Follow
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
21,030
Posts
108,166
Followers
ல.செந்தில் ராஜ்
516 views
2 hours ago
#_சிவாய_நம #_அகத்தியர்_அருள்_வாக்கு கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா. அகத்தியப் பெருமானே! எல்லாரையும் ஆசிர்வதித்து, ஒவ்வொருவருடைய வேண்டுதலையும் நிறைவேற்றி வையுங்கள்!🙇🏽‍♂️🙏🏽 #அகத்தியர் தாத்தா #அகத்தியர் #அகத்தியர் பாடல் #அகத்தியர் சித்தர் #அகத்தியர் அருவி # அகத்தியர் மலை பயணம் ✨⚜️🙏🏻
ல.செந்தில் ராஜ்
469 views
8 hours ago
🪷கைலாயமலை மேல் குடியிருக்கும் கருணைக்கடல் பரமேஸ்வரா !🪷 🪷கங்கையை ஜடையில் தாங்கிய கடவுள் நீயே மகேஸ்வரா நீலக்கண்ட நாதன் நீ நினைத்தவுடன் காப்பவனே!🪷 🪷அண்ணாமலையாய் அருள் புரியும் அருணாச்சல சிவ பரமனே திரிசூலம் ஏந்தி உலகம் காக்கும் திரிபுரந்தகர் தேவனே!🪷 🪷உள்ளம் முழுதும் உன்னை நினைத்தால் உயிர் எல்லாம் ஆனந்தமே!🪷 🪷ஓம் நமசிவாயா… ஓம் நமசிவாயா… உயிர்க்கெல்லாம் ஆதாரம் நீயே ஓம் சிவாயா…. 🪷 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
2.6K views
16 hours ago
"நீரார் சடையானை நித்தம் ஏத்துவார் தீரா வினைகளும் தீர்ந்திடும் நிச்சயம்." ✨ சிவனை போற்றும் நாவில் நன்மை பெருகும்; சிவனை நம்பும் மனதில் துன்பம் குறையும். #சிவபெருமான் #தேவாரம் #நமச்சிவாய #நெருப்பு, நீர், ஆகாயம்… அனைத்திலும் வாழும் சிவன்”🔱 உலகத்தில் எத்தனை கோடி கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் சிவலிங்கங்களில் ஒரு தனி அதிசயம் உள்ளது… 🔥 திருவண்ணாமலையில் சிவன் நெருப்பாக ஜோதி தரிசனம் தருகிறார் 💧 திருவானைக்காவில் சிவன் எப்போதும் தண்ணீரில் வாழ்கிறார் 🌌 சிதம்பரத்தில் சிவன் காணாத ஆகாயமாக இருக்கிறார் 🙏 ராமேஸ்வரத்தில் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் 👉 இது சாதாரணம் இல்லை… இது பஞ்சபூதங்களின் வடிவில் வாழும் பரமசிவன்! நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் புரிந்துகொள்வார்கள் #Followme 🙏 ஓம் நமசிவாய! #சிவன் #சிவலிங்கம் #ஓம்நமசிவாய #திருவண்ணாமலை #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
ல.செந்தில் ராஜ்
1.1K views
16 hours ago
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁நெஞ்சிற்கிறி மிக்கார்திரு நீற்றைப்புனைந் துய்யார் 🍁வெஞ்சொற்களை விடுமின்பொழில் விரிவக்கரை யானை3 🍁வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச் 🍁செஞ்சொற்றொடை இடுவார்தமைத் தீண்டாவினை தானே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : நெஞ்சில் வஞ்சம் மிகுந்தவர் திருநீற்றை அணிந்து உய்யமாட்டார் !! அத்தகையோர் சொல்லும் கொடிய சொற்களைப் பொருளாகக் கொள்ளாமல் நீங்குங்கள் !! சோலை பரந்த திருவக்கரையில் உறைபவனை !! வஞ்சிக்கொடி போன்ற வடிவாம்பிகை கணவனைப் போற்றி பாமாலைகள் பாடி வணங்குபவர்களை வினைகள் தீண்டமாட்டா !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏼ஓம் நமசிவாய
ல.செந்தில் ராஜ்
932 views
16 hours ago
ஆண்டவர் உத்தரவு: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு நாள் 29 4 2026 உத்தரவு பொருள் மண் கலயத்தில் தீர்த்தம் மண் கலயத்தின் மண் ஏர் கலப்பை பிரம்பு . சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு சிக்னல் போல பார்க்கப்படுகிறது. (29.04.2026) ஏர் கலப்பை மற்றும் பிரம்பு வைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ​உத்தரவு பொருளும் அதன் தாக்கமும்: ​விவசாயத்தின் மேன்மை: ஏர் கலப்பை என்பது விவசாயத்தின் அடையாளம். இது மண்ணையும், உழைப்பையும் குறிக்கிறது. வரும் காலத்தில் விவசாயம் செழிக்கும் என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. ​பிரம்பு (சட்டம் மற்றும் ஒழுங்கு): பிரம்பு என்பது அதிகாரத்தையும், தண்டனையையும் குறிக்கும். சமூகத்தில் அல்லது சட்ட ரீதியாக ஒரு கண்டிப்பான ஒழுங்குமுறை வரப்போவதை இது குறிக்கிறது. தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைப்பதும், சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்வதும் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. ​அரசியல் மாற்றம்: பொதுவாக ஏர் கலப்பை பெட்டியில் ஏறும்போது, விவசாயம் சார்ந்த கொள்கைகள் அல்லது விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ​பொதுவான பலன்கள்: ​மழை பொழிந்து நாடு செழிக்கும். ​உணவு உற்பத்தி அதிகரிக்கும். ​நிர்வாக ரீதியான மாற்றங்களும், கண்டிப்பான சட்டத் திட்டங்களும் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ​மக்களிடையே ஒரு பயபக்தியும், ஒழுக்கமும் வளரும் ​சிவன்மலை ஆண்டவன் எதை பெட்டியில் வைக்கச் சொல்கிறாரோ, அது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அந்தப் பகுதி மக்களின் தீராத நம்பிக்கை. @followers @highlight #viral #God #சிவன்மலை #explorepage #alaguraja #murugan #Muruga #முருகன் #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
ல.செந்தில் ராஜ்
558 views
16 hours ago
இந்த கேள்விக்கு எதாவது எவிடென்ஸ் பேஸ் மருத்துவர்கள் பதில் சொல்லுங்க. ' 1954 இல் பிறந்த அசைவ உணவுக்காரர் கமல்ஹாசனை விட 1950 இல் பிறந்த சைவ உணவுக்காரர் S.V.சேகர் எப்படி இளமையாக ஆரோக்கியமாக காட்சியளிக்கிறார்? ' அசைவ உணவில்தான் எல்லாச் சத்துகளும் விட்டமின்களும் உள்ளது.அசைவ உணவு சாப்பிடாதவர்கள் ஆரோக்கியமாக வாழ்வது கடினம்.என்று அமெரிக்க ஆரோக்கிய கழகம் ஆய்வு என்று கூறுவதை உலகம் முழுக்கத் திணிக்கும் மருத்துவம்படித்த மேதைகளும், அதிக புரத உணவு பேலியோ உணவு முறைதான் நோய்களை குணமாக்கும் என்று நம்பி கிட்னியை சட்னியாக்கிக் கொண்டிருக்கும் படித்த அறிவாளிகளும் கமல்ஹாசனையும் S.V சேகரையும் அதிகமாக, ஆழமாக சிந்தித்து செயல்படுங்கள். இப்போது புரோட்டின் புரோட்டின் என்று கூறும் இதே மருத்துவர்கள் தான் ஒரு காலத்தில் சூரியகாந்தி எண்ணெய் என்று விற்கப்படும் மினரல் ஆயில் மிக நல்லது என்றவர்கள்.