Follow
messi
@messi2923
2,112
Posts
1,113
Followers
messi
596 views
15 hours ago
#உலக_குரல்_தினம் #ஏப்ரல்_16 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் (Brazilian Society of Laryngology ) 1999ல் முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது. #life #lifes
messi
676 views
1 days ago
#ஏப்ரல்_15 ஓவியர் லியொனார்டோ டாவின்சி பிறந்த தினம் இன்று. ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார்.. சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார். மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார். ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார். டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார். கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார். . பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி காலமானார். லியானர்டோ டாவின்சியின் புகழை, காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘மோனலிசா’ ஓவியம் இன்று மட்டுமின்றி என்றும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும். #life #lifes
messi
796 views
2 days ago
#அம்பேத்கர் #ஏப்ரல்_14 #பிறந்தநாள் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956 என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது. #life #lifes
messi
691 views
3 days ago
#ஜலியான்வாலா_பாக் #நினைவு_தினம் #ஏப்ரல்_13 பஞ்சாப் மன்னரான மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவரது குடும்பம் 'ஜல்லா' என்ற சிற்றூரில் இருந்து வந்ததால் ’ஜலியான்வாலா பாக்’ என்று பெயர் பெற்றது. 13 ஏப்ரல் 1919 அன்று 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜலியான்வாலா பாக் தோட்டத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் மீது முன் அறிவிப்பு ஏதுமின்றி ஆங்கிலேயே இராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையிலான இராணுவத்தினர் 1650 இரவுண்டு ரவைகளை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இதனை வரலாற்றில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பர். ஜலியான்வாலாபாக் படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 1110 பேருக்கும் மேலாக படுகாயம் அடைந்தனர். இப்படுகொலையில் இறந்த இந்திய விடுதலை இயக்கத்தினரை நினைவு கூறும் வகையில் இத்தோட்டத்தை 1951-ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து இறந்த தியாகிகளுக்கு இத்தோட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளது. #life #lifes
messi
655 views
4 days ago
#சர்வதேச_விண்வெளி_வீரர்கள்_தினம் #ஏப்ரல்_12 மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது. உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. #life #lifes
messi
11.6K views
5 days ago
வரலாற்றில் இன்று ஏப்ரல் 11,, 1919 - சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization ) அமைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் முதலாம் உலகப் போரை முடிவிற்கு கொண்டு வந்த வெர்செயில்ஸ் உடன்படிக்கையினைத் தொடர்ந்து லீக் ஆஃப் நேஷன்ஸ் மூலமாக ஒரு முகமையாக நிறுவப்பட்டது. இது உலக அளவில் தொழிலாளர் சிக்கல்களை நிர்வகிக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு நோக்கங்கொண்ட முகமையாகும். அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. ILO நிறுவனமானது நோபல் அமைதி விருதினை 1969 ஆம் ஆண்டு பெற்றது. தற்போது இவ்வமைப்பு 182 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. #life #lifes
messi
6.8K views
6 days ago
இன்று ஏப்ரல் 10ம் நாள் உலக ஹோமியோபதி நாள். ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன். அதாவது "ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்" (Likes are cured by likes) என்பது தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம். #life #lifes
messi
1.3K views
7 days ago
வரலாற்றில் இன்று #ஏப்ரல்_9, 1967 - அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது. முதலாவது போயிங் மாடலுக்கு பெயர் 737 -100 ஆகும் 115 பயணிகள் இருக்கை வசதி கொண்டது. இந்த முதலாவது சேவை சிகாகோ நகரத்தில் உள்ள போயிங் கம்பெனியின் விமான தளத்திலிருந்து வாஷிங்டன் நகரத்தின் பெயின் பீல்டு விமான தளத்துக்கு இரண்டரை மணி நேரத்தில் பறந்தது. #life #lifes
messi
832 views
8 days ago
#ஏப்ரல்_8, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு தினம் இன்று.(2015) ஜெயகாந்தன் தமிழ்நாட்டில் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். 1950களில் அவரது இலக்கிய வாழ்க்கையை தொடங்கினார். அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அவற்றுள் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்: ‘வாழ்விக்க வந்த காந்தி ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் • 1972 – சாஹித்ய அகாடமி விருது • 2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். • 2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார். • 2011 – ரஷ்ய விருது தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள்..அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் வரலாறு பேசும்.. #life #lifes
messi
751 views
9 days ago
#உலக_சுகாதார_தினம் #ஏப்ரல்_7 உலக சுகாதார தினம் என்பது உலக சுகாதார விழிப்புணர்வு தினமாகும், இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் நிதியுதவியின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது. 1948 இல், WHO முதல் உலக சுகாதார மாநாட்டை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஐ உலக சுகாதார தினமாக 1950 முதல் அமல்படுத்த சட்டமன்றம் முடிவு செய்தது. உலக சுகாதார தினம் WHO இன் ஸ்தாபனத்தை குறிக்கும் வகையில் நடத்தப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அமைப்பால் இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் தொடர்புடைய நாளில் சர்வதேச, பிராந்திய மற்றும் உள்ளூர் நிகழ்வுகளை WHO ஏற்பாடு செய்கிறது. உலக சுகாதார தினம் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பொது சுகாதார பிரச்சினைகளில் ஆர்வமுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, அவர்கள் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள் மற்றும் உலகளாவிய சுகாதார கவுன்சில் போன்ற ஊடக அறிக்கைகளில் தங்கள் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றனர். உலக காசநோய் தினம், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை இல்லாத நாள், உலக எய்ட்ஸ் தினம், உலக இரத்த தானம் தினம், உலக சாகஸ் நோய் தினம், உலக நோயாளி ஆகியவற்றுடன் உலக சுகாதார தினத்தால் குறிக்கப்பட்ட 11 உத்தியோகபூர்வ உலக சுகாதார பிரச்சாரங்களில் உலக சுகாதார தினம் ஒன்றாகும். பாதுகாப்பு நாள், உலக ஆண்டிமைக்ரோபியல் விழிப்புணர்வு வாரம் மற்றும் உலக ஹெபடைடிஸ் தினம். #life #lifes