ஃபாலோவ்
-
@shabbir0360
24,429
போஸ்ட்
12,082
பின்தொடர்பவர்கள்
-
350 காட்சிகள்
2 மணி நேரத்துக்கு முன்
Morning Coffee.... #morning coffee *சிலர் உங்களுடைய தோல்வியை காண காத்திருக்க கூடும்...* அவர்களை ஏமாற்றி விடுங்கள். அதாவது, *சிறப்பாக வெற்றியடைந்து காட்டுங்கள்..!!* ~~~~~~~~~~~~~~~~ *Some people might be waiting to see you fall...* Surprise them! *Do your best and succeed..!!* *சிந்திப்போம் செயல்படுவோம்!*
-
399 காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் *டிசம்பர் 09, 1979* பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள். பெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடும் நிலை உருவாகியது. உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் முகத்தில் நீங்காத தழும்புகளால் காணப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை. அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 09-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
-
446 காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் பழம்பெரும் இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாள் சிறப்பு* வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்) 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கர்நாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திரைப்பட இசையமைப்பாளர் 1948ல் வெளிவந்த ' நல்லதங்காள் ' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். நல்லதங்காள், நந்தா என் நிலா , ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி , ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி , உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா , பி.சுசீலா , யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நான்கு தலைமுறை பாடகர்கள் மலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ் , யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் , மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது; சுவர்ணமால்யா யேசுதாசு விருது; கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது; மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம். இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள் திரையிசைப் பயணம் இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்றென்றும் கேரள தேசத்தின் தூய இசையின் பேரரசராக விளங்குகிறார். ஆன்மிகம் நிறைந்த சுவாமியின் முழு உடலும் வாழ்க்கையும் இசை என்று சொல்லலாம். ஒரு பக்கம் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜேசுதாஸில் இருந்து, ஜேசுதாஸ், மகன் விஜய் ஜேசுதாஸ், மகள் அமேயா ஆகியோருக்கும், இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா தொட்டு பவதாரணி வரையும் ஒரு இசை ஞான குருவாக ஸ்வாமிகள் விளங்கி நிற்கின்றார். பழம் பெரும் முன்னணிப் பாடகி பி.லீலாவிலிருந்து, N.C.வசந்தகோகிலம், கல்யாணி மேனன் உள்ளடங்கலாக அவர் குருவாக விளங்கியது இன்னொரு மேன்மை. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் அவர்கள் மேடை இசைக் கலைஞராக இருந்த போது அவரைத் திரையிசையின் பக்கம் திருப்பியவரும் ஸ்வாமிகளே. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஸ்வாமிகளின் பந்தம் தொடர்ந்தது. இதனால் பெரிய பக்தர் தலைமுறைகளின் சுவாமி மற்றும் குரு ஆனார். ஸ்ரீகுமரன் தம்பியின் பல மெல்லிசைப் பாடல்களை மலையாளிகளின் எப்போதும் பிடித்தமானதாக ஆக்கியது சுவாமியின் மாயம்தான். சிறந்த இசை இயக்குனருக்கான மாநில அரசின் திரைப்பட விருது, ஜேசி டேனியல் விருது, சங்கீத சரஸ்வதி விருது மற்றும் சுவாதி திருநாள் விருது உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, சுவாமி இசைப் பிரியர்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பெற்றார். தொண்ணூற்றி மூன்று வயதில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில், சுவாமி இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை தூய இசையின் பக்தராக இருந்தார். இன்று கேரள மண் ஸ்வாமிகளுக்கான ஒரு நினைவு மண்டபம் அமைத்து அவரின் சேகரங்கள் அனைத்தையும் சேமித்துப் பாதுகாக்கின்றது. இசை மேதையின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்
-
409 காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
