ஃபாலோவ்
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
20,803
போஸ்ட்
103,555
பின்தொடர்பவர்கள்
ல.செந்தில் ராஜ்
511 காட்சிகள்
🌙சந்திர தரிசனம்.. செல்வம் பெருக💰.. விரதமிருந்து சந்திரனை வழிபடலாம் வாங்க.!🌸🪔 🌑சந்திர தரிசனம் என்பது அமாவாசைக்குப் பிறகு முதல் முறையாக சந்திரனைத் தரிசிப்பதுதான் சந்திர தரிசனம். 🌒 🙏 ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளில், வானில் தெரியும் மூன்றாம் பிறையை தரிசிப்பதே சந்திர தரிசனம் எனப்படும். இந்த நாளில் சந்திரனை வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். ✨ 🌟 சந்திர தரிசனத்தின் முக்கியத்துவம்: 🕉️ சந்திரன் சிவபெருமானின் திருமுடியில் அணிந்திருக்கும் அலங்காரமாக கருதப்படுகிறது. எனவே, சந்திரனை தரிசிப்பது சிவபெருமானை தரிசிப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது. 👨‍👩‍👧‍👦 சந்திர தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரித்து, மன அமைதியைத் தரும். 💰👁️ சந்திர தரிசனம் செல்வம் பெருகவும், ஆயுள் அதிகரிக்கவும், கண் பார்வை தெளிவாகவும், மன குழப்பம் நீங்கவும் உதவும். 🙌🌙 சந்திரனை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தைப் பெறலாம். ✨🌱 சந்திரன் புதிதாக உதிப்பது போல, வாழ்க்கையில் புதிய தொடக்கத்திற்கு இது ஒரு சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. 💪🌿 சந்திர தரிசன நாளில் விரதம் இருப்பது மிகவும் புனிதமானது. இது நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. 🙏 வழிபடும் முறை: 🧘‍♂️🧭 தூய்மையான இடத்தில் அமர்ந்து, கிழக்கு திசையை நோக்கி சந்திரனை தரிசிக்க வேண்டும். 🪙🔄 சந்திரனை தரிசிக்கும் போது, கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க வேண்டும். 🕉️📿 சந்திரனை வழிபடும் மந்திரங்களை ஜபிக்கலாம். 🕯️🌸 சந்திரனை தரிசிக்கும் போது தூபம், தீபம் ஏற்றி வழிபடலாம். 🚿🧖‍♂️ சந்திர தரிசனத்திற்கு முன், உடல் மற்றும் மனதையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 🌺🍎🪙 பூ, பழம், நாணயம் போன்ற பூஜை பொருட்களை வைத்து சந்திரனை வழிபடலாம். 🌙 நன்மைகள் 🌙 🌟✨ சந்திரனை தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால், நம் மனதில் நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம். 💰🌙 வளர்பிறை சந்திரனை தரிசிப்பது செல்வ வளத்தைப் பெருக்கும் என நம்பப்படுகிறது. 🕊️ நம்மை வாட்டி வதைக்கும் கவலைகளை நீக்கி, மனதிற்கு நிம்மதியைத் தரும். 🌟 #🌙சந்திர தரிசனம்🔯 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவன் - பார்வதி #🔥 ருத்ராபிஷேகம்🕉️
ல.செந்தில் ராஜ்
1.4K காட்சிகள்
மகிமை மிகுந்த மாசி மாதம்‌ பற்றி தெரியுமா? சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலா ன 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். மாசி மாத சிறப்புகள் அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித் ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது. மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப் படுகிறது. சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராண கூற்று. பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சக மாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது. மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப் பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர். மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவ தும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும். மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளி கொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார். வல்லாள மகராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது. மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம். மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள். மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான். இத்தகைய சிறப்புகளைக் கொண்டது தான் மாசி மாதம். காரைக்கால் அம்மையார் வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனிதவதி என்ற காரைக்கால் அம்மையார், "இறை வா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர். அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடி யருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின் பிறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு இரகசியம் என்பார்க ள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது இம்மாசி மாதத்தில்தான். குபேரன் பேறு பெற்ற தலம்! திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வர் அருள்புரிகிறார். ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிப டும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங் கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக் கருதப் படுகிறது. மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு முறை நிகழும் மகாமகம் கும்பகோணத்திலும், ப்ரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் பிரஸித்தமானது. அன்று நீராடுதல், தானம் விசேஷமானது. மாசி மாதம் வரும் சிவராத்திரி விரதம் சிவனு க்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி. அன்றைய தினம் விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது. மாசிமாதம் வரும் மாசிமக விரதம் சிறப்பானது. அது மாசி மாதத்தில் பவுர்ணமியும் மக நட்சத்திரமும் கூடிய நாள். இந்நாளில் கடற்கரைக்கும் நதிகளுக்கும் ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு சென்மக ஸ்தானம் ஆகும். இச்சமயத்தில் நாமும் புனித நீராடினால் புண்ணியம் எனக்கூறுவர். மாசி சரடு பாசி படரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளி க்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்க ள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியா கவே அவர்கள் வாழ்வார்கள். இதற்கு மாசி சரடு பாசி படரும் என்ற பழமொழியும் உண்டு. மாசி வெள்ளிக்கிழமையில் கட்டப்படும் மஞ்சள் சரடு பாசி படரும் வரை நிலைத்திருக்கும். அதாவது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பதே இந்த பழமொழியின் பொருள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
ல.செந்தில் ராஜ்
689 காட்சிகள்
🔱🔱🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱 🙏இனிய சிவ காலை வணக்கம் 🙏 🌜இன்று சந்திர தரிசனம் 🌜 🔱🕉️🔱நதியதன் அயலே நகுதலை மாலை நாள்மதி சடைமிசை அணிந்து கதியது பாகக் காளிமுன் காணக் கானிடை நடம்செய்த கருத்தர் விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஒத்தொலி ஓவாப் பதியதுவாகப் பாலையும் தாமும் பாம்புர நன்னகராரே.🔱🕉️🔱 🔱🕉️🔱பொருள் : - 🔱🕉️🔱 🔱🕉️🔱கங்கையும் தலை மாலையும் கொண்டு பிறைச் சந்திரனைச் சடைமிசைச் சூடி, இடுகாட்டில் காளியானவள் காணுமாறு நடம் புரிந்த ஈசன், விதி வழுவாது வேதியர்கள் வேள்வியாற்ற, அவ் வேதத்தின் ஒலியானது ஒய்வின்றி ஒலிக்கும் பதியெனும் பாம்புர நகரில் உமாதேவியுடன் விளங்குகின்றார்.🔱🕉️🔱 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
4K காட்சிகள்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே! மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றிவீரனே ! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே ! செவ்வானம்போல் சிவந்த மேனியனே ! கதம்பம் முல்லை மலர்களை விரும்பி அணிபவனே அறிவுக் கண்களைத் திறந்து ஞானத்தைத் தந்தருள்வாயாக “ நெஞ்சில்_அஞ்சேல்என_வேல்_தோன்றும் . முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! #murugan #Muruga #முருகன் #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
ல.செந்தில் ராஜ்
855 காட்சிகள்
🌹ததாஸ்த்து' என்றால் என்ன தெரியுமா?*💐 அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 நம் முன்னோர்கள் நமக்கு சூட்சுமமாக நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் எப்போதும் பாசிட்டிவான வார்த்தைகளை பேச வேண்டும் என்பது. ‘ததாஸ்து’ என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருளாகும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். நம் வீட்டில் எப்போதுமே ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துக் கொண்டேயிருக்கும். நாம் எதைச் சொன்னாலும் உடனே 'ததாஸ்த்து' என்று சொல்வதே அதனுடைய வேலையாகும். அதாவது 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்வதே அந்த தேவதையின் விதிக்கப்பட்ட வேலையாகும். அதனால் தான் நம் வீட்டில் எப்போதுமே மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்போதும் பாசிட்டிவான நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவது குடும்பத்திற்கு நன்மையை தரும். உதாரணத்திற்கு யாராவது தெரிந்தவர்கள் ஒரு பொருளை நம்மிடம் கடனாக கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருள் நம்மிடம் இல்லை அல்லது அந்த பொருளை கொடுக்க நமக்கு மனமில்லை என்றால், உடனே ‘என்னிடம் இல்லை’ என்று சொல்லக்கூடாது. அவ்வாறு நாம் சொல்லும் போது அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை ஆசிர்வதிக்கும் போது அவ்வாறே நடந்துவிடும். எனவே, ‘எங்களிடம் அந்த பொருள் நிறைய இருந்தது. தற்போது