ஃபாலோவ்
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
20,801
போஸ்ட்
103,536
பின்தொடர்பவர்கள்
ல.செந்தில் ராஜ்
565 காட்சிகள்
🔱🔱🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱 🙏இனிய சிவ காலை வணக்கம் 🙏 🌜இன்று சந்திர தரிசனம் 🌜 🔱🕉️🔱நதியதன் அயலே நகுதலை மாலை நாள்மதி சடைமிசை அணிந்து கதியது பாகக் காளிமுன் காணக் கானிடை நடம்செய்த கருத்தர் விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஒத்தொலி ஓவாப் பதியதுவாகப் பாலையும் தாமும் பாம்புர நன்னகராரே.🔱🕉️🔱 🔱🕉️🔱பொருள் : - 🔱🕉️🔱 🔱🕉️🔱கங்கையும் தலை மாலையும் கொண்டு பிறைச் சந்திரனைச் சடைமிசைச் சூடி, இடுகாட்டில் காளியானவள் காணுமாறு நடம் புரிந்த ஈசன், விதி வழுவாது வேதியர்கள் வேள்வியாற்ற, அவ் வேதத்தின் ஒலியானது ஒய்வின்றி ஒலிக்கும் பதியெனும் பாம்புர நகரில் உமாதேவியுடன் விளங்குகின்றார்.🔱🕉️🔱 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
3.9K காட்சிகள்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே! மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றிவீரனே ! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே ! செவ்வானம்போல் சிவந்த மேனியனே ! கதம்பம் முல்லை மலர்களை விரும்பி அணிபவனே அறிவுக் கண்களைத் திறந்து ஞானத்தைத் தந்தருள்வாயாக “ நெஞ்சில்_அஞ்சேல்என_வேல்_தோன்றும் . முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! #murugan #Muruga #முருகன் #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
ல.செந்தில் ராஜ்
1.5K காட்சிகள்
சிவ புராணம் - வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க எல்லாவற்றிலும் ஒரு வேகம். போகும் இடம் தெரிந்த மாதிரி ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். யாரையாவது நிறுத்தி எங்கே போய் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், எல்லோரும் போகிறார்கள் நானும் போகிறேன் என்பதே பதிலாக இருக்கும். நம் ஊரில் காய் கறி அங்காடி (மார்கெட்) இருக்கும். அங்கு சில நாய்கள் அலைந்து கொண்டிருக்கும். முதலில் ஒரு வாசலில் இருந்து குறைக்கும். பின் அங்கும் இங்கும் ஓடும். பின் வேறு ஏதோ வாசலில் இன்னொரு நாய் குரைப்பதைக் கேட்கும். அங்கு ஓடும். அங்குள்ள நாய்களோடு சண்டை போடும். இப்படி நாள் முழுவதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாளின் முடிவில் தளர்ந்து போகும். என்ன செய்து விட்டாய் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. உடல் அலைவது, ஓடுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மனம் இருக்கிறதே, அது ஒரு கணம் ஒரு இடத்தில் நிற்கிறதா ? ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த ஓட்டத்தை நிறுத்தினால் அல்லவா மனதை எதிலாவது ஒருமுகப் படுத்த முடியும். என்ன செய்யட்டும் என்று கேட்ட அருணகிரி நாதரை , ஒண்ணும் செய்யாதே "சும்மா இரு" என்றான் முருகன். மணிவாசகர் சொல்கிறார் - என் வேகத்தை கெடுத்து என்னை ஆட்கொண்ட தலைவன் அடி வெல்க என்கிறார். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க பிறந்து இறந்து பிறந்து இறந்து என்ற சுழலை நிறுத்தி, அதை வேரோடு அறுப்பவன் அவன். கிளையை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும். வேரோடு அறுக்க வேண்டும். பிஞ்ஞகன் என்றால் தலைக் கோலம் கொண்டவன் என்று பொருள். ஆகாய கங்கை, பிறைச் சந்திரன், என்று தலையில் கொண்டவன் அவன். புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க தன்னிடம் வராதவர்களுக்கு அவன் தூரத்தில் நிற்கிறான். சொல்லப் போனால் அவன் அவர்களை விடுவது இல்லை. அவர்கள்தான் அவனை விட்டு விலகிப் போகிறார்கள். புறத்தில் உள்ளவர்களுக்கு சேயோன் (அண்மை என்றால் அருகில். சேய்மை என்றால் தூரத்தில்) அவன். கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க கரம் குவித்து வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்களுக்கு மகிழ்ந்து அருள் புரிபவன். சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க இறைவன் இருக்கும் இடம் இரண்டு என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. ஒன்று நம் மனம். இன்னொன்று தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குல தூரத்தில் உள்ளது. இதனால் தான் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வணங்க வேண்டும் என்று சொல்வது. அது பேரம்பலம், இது சிற்றம்பலம். #திருவாசகம் #சிவபுராணம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
