ஃபாலோவ்
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
19,585
போஸ்ட்
89,924
பின்தொடர்பவர்கள்
ல.செந்தில் ராஜ்
1.4K காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
🌹இனிய சிவனுக்கு அன்பு செய்யாதவரை காணவும் அவரோடு பேசவும் கூடாது என கூறுவது இப்பதிகம்* .அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 * எம்பெருமானை வணங்காதவர்கள் *எம்பெருமானை இழிவாக பேசுபவர்கள் பேய்களே* இதோ இப்பாடல் இது திருமாளிகைத்தேவர் ஒன்பதாவது திருமுறையில் அருளியது இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தி னேற்கு மணங்கொள் சீர்த்தில்லை வாணன் மணவடியார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறல் பிண்டப் பிணங்களைக் காணா கண்: வாய் பேசாது அப்பேய்க ளோடே. அடியார்களை தவிர மற்றவர்களோடு இணங்காத ஈசனாகிய சிவபெருமான் மேல் அன்பு கொண்ட மனமுடையவனான எனக்கு ஓர் உறுதி உண்டு. மங்கலம் தரும் சிறந்த தில்லையம்பலவனுடைய மணம் மிக்க அடியார்களின் வள்ளன்மை போன்ற குணங்களை எடுத்து சொல்லாதவர் வாய் மேன்மையற்ற துவாரம் உள்ள வெறுவாய். அவர்கள் உடல் சுமந்த நடைபிணங்கள். என் கண்கள் அவர்களைக் காணமாட்டா. என் வாய் அப்பெய்களோடு பேசாது என்கிறார் திருமாளிகைத்தேவர். மேற்கண்ட பாடலில் அடியார்களின் பெருமையை பேசாதவர்களை பிணங்கள் என்கிறார் இரண்டாவது பாடலில் மிகவும் அழகாக எம்பெருமானை பற்றி இழிவான சொற்களை பேசும் ஏவலர்களை அவர்களை நான் காணமாட்டேன் அந்த பேய்களோடு பேசமாட்டேன். எம்பெருமானை இழிவாக பேசும் அனைவரும் பேய்கள் என்கிறார். ☘️🌺☘️🌺☘️🌺☘️🌺☘️ எட்டுரு விரவி என்னை ஆண்டவன், ஈண்டு சோதி விட்டிலங் கலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண் ; வாய் பேசாதப் பேய்க ளோடே. *பொருள்* நிலம் நீர் தீ காற்று வானம் கதிரவன் சந்திரன் ஆன்மா எனப்படும் எட்டு உருவங்களில் இணைந்து நின்று என்னை ஆட்கொண்டவன் ஈசன். திரண்ட சோதிமயமாய் ஒளிவிளிட்டு பிரகாசிப்பவன். மலர் மாலை அணிந்தவன். தில்லை பதிக்கு வேந்தன். அவனை சேராத தீயவர்கள், இழிவான சொற்களை பேசும் ஏவலர்கள். கொடிய வார்த்தை பேசி சிவநெறிக்கு புறம்பாக திரிபவர்கள். அவர்களை என் கண்கள் காண மாட்டா. என் வாய் அந்த பேய்களோடு பேசாது என்கிறார் திருமாளிகைத்தேவர். ஆகையால் அடியார்களாகிய நாம் ஈசனை வணங்காதவர்களுடன், ஈசனை நிந்தனை செய்பவர்களோடு பேசவும் கூடாது அவர்கள் பேய்கள் என நினைத்து ஒதுங்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து அல்ல அருளாளர்களின் நெஞ்சுரம். அடியார்களாகிய நமக்கும் அது வேண்டும் பின்பற்ற வேண்டும் 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #ஓம் நமசிவாய #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில்
ல.செந்தில் ராஜ்
2.6K காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
முருகா நீ வரவேண்டும்! முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்! முருகா நீ வரவேண்டும்! நினைத்த போது நீ வரவேண்டும்! நீல எழில் மயில் மேல் அமர் வேலா! நினைத்த போது நீ வரவேண்டும்! உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! நினைத்த போது நீ வரவேண்டும்! கலியுக தெய்வம் கந்தா நீயே! கருணையின் விளக்கமும் கடம்பா நீயே! மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில் மாயோன் மருகா முருகா என்றே நினைத்த போது நீ வரவேண்டும்! முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே அன்பர்க்கருள் புரியும் அழகு நேயன்! அருளை வாரித் தரும் கார்த்திகேயன்! மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்! #மயில்_வாஹனா_வள்ளி_மனமோஹனா_சரவணபவா_வரமருள்வாய்வா! #முருகாசரணம் 🐓🦚 #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் #🕉️ஓம் முருகா
ல.செந்தில் ராஜ்
1.5K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? அதை தெரியாமகூட கீழ போட்றாதீங்க. கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள். புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க… புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க… சமையலறையில் பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம். நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும். மொபைல் நீரில் விழுந்தால்: செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது. நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது. ஆவணங்கள்: வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள். துணிகள் காயவைக்க: நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும். ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும். கத்தி கூர்மையாக: பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும். துர்நாற்றம்: எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும். வளர்ப்பு பிராணிகள்: நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள். நகைகள்: பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும். அலங்காரப் பொருட்கள்: வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும். ஜன்னல்கள்: நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும். ஷூ துர்நாற்றம்: பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும குறிப்பு: இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும். Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம். நன்மைக்காக.., ✍️ #📦New Products #🤑Limited Stocks #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
ல.செந்தில் ராஜ்
2.6K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
விளாம் பழத்தை கொதிக்க வைத்து ஆறிய பின் தொடர்ந்து மூன்று தினங்கள் குடித்து வரும்போது.. உடலில் உள்ள இடுமருந்து,.. வசிய மருந்து கைவிஷம் செயல் இழந்து போகும். தொடர்ந்து ஒரு நாள் குடல் சுத்தி செய்யும்போது கை விஷத்தினால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.. #உடல் நலம் #உடல் #உடல் நலம் #உடல் நலம் #உடல் நலம்
See other profiles for amazing content