ஒரு தலைமுறையே அதை சாப்பிட்டு இதய நோயாளி ஆன பின்னால் இப்போது தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புதான் உள்ளது என்கிறார்கள். இப்போது கூட சிலரிடம் கிட்னி பலவீனமாகி புரதம் வெளியேறுகிறது கிரியேட்டின் அதிகமாகி விட்டது என்று கூறி புரத உணவுகளையும் அசைவ உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க கூறுகிறார்கள்.இதுதான் இவர்களின் எவிடென்ஸ் பேஸ் லட்சணம்.கொரோனா தடுப்பூசி 100 % பாதுகாப்பானதுன்னு சொல்லி இதே எவிடென்ஸ் பேஸ்கள் தான் உலகம் முழுக்க தடுப்புசிகளை பிரமோட் செய்தனர். இப்போது எப்ஸ்டின் பைஃல் வெளியான பின்தான் அது பில்கேட்ஸ் மருத்துவக் கழகத்தோடு சேர்ந்து செய்த சதின்னு உலகத்திற்கு தெரிந்தது.அதற்குள் கொரோனா ஊசியைப் போட்ட பத்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்து விட்டனர்.பலர் வாழ்நாள் நோயாளிகளாகி உள்ளனர்.அதனால் இந்த எவிடென்ஸ் பேஸ் ரீலை இனியும் தொடர்ந்து சுத்தாம அக்கம் பக்கம் பாத்து சூதனமா வாழுங்க மக்களே.எப்பொருள் யார்யார் வாய்க்கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இதுதான் தமிழனின் பாலபாடம். -ஏகப்பிரியன். யோகா,இயற்கை வாழ்வியல் பயிற்சிக்கு Whatsapp:9629131089. #healthylifestyle #naturefood #yoga #awareness_motivation_tamil_shots #இயற்கை_வாழ்வியல் #udalnalam #உடல்நலம் #உடல்நலம் #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை
ல.செந்தில் ராஜ்
599 views
16 hours ago
ஓட்டு போடுவதற்கு சரியான பஸ் வசதி ஏற்பாடு செய்யல - ஆனா அவங்க தற்குறி இல்ல லட்சக்கணக்குல கள்ள ஓட்டு போடுறானுங்க - ஆனா அவங்க தற்குறி இல்ல ஐந்தே ஆண்டில் 5 லட்சம் கோடி கடன் - ஆனா அவங்க தற்குறி இல்ல கூட்டணி அமைக்காமல் தனியாக நின்று ஜெயிக்கத் துப்பில்லை - ஆனா அவங்க தற்குறி இல்ல நான்கரை ஆண்டு காலமாக நிதி இல்லன்னு சொல்லிட்டு கடைசியா 5000 போடுறாங்க - ஆனால் அவங்க தற்குறி இல்ல டாஸ்மார்க் கடையை மூடுவோம் என்று சொல்லிவிட்டு இன்னும் அதிகமாக்குகின்றனர் கடையை - ஆனால் அவர்கள் தற்குறி இல்ல நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள் இன்னும் செய்யவில்லை - ஆனால் அவர்கள் தற்குறி இல்ல பெட்ரோல் 75 ரூபாய்க்கு தரணும்னு சொன்னாங்க இன்னைக்குரிய ரேட் 101 ரூபாய் - ஆனால் அவர்கள் தற்குறி இல்ல கன்னியாகுமரியில் பெரிய மலையை குடைந்து கேரளாவிற்கு அனுப்பும் கொள்ளை - ஆனால் அவர்கள் தற்குறி இல்ல பல விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்டும் அரசு பரந்தூர் - ஆனால் அவர்கள் தற்குறி இல்லை கேஸ் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள் ஆனா குறைக்கல - ஆனால் அவர்கள் தற்குறி இல்ல பல கொலை கொள்ளை கற்பழிப்பு நடக்குது - இதையெல்லாம் தெரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் மறுபடியும் அவர்களுக்கு