ஃபாலோவ்
Word of God Bible Store
@janagaraj1268
365
போஸ்ட்
279
பின்தொடர்பவர்கள்
Word of God Bible Store
791 காட்சிகள்
#Today Gospel ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ( 1 கொரிந்தியர் 10 : 23 ) அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.(சாலமோன் ) ( பிரசங்கி 4 : 14 ) ஆளப் பிறந்த அரசன் சாலமோன் ஆண்டியாய் (தன்னை இழந்து ) போனான். இரண்டு முறை கர்த்தர் தரிசனமாகி எச்சரித்தும் வழிவிலகிப் போன முக்கிய காரணம் மதுபானம் & அநேக பெண்களை நேசித்தது. 1இராஜா 11:9 அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள். ( 1 இராஜாக்கள் 11 : 3 ) ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. ( நீதிமொழிகள் 31 : 3 ) திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. ( நீதிமொழிகள் 31 : 4 ) பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். ( நீதிமொழிகள் 22 : 14 ) மனந்திரும்பிய பின் தினமும் செய்ய வேண்டியவை, இருதயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளும், பரிசுத்த ஆவியையும் நிரப்பிக் கொண்டே இருக்கும் போது நித்தம் அந்த ஆத்துமா காப்பாற்றப்படும். எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். ( சங்கீதம் 32 : 1 )
Word of God Bible Store
656 காட்சிகள்
#Today Gospel தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். ( 2 பேதுரு 3 : 9 )
Word of God Bible Store
569 காட்சிகள்
#Today Gospel யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார். ( ஏசாயா 49 : 6 )
Word of God Bible Store
625 காட்சிகள்
#Today Gospel Individual prayer being help us to have fellowship with God and lead the life along with God. Family prayer helps to build a wall (protection) and receive mercy to the entire family. Ref. God certified Righteous man job.
Word of God Bible Store
627 காட்சிகள்
#Today Gospel அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். ( யோவான் 16 : 8 ) வேதாகமம் முழுவதும் உலக பாவங்கள், நீதி, நியாயத்தீர்ப்பு இந்த மூன்றையும் அடக்கியுள்ளது. நாம் அசட்டை பண்ணாமல் இலகுவாக ஏற்றுக் கொள்ளும் போது மேன்மையானவைகளை கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் பெலன் தருகிறார். அதை இந்த வசனம் தெளிவாக விளக்குகிறது "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ( 2 தீமோத்தேயு 1 : 7 )
Word of God Bible Store
684 காட்சிகள்
#Today Gospel நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? ( மத்தேயு 26 : 53 ) 12 Legions = 72000 Angels (as per Roman empire 1 Legion = 6000 soldiers )
Word of God Bible Store
776 காட்சிகள்
#Today Gospel நாம் ஏன் தேவ தூதரிலும் பாக்கியம் பெற்றவர்கள்? (எபிரேயர் 1 : 14, 2:16 ) எல்லா தெய்வமும் மார்க்கமும் ஒன்றல்ல!! வேறுபடுத்தி நலமானதை பிடித்துக்கொள்ள சில சான்றுகள் ! படைப்பு - தேவன் நம்மை அவருடைய சாயலாய், அவர் ரூபமாய் உண்டாக்கினார். (ஆதியா 1 : 26, 27 ) படைப்பின் நோக்கம் - உலகத்தை ஜெயங்கொள்ளவும், அப்போழுது அவர்கள் தேவ பிள்ளைகளும், ஆசாரியராக வேண்டும்.( வெளி 21 : 7, வெளி 20 : 6 ) தேவ தூதர்கள் - மனுஷருக்கு பணிவிடை செய்யும் படி அனுப்பப்படும் தேவனுடைய வேலையாட்கள் ( எபிரேயர் 1 : 14 ) இயேசு பூமிக்கு இறங்கி வந்த காரியம் - பாவிகளையே தேடி அவர்களை மீட்க வந்தார் ( லுூக்கா 5 : 32 ), (ரோமர் 5 : 7, 8 ) மனுஷர் சாபம் நீங்க பரிகாரம் - தேவன் தன் சொந்த குமாரனை பலியிட்டு நம்மை மீட்டார். (ஏசாயா 53 : 10, 11 ) மத்தியஸ்தர்(Advocate ) ஏன் தேவை - தேவனை மனமிறங்க செய்ய. தேவனும் மனுஷரும் என்ற இரு தரப்பினரும் நம்பும் ஒரே பாத்திரம் கிறிஸ்து . ( 1 தீமோ 2 : 5 ) ஆவியானவர் முழு நேரப்பணி - வாக்குக்கடங்கா பெருமூச்சு விட்டு நமக்காய் ஜெபித்து, பிதாவிடம் பரிந்து பேசுதல். ( ரோமர் 8 : 26 ) உறங்காதவர்கள் - 24/7 helpers எந்த நேரத்திலும் நம்மை விசாரிக்க முடியும். ( சங்கீ 121 : 4 ) சொர்க்கத்தில் வரவேற்பு - அநேக வாசஸ்தலங்கள் ஆயத்தம் ( யோவான் 14 : 2 ) இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. ( சங்கீதம் 144 : 15 )
See other profiles for amazing content