ல.செந்தில் ராஜ்
729 காட்சிகள்
🌹ததாஸ்த்து' என்றால் என்ன தெரியுமா?*💐 அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 நம் முன்னோர்கள் நமக்கு சூட்சுமமாக நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் எப்போதும் பாசிட்டிவான வார்த்தைகளை பேச வேண்டும் என்பது. ‘ததாஸ்து’ என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருளாகும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். நம் வீட்டில் எப்போதுமே ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துக் கொண்டேயிருக்கும். நாம் எதைச் சொன்னாலும் உடனே 'ததாஸ்த்து' என்று சொல்வதே அதனுடைய வேலையாகும். அதாவது 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்வதே அந்த தேவதையின் விதிக்கப்பட்ட வேலையாகும். அதனால் தான் நம் வீட்டில் எப்போதுமே மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்போதும் பாசிட்டிவான நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவது குடும்பத்திற்கு நன்மையை தரும். உதாரணத்திற்கு யாராவது தெரிந்தவர்கள் ஒரு பொருளை நம்மிடம் கடனாக கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருள் நம்மிடம் இல்லை அல்லது அந்த பொருளை கொடுக்க நமக்கு மனமில்லை என்றால், உடனே ‘என்னிடம் இல்லை’ என்று சொல்லக்கூடாது. அவ்வாறு நாம் சொல்லும் போது அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை ஆசிர்வதிக்கும் போது அவ்வாறே நடந்துவிடும். எனவே, ‘எங்களிடம் அந்த பொருள் நிறைய இருந்தது. தற்போது திரும்பவும் வாங்கிவர வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். யாரேனும் பணம் கடன் கேட்டால் அது உங்களிடம் இல்லை என்றால், ‘உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் மிகுதியாக பணம் வந்து சேர வேண்டும்’ என்று சொல்வது நல்லதாகும். இவ்வாறு நல்ல பாசிட்டிவான வார்த்தைகளை தேர்வு செய்து பேசும் போது நம் வீட்டிற்கு மேலும் செல்வம் வந்து சேரும். அதைவிடுத்து ‘இல்லை’ என்று கூறுவதால், இருப்பதும் இல்லாமல் போய்விடும். இதற்காக தான் எப்போதும் நல்ல மங்களகரமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். நாம் பேசும் வார்த்தைகளில் இருந்து வரும் பாசிட்டிவான அதிர்வலைகள் நம்மையும், நம் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🦜 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
ல.செந்தில் ராஜ்
741 காட்சிகள்
🔱🔱🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱 🔱இனிய சிவ காலை வணக்கம்🙏 🕉️🪷🕉️தாய் தந்தை குருவும் நீ சகல தேவசணங்கள் நீ சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ🕉️🪷🕉️ 🕉️🪷🕉️மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே🕉️🪷🕉️ 🕉️🪷🕉️பொருள்:🕉️🪷🕉️ 🕉️🪷🕉️குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே ! ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே ! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே ! இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !🕉️🔱🕉️ 🕉️ஓம் நமசிவாய 🕉️ 🙏திருச்சிற்றம்பலம்🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
ல.செந்தில் ராஜ்
1.1K காட்சிகள்
🔱🔱🔱ஓம்நமச்சிவாய 🔱🔱🔱 🪷ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி 🌸 🌺ஓம் சங்கரா போற்றி 🪷 🌸ஓம் மஹாதேவா போற்றி 🌼 🌺ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்🌺 🌺🪷🌺பொருள்:🌺🪷🌺 🌺அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்அவனுடைய திருவருளே துணையாகக்கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்🌺 🙏திருச்சிற்றம்பலம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
See other profiles for amazing content