நம் வாழ்க்கையில் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், தினமும் ஆயிரம் வார்த்தைகளைப் பேசிச் செல்வோரும் உண்டு. ஆனால், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நம்முடைய அன்றாடப் பயணத்தில் ஒரு நிழல் போல அல்லது ஒரு அமைதியான வெளிச்சம் போல ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சிறப்பு வாய்ந்த மனிதர் தனித்துவமானவர்கள்
அவர்களுடன் நாம் தினமும் பேசுவதில்லை, நாமும் தேடிப் போய் எதையாவது பேச வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதில்லை. எப்போதாவது ஒருமுறை, எதிர்பாராத ஒரு கணத்தில் அவர்கள் நம்மிடம் பேசும் அந்தச் சிறு வார்த்தை போதும்—அது நம் முழு நாளையும் ஒளியால் நிரப்பிவிடும்.
அவர்கள் பேசும்போது நம் முகத்தில் எழும் புன்னகை, அன்றைய நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும்.
அந்தச் சின்னக் குரல், நம் மனதிற்குத் தரும் நிம்மதியும் உற்சாகமும் வேறு எதிலும் கிடைப்பதில்லை. பேசுவது குறைவு என்றாலும், அவர்களின் இருப்பு மட்டுமே நம் நாளுக்கு அர்த்தம் சேர்க்கும். அப்படிப்பட்டவர்கள் நம் வாழ்வில் இருப்பது மிகப்பெரிய வரம்.
#SpecialPerson
#BeautifulMmoments
#SimpleLife
#Memories #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்