Follow
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
21,058
Posts
106,809
Followers
ல.செந்தில் ராஜ்
607 views
5 hours ago
🔥 இனிய ஈசன் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறார் நற்றுணையாவது அண்ணாமலையாரே குழந்தையை பெற்ற தாய்மார்களுக்குத் தெரியும்...குழந்தைக்கு பால் தரவில்லை என்றால், அந்தப் பால் மார்பில் கட்டிக் கொள்ளும். அந்த கட்டியையை பின் அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற முடியும். அன்பும் அது போலத்தான், வெளிபடுத்தாத அன்பு உடலுக்குள் நஞ்சாகி விடும். கடவுள் அளப்பெரும் அன்புடையவன். அவன் அந்த அன்பை யாரிடம் போய் தருவான்? பக்தர்களை தேடி தேடித் போய் தன் கருணையை பொழிவான். மீனவன் வலை வீசி மீனைப் பிடிப்பதைப் போல, இறைவன் பக்தர்களை தேடிக் கொண்டு இருக்கிறான் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார். பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். திருவாசகம் எட்டாம் திருமுறையில் 008வதாக மாணிக்கவாசகர் திருஅண்ணாமலையில் அருளிச்செய்த நாடகத்தால் உன்னடியார் போல் என்று தொடங்கும் திருவம்மானை 20பாடல்களில் 2வது பாடல். பொருள்: பாரார் = பாரில், இந்த உலகில், உள்ளவர்கள் விசும்புள்ளார் = விசும்பு என்றால் வானம். வானுலகில் உள்ளவர்கள் பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள் புறத்தார் = இதற்குப் புறத்தும் உள்ள உலகில் உள்ளவர்கள் ஆராலுங் = யாராலும் காண்டற் கரியான் = காண்பதற்கு அரியவன் எமக்கெளிய = எமக்கு எளிய பேராளன் = பெரிய அன்பு உள்ளவன் தென்னன் = தென்னாடுடையவன் பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன் பிச்சேற்றி = நமக்கு அவன் மேல் பித்தை ஏற்றி வாரா = திரும்பி இந்த உலகத்திருக்கு வந்து பிறக்காமல் இருக்கும் (திரும்பி வரமால்) வழியருளி = வழியை தந்து அருளி வந்தென் = அவனே வந்து உளம்புகுந்த = என் உள்ளம் புகுந்து ஆரா அமுதாய் = தீராத அமுதமாய் அலைகடல்வாய் = அலை கடலில் மீன்விசிறும் = மீன் பிடிக்கும் மீனவன் போல பேராசை வாரியனைப் = பேராசைக் காரனை (பக்தர்களை வல போட்டு பிடிக்கும்) பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை (சொக்கட்டான் மாதிரி ஒரு ஆட்டம்) பாடி ஆடுவோம் 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் 🦜
ல.செந்தில் ராஜ்
678 views
5 hours ago
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁கல்லால் நிழலண்ணல் கரியை உரிசெய்த 🍁வல்லான் மதில்மூன்றை மாய்த்த மலைவில்லான் 🍁எல்லாம் உடையெம்மான் இராமேச் சுரம்மேயான் 🍁சொல்லார் தமிழ்பாடித் தொழுவார் துணைதானே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : கல்லால மரத்தடியில் வீற்றிருக்கும் ஐயன் !! யானையின் தோலை உரித்த வல்லவன் !! முப்புரங்களை அழித்த மேருவில் ஏந்தியவன் !! எல்லா உலகங்களையும் உடைய எம்பெருமான் !! ராமேஸ்வரத்தில் உறைகின்றவன் !! தேவாரம் திருவாசகம் பாடி வழிபடும் பக்தர்களுக்கு அப்பெருமான் துணை ஆவான் !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
915 views
6 hours ago
" நீ நல்ல இருக்கணும் !! " என்று நீ மட்டுமே நினைக்க முடியும் !! வாழ்த்திக்கொள்ளவும் முடியும் !! எனவே நீயே முதலில் உன்னை வாழ்த்திக்கொள் !! மானசீகமாக !! ஆத்மார்த்திமாக !! யாரின் வாழ்த்தும் தராத ஏற்றத்தையும் !! மாற்றத்தையும் !! உன் வாழ்த்து உனக்கு தரும் .. காரணம் உன்னை நீ வாழ்த்தும் வாழ்த்து .. முதலில் உன் எண்ணமாக உன்னை ஆண்டு .. பின்னே வாழ்த்தும்படி உன் வாழ்வு மாறுவதை மானசீகமாக அனுபவித்து பார்த்த பின்னே தான் .. அது வார்த்தையாக உங்களிடம் இருந்து .. உங்கள் காதுகளுக்கு கேட்க்கும்படி வெளிப்படுகின்றது .. எண்ணியதை !! எண்ணியவாறே அருளும் இறை !! நம் எண்ணம் நாம் வளமாக !! நலமாக !! வாழ என்ற எண்ணத்தில் வெளிப்பட .. அவ்வெண்ணத்தை அறிந்த இறையோ .. நம் எண்ணம்போல நம்மை வாழ்விக்கும் !! உங்கள் நலத்தில் , வளத்தில் உங்களைவிட அக்கறையும் , ஆர்வமும் கொண்ட படைப்புகள் வெளியே இல்லை !! மற்ற எது உங்களை வாழ்த்தினாலும் அந்த வாழ்த்து ஓர் மேம்போக்கான வாழ்த்தாகவே இருக்கும் .. அது நீங்கள் உங்களை வாழ்த்திக்கொள்ள .. தட்டிக்கொடுத்துக்கொள்ள .. மற்றம் நிகழும் என்பதே மெய் வாழ்த்துகள் உங்களை நீங்களே வாழ்த்திக்கொள்ளுங்கள் !! உங்களை வாழ்வித்துக்கொண்டு இருக்கும் இறை அந்த வாழ்த்தை வாழ்க்கை ஆக்கும் .. திருச்சிற்றம்பலம் அப்பன் ஆசிகளுடன் வளமோடும் நலமோடும் பக்தியோடு வணங்கி வாழ்வாங்கு வாழ்க வாழ்க.!!! #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
2.1K views
1 days ago
இந்த ஊர், தஞ்சாவூர் டு கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார்10கிமி உள்ளது. திட்டை கிராமம் என்று கேட்டாலே எல்லோரும் வழி சொல்வார்கள். கோபுரத்தில் லிங்கத்திற்கு நேர் மேலாக "சந்திரகாந்தக்கல்" வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த சந்திரகாந்தகல் காற்றிலிலுள்ள ஈரபதத்தை உள்வாங்கி தண்ணீராக மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளது. அப்படி உறிஞ்சப்படும் நீர் இயற்கையாக சிவலிங்கத்தின் மேல் விழும்படியாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய அதிசயம். #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #👌இந்த நாள் நல்ல நாள்🤝
ல.செந்தில் ராஜ்
1.3K views
3 days ago
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ஏப்ரல் 2026-ல் நீக்கப்பட்டார். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டதற்காக தான் மௌனமாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, மற்றும் ராகவ் சத்தா தனது நீக்கம் குறித்தும் கட்சித் தலைமை மீதான அதிருப்தி குறித்தும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்