#📺வைரல் தகவல்🤩 #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு
ஏப்ரல் 13
கலைப்புலி ஜி.சேகரன் அவர்களின் முதலாண்டு நினைவு நாள். திரைப்பட விநியோகஸ்தராக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். அர்ஜூன், நளினி நடித்த 'யார்' என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியது மட்டுமின்றி, அந்தப் படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். இப்படத்தை எஸ்.தாணு, ஜி.சேகரன்,
சூரி இணைந்து தயாரித்தனர். பிறகு பாண்டியராஜன் நடித்த 'ஊரை தெரிஞ்சிகிட்டேன்', ராதிகா நடித்த 'காவல் பூனைகள்', குஷ்பு நடித்த 'குடும்ப சங்கிலி'', ராம்கி நடித்த 'உளவாளி', டாக்டர் ராம் நடித்த 'கட்டுவிரியன்' மற்றும் 'கள்ளப் பருந்து', 'ஜமீன் கோட்டை' ஆகிய படங்களை தயாரித்து இயக்கி நடித்தார். திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க இணை செயலாளராக, செயலாளராக, தலைவராகப் பணியாற்றினார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினராகவும் செயலாற்றினார். பிறகு குறும்பட மற்றும் ஆவணப்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்தார் கடந்த 13.4.2025ல் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.