5,000 அடி உயரத்தில் நடந்த குற்

திரைபாரதி
10.9K views
20 days ago
அழிச்சாட்டியத்தின் உச்ச கட்டம்: இதெல்லாம் ஓர் அரசியலா? பாராளுமன்றத் தொகுதிகள் மறு சீரமைப்பு விஷயத்தில் திமுக பேசி வருவது அழிச்சாட்டியத்தின் உச்ச கட்டம். தேர்தல் பரப்புரையில் அநாவசியமாக இதைப்பற்றி புரளி கிளப்புவது ஏற்புடையது அல்ல. எல்லா மாநிலங்களிலும் உள்ள பாராளுமன்றத் தொகுதிகள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமில்லை. எப்போதோ செய்திருக்க வேண்டியதை இப்போது செய்தாலும், அதையும் செய்யக்கூடாது என்பது அழிச்சாட்டியம்தானே? தமிழகத்தில் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 39. அது 59 ஆக உயர்த்தப்படும். உத்தரப்பிரதேசத்தில் 80 ஆக ஓஇருப்பது 120 ஆகிறது. இதில் தென்னிந்தியா, அதுவும் குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது என சொல்வதற்கு முகாந்திரமே இல்லை. மாவட்டங்களையும் தாலுகாக்களையும் வகைதொகை இல்லாமல் மாநில அரசு அதிகரிக்கவில்லையா? நிர்வாக சீர்திருத்தங்களுக்காக மாநிலத்தை இரண்டுமூன்றாகப் பிரித்தாலும் அதில் தவறு இல்லை. மத்திய அரசு பாராளுமன்றத் தொகுதிகளைத்தானே அதிகரித்துள்ளது? மத்திய அரசுக்கு எதிராக பீதி கிளப்புகிற வகையில் திமுக பேசுவதை கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் ஆதரிக்கின்றனவா? நீட் தேர்வை எதிர்த்து எப்படி தேவையில்லாமல் பேசுகிறதோ அதே மாதிரி தொகுதிகள் மறுசீரமைப்பு விஷயத்திலும் திமுக குறுக்குசால் ஓட்டுவது மற்ற மாநிலங்களில் தமிழகத்தைப் பற்றி மோசமான அபிப்பிராயம் உருவாகிவிட காரணமாகிவிடும். இதெல்லாம் ஓர் அரசியலா? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை