Follow
நடேசன் S
@natesan9597
22,205
Posts
75,933
Followers
நடேசன் S
269 views
59 minutes ago
#ஸ்ரீதரின்_தேனிலவு” அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்: தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால். காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும். அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள். அந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது. இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார். சாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #👉வாழ்க்கை பாடங்கள்
நடேசன் S
3.5K views
1 days ago
கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பூம்புகார் திரைப்பட மனதை அதிரவைக்கும் காட்சி #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #👉வாழ்க்கை பாடங்கள்
நடேசன் S
604 views
1 days ago
#கருணாநிதியின் 64 ஆண்டுகால #திரைப்பயணம்: "தென்றலைத் தீண்டியதில்லை நான், ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்"….. என்று வரும் பராசக்தி திரைப்படத்தின் உணர்ச்சிமிகு நீதிமன்ற காட்சி, தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத அடையாளம், இன்றைய தலைமுறையினரையும் காந்தமென ஈர்க்கும் ஒன்று. "மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது" என்ற" பூம்புகார்" வசனமாகட்டும், "வட்டமிடும் கழுகு, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்," என்னும் "மனோகரா" வசனமாகட்டும், சமகாலத்திற்கு சவுக்கடி தருபவை. இந்த மயக்கும் சொற்சிலம்பங்களுக்குச் சொந்தக்காரர்தான் #கருணாநிதி. திரைத்துறையில் வசன நடைக்குப் ராஜபாட்டை அமைத்து, தனித் தமிழ் இயக்கத்தின் அடியொற்றி புதுமையைப் புகுத்திய முன்னோடி. நாதா, பிரபோ, மணாளா என்று, காதலி காதலனை அழைக்கும், பிராமணத் தமிழே, உரைநடைத் தமிழாய் விளங்கியதற்கு முற்றுப்புள்ளியாய் அமைந்தது கலைஞரின் வருகை. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், வரலாறு என எல்லா இலக்கிய வடிவங்களிலும் இயங்கியிருக்கிறார் கலைஞர் 15 வயதில் எழுதிய ‘பழனியப்பன்’ என்ற நாடகமே அவர் முதன்முதலில் எழுதிய நாடகம். திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். பின்னர் அது `நச்சுக்கோப்பை' என்ற தலைப்பில் தமிழகம் எங்கும் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 17 நாடகங்கள் எழுதியிருக்கும் கலைஞர், ஒவ்வொரு நாடகத்தையும் திரைக்கதையின் வடிவத்தில் எழுதியிருந்தது திரை வடிவத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பைக் காட்டுகிறது. சேலம் மெர்க்குரி ஸ்டூடியோஸ்-ல் முதலில் வேலைக்குச் சேர்ந்த கருணாநிதி, பின்னர் சென்னை ஜூபிட்டர் பிக்சர்ஸ்-ல் இணைந்தார். அங்கு, தமது 23வது வயதில் "ராஜகுமாரி" திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக கால்பதிக்கிறார். படத்தின் கதாநாயகன் வேறு யாருமில்லை, எம்.ஜி.ஆர் தான்! இந்த கூட்டணி, பின்னர் பல வெற்றிப் படங்களை அளித்தது. அடுத்த படமான, "அபிமன்யு"-விலேயே, மூன்று இலக்க சம்பள அந்தஸ்திற்கு உயரும் கருணாநிதி, பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி, அண்ணாவின் தலைமையில் 1949ல் உதயமான திமுக-வில் இணைகிறர். 1949 முதல், 1957ல் குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ ஆக வெற்றிபெறும் காலகட்டத்திற்குள், சினிமா உலக பயணத்தில் அழுத்தமான முத்திரை பதிக்கிறார். 1952ல்"மந்திரி குமாரி"-க்குப் பின்னர் கலைஞரின் கூர்தீட்டிய வசனங்களால் உருவான பராசக்தி, சிவாஜி கணேசனின், முதல் படம் மட்டுமல்ல. இரண்டாம் உலகப்போரை அடுத்து பர்மாவில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் பற்றிய முதல் பதிவும் அதுதான். மூட நம்பிக்கைளையும் சமூக இழிவுகளையும் சாடும் திரைப்படத்தின் பகுத்தறிவுப் பரப்புரை காரணமாக, அன்றைய காங்கிரஸ் அரசு சில காலம் திரைப்படத்திற்குத் தடை விதித்தது. தொடர்ந்து, வெளிவந்த மனேகரா, திரும்பிப்பார் ஆகியவை, பெருவெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழ் திரையுலகின் மொழி நடையை முற்றிலும் புரட்டிப்போட்டு, இலக்கிய நயம் குன்றாத நற்றமிழுக்கு ஏற்றம் தந்தது. இவரது கைவண்ணத்தில், சரித்திர கதைகளும், சமூக விழிப்புணர்வுக்காணகளங்களாக அமைந்து சமூக அக்கறையுடன், மென்மையான காதலை நவீன அழகியலுடன் வெளிபடுத்திய இந்த கால கட்டமே, கருணாநிதியின் திரையுலக பொற்காலம் எனலாம். 