ஃபாலோவ்
🌹
@kanchana0451
660
போஸ்ட்
5,512
பின்தொடர்பவர்கள்
🌹
2.9K காட்சிகள்
💐💐💐💐💐 அவளுக்கு சின்ன வயதிலிருந்தே தன் தோற்றத்தை அழகாக காட்டிக்கொள்வதில் ஒரு ஆர்வம்.. அழகாக தன்னை ஒப்பனை செய்து கொள்வது.. தனக்கு பொருத்தமான, அழகான ஆடைகளை மட்டுமே அணிவது, என தன் உருவத்தோற்றத்தை அழகாக காட்டிக்கொள்வதில் ஏனோ ஓர் ஆர்வம்.. இது தவறில்லையே.. நல்ல விஷயம்தானே.. அப்படித்தானே இருக்க வேண்டும்.. ஆம், தன் தோற்றத்தை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது தவறில்லை.. மற்றவர்களும் இப்படியே இருக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்.‌ சொல்லப்போனால் எல்லோருக்குமே தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமென ஆசைதான்.. ஆனால், குடும்ப சூழல் காரணமாகவும், செய்யும் வேலை காரணமாகவும் பலர் தங்களை பார்த்துக்கொள்ளவே முடியாதவர்களாகின்றனர்.. இது புரியாத, நமது கதையின் கதாநாயகி.. தனக்கு வரக்கூடிய கணவன் (காதலன்) மிகவும் அழகானவனாகவும், சுத்தமானவனாகவும், உடை நாகரீகம் தெரிந்தவனாகவும் இருக்க வேண்டுமென எண்ணி.. வரும் ஆண்களையெல்லாம் நிராகரித்து வந்தாள்.. ஒருநாள், தனது தோழியுடன் சென்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் அவனை கண்டால்.. உருவ அழகை கண்டு உருகியவர்கள்.. இருவருமே தனிதனியாக காதல் விருப்பத்தை தெரிவித்தனர்.. ஆனால், அவன் ஏற்றது தனது தோழியின் காதலைதான் என்பதை அறிந்து மன வேதனை அடைந்தாள்.. வீட்டில் மாப்பிள்ளை பார்ததிருக்கிறோம், என தந்தை கூறியதும்.. அந்த அழகணால் ஏற்பட்ட மன வேதனையில், மாப்பிள்ளை போட்டோவை பார்க்காமலேயே திருமணத்திற்கு சம்மதித்தாள்.. திருமணமும் முடிந்தது.. இவனிடம் அழகு இல்லை.. அதைவிட அதிகமாக அன்பும், பொருமையும் இருந்தது.. சற்று மாநிறம்தான் ஆனால் கணவனின் புன்னகை கலர் பற்றிய எண்ணத்தையே உருக்குலைத்தது.. அவ்வளவு அழுகு இவன் புன்னகை.. தன் தோழிக்கும் அந்த அழகனுக்கும் திருமணமானது.. சில தினங்களில் தொலைபேசியில் பேசிய தோழி இவளிடம்.‌. தன் கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், குடித்து விட்டு பணம் கேட்டு இவளை அடிப்பதாகவும் சொல்லி அழுதாள்.. நமது கதையின் கதாநாயகி, அதிர்ந்து போனால்.. தன் கணவன் புதிய தொழில் தொடங்க பணம் தேவையென வருந்தியதை பார்த்தவள்.. தானே சென்று, "ஏங்க நா வேணும்னா என் அப்பா கிட்ட காசு வாங்கி தரட்டுமா" என கேட்டதுதான்.. உங்க அப்பா கிட்டலாம் காசு வாங்கி தான் பிஸ்னஸ் பண்ணும்னா.. எனக்கு அப்படிப்பட்ட பிஸ்னஸ் ஒன்னும் பண்ண வேணாமென கோவமாக சொல்லி விட்டு சென்றான்.. அவன் கோவம் இவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.. சில தினங்களில் மாசமாக இருக்கும்போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் நம் கதாநாயகி.. கணவன் தாயாகவும் தந்தையாகவும் பார்த்துக்கொண்டான்.. பாசத்தில் கண் கலங்கி விட்டாள்.. அப்போது, அந்த அழகன் தன் தோழியை திருமணம் செய்து யாமாற்றி இன்னொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த செய்தி அறிந்து அதிர்ந்து போனாள்.. இப்போது, ஒரு முடிவுக்கு வந்தாள்.. உருவம் நிலையற்றது.. மாறக்கூடியது.. உண்மையான அன்பு மட்டுமே உண்மையானது.. என்பதை புரிந்து கொண்டு.. தனக்கு பிறக்க போகும் குழந்தை அழகாக பிறக்க வேண்டுமென ஆசை வைத்திருந்தவள்.. இப்போது.. எப்படி பிறந்தால் என்ன.. உருவத்தில் அழகாக இல்லாவிட்டாலும் உள்ளத்தில் அழகானவனாக நமது குழந்தையை வளரக்கலாமென முடிவுக்கு வந்தாள்.. 🌾🌾🌾🌾 -உருவம் மாறக்கூடியது.. #👩‍💼சத்யா #👩‍❤️‍👨ராஜா ராணி 2 #💑பாரதி கண்ணம்மா #👨‍👨‍👧‍👦பாண்டியன் ஸ்டோர்ஸ் #💑கணவன் - மனைவி https://sharechat.com/post/r171rzl7?d=n&referrer=otherShare #👭பெண்களின் நட்பு #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #💑அன்பே வா #🌹ரோஜா ஷேர்சாட்டை பதிவிறக்கம் செய்து 1 லட்சம் வரை வெல்லுங்கள் https://sharechat.com?d=n #👨‍👨‍👧‍👦பாண்டியன் ஸ்டோர்ஸ்
See other profiles for amazing content