ஃபாலோவ்
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
20,785
போஸ்ட்
103,407
பின்தொடர்பவர்கள்
ல.செந்தில் ராஜ்
626 காட்சிகள்
🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
618 காட்சிகள்
*போக்கும் வரவும்.. !*புணர்வுமிலாப் புண்ணியனே" 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் "போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே" என்று இறைவனை பாடுகிறார். இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை சுகம் மற்றும் பாதுகாப்பைத் தேடும் வேட்கையே. எதையெல்லாம் சுகம் தரும், எதெல்லாம் பாதுகாப்பைத் தரும் என்று மனம் எண்ணுகிறதோ அதை அடைய மனம் ஏங்குகிறது. வீடு, பணம் சொத்து சுகம் மற்றும் பாதுகாப்பைத் தரும் என்று சிலர் எண்ணுகின்றனர். மனைவி, மக்கள், உறவு, நட்பு சுகம், பாதுகாப்பைத் தரும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் நிரந்தரமான சுகம் என்பது உலகில் உள்ள எந்த பொருளிலும் கிடைப்பதே இல்லை. அந்த நிரந்தரமான சுகம் தன்னிலேயே இருக்கிறது என்பதை மனிதன் உணர்வதே இல்லை. சுகம் என்பது ஆத்மாவின் சொரூபமே. மனம் வெளியே உள்ள பொருட்களில் கூடி அனுபவிக்கும் போது துக்கத்தை அடைகிறது. மனம் மீண்டும் தன்னுடைய உண்மையான சொரூப சுகத்தை நாடித் திரும்புகிறது. இது மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சுகமாக இருப்பதாக நினைக்கிறோம் ஆனால் சிறிது நேரத்திலேயே போரடிப்பதாக உணர்கிறோம். தூக்கம், சமாதி, மூர்ச்சை போன்றவற்றிலும் எப்போது மனம் அந்தர்முகமாகிறதோ அப்போதும் மனம் ஆத்ம சுகத்தை அனுபவிக்கிறது. தூக்கத்தில் எதையும் செய்யாவிட்டாலும் சுகமாக தூக்கினேன் என்கிறோம். இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளிக் கிளம்புவதும் மீண்டும் ஆத்மாவை அடைவதும் போக்கும் வரவுமாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு ஞானியின் மனம் பிரம்மத்தை விட்டு என்றுமே அகலுவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ உலக விஷயத்தில் ஈடுபட்டு துக்கப்படுகிறது. சிறிது நேரம் பிரும்மத்திற்கு திரும்பி சுகமடைகிறது. இறைவனை உணர்ந்தவர்கள் உலக பொருட்கள் சுகம் மற்றும் பாதுகாப்பை தரும் என்ற மாயையிலிருந்து விடுபடுவார்கள். மலை போன்ற சொத்துக்களையும் துச்சம் என்று கருதி அகன்ற பட்டிணத்தார் போன்ற பல மகான்களை இந்த உலகம் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. நம்மால் அந்த நிலைக்கு உயர முடியாது போனாலும் ஈசனது கருணையால் மாணிக்கவாசகர் காட்டிய வழியில் போக்கும் வரவும் புணர்வுமிலா மனதைப் பெற்று நிலையான ஆத்ம சுகத்தை பெற வேண்டுவோம் ஓம் நமச்சிவாய..! *"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"* 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் 🦜 #💐Have a nice day🤩
ல.செந்தில் ராஜ்
701 காட்சிகள்