தான் வாக்களிப்போம் - ஆனால் அவர்கள் தற்குறி இல்ல ஊழல் பண்ணாத அமைச்சர்களே இல்லை அதை ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட மாரி செல்வராஜ் அவர்கள் அதைப் பார்த்த பின்பும் மக்கள் மாறவில்லை - ஆனால் அவர்கள் தற்குறி இல்லை பாட்டிலுக்கு பத்து ரூபாய் இயற்றிய ஒரே அரசாங்கம் - ஆனால் அவர்கள் தற்குறி இல்லை 2ஜி ஊழலில் பல கோடி கொள்ளை - ஆனால் அவர்கள் தற்குறி இல்லை கிட்னி முறைகேடு வழக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை - ஆனால் அவர்கள் தற்குறி இல்லை தூய்மை பணியாளர்கள் போராட்டம் இதையெல்லாம் தெரிந்து கொண்ட மக்கள் நாங்கள் அந்த கட்சிக்கு தான் வாக்களிப்போம் - தற்குறி இல்லை அவர்கள் பல தமிழ் கோயில்களை இடித்தது ஒரே அரசாங்கம் - ஆனால் அவர்கள் தற்குறி இல்லை தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லவே இல்லை - அவர்கள் தற்குறி இல்லை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ. 60,000 கோடி எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி பத்திரப் பதிவுத் துறை ரூ. 20,000 கோடி நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி நீர்வள ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி தொழில்துறையில் ரூ. 8,000 கோடி பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி உயர்க்கல்வித் துறையில் ரூ. 1,500 கோடி இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 1,000 கோடி ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி சிறைத் துறையில் ரூ. 250 கோடி பால்வளத் துறையில் ரூ. 250 கோடி மொத்த ஊழல் ரூ. 4 லட்சம் கோடி இதையெல்லாம் நான் சொல்லவில்லை இது செய்திகளிலேயே வந்திருக்கு - செய்தி கருத்து இவை அனைத்தும் இறுதியில் அனைத்து கடனும் மக்கள் தலையில்தான் வந்து விடிய போகிறது விலைவாசி உயர்வு வரிகள் உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனுபவி இதையெல்லாம் தெரிந்து கொண்டு நீங்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பது நீங்கள் தற்குறி இல்லை 😂😂🤣🤣🤣 ஆனால் நான் ஒரு புது கட்சி வரவேண்டும் என்று நினைப்பது நான் தற்குறியா ஒன்றாம் நம்பர் தற்குறி நீங்கள் தான் 😂😂😂😂 நாங்கள் கிடையாது 🔥🔥✅✅ #vija fan's #TVK Vijay🇪🇸 #தலைவர் விஜய் (TVK) #அரசியல் TVK... #தமிழக வெற்றி கழகம் (TVK)
ல.செந்தில் ராஜ்
600 views
1 days ago
'அபூர்வம்' நீங்கள் செய்த மந்திர ஜபம் எங்கே ஒளிந்திருக்கிறது தெரியுமா? "மந்திரத்தைச் சொன்னேன், ஆனால் பலன் தெரியவில்லையே?" என்று சலித்துக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால், நீங்கள் 'அபூர்வம்' என்ற அந்த அற்புத ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக 'அபூர்வம்' என்றால் நாம் 'அரியது' அல்லது 'முன்பு பார்த்திராதது' என்று பொருள் கொள்கிறோம். ஆனால், இந்தியத் தத்துவ மரபில், குறிப்பாக மீமாம்சை மற்றும் தந்திர சாஸ்திரத்தில், இதற்கு மிக