திரும்பவும் வாங்கிவர வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். யாரேனும் பணம் கடன் கேட்டால் அது உங்களிடம் இல்லை என்றால், ‘உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் மிகுதியாக பணம் வந்து சேர வேண்டும்’ என்று சொல்வது நல்லதாகும். இவ்வாறு நல்ல பாசிட்டிவான வார்த்தைகளை தேர்வு செய்து பேசும் போது நம் வீட்டிற்கு மேலும் செல்வம் வந்து சேரும். அதைவிடுத்து ‘இல்லை’ என்று கூறுவதால், இருப்பதும் இல்லாமல் போய்விடும். இதற்காக தான் எப்போதும் நல்ல மங்களகரமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். நாம் பேசும் வார்த்தைகளில் இருந்து வரும் பாசிட்டிவான அதிர்வலைகள் நம்மையும், நம் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🦜 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
9.5K காட்சிகள்
🌹இனிய சிவனைதொழுதால்_துன்பம் வருமா? நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 சிவனை தொழுபவரை சிவன் நேரடியாக ஜீவமுக்கி நோக்கி அழைத்துச்செல்கின்றார். இப்பிறப்பிலே உன் ஜீவன் முக்தி அடையவேண்டுமாயின், கர்மமது களயப்பட வேண்டும். உங்களின் முந்தய பிறப்புக்களினால் உண்டாக்கப்பட்ட கர்மாவை ஓரிரு பிறப்புக்களில் அகற்றுவதென்பது எவ்வளவு கடினம். இந்த கர்மாக்களே கஷ்டம், துன்பம், வியாதி இப்படி பல கோணங்களில் கழிகின்றது. ஆனாலும் சிவன் அதை உங்கள் சித்தம், புத்திக்கு தெரியவைத்தும், தெளிய வைத்தும், தாங்கும் சக்தியை கொடுத்துமே, உங்கள் கர்மத்தை அவன் கழியவைப்பான். இறை முக்தி அடைந்தவர்கள் எல்லாம், எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்களை கடந்தே, முக்தி பெற்றார்கள் என்பதை அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலே நாம் பார்த்துள்ளோம். ஜீவனை தொழுவதர்க்கு மதமோ, மார்க்கமோ தேவையில்லை. எவர் ஒருவர் உண்மை + அன்பு + கருணை + இருப்பு + உயிர்ப்பு, நிலையில் வாழ்கின்றாரோ, அவரே இறைவன் வாழும் ஆலயம். அத்தகய மனிதரை பார்க்கும்போதே அந்த அமைதி நிலை உங்களையும் தொற்றிக்கொள்ளும். "பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந்தாலும்- கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமசிவாயத்தை நான்மற வேனே." நாம் நினைத்த சர்வ காரியமும் சித்தியாக இந்த மந்திரத்தை காலையிலும், படுக்கப்போகும் முன்பும் உச்சரியுங்கள் ஓம் என்று மனத்தில் சொல்லிக்கொண்டே மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் வெளியே விடும்பொழுது ஒரே மூச்சில் இதை சொல்லி முடிக்கவேண்டும். சி வ ய ந ம ய ந ம சி வ ம சி வ ய ந வ ய ந ம சி ந ம சி வ ய எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
ல.செந்தில் ராஜ்
882 காட்சிகள்
🔱🔱🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱 🔱இனிய சிவ காலை வணக்கம்🙏 🕉️🪷🕉️தாய் தந்தை குருவும் நீ சகல தேவசணங்கள் நீ சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ🕉️🪷🕉️ 🕉️🪷🕉️மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே🕉️🪷🕉️ 🕉️🪷🕉️பொருள்:🕉️🪷🕉️ 🕉️🪷🕉️குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே ! ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே ! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே ! இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !🕉️🔱🕉️ 🕉️ஓம் நமசிவாய 🕉️ 🙏திருச்சிற்றம்பலம்🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
ல.செந்தில் ராஜ்
678 காட்சிகள்
#ஆசிர்வாதம் என்பது !! ஆசிர்வதிக்கப்பட்டதால் .. பிறந்து !! இருந்து !! வளர்ந்து !! வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதை உணர்ந்து அனுபவிப்பது தான் !! ஏதோ ?? எதனாலோ ?? எப்படியோ ?? போன்ற எண்ணம் கடந்து இறையின் கருணையான ஆசியால் தான் அனைத்தும் என்று அனுபவித்து வாழ !! வாழ்வே ஆசிர்வதிக்கப்பட்டதால் என்ற மெய் புலப்படும் !! இறைவனால் !!! அவன் கருணையால் !! ஆசியால் !! என்று உணர்ந்து அனுபவிக்க .. எதிலும் எதிர்மறை எண்ணம் கடந்த நேர்மறையான திருவருள் புரிய தொடங்கும் !! அப்படி நேர்மறையான அணுகுமுறை .. மேலும் மேலும் நேர்மறையான புரிதலை தந்து !! நம் எதிர்மறையான எண்ணத்தின் வழியே நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் இடர்களில் இருந்து நம்மை தடுத்துக்கொள்ளும் !! உங்களை ஆசிர்வதிக்கும் எதுவும் !! நான் இறையால் ஆசிபெற்றது போல நீயும் ஆசிபெற்று இருக்கிறாய் என்று அறிவிக்கின்றது !! மற்றபடி புதிதாக ஆசிர்வதிக்க ஏதுமில்லை !! பெற்ற !! பெற்றுக்கொண்டு இருப்பது எல்லாம் இறைவனின் ஆசியே .. திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
See other profiles for amazing content