64 ஆண்டுகள், திரைக்கதை, வசனம், பாடல்கள் என சினிமா உலகில் வலம் வந்தாலும், திராவிட இயக்கம் கட்டமைத்த தமிழ் அடையாளத்தில் பெண்கள் பற்றிய பழமைவாத பார்வையையே, கலைஞரும் உயர்த்திப்பிடிக்கிறார் என்ற விமர்சனம் உண்டு. கற்புக்கும் கண்ணகிக்கும் எதிராக மாதவி என்ற இருமைக்கு, கலைஞரின் திரைப்படங்களும் விதிவிலக்கல்ல. நவீனகால பெண்கள், மாதவியைப்போல நாகரிகத்தை ஏற்றுக்கொண்டாலும், அதிலேயே நீடிக்காது கண்ணகியைப்போல குடும்ப விளக்காக விளங்கவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. மேலும், நாடகத்துறையில் இருந்து திரையுலகுக்கு வந்ததால், கலைஞரின் அனைத்து திரைப்படங்களிலும் வசனத்திற்கான அழுத்தம் மேலோங்கியிருந்தது. புராண இதிகாச கதைகள் மிக அதிகமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. சமகால நிகழ்வுகளை சாடி வசனம் எழுத புராண படங்களில் வழியில்லை. ஆனால் அந்த இடத்திலும் தன்னால் இயன்றதை செய்திருந்தார் வசனகர்த்தா கருணாநிதி. 'அபிமன்யூ' படத்தில் இறந்து கிடக்கும் அபிமன்யூவை பார்த்து, அபிமன்யூவின் தந்தை அர்ஜுனன் (எம்ஜிஆர் இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்தார்) "என் அன்பு தமிழ் மகன்" என்றொரு வசனம் பேசுவார். இந்த ஒற்றை வசனத்தில் அபிமன்யூவை தமிழ் மண்ணின் மைந்தனாக சித்தரித்து, வடநாட்டவர் உரிமை கொண்டாடிக்கொண்டிருந்த மஹாபாரதத்தை தமிழ்மண்ணுக்கு உரியதாக மாற்றியவர் கலைஞர். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கும் திறனை கலைஞர் ஆரம்பம் முதலே கொண்டிருந்தார் என்பதற்கு இதுவே சான்று. அதிரவைத்த வசனங்கள் அதற்கப்புறம் வந்த 'மருதநாட்டு இளவரசி' கலைஞரின் புகழை, அவரின் கதை வசனத்தை உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது. ஆனால் அதைத் தாண்டிய ஒரு பெருமையை அடுத்த படமான 'மந்திரி குமாரி' பெற்றது. படத்தின் வசனங்கள் எல்லாம் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. குறிப்பாய் கொள்ளையன் ஒருவன் தன் பக்கத்துக்கு நியாயம் ஒன்றை சொல்லும் காட்சிக்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது. அந்த வசனம் கீழ்வருமாறு: "பார்த்திபா நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக்கூடாதா?" "கொள்ளையடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா கலை!" "என்ன கொள்ளையடிப்பது கலையா?" " "ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!" "இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?" "கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.". - இந்த வசனத்தை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கருணாநிதி கொள்ளை அடிப்பவருக்கு ஆதரவாக பேசுகிறார் என்று வாதிட்டனர். அதற்கு கலைஞர் சொன்ன பதில்:” "கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?" இந்த பதில் கூறி அவர்களின் வாயை அடைத்தார். இந்த எல்லா படங்களிலும் எம்ஜிஆரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் இவர்கள் இருவரும் வளர வளர இவர்களுக்கு இடையிலான நட்பும் வளர்ந்து கொண்டே இருந்தது. பராசக்தி ஒரு சமூகப் படம். அதில் புரட்சி கருத்துக்களை தன் பேனா கொண்டு வார்த்தெடுத்தார் கலைஞர். அதே பேனா சரித்திர கதைகளுக்கு வசனம் எழுதுகையில் ராஜபார்ட்டாக மாறி சிம்மாசனத்தில் அமரும். 