Follow
மாரியப்பன் குமரவேல்
@maiappankumaravel
2,131
Posts
1,483
Followers
மாரியப்பன் குமரவேல்
665 views
2 months ago
#மே பதினேழு இயக்கம் தமிழ்நாட்டில் இந்திக்கு என்ன வேலை? எனது வரிப்பணத்தில் அன்னிய மொழி ஆதிக்கம் எதற்கு? தமிழுக்கு நிகரான மொழியா இந்தி? இந்தியரெல்லாம் சமமெனில், இந்திக்கு மட்டுமென்ன முன்னுரிமை? இந்திக்காரனை விட தமிழன் எவ்வகையில் தாழ்ந்தவன்? நமது நாட்டிற்குள்ளாக இந்திக்கு முன்னுரிமையென்றால் இரண்டாம் தர குடிமக்களா தமிழர்கள்?.. மொழியுரிமை என்பது குடியுரிமைக்கு நிகரானது. தாய்மொழிக்கு இரண்டாமிடமென்றால், குடிமக்களாக தமிழர் நிலையென்ன? காங்கிரஸ் திணித்த இந்தியை, பாஜக துக்கிச் சுமக்கும் போது, புதைக்க வேண்டிய இந்தியெனும் பிணத்திற்கு அலங்காரம் செய்து வேடிக்கை பார்க்க இயலுமா? உலகத் தாய்மொழி நாளில் தமிழர்களின் மீது வடவர் ஆதிக்கத்தை திணிக்கும் வகையில், 'இந்தி' மொழியை முன்னிலைப்படுத்தும் ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஒன்றான தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின், எழும்பூர் ரயில்நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தொடங்குகிறோம். நமது ஊரில், நமது பணத்தில் லாபம் கொழிக்கும் ரயில்வேயில் 'தமிழ்' மொழிக்கு முன்னுரிமையில்லையெனில், 'இந்தி'யை அழிக்காமல் வேறென்ன செய்ய இயலும். எம்மீது திணிக்கப்படும் எதுவும், வீழ்த்தப்படும் என்பதை தமிழினம் உரக்கச் சொல்லி வந்திருக்கிறது. தாய்மொழி காக்க ஆதிக்கம் அழிய இந்தியை நீக்க மானத்தமிழர்களே அணிதிரள்வோம். எனது நாட்டில் உனது மொழி? இந்தியை அழி! 21-02-2026- சனிக்கிழமை காலை 10:00 மணி எழும்பூர் ரயில்நிலையம் சென்னை.