💐💐🔔🙏ஓம் நமசிவாய வாழ்க🙏🔔💐💐 "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்,"! எவ்வுயிர்களாயினும் தம் அறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்,அவனை மனத்தால் உணர்வதும்,மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானது அல்லவாம், அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்,அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி, பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம்,அளவிட இயலாத ஒளியினை உடையவனாம்,அரியவன்,வேணியன்,சோதியன் இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று சேக்கிழார் பெருமான் முடிக்கிறார், அதன்படி இன்று மாலை வேளையில் பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயம் சென்று அவன் தாள் பணிந்து வணங்கி வழிபட்டு வாழ்வை வளப்படுத்திக் கொள்வதும்,அவன் கருணையால் நீடு வாழ நல்லருள் பெறும் பாக்கியங்களைப் பெறுவோம் என்று பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் வாழிய நலம், 💐💐💐💐💐🙏💐💐💐💐💐 💐💐🔔🙏ஓம் நமசிவாய வாழ்க🙏🔔💐💐 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
11.9K காட்சிகள்
சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி (சிவனின் 108 போற்றி) ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி ஓம் சம்பவே போற்றி ஓம் பினாகினே போற்றி ஓம் சசிசேகராய போற்றி ஓம் வாம தேவாய போற்றி ஓம் விரூபக்ஷாய போற்றி ஓம் கபர்தினே போற்றி ஓம் நீலலோஹிதாய போற்றி ஓம் சங்கராய போற்றி ஓம் சூலபாணயே போற்றி ஓம் கட்வாங்கினே போற்றி ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி ஓம் சிபி விஷ்டாய போற்றி ஓம் அம்பிகா நாதாய போற்றி ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி ஓம் பக்த வத்ஸலாய போற்றி ஓம் பவாய போற்றி ஓம் சர்வாய போற்றி ஓம் திரிலோகேசாய போற்றி ஓம் சிதிகண்டாய போற்றி ஓம் சிவாப்ரியாய போற்றி ஓம் உக்ராய போற்றி ஓம் கபாலினே போற்றி ஓம் காமாரயே போற்றி ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி ஓம் கங்காதராய போற்றி ஓம் லலாடாக்ஷாய போற்றி ஓம் காலகாளாய போற்றி ஓம் க்ருபாநிதயே போற்றி ஓம் பீமாய போற்றி ஓம் பரசுஹஸ்தாய போற்றி ஓம் ம்ருகபாணயே போற்றி ஓம் ஜடாதராய போற்றி ஓம் கைலாஸவாஸிநே போற்றி ஓம் கவசிநே போற்றி ஓம் கடோராய போற்றி ஓம் திரிபுராந்தகாய போற்றி ஓம் வ்ருஷாங்காய போற்றி ஓம் வ்ருஷபாரூடாய போற்றி ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி ஓம் ஸாமப்ரியாய போற்றி ஓம் ஸ்வரமயாய போற்றி ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி ஓம் அநீச்வராய போற்றி ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி ஓம் பரமாத்மநே போற்றி ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி ஓம் ஹவிஷே போற்றி ஓம் யக்ஞ மயாய போற்றி ஓம் ஸோமாய போற்றி ஓம் பஞ்வக்த்ராய போற்றி ஓம் ஸதாசிவாய போற்றி ஓம் விச்வேச்வராய போற்றி ஓம் வீரபத்ராய போற்றி ஓம் கணநாதாய போற்றி ஓம் ப்ரஜாபதயே போற்றி ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி ஓம் துர்தர்ஷாய போற்றி ஓம் கிரீசாய போற்றி ஓம் கிரிசாய போற்றி ஓம் அநகாய போற்றி ஓம் புஜங்கபூஷணாய போற்றி ஓம் பர்க்காய போற்றி ஓம் கிரிதன்வநே போற்றி ஓம் கிரிப்ரியாய போற்றி ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி ஓம் புராராதயே போற்றி ஓம் மகவதே போற்றி ஓம் ப்ரமதாதிபாய போற்றி ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி ஓம் ஜகத்வ் யாபினே போற்றி ஓம் ஜகத் குரவே போற்றி