வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
557 Posts • 120K views
-
492 views 18 hours ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 17, *உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்.* உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ம் தேதியான இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். எனவே, அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
9 likes
17 shares
-
552 views 18 hours ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 17, *சி.இலக்குவனார்* சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் 1909ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு கிராமத்தில் பிறந்தார். இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1962ம் ஆண்டு தமிழ் காப்புக்கழகத்தை தொடங்கினார். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவினார். முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 63வது வயதில் (1973) மறைந்தார்.
10 likes
13 shares
-
341 views 18 hours ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 17, 1970* ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டக்ளஸ் ஏங்கல்பர்ட் (Douglas Engelbart) என்பவர் கணினியின் சுட்டியை (cursor) நினைத்த வண்ணம் நகர்த்துவதற்கும், இயக்குவதற்கும் பயன்படுகின்ற மவுஸ்ஸைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்ற நாள்.
13 likes
11 shares
-
11K views 1 days ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 16,* *உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நாள்.* (World Chronic Obstructive Plumonary Digsease Day) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் சுமார் 210 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு 2007ம் ஆண்டு கணித்துள்ளது. புகையிலை, ரசாயனப் புகை, காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் 2030ம் ஆண்டில் உலகளவில் இந்த நோயால் அதிக மரணம் ஏற்படப் போகிறது என எச்சரித்துள்ளது. இந்நோய் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்த 2002ம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
99 likes
69 shares