*மகா சிவராத்திரி அன்று சொல்லவேண்டிய மந்திரங்கள்*
*சிவ பஞ்சாட்சரம்:*
ஓம் சிவயநம – யநமசிவ – மசிவயந – வயநமசி – நமசிவய.
சிவபெருமானுடைய இந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பஞ்ச பூத சக்திகளையும் பெற முடியும். இதை கட்டாயம் இந்த நாளில் 108 முறை உச்சரிக்கலாம்.
*சிவன் மூல மந்திரம்:*
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
திருமூலர் அருளிய இந்த சக்தி வாய்ந்த மந்திரம் சிவனுடைய மூல மந்திரமாக கொள்ளப்பட்டுள்ளது.
சிவராத்திரி அன்று இம்மந்திரத்தை உச்சரித்தால் எவ்விதமான துன்பங்களும் உங்களை விட்டு விலகி விடும்.
*சிவ ருத்ர மந்திரம்:*
ஓம் நமோ பகவதே ருத்ராய.
நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹா தேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னிருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீ மன் மஹா தேவாய நம:
*பாவம் போக சொல்ல வேண்டிய மந்திரம்:*
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
பாவ வினைகள் இருந்து மோட்சம் பெறுவதற்கு சிவனுடைய இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மகா சிவராத்திரி அன்று இம் மந்திரத்தை உச்சரித்தால் பலன்களும் இரட்டிப்பாகும்.
*சிவன் தியான மந்திரம்:*
கர சரண க்ருதம் வா
காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா
மானஸம் வா அபராதம்
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வா
ஜய ஜய கருணாப்தே
ஸ்ரீ மஹாதேவ சம்போ.
இந்த தியான மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு சகலமும் வசமாகும் என்பது நியதி.
*சிவபெருமான் காயத்ரி மந்திரம்:*
ஓம் தத்புருஷாய வித்மஹே!
மஹா தேவாய தீமஹி!
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்!!
மந்திரங்களில் காயத்ரி மந்திரம் மிகவும் உயர்ந்தது ஆகும். மந்திரங்களுக்கு தலைவனாக இருக்கும் காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரங்கள் எதுவும் இல்லை என்று கூறலாம். கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.
*எம பயம் நீங்க சிவன் மந்திரம்:*
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தநம் உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத்.
வாழ்வில் பயம் இல்லாமலும் தைரியமாகவும் இருக்க, எம பயம் நீங்க, தோல்வி குறித்த பயங்கள் நீங்க சிவனுடைய இந்த மந்திரத்தை இன்றைய நாளில் உச்சரிப்பது நல்ல பலனாக இருக்கும்.
#🔥 ருத்ராபிஷேகம்🕉️ #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