'மனோகரா' அப்படிப்பட்ட ஒரு படம்தான். "பொறுத்தது போதும்.. பொங்கி எழு!" என கண்ணாம்பாள் சிவாஜியை பார்த்து சொல்லும் அந்த வசனமும், அதை தொடர்ந்து நடக்கும் காட்சிகளும் கண்டு உணர்ச்சிவசப்படாதோர் மிகக்குறைவு. சிவாஜி கொண்ட பொறாமை இப்படி எழுச்சிபொங்கும் எண்ணங்கள், மகிழ்ச்சி தரும் காதல் வார்த்தைகள் என எல்லா வகையான உணர்வுகளையும் திரைப்பட வசனங்களாக மாற்றும் கலையை கலைஞர் கற்றிருந்தார். குறிப்பாக 'மனோகரா' படத்தை பற்றி சிவாஜி குறிப்பிடுகையில், "படம் முழுக்க நான் நன்றாக நடித்திருந்தாலும் கூட அந்த இறுதிக்காட்சியில் "பொறுத்தது போதும் பொங்கியெழு" என்று ஒரே ஒரு வசனம் பேசி மொத்த கைத்தட்டலையும் கண்ணாம்பா அவர்கள் தட்டிச்சென்றார். உண்மையில் அந்தக் காட்சியை நான் பார்க்கும்பொழுது நான் ஒரு பெண்ணாக இருந்து இந்தக் காட்சியில் நடித்திருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவ்வளவு உணர்ச்சிமிக்க வசனம் அது" என குறிப்பிட்டார். இதில் இன்னொரு ஆச்சர்யம் இதே 'மனோகரா' மேடை நாடகமாக இருந்தபொழுது அதில் கண்ணாம்பா வேடத்தில் நடித்தவர் சிவாஜி கணேசன்தான். ஆனால் அந்த நாடகத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் இல்லை என்பதால் இந்த பொறுத்தது போதும் பொங்கியெழு வசனமும் அப்போது இல்லை. சிவாஜியையே பொறாமை கொள்ள வைத்த வார்த்தைகள் அவை. வசனங்களால் தெறிக்கவிட்ட 'திரைக் கலைஞர்' கருணாநிதி! "முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மும்முரசு கொட்டி, முச்சங்கம் வளர்த்து, முக்கொடியின் நிழலிலே முத்தமிழை காப்பாற்றும் மூவேந்தர் பெருமையினை மூளியாக்க முடி தறிந்த மன்னவரே!!" என மு வரிசை வார்த்தைகளால் கண்ணகி, பாண்டிய மன்னனின் முன்னணியில் தன் கதை சொல்லும் வசனத்தை எழுதினார் மு.கருணாநிதி. 'பூம்புகார்' என்கிற அந்த காவியம் மூலைமுடுக்கெல்லாம் மு.க-வின் திறனை மீண்டும் பறைசாற்றியது. கையில் தனிச்சிலம்புடன் அன்று பாண்டிய அரசவையில் நுழைந்த கண்ணகி பின்னர் ஒருநாள் சென்னையின் மையத்தில் சிலையானாள். "நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழிய பாண்டியனே!! உனது நாட்டில் எதற்குப்பெயர் நீதி? நல்லார் வகுத்ததா நீதி? அல்ல அல்ல வல்லான் வகுத்ததே இங்கு நீதி" வசனமும், "ஆயிரமாயிரம் யானை சேனைகள் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலைகுனியாது படைநடத்தும் உன் வீரம் எங்கே? கம்பீரம் எங்கே? வெற்றித் திருப்பார்வை எங்கே?" என்கிற கண்ணகியின் கேள்வியும் நீங்காது நிலைபெற்று வாழ்ந்திருக்கும். தான் எழுதிய வழியிலே தன் பாதையை வடிவமைத்துக்கொண்டார் கலைஞர். இறுதியாக 'மந்திரி குமாரி' படத்தில் எம்ஜிஆர் கொலைக்களத்தில் நின்று கொண்டிருக்கும்போது பேசும் ஒரு வசனத்தை இன்றைய என் ஆசையாக கொண்டு எழுதுகிறேன். "நீ கடைசியாக சொல்ல நினைப்பது?" "கடைசியாகவா? யாரிடத்தில் சொல்வது? என் உயிரை குடிக்க துடித்துக்கொண்டிருக்கும் சாவிடத்தில் சொல்வதா? என் கழுத்தை நெருக்க காத்திருக்கும் இந்தக் கத்தியிடத்தில் சொல்வதா? அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைக் கண்டு ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா? யாரிடத்தில் சொன்னாலும் சரி.. யார் கேட்டாலும் சரி..என் இதயத் துடிப்புகள் கடைசி நேரத்திலாவது ஆவேசமாக துடித்து ஓயட்டும். என் கண்களிலே ஒருமுறை கனல் வீசி பின்பு அணைந்து போகட்டும். என் ரத்த ஓட்டம் சூடேறி பின்னர் சில்லிட்டு போகட்டும்..." முக்கிய திரைப்படங்கள் படம் ஆண்டு முதல் படம் - ராஜகுமாரி 1947 கடைசி படம் பொன்னர் சங்கர் 2011 மருத நாட்டு இளவரசி 1950 மந்திரி குமரி 1950 பராசக்தி 1952 மணோகரா 1952 பணம் 1952 திரும்பிப் பார் 1953 மலைக்கள்ளன் 1954 #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #👉வாழ்க்கை பாடங்கள்
நடேசன் S
802 views
1 days ago
அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி.. வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்தது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பு வாய்ந்தது. அம்மனுக்கு உகந்த ஆடிவெள்ளியின் சிறப்புகள் சிலவற்றை பார்க்கலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன்களை தரும். பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். #ஆடி வெள்ளி