒருநாள் முன்னதாகவே பிறை பார்க்கப்பட்டு இருக்குமேயெனில், சவுதியின் அரஃபா நாள்(ஓன்பதாவது நாள்), அவர்களுக்கு அது பத்தாவது நாளாக இருக்கின்றது, ஆகையால் அவர்களுக்கு அந்நாளில் நோன்பு பிடிக்க அனுமதி இல்லை ஏனெனில் அவர்களுக்கு அந்நாள் பெருநாள் ஆகும். அதேபோல் (இன்னொரு) எடுத்துக்காட்டாக (மற்றொரு நாட்டில்) மக்காவிற்கு ஒரு நாள் பின்னதாக பிறை பார்க்கப்பட்டுவிட்டது என்று எடுத்துக்கொண்டால், மக்காவில் ஒன்பதாவது நாள் (அரஃபா நாள்) அவர்களுக்கு எட்டாவது நாளாக இருக்கின்றது. ஆகையால் அவர்கள் தங்களுக்குரிய ஒன்பதாவது நாளில் தான் (அரஃபா) நோன்பு நோற்க வேண்டும். மேலும் அவர்கள் நோன்பு நோற்கும் (ஒன்பதாம்) நாள் மக்காவில் பத்தாவது நாளாக இருக்கும். இதுவே ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான கருத்தாகும், ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கூறுகிறார்கள்: “நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வைய்யிங்கள் மற்றும் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள்”. (ஸஹீஹுல் புகாரி-1900) ❤️ இறைவன் நன்கறிந்தவன் ❤️ #உழ்ஹிய்யா #குர்பானிசட்டங்கள் #அரஃபாதினம் #islam