ஃபாலோவ்
Seeman - சீமான்
@seemanofficial
496
போஸ்ட்
31,343
பின்தொடர்பவர்கள்
Seeman - சீமான்
991 காட்சிகள்
சீனாவில் நடந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக வாகையர் தொடரில் ஆடவருக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டுவீரர் அன்புமகன் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம்,  அடைந்தேன். உலக வாகையர் தொடரில் முதலிடம் பிடித்ததன்  மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கம் வென்ற வீரர்  என்ற பெருமையை அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் பெற்றுள்ளது பெருமகிழ்வைத் தருகின்றது. அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் மேலும், பல பன்னாட்டு போட்டிகளில் வென்று  சாதனை  புரிவதன் மூலம், பிறந்த தமிழ் மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்க்க வேண்டுமென விழைகிறேன்.  அன்புமகன் ஆனந்தகுமார் வேல்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #சீமான் அறிக்கை
Seeman - சீமான்
863 காட்சிகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (#TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, #நாம்தமிழர்கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20-09-2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. #Reform_TNPSC #நாம்தமிழர்கட்சி
Seeman - சீமான்
3.6K காட்சிகள்
நகைச்சுவை நடிகர், என் பேரன்பிற்குரிய தம்பி ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மக்களை மகிழ்விக்கும் தன்னுடைய தனித்துவமிக்க நகைச்சுவை திறனால் சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்ததோடு, பெருங்கனவோடும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடும் தமிழ்த்திரையில் சாதித்துக்கொண்டிருந்த வேளையில், அவையனைத்தும் பொய்த்து போகும் வகையில் தம்பி ரோபோ சங்கரின் மறைவு பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட உடல்நலக்குறைவிலிருந்து தம் உள உறுதியால் மீண்டு வந்த தம்பி ரோபோ சங்கர் அவர்கள், மீண்டும் பழையபடி தம்  கலைப்பணியைத் தொடர்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தம்பியின் மறைவு என்னை நிலைகுலைய செய்துள்ளது. தம்பி ரோபோ சங்கர் அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவுகள், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். அன்புத்தம்பி ரோபோ சங்கர் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #😭நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்😢
Seeman - சீமான்
936 காட்சிகள்
நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், அன்புத்தம்பி இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக அன்புச்சகோதரர் இராமலிங்கம் கார்த்தி அவர்கள் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது. நீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்! நீரில் எரியும் அடுப்பு எனும் அரிய கண்டுபிடிப்பினை மனித குல பயன்பாட்டிற்குத் தந்துள்ள HONC நிறுவனர் அன்பிற்குரிய  சகோதரர் இராமலிங்கம் கார்த்தி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள பேரன்பிற்குரிய அண்ணன், நடிகர் சரத்குமார் மற்றும் இக்கண்டுபிடிப்பில் பங்காற்றிய ஆய்வுக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நம்தமிழர்கட்சி  #HONCGas #GreenHydrogen #நாம்தமிழர்கட்சி
Seeman - சீமான்
818 காட்சிகள்
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்! சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப்போராடிய பெருந்தமிழர்! ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை! சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்! நம்முடைய தாத்தா #இமானுவேல்சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்! சமூகநீதிப் போராளி தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! #நாம்தமிழர்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி  #ImmanuelSekaranar | #SocialJusticeWarrior #EqualityForAll | #EndCasteDiscrimination #TamilPride | #JusticeAndEquality #RememberingImmanuelSekaran #AntiUntouchability | #UnityForEquality #NaamTamilarKatchi | #NTK | #Seeman  #TamilSocialReformer | #InspiringLeader #StandForJustice | #FightForEquality #📢 செப்டம்பர் 11 முக்கிய தகவல்🤗
Seeman - சீமான்
1K காட்சிகள்
‘தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப் பயனெனக் கருதி வாழ்ந்து, செந்தமிழ் தந்த செம்மாந்த புகழோடு மறைந்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று! பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்! இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்! தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட பெருந்தமிழர் அப்பா நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தலையாயக் கடமையாகும். தமிழ்க்கடல், இலக்கியப் பேராற்றல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம்முடைய தமிழ்ப்புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! https://x.com/Seeman4TN/status/1957352641282941278 - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர்கட்சி
Seeman - சீமான்
938 காட்சிகள்
பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை திமுக அரசு காவல்துறையினர் மூலம் இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, நகரின் 8க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக சிறைபடுத்தி அடைத்துவைத்துள்ளது. உறவுகளின் நிலை அறியவும்,  உடனடியாக விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் 14-08-2025 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள மண்டபத்திற்கு சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். https://www.youtube.com/live/MsBLKg1PQic?si=H2-8-9hyOa6MM7DD https://youtu.be/dmZEaKLyYiM?si=YwWRgY4f9Kf_a9j8 #தூய்மைப்பணியாளர்களுடன்_சீமான் #Sanitaryworkersprotest | #SanitaryWorkers #ChennaiCorporation | #PoliceBrutality #🕊️சுதந்திர தின வாழ்த்துக்கள்! 🎉
Seeman - சீமான்
1.5K காட்சிகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்கத் துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @AIADMK @EPSTamilNadu #🔴அதிமுக உண்ணாவிரத போராட்டம்❌
See other profiles for amazing content