#கடவுளுக்கு நன்றி
கடவுளுக்கு நன்றி சொல்ல உதாரணமாக 10 அற்புத காரணங்கள்:
1.டயர்கள் ஓட ஓட தேய்ந்து போகும், ஆனால் பாதங்கள் வாழ்நாள் முழுக்க ஓடினாலும் புதுசு போலவே இருக்கும்.
2.உடல் 75% தண்ணீர் ஆனால் லட்சக்கணக்கான ரோம துளைகள் இருந்தும் ஒரு சொட்டு கூட கசியாது.
3.எந்த பொருளும் தாங்கிப் பிடிக்காமல் நிற்காது, ஆனால் இந்த உடல் தன்னைத்தானே சமநிலையில் வைத்துக்கொள்கிறது.
4.எந்த பேட்டரியும் சார்ஜ் இல்லாமல் ஓடாது, ஆனால் இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை நிற்காமல் துடிக்கிறது.
5.எந்த பம்பும் எப்போதும் ஓடாது, ஆனால் ரத்தம் வாழ்நாள் முழுக்க நிற்காமல் உடலில் ஓடிக்கொண்டே இருக்கிறஆய்வகமும்உலகின் விலையுயர்ந்த கேமராவும் எல்லைக்குட்பட்டது, ஆனால் கண்கள் ஆயிரக்கணக்கான மெகாபிக்சல் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும்.
7.எந்த ஆய்வகமும் எல்லா சுவையையும் சோதிக்க முடியாது, ஆனால் நாக்கு எந்த கருவியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சுவைகளை அடையாளம் காணும்.
8.மிக நவீன சென்சாரும் எல்லைக்குட்பட்டது, ஆனால் தோல் மிகச்சிறிய உணர்வையும் உணர்ந்துகொள்ளும்.
9.எந்த கருவியும் எல்லா ஒலியையும் எழுப்ப முடியாது, ஆனால் குரல்வளையில் இருந்து ஆயிரக்கணக்கான அதிர்வெண் ஒலிகள் வரும்.
10.எந்த சாதனமும் எல்லா ஒலிகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் காதுகள் ஒவ்வொரு ஒலியையும் கேட்டு அர்த்தம் புரிந்துகொள்ளும்.
கடவுள் நமக்கு கொடுத்த இந்த விலைமதிப்பற்ற பொருட்களுக்காக நன்றி சொல்வோம். அவரிடம் புகார் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை.
தினமும் காலையில் நாம் கண் விழிப்பதே ஒரு அற்புதம்!
எனவே அந்த சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
#ஹஜ் புனித யாத்திரை 2026
ஹச் புனித யாத்திரை செய்ய மெக்கா நகரத்தில் மஜித் ஹரம்
#விவசாய கடன் தள்ளுபடி செய்த நாள் இன்று
வரலாற்றில் இன்று 13 மே 2006..
ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற கலைஞர் மு.கருணாநிதி
தனது முதல் அரசாணையாக தமிழக விவசாயிகளின் கடன் ரூ.7000 கோடியை
வட்டியுடன் சேர்த்து தள்ளுபடி செய்து விழா மேடையில் கூட்டணித்தலைவர்கள்
முன்னிலையில் கையெழுத்திட்ட தினம் இன்று.
#இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷப்பீர்
#இன்று எனக்கு பிறந்த நாள்
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு நல்ல நாள் என்று எடுத்துக் கொண்டால் அது சிறந்த நாளாக நாம் இந்த பூமிக்கு வந்த நாளாகும் அதுதான் நம் பிறந்த தினம்...
அதைவிட சிறந்த நாள் எதுவும் இல்லை
இதே நாளில் என்னைப் போல் பிறந்தநாள் கொண்டாடும்.....
ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான அன்பானவர்களுக்கும் .........
பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் அனைவருக்கும் என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........ஷப்பீர்
#இன்று எனக்கு பிறந்தநாள்
இன்று எனக்கு பிறந்த நாளாம்...!
இன்று எனது பிறந்த நாளாம்.. நான் மட்டுமா பிறந்தேன்.
ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒவ்வொரு தாயும் இறந்தே பிறக்கிறாள்.
அந்தவகையில் என் தாய்க்கும் இனறு பிறந்தநாள்தான் ஆதலால் அன்னையே உன்னை போற்றுகிறேன்..
தாயே
பத்து மாதங்கள் சுமந்தாய் கருவினிலே..
பல காலங்கள் சுமந்தாய் நெஞ்சினிலே..
உன் உயிரை என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை என் உடலாக்கினாய்...!
துடி துடித்துப்போனாய்
துயரங்கள் கண்டாய்
தூக்கம் தொலைத்தாய்
என்னை ஈன்றெடுத்தாய்..
சில நிமிடங்கள்
நீயும் இற்ந்தே பிறந்தாய் வார்த்தைகளினால்
வரைந்திட முடியா வேதனைகளினால்...!
அன்பு தாயே உனக்குதான் என் முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி நான் மகிழ்ச்சியடைகிறேன்
இந்த உலகத்தை என்னை காண வைத்தாய் உன்னால் தான் இந்த மண்ணை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உனக்கு தான் என் நன்றிகள்....இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....ஷப்பீர்
#மதிமுக பிறந்தநாள்
மதிமுகவின்
33 ஆவது ஆண்டு விழா
தலைவருக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்#
வீழ்வது என்றாலும்
தலைவர் வைகோ ஒருவருக்கே என்று நான் சொல்வது வெறும் வார்த்தை வரிகள் அல்ல அது என் வாழ்க்கை நெறி
#மனிதனின் மூன்று காலங்கள்
மனிதன் வாழ்க்கையில் காலங்கள் மூன்று வகை.
1) சிரித்து பேசி விளையாடுவது ஆரம்ப காலம்.
2) பேச நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பது இடைப்பட்ட காலம்.
3) பேச யாருமில்லாமல் தவிர்ப்பது கடைசி காலம்.
வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.
உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வாழ்க்கையானது பலருக்கு கனவாக இருக்கிறது.
பேசும் முன் கேட்டுவிட்டு பேசுங்கள், எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் உங்கள் பதில் சரியாக இருக்கும்.
செலவழிக்கும் முன் அது நீங்கள் சம்பாதித்த பணமா என்று பார்த்து செலவழியுங்கள் பணத்தின் அருமை தெரியும்.
பணத்தையும் பாசத்தையும் கொடுங்கள் ஆனால் திரும்ப கிடைக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
யார் உங்களை அவமதித்துப் பேசினாலும் நீங்கள் ஆவேசமடைந்து, அவர்களிடம் மறுத்துப்பேசி உங்களை நிரூபிக்க நினைக்காதீர்கள்.
செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.
நீங்கள் செல்லும் வழி சரியென்றால், உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை நிச்சயம் அமையும் கவலையை விடுங்கள்.
#இறை வசனம்
தினம் தொடர் வசனம்*
━━━━━━﷽━━━━━━━
`அல் குர்ஆன்` "46-வது சூரா (*அஹ்காஃப்*) 15- வது வசனம்.
08.05.2026 *வெள்ளிக்கிழமை*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
*மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
*ۚبسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*
#குர்ஆன் வசனம்
குர்ஆன் வசனம்
அல்அன்பியா
*_یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ وَعْدًا عَلَیْنَا ؕ اِنَّا كُنَّا فٰعِلِیْنَ_*
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.*
அல்குர்ஆன் 21 : 104