நுட்பமான ஒரு பரிமாணம் உண்டு. விதைக்கும் விளைவுக்கும் இடையே ஒரு பாலம் நாம் ஒரு செயலைச் செய்கிறோம்; அதன் பலன் சில காலம் கழித்தே கிடைக்கிறது. உதாரணத்திற்கு, இன்று ஒரு யாகம் செய்கிறோம் அல்லது ஒரு மந்திரத்தை உச்சரிக்கிறோம். அந்தச் சத்தம் காற்றில் கரைந்துவிடுகிறது. பிறகு எப்படி அது பல மாதங்கள் கழித்து நமக்கு ஒரு நற்பலனைத் தருகிறது? செயல் முடிந்துவிட்டது, பலன் இன்னும் வரவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தச் செயல் என்னவாக இருக்கிறது? இதற்கான விடைதான் 'அபூர்வம்'. மீமாம்சை தத்துவத்தின் தந்தை ஜைமினி, இதை ஒரு "கண்ணுக்குத் தெரியாத கர்ம சக்தி" (Invisible potency) என்கிறார். நீங்கள் செய்த கிரியைக்கும், நீங்கள் அடையப்போகும் பலனுக்கும் இடையில் ஒரு 'நிகழ்நேரச் சேமிப்பாக' இந்த அபூர்வம் செயல்படுகிறது. கேயாஸ் தியரியும் (Chaos Theory) அபூர்வமும் இதை நவீன அறிவியலோடு ஒப்பிட்டால் வியப்பாக இருக்கும். கேயாஸ் தியரியில் 'பட்டாம்பூச்சி விளைவு' (Butterfly Effect) என்று ஒன்று உண்டு. ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மறுபக்கத்தில் புயலை உருவாக்கலாம். மந்திர சாஸ்திரமும் இதையே சொல்கிறது. நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு 'வர்ணமும்' (எழுத்து) ஒரு அதிர்வு. அந்த அதிர்வு பிரபஞ்சப் பெருவெளியில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துகிறது. அந்தச் சலனம் உடனடியாகப் பலனாக மாறுவதில்லை. மாறாக, அது பிரபஞ்சத்தின் 'Non-linear' (நேரியல் அற்ற) அமைப்பில் ஒரு தகவலாகச் சேமிக்கப்படுகிறது. இதுவே அபூர்வ சக்தி. இது ஒரு வங்கிக் கணக்கில் நாம் சேமிக்கும் பணத்தைப் போன்றது. பணம் கையில் இல்லை, ஆனால் கணக்கில் இருக்கிறது. தேவைப்படும்போது அது 'பலனாக' உங்கள் கையில் வந்து சேரும். சப்தமே சக்தி 'மாத்ருகா சக்ர விவேகம்' போன்ற நூல்கள் கூறுவது போல, 'அ' முதல் 'க்ஷ' வரையான எழுத்துக்கள் வெறும் ஒலிகள் அல்ல; அவை சக்தியின் வடிவங்கள். மந்திரத்தின் வலிமை அதன் அர்த்தத்தில் இல்லை, அதன் சப்த அமைப்பில் (Phonetic structure) உள்ளது. நீங்கள் அர்த்தம் தெரியாமல் ஒரு மந்திரத்தைச் சொன்னாலும், அதன் முறையான உச்சரிப்பு பிரபஞ்சத்தில் அந்த 'அபூர்வ' ஆற்றலை விதைத்துக்கொண்டே இருக்கும். எனவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு மந்திர ஜபமும், நற்செயலும் வீணாவதில்லை. அவை 'அபூர்வ' நிலையை அடைந்து, பிரபஞ்சத்தின் நுட்பமான விதிகளுக்கு உட்பட்டு வலுப்பெறுகின்றன. அடுத்த முறை நீங்கள் ஜபம் செய்யும் போது, "பலன் கிடைக்கவில்லையே" என்று எண்ணாதீர்கள். நீங்கள் ஒரு மகா சக்தியை (Apūrva) உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்தச் சக்தி சரியான தருணத்தில், மிகச் சரியான பலனை உங்களைத் தேடி வரும்படி செய்யும். அதுதான் மந்திர சாஸ்திரம் சொல்லும் ரகசியம்! #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🙏🙏🙏🙏🙏🙏