#ஷஃபான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்
🕌 ஷஃபான் மாதத்தின் முதல் வெள்ளி 🕌
உங்கள் நாட்கள் பரகத் நிறைந்ததாகவும், உங்கள் இரவுகள் அமைதி மற்றும் நன்றியுணர்வு நிறைந்ததாகவும் இருக்கட்டும் 🤲
#ஜும்மா #ஜும்மா #ஷஃபான்
🕌 1st Friday of Sha'ban 🕌
May your days be full of barakah and your nights full of peace and gratitude 🤲
#Jummah #jumma #Shaban
#நி #நிரந்தரம்
எதுவும் நிரந்தரம் இல்லை.......
நம் வாழ்க்கையில் சிறந்த விஷயமும்
இதுதான்
மோசமான விஷயமும் இதுதான்.......
என்றும் மகிழ்ச்சியாக இருங்கள்.......
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
ஷாஜகான்
ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது.
பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். ...
அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது.
ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான்
பிறந்த தேதி: 5 ஜனவரி, 1592
பிறந்த இடம்: லாகூர், பாக்கிஸ்தான்
இறந்த தேதி: 22 ஜனவரி, 1666
இறந்த இடம்: ஆக்ரா போர்ட், ஆக்ரா
அடக்கம் செய்த இடம்: தாஜ் மகால், ஆக்ரா
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
200 ஆண்டுகளுக்கு முன்பே #திரு வள்ளுவருக்கு #முதன்முதலாக #உருவம் #கொடுத்து #தங்கக்காசு வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சி யர் #பிரான்சிஸ் #ஒயிட் #எல்லீஸ் எனத் #தெரியவந்துள்ளது.
இந்தியாவை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் 1812-ல் தென் னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்று விக்க முடிவு செய்தனர்.
இதற் காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ‘தி மெட்ராஸ் காலேஜ்’(The Madras College) நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis).
#தமிழ் #மீது #கொண்ட #காதலால்
தமிழை நன்கு கற்று செய்யுள் எழுதும் அளவுக்கு தனது மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்ட துடன், தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார்.
கி.பி.1796-ல் ஆங்கிலக் கிழக் கிந்தியக் கம்பெனியில் எழுத்த ராகச் சேர்ந்த எல்லீஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆனார்.
சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை, மதுரையில் எல்லீஸ் நகர் ஆகியவை இவர் நினைவாக பெயரிடப்பட்டவை ஆகும்.
இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது:
எல்லீசால் இந்திய மொழிகளை ஆங்கிலேயருக்குப் பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறு வப்பட்ட ‘சென்னைக் கல்விச் சங் கம்' எல்லீஸின் மொழி ஆய்வு களுக்குக் களமாக விளங்கியது.
இக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்து சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவர் எழுதிய நூல்களைத் தேடிப்பிடித்துப் பாதுகாக்கச் செய்தார்.
முதல் மொழிபெயர்ப்பு
எல்லீஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார்.
அவருடைய மொழிபெயர்ப்பே
ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது, திருக்குறளைப் படித்ததன் பயனாக அங்கு 27 கிணறுகளை வெட்டினார்.
அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளை யத்தம்மன் கோயிலில் உள்ளது.
அக்கிணற்றில் எல்லீசின் திருப் பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நாணயச்சாலையின் தலைவராகவும் இருந்ததால், திரு வள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து அவருக்கு தங்கக் காசுகளை வெளியிட ஏற் பாடு செய்தார்.
தென்னிந்திய மொழிக் குடும்பம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய 7 மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், அம்மொழிக் குடும்பத்துக்குத் தென்னிந்திய மொழிக் குடும் பம் எனவும் பெயரிட்டார்.
வட மொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன் முதலில் கூறியவரும் இவரே.
எல்லீஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல் தனது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் 3 மாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார்.
விடுப் பில் இருந்தபோது தமிழாய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும், அங் கிருந்து ராமநாதபுரத்துக்கும் சென்றார்.
ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டார்.
கி.பி.1819-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.
எல்லீஸின் கல்லறை
இவருடைய கல்லறை ராம நாதபுரம் வடக்கு தெருவில் உள் ளது.
இவருடைய கல்லறைக் கல்வெட்டுகள் தமிழில் அழகிய கவிதை வடிவிலும் ஆங்கிலத் திலும் உள்ளன.
இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த செய்தி சொல்லப் படுகிறது.
மேலும் வெள்ளைப் பளிங்குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக் கல்வெட்டுகள் தற்போது ராமநாத புரம் ராமலிங்கவிலாசம் அரண் மனையில் உள்ளன.
எல்லீஸின் கல்லறை உள்ளிட்ட கல்வெட்டு களை பாரம்பரியச் சின்னமாகப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறினார்.
#Thursday.......M̲O̲R̲N̲I̲N̲G̲ C̲O̲F̲F̲E̲E̲
Thursday.......M̲O̲R̲N̲I̲N̲G̲ C̲O̲F̲F̲E̲E̲
The strongest people are the ones who have drowned in their own darkness and still found a way to breath...
*They have been torn apart from life, yet day rise -- not because they were saved, but because they saved themselves..!!*
𝕋𝕠𝕡 𝕠𝕗 𝕥𝕙𝕖 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘.
𝐑𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐒𝐡𝐢𝐧𝐞.
#உயர்வு
உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்..
பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை..
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கொடுங்கள்..
உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!
இனிய இரவு வணக்கம்.
#சிறகுகள்
பறவையின் சிறகுகளில் மறைந்திருக்கும் வலிமையை விட,
அது தன் மேல் கொண்டுள்ள தன்னம்பிக்கைப் பெரியது!
முயற்சியோடு போராடு, வெற்றி உனக்குத் தான்..!
விதியொன்று செய்யும்,
வினையொன்று செய்யும்,காலம் கடந்து செல்லும்
தீங்கு விளைவிக்காதே.
#சூல்நிலை
சில சூழ்நிலைகள் பல சுயநலவாதிகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றது...
அதில், ஒரு சிலவற்றை மட்டும் ஆராய்ந்து, மனதை காயப்படுத்தி கொள்வதை விட,
*"அனைத்தும் நமக்கான பாடம்"* என்று அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு நகர்ந்தால்,
*வாழ்க்கை எளிதாகும்.!!*
#Happy Morning Coffee
Wednesday......M̲O̲R̲N̲I̲N̲G̲ C̲O̲F̲F̲E̲E̲
*Life laughs at you* when you are unhappy...
*Life smiles at you* when you are happy...
But,
*Life salute you when you make others happy..!!*
𝕋𝕠𝕡 𝕠𝕗 𝕥𝕙𝕖 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘.
𝐑𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐒𝐡𝐢𝐧𝐞.
வரலாற்றில் இன்று . ஜனவரி 21
1954 - உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான, அமெரிக்காவின் நாட்டிலஸ் செயல்பாட்டுக்கு வந்த தினம்.
இதற்கான திட்டத்தை உருவாக்கிய ஹைமென் ரிக்கோவர், அணுசக்திக் கடற்படையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் சிறப்பாகச் செயல்பட்ட அமெரிக்காவின் கப்பலின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது.
பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான நாட்டிலோஸ் என்பதிலிருந்து உருவான லத்தீன் மொழிச் சொல்லான நாட்டிலஸ் என்பதற்கு மாலுமி என்று பொருள். இப்பெயரில் ஆழ்கடலில் வசிக்கும் நத்தை போன்ற ஓர் உயிரினமும் உள்ளது.
லத்தீன் மொழியில் நாட்டிகஸ் (கிரேக்;க நாட்டிகோஸ்) என்பதற்கு மாலுமிகள் தொடர்பான என்று பொருள். அதனாலேயே கடல் மைல்கள் நாட்டிகல் மைல் என்று அழைக்கப்படுகின்றன.
1870இல் வெளியான ஓர் அறிவியல் புதினத்தில் நாட்டிலஸ் என்ற பெயரில் ஒரு நீர்மூழ்கி குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிய அணுமின் உலையைக் கொண்டு நீரைக் கொதிக்கவைத்து, நீராவிமூலம் இந்த நீர்மூழ்கி இயக்கப்படும்.
இதற்குக் கடல் நீரையே உப்புநீக்கம் செய்து பயன்படுத்துவார்கள்.
அணுசக்திக்கு முன்பு, நீர்மூழ்கிகள் பெட்ரோலியத்தாலும், மின்கலத்தாலும் இயக்கப்பட்டபோது, புகையை வெளியேற்றவும், மின்கலத்தை ரீச்சார்ஜ் செய்யவும் அடிக்கடி மேலே வரவேண்டும். உண்மையிலேயே நீர்மூழ்கிகளாக, மிக நீண்ட காலம் நீருக்கடியில் இருப்பது அணுசக்தி வந்தபின்னரே சாத்தியமானது. எரிபொருளைச் சேமிப்பதற்கான இடம் முதலானவையும் தேவையற்றுப் போயின.
இந்த நீர்மூழ்கி 1958இல் நீருக்கடியிலேயே பயணித்து வடதுருவத்தை அடைந்தது. 1960இல் அமெரிக்காவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி, நீருக்கடியிலேயே உலகைச் சுற்றிவந்தது.
பெரிய விமானந்தாங்கிக் கப்பல்களிலும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அணுமின் உலையின் நிறுவுதல், பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதால், பொதுவாக ராணுவத்தில் மட்டுமே அணுசக்தி கப்பல்கள், நீர்மூழ்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
#வரலாற்றில் இன்று