ஓம் வ்யோமகேசாய போற்றி ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி ஓம் சாருவிக்ரமாய போற்றி ஓம் ருத்ராய போற்றி ஓம் பூதபூதயே போற்றி ஓம் ஸ்தாணவே போற்றி ஓம் அஹிர் புதன்யாய போற்றி ஓம் திகம்பராய போற்றி ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி ஓம் அநேகாத்மநே போற்றி ஓம் ஸாத்விகாய போற்றி ஓம் சுத்த விக்ரஹாய போற்றி ஓம் சாச்வதாய போற்றி ஓம் கண்டபரசவே போற்றி ஓம் அஜாய போற்றி ஓம் பாசவிமோசகாய போற்றி ஓம் ம்ருடாய போற்றி ஓம் பசுபதயே போற்றி ஓம் தேவாய போற்றி ஓம் மஹாதேவாய போற்றி ஓம் அவ்யயாயே போற்றி ஓம் ஹரயே போற்றி ஓம் பூஷதந்தபிதே போற்றி ஓம் அவ்யக்ராய போற்றி ஓம் பகதேத்ரபிதே போற்றி ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி ஓம் ஹராய போற்றி ஓம் அவ்யக்தாய போற்றி ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி ஓம் ஸஹஸ்ரபதே போற்றி ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி ஓம் அனந்தாய போற்றி ஓம் தாரகாய போற்றி ஓம் பரமேஸ்வராய போற்றி #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
537 காட்சிகள்
ஓம்... நமசிவாய...🙏 மௌனத்தின் மத்தியில் முழங்கும் மந்திரமே; மாயையின் மறைவில் மின்னும் சத்தியமே; அண்டத்தின் இதயத் துடிப்பாய் திகழும் ஆதியே; அருளால் உயிர்க்குள் ஒளிரும் ஆனந்த ஜோதியே... போற்றி... 🙏 கங்கை தரித்த சடையில் கருணை பெருக்காய், காலனை வென்ற கண்களில் கருணை விளக்காய்; நீலக்கண்டா... நஞ்சை உட்கொண்டு எமைக் காத்தாய், நெஞ்சம் முழுதும் “நமசிவாய” என நாதம் கொண்டாய்...! பூதநாதா பயமென்னும் இருள் அறுமே, நின்னாமம் உச்சரித்திடில்; பொன்னான பாதம் நினைத்திடில் புண்ணியம் பெருகுமே...! ஆதியும் அந்தமும் ஆனந்தம் ஆக்கிடும் ஈசா; அன்பின் வழியில் நடத்தும் அப்பனே மகாதேவா... சரணம்...🙏 (एम् एम् नाडार) #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻
ல.செந்தில் ராஜ்
687 காட்சிகள்
*_ 🌹இனிய ஈசன்..._* எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 அன்பின் உறைவிடமான பரமாத்மாவும் நீயே...! அகோரியாய் வாழும் சுடுகாட்டு பித்தனும் நீயே ..! தாண்டவம் ஆடும் சடையனும் நீயே ..! தாள்பணிந்தாரை ஆட்கொள்ளும் தலைவனும் நீயே...! நாதியற்றவர்களின் நாதனும் நீயே...! நயவஞ்சகர்களின் நரகனும் நீயே...! பிட்டுக்கு மண் சுமந்த பெருமாளும் நீயே...! பிறையை தரித்தருளும் பிறைசூடனும் நீயே..! நெற்றிக் கண்ணைக் கொண்ட ருத்திரனும் நீயே...! தேவர்களுக்காக நஞ்சுண்ட நீலகண்டனும் நீயே..! சக்திக்கு சரிபாதி வழங்கிய அர்த்தநாதீஸ்வரன் நீயே...! சாம்பலில் குளிக்கும் சாம்ப சிவனும் நீயே ...! மானசீகமாக மனதில் நான் வணங்கும் சுயம்பு லிங்கமும் நீயே..! சிலையாய் நான் துதிக்கும் நடராஜரும் நீயே..! விதி விளையாடும் போது மதியாய் வருவாய்..! மதியும் தோற்கும் வேளை கர்மவினைப் பயனையும் தருவாய்..! உன்னை தொழுவோர்க்கு மோட்சங்கள் உண்டு...! உன்னால் பலருக்கு சாபவிமோச்சனங்களும் உண்டு...! பாவத்தை அழிக்கும் மாமுனியே..! முக்திக்கு வழி வகுக்கும் உன் பணியே..! அன்பே சிவனே - எம் தாயுமானவன் நீயே...!.. நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
See other profiles for amazing content