சினிமா🎬தகவல்

220 Posts • 1M views
இசையமைப்பாளர் தேவா, மணிவண்ணன் - சத்யராஜ் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர்களுடன் கம்போஸிங் செய்வது எப்படி இருக்கும் என்று சாய் வித் சித்ரா யூடியூப் சேனல் நேர்காணலில் தேவா மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவாது, 'கம்போஸிங்கிற்காக ஏற்காடுக்கு சென்றால் ஃபுல் ஜாலியாக தான் இருக்கும். சத்யராஜும் மணிவண்ணனும் நடுவில் என்னை கொஞ்சம் சில்மிஷம் எல்லாம் செய்வார்கள். கம்போஸிங்கிற்காக செல்லும் பொழுது கிட்டாரிஸ்ட், தபேலா வாசிப்பவர்கள் எல்லாம் ரயிலில் செல்வதால் முதலே சென்றுவிடுவார்கள். அப்போது நான், சத்யராஜ் - மணிவண்ணன் எல்லோரும் ஒன்றாக செல்வோம். அந்த நேரத்தில் சத்யராஜும் மணிவண்ணனும் தேவா சார் ரூமில் தனியாக தான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்ணிடம் காஃபியை கொடுத்து ரூமிற்குள் அனுப்பிவிடுவார்கள். இவர்கள் இப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் நான் ரூமைவிட்டு வெளியே சென்று காஃபி குடிப்பேன். இதை பார்த்த மணிவண்ணனும் சத்யராஜுன் நீ மட்டவில்லையே என்று கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுடன் சென்றால் முழுவதும் கம்போஸிங் மட்டுமே செய்து கொண்டிருக்கமாட்டேன். 75 சதவிகிதம் ஜாலியாக இருப்போம். 25 சதவிகிதம் கம்போஸிங் செய்வேன்' என்றார் #சினிமா🎬தகவல் #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢
11 likes
8 shares
தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். அடுத்த சில நாட்களில் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றிக்கொண்டார். பாடகி கெனிஷா என்பவருடன் அவர் நெருக்கமாக பழகிய நிலையில் பொது இடங்களுக்கும் அவருடன் கைகோர்த்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிய நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக கெனிஷாவையும் இணைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுக்காக தனது மனைவி, 2 பிள்ளைகளை விட்டு விலகிச் சென்ற நடிகர் ரவி மோகன், இப்போது தனது குடும்பத்தையே நிராகரிக்கும் ஒருநிலைக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் ரவிமோகனின் அப்பா எடிட்டர் மோகன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்த ரவி மோகனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, நீ மட்டும் அப்பாவை பார்க்க வா, கெனிஷாவுடன் வர வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். அதனால் தனது அப்பாவை நேரில் வந்து பார்க்காமல் நடிகர் ரவிமோகன் தவிர்த்து விட்டார். சமீபத்தில் ரவிமோகனின் தங்கை மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கெனிஷா இல்லாமல் தனியாக நீ மட்டும் வா என்று குடும்பத்தினர் அழைத்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கும் வராமல் ரவி மோகன் புறக்கணித்து விட்டார். இப்படி கெனிஷாவுக்காக மனைவி, பிள்ளைகள் மட்டுமின்றி இப்போது தனது பெற்றோர், சொந்த உறவுகளையும் அவர் நிராகரித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #சினிமா🎬தகவல் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
6 likes
18 shares