ஃபாலோவ்
messi
@messi2923
2,064
போஸ்ட்
1,075
பின்தொடர்பவர்கள்
messi
531 காட்சிகள்
#இந்திய_விடுதலைப்_போராட்ட_வீரர்_லாலா_லஜபதி_ராய் #பிறந்தநாள் #ஜனவரி_28 ஜனவரி 28, இன்று -பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்..!! 1865 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் துதிகே என்ற ஊரில் பிறந்த அவர், 1888இல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். பஞ்சாபி எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான லாலா லஜபதி ராய், பஞ்சாப் சிங்கம் என்று பொருள் தரும் விதத்தில் "பஞ்சாப் கேசரி' என்றும், "ஷேர்-இ-பஞ்சாப்' என்றும் அழைக்கப்படுகிறார். 1905ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில் தன்னாட்சி அதிகாரத்தினை முன்வைத்து அனைவரையும் வழிநடத்திச் சென்றார். 1928இல் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த “சைமன் கமிஷனே திரும்பிப்போ” போராட்டத்தின் போது வெள்ளையர்களின் தடியடியில் தலையில் காயமுற்று, உயிரிழந்தார். #life #lifes
messi
613 காட்சிகள்
#சர்வதேச_இனப்படுகொலை #நினைவு_நாள் #ஜனவரி_27 இன்று சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள் (Holocaust Remembrance Day )- ஜனவரி 27 - இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலங்களில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் ரோமானிய ஜிப்சி இனமக்களைப் பிடித்துவந்து சித்திரவதை முகாம்களில் அடைத்து விஷவாயு மூலம் கொன்றனர். இதுபோல சுமார் அறுபது லட்சம் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனியின் நாஜிப்படைகளை ரஷ்யப்படைகள் வென்றன. 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் போலந்தின் அவுஷ்விட்ஸ் நகரில் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் ரஷ்யாவின் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர். இந்த நாளே சர்வ தேச இனப்படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. #life #lifes
messi
604 காட்சிகள்
#குடியரசுதினம் #76thRepublicDay #ஜனவரி26 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்." 28ஆம் நாள் ஆகத்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. #life #lifes
messi
584 காட்சிகள்
#தேசிய_வாக்காளர்_தினம் #ஐனவரி_25 இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஓட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர். இந்தியாவில் தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். எனவே வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. #life #lifes
messi
2.1K காட்சிகள்
#சுபாஷ்_சந்திர_போஸ் #ஜனவரி_23 #பிறந்த_தினம் நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897–, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். #life #lifes
messi
614 காட்சிகள்
வரலாற்றில் இன்று கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் #ஜனவரி_22, 1999. ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் தொண்டுகள் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் கதற கதற உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது. இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. #life #lifes
messi
594 காட்சிகள்
#ஆந்த்ரே_மரி_ஆம்பியர் #பிறந்த_தினம் #ஐனவரி_20 இயற்பியலாளரும், மின்காந்தவியல் பிரிவைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான ஆந்த்ரே-மரி ஆம்பியர் பிறந்த தினம் - சனவரி 20: ஈஃபில் கோபுரத்தில் பொறிக்கப்பட்டுள்ள 72 பெயர்களில் ஒருவரான இவர் பிரான்சின் லியோன் என்ற பகுதியில் பிறந்தார் (1775). தந்தை, வெற்றிகரமான வியாபாரி. தன் மகனுக்கு லத்தீன் கற்றுத் தந்தார். மிகவும் அறிவுக் கூர்மைமிக்க இந்தச் சிறுவனுக்குள் கட்டுக்கடங்காத அறிவு தாகம் ஊற்றெடுத்தது. ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒட்டுமொத்த பக்கங்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான், 13-வது வயதில் கணிதத்தில் அளவு கடந்த ஆர்வம் பிறந்தது. பிரபல கணிதவியல் அறிஞர்கள் லத்தீன் மொழியில் எழுதிய நூல்களைப் படிக்க ஏதுவாக லத்தீன் கல்வியையே தொடர்ந்தார். அப்போதே ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி, ஒரு கணித அகாடமிக்கு அனுப்பினார். அது ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மேலும் தீவிரமாகக் கணிதம் கற்றார். சிறந்த கணித ஆசிரியரிடமும் அனுப்பிவைத்து, மகனின் கணித ஞானத்தைப் பட்டை தீட்டினார் தந்தை. கணித நூல்களைத் தவிர இயற்பியல் தொடர்பான நூல்களையும் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினார். இவற்றைத் தவிர வரலாறு, பயணங்கள், கவிதை, மெய்யியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் முறைசாராக் கல்வி கற்றுவந்த இவர், தந்தையின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஓராண்டு காலம் படிப்பை நிறுத்திவிட்டார். 22-வது வயதில் தனிப்பட்ட முறை யில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார் கணிதம் தவிர வேதியியல், மொழிகள், தத்துவம், வானியல் மற்றும் இயற்பியலும் கற்றுத் தந்தார். 1804-ல் பாரீஸ் சென்ற இவர், அங்கு பல்கலைக்கழகத்துக்கு இணையான கணிதப் பாடங்களை எகோலே பாலிடெக்னிக் நிறுவனத்தில் கற்றுத் தந்தார். 1809-ல் அங்கு பேராசிரியர் பதவி கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் மின்சார பாட்டரி தயாரிக்கப்பட்டது. காந்தமயமாக்கப்பட்ட ஊசியை மின்னோட்டத்தினால் தூண்ட முடியும் என்பதும் கண்டறியப்பட்டது. மின்சாரம் ஏன் காந்த விளைவை உண்டாக்குகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக, அதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரே மாதிரியான மின்மங்கள் (electric charge) ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்பதையும் எதிரெதிர் மின்மங்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதையும் கண்டறிந்தார். மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டினார். இவை இரண்டும் இணைக்கப்பட்டு, மின்காந்தவியல் அல்லது மின்னியக்கவியல் (electrodynamics) என்ற புதிய துறை பிறந்தது. இவர் கண்டறிந்த மின்னோட்டத்த #life #lifes
messi
578 காட்சிகள்
1982 ஆம் ஆண்டு #ஜனவரி_19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களிலும் காவல் துரையின் அடக்குமுறை தடியடி நடவடிக்கைகள் நடைபெற்றன அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் பொதுப்பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் தொழிலாளிவர்க்கத்தின் வலிமையை எதிரி வர்க்கத்திற்கு எடுத்து காட்டியது மட்டுமல்ல, தங்களது எல்லையற்ற வலிமையை தாங்களே உணர்ந்து கொள்ளவும் உதவி செய்தது. இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம். #lifes #life
See other profiles for amazing content