#வரலாற்றில் இன்று வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്‍ത്തി; 9 டிசம்பர் 1919* - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார் 1948ல் வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[3] நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். மலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ், யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ், மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர் அவரது வயது மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், தட்சிணமூர்த்தி தொடர்ந்து இசைத்துறையில் பணியாற்றினார், மேலும் பல ஆல்பங்களுக்கு பாடல்களை இயற்றினார். ஜூலை 2013 இல், அவர் ஒரு இசையமைப்பாளராக தனது கடைசி சாதனையைச் செய்தார் - ஒரே குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்கு பாடல்களை வழங்கினார். விஜய் யேசுதாஸின் மகள் மற்றும் கே.ஜே.யேசுதாஸின் பேத்தி அமேயா விஜய்க்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் இது நடந்தது. தட்சிணமூர்த்தி 1950 ஆம் ஆண்டில் தனது முதல் படத்தில் ஒரு மூத்த நாடக நடிகரும் பாடகருமான யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப்பிற்கு பாடல்களை வழங்கினார். பின்னர் அவர் யேசுதாஸைப் பயன்படுத்தி தனது பெரும்பாலான பாடல்களைப் பாடவைத்தார். 1987 ஆம் ஆண்டில் விஜய் யேசுதாஸை ' இடனழியில் ஒரு கலோச்சா ' படத்தில் ஒரு ஸ்லோகா மூலம் அறிமுகப்படுத்தினார் . தட்சிணமூர்த்தி 2013 ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 06:30 மணியளவில் தனது 93 வயதில் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவர் தூக்கத்தில் நிம்மதியாக இறந்தார், இது இந்துக்களுக்கு நல்லதாக கருதப்படுகிறது. அவரது மரணம் ஒரு ஏகாதசி நாளிலும் இருந்தது, இது புனிதமாகவும் கருதப்படுகிறது. அவர் தனது மனைவியுடன் அருகிலுள்ள தனது மகளின் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், மேலும் அவர் செல்லவிருந்த மகிழ்வுந்து ஓட்டுநர் தாமதமாகிவருவார் என்று கேள்விப்பட்டதும், அவர் தூங்கச் சென்றார். மகிழ்வுந்து வந்ததும், கணவர் ஏன் தயாராக இல்லை என்று அவரது மனைவி ஆச்சரியப்பட்டார். பின்னர் அவர் பதிலளிக்காத தனது கணவரை அழைக்க சென்றார். மரணத்திற்கு சாத்தியமான காரணம் இதய நிறுத்தம் எனக் குறிப்பிட்டு மரணம் விரைவில் உறுதி செய்யப்பட்டது . பெசந்த் நகர் மின்சார தகனத்தில் தட்சிணாமூர்த்தி முழு மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போதைய கேரள மாநில கலாச்சார அமைச்சர் கே.சி.ஜோசப் கேரள மாநில பிரதிநிதியாக வந்தார்.
-
552 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர்-9 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர்-9 ஒவ்வொரு ஆண்டும் *சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ஆம் தேதி* அனுசரிக்கப்படுகிறது. ஊழலானது நாடுகளின் சமூகஇ அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின்போது இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.
-
431 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#பேசும் முறை உங்களிடம் பேச நினைப்பவர்களுக்கு செவி கொடுங்கள். நாளை நீங்கள் பேசும் பொழுது கேட்க ஆள் வேண்டும். வார்த்தைகள். ஒரு கவனக் குறைவான வார்த்தை பெரும் சர்ச்சையில் முடியும். ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையையே முறிக்கும். ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை மேன்மேலும் வளர்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், தங்கள் திறமைகளை வளர்த்து,பொறுமையினை பெருக்கி.. கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி தான் என உணருங்கள். எனவே, எதிலும் எப்போதும் சிந்தித்து செயல்படுங்கள் இனிய காலை வணக்கம்
-
531 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் டிசம்பர் 08, 1825* முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைஸ்) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்த நாள். இது நீராவி இயந்திரங்களைப் பயன்படுத்தி முதல் இங்கிலாந்து-இந்தியா பயணத்தை நிறைவு செய்தது.
-
427 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் டிசம்பர் 08, 1991* அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு மாற்றாக திகழ்ந்து வந்த சோவியத் ஒன்றியத்தை முற்றாக கலைத்து விடுவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்ட நாள். ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பெலாரஸ் தலைநகரில் கூடி விவாதித்து சோவியத் யூனியனை முற்றாக கலைத்து விடுவதென்றும் அதற்குப் பதில் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளைக் கொண்ட காமன் வெல்த் கூட்டமைப்பை உருவாக்குவதென்றும் முடிவெடுத்து ஒரு உடன்பாட்டு அறிக்கையை உருவாக்கி கையெழுத்திட்டனர்.
See other profiles for amazing content