திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்: p. பானுமதி
இசை: g. ராமநாதன்
————————————
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
அன்ன நடை பின்னுவதேன் கன்னியிளமானே ஆ..ஆ….ஆ..
அன்ன நடை பின்னுவதேன் கன்னியிளமானே
யார் விழிகள் பட்டனவோ கன்னியிளமானே
சின்ன இடை மின்னலெல்லாம் கன்னியிளமானே
தென்றல் தந்த சீதனமோ கன்னியிளமானே
கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னியிளமானே
காளையரைக் கட்டுதற்கோ கன்னியிளமானே
கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னியிளமானே
காளையரைக் கட்டுதற்கோ கன்னியிளமானே
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னியிளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னியிளமானே
பல்வரிசை முல்லையென்றால் கன்னியிளமானே ஏ..ஏ..ஆ..
பல்வரிசை முல்லையென்றால் கன்னியிளமானே
பாடும் வண்டாய் நான் வரவா கன்னியிளமானே
பானுமதி மாறிவரும் வானகத்து மீனே
பார்க்க உன்னைத் தேடுதடி கன்னியிளமானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
#📷நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ்