இறைத் திருவாசகம்

A Mohan Raj
839 views
9 hours ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - பழமுதிர்சோலை* *திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்சோலை என்பது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது மற்றும் இறுதிப் படை வீடாகப் போற்றப்படுகிறது. சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில், இப்பகுதி நூலின் இறுதிப் பகுதியாக அமைந்துள்ளது.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - பழமுதிர்சோலை* சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் (220) ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறிஅயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225) மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும் மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் (230) செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் (235) பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியோடு இன்னியம் கறங்க (240) உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் (245) கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே யாண்டாண் டாயினும் ஆகக் காண்தக (250) முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழுஉப் பரவிக் கால்உற வணங்கி நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ (255) ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்குவில் தானைத் தலைவ (260) மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265) குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள (270) அலர்ந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (275) போர்மிகு பொருந குரிசில் எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் (280) குறித்தது மொழியா அளவையில் குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285) இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி (290) அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295) வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300) ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305) நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் (310) கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம் பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்பச் சேண்நின்று (315) இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
604 views
1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - குன்றுதோறாடல்* *குன்றுதோறாடல் என்பது முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் மலைத்தலங்கள் அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல்லாகும். எனினும், இது பொதுவாக ஆறுபடை வீடுகளில் ஒன்றான "திருத்தணி" திருத்தலத்தைக் குறிப்பதாகும். திருமுருகாற்றுப்படையில், நக்கீரர் முருகனின் ஐந்தாம் படைவீடாகிய இத்தலத்தை மலைகளின் சிறப்போடும், இயற்கை வனப்போடும் "குன்றுதோறாடல்" எனப் போற்றியுள்ளார்.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - குன்றுதோறாடல்* பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190) அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் (195) குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் (200) முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205) செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் (210) கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215) மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே, அதாஅன்று 5 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.2K views
5 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - திருச்சீரலைவாய்.* *திருமுருகாற்றுப்படையின் 78 முதல் 102 வரையிலான வரிகள் Shaivam, முருகப்பெருமான் பிணிமுகம் என்னும் யானை மீது ஏறி, தன் ஆறு திருமுகங்களுடன் திருச்சீரலைவாயில் எழுந்தருளும் காட்சியையும், அந்த ஆறு முகங்களின் வெவ்வேறு சிறப்பான பணிகளையும் விவரிக்கின்றன.* பாடல் வரிகள் : *திருமுருகாற்றுப்படை - திருச்சீரலைவாய்* வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் (80) கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப (85) நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே (90) மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ (95) அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம் (100) குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு (105) வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை (110) ஐயிரு வட்டமொ டெஃகுவலம் திரிப்ப ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பாடின் படுமணி இரட்ட ஒருகை (115) நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல (120) உரம்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும் பாறாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதா அன்று (120) 2 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✨ബിനുഷാ..🪄
2.5K views
10 days ago
Vasanam ✨✨😍🙏🏼✝️🙏🏼✝️🙏🏼✝️✝️✝️🛐🛐🛐✝️🙏🏼🛐✝️🙏🏼றைவார்தை✝️🛐🙏🏼🙏🏼✝️✝️✝️✨✨✨ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #வசனம் #இறைவார்த்தை #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன்
A Mohan Raj
2.3K views
11 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பெருந்தேவபாணி* *நக்கீரதேவ நாயனார் அருளிய பெருந்தேவபாணி என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான சிற்றிலக்கிய நூலாகும். சிவபெருமானின் தோற்றம், வீரம், அருள்சுரக்கும் பண்புகள் மற்றும் அவனது பல்வேறு வடிவங்களை (சூலபாணி, நீலகண்டன், நெற்றிக்கண்ணன்) விவரித்து போற்றும் வகையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளன. 'தேவபாணி' என்றால் கடவுளைப் போற்றிப் பாடும் வாழ்த்துப் பாடல் என்று பொருள். தேவர்களுக்கெல்லாம் தேவனான 'பெருந்தேவன்' ஆகிய சிவபெருமானின் பெருமைகளைத் துதித்துப் பாடுவதால் இது 'பெருந்தேவபாணி' என அழைக்கப்படுகிறது.* பாடல் வரிகள் : *நக்கீரதேவ நாயனார் அருளிய பெருந்தேவபாணி* சூல பாணியை சுடர்தரு வடிவனை நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை கீதம் பாடியை கிளர்பொறி அரவனை போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை சாதி வானவர் தம்பெரு மான்தனை வேத விச்சையை விடையுடை அண்ணலை ஓத வண்ணனை உலகத் தொருவனை நாத னாகிய நன்னெறிப் பொருளினை மாலை தானெரி மயானத் தாடியை வேலை நஞ்சினை மிகஅமு தாக்கியை வேத வேள்வியை விண்ணவர் தலைவனை ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை ஆயிர நூறுக் கறிவரி யானை பேயுருவு தந்த பிறையணி சடையனை மாசறு சோதியை மலைமகள் கொழுநனை கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்ற ருள் சிவனை பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை பீடுடை யாற்றை பிராணி தலைவனை நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை ஈசனை இறைவனை ஈறில் பெருமையை நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை தாதணி மலரனை தருமனை பிரமனை காதணி குழையனை களிற்றின் உரியனை சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை வித்தக விதியனை தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை பிரமன் பெருந்தலை நிறைய தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த ஆர்வமுண் நஞ்சம் அமுத மாக்கினை ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை திக்கமர் தேவருந் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை வேதமும் நீயே வேள்வியும் நீயே நீதியும் நீயே நிமலன் நீயே புண்ணியம் நீயே புனிதன் நீயே பண்ணியல் நீயே பழம்பொருள் நீயே ஊழியும் நீயே உலகமும் நீயே வாழியும் நீயே வரதனும் நீயே தேவரும் நீயே தீர்த்தமும் நீயே மூவரும் நீயே முன்னெறி நீயே மால்வரை நீயே மறிகடல் நீயே இன்பமும் நீயே துன்பமும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே விண்முதற் பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால் கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ்நின்று வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே. வெண்பா விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே ஆற்றவுநீ செய்யும் அருள். திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.5K views
13 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து திருவலஞ்சுழி மும்மணிக்கோவை* திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்பது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள ஒரு சிற்றிலக்கிய நூலாகும். இதனைப் பாடியவர் நக்கீரதேவ நாயனார் ஆவார். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. *பாடல் அமைப்பு : 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான இது, ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகையான பாக்கள் அடுத்தடுத்து மாறிவரும்படி மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.* பாடல் வரிகள் : *திருவலஞ்சுழி மும்மணிக்கோவை* ஆசிரியப்பா வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன் பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற் படவர வொடுங்க மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்திழி அருவி குணகடல் மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல் உடுத்த மணிநீர் வலஞ்சுழி அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே. 1 வெண்பா அடிப்போது தந்தலைவைத் தவ்வடிகள் உன்னிக் கடிப்போது கைக்கொண்டார் கண்டார் - முடிப்போதா வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும் காணாத செம்பொற் கழல். 2 கட்டளைக் கலித்துறை கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லார் தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவரந் தாமரையின் நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம் அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே. 3 ஆசிரியப்பா அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற் கடவுள் மன்னிய தடமல்கு வலஞ்சுழிப் பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும் திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த் திருந்திருங் குழலியைக் கண்டு வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே. 4 வெண்பா போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத் தாதெலாம் தன்மேனி தைவருமால் -தீதில் மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப் பிறைக்கண்டங் கண்டணைந்த பெண். 5 கட்டளைக் கலித்துறை பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்பெரு மான்திருமால் வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்மதி சூடிநெற்றிக் கண்கொண்ட கோபம் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப் பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே. 6 ஆசிரியப்பா முகிற்கணம் முழங்க முனிந்த வேழம் எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும் சாரல் தண்பொழில் அணைந்து சோரும் தேனுகு தண்தழை செறிதரு வனத்தில் சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த மணிநீர்க் குவளை அன்ன அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே. 7 வெண்பா பொருட்டக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும் அருட்டக்கீர் யாதும்ஊர் என்றேன் – மருட்டக்க மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார் தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு. 8 கட்டளைக் கலித்துறை சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கணக்கன் பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய பாவையையே. 9 அகவல் பாவை ஆடிய துறையும் பாவை மருவொடு வளர்ந்த அன்னமும் மருவித் திருவடி அடியேன் தீண்டிய திறனும் கொடியேன் உள்ளங்கொண்ட சூழலும், கள்ளக் கருங்கண் போன்ற காவியும் நெருங்கி அவளே போன்ற தன்றே தவளச் சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி வண்டினம் பாடுஞ் சோலைக் கண்ட அம்மஅக் கடிபொழில் தானே. 10 வெண்பா தான்ஏறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல் தேன்ஏறு கொன்றைத் திறம்பேசேன் - வான்ஏறு மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என் கையார் வளைகவர்ந்த வாறு. 11 கட்டளைக் கலித்துறை ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக் கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார் சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே. 12 ஆசிரியப்பா நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த செறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாண பொய்கை யூரன் புதுமணம் புணர்தர மூவோம் மூன்று பயன்பெற் றனவே நீஅவன் புனைதார் மாலை பொருந்தப் பாடி இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள வாசகம் வழாமல் பேச வண்மையில் வானர மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல் எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ விழையா இன்பம் பெற்றனர் யானேல் அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச் சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பில் தீநீர் அன்ன வாய்நீர் சோரும் சிலம்புகுரற் சிறுபறை பூண்ட அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே. 13 வெண்பா தனம்ஏறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய் மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ - இனம்ஏறிப் பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான் கோடாலங் கண்டணைந்த கொம்பு. 14 கட்டளைக் கலித்துறை கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று நம்பா எனவணங் கப்பெறு வானை நகர்எரிய அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானைஅண் ணாமலைமேல் வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே. 15 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-
948 views
23 days ago
#இறை வசனம் தினம் தொடர் வசனம்* ━━━━━━﷽━━━━━━━ `அல் குர்ஆன்` "46-வது சூரா (*அஹ்காஃப்*) 15- வது வசனம். 08.05.2026 *வெள்ளிக்கிழமை* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈ *மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
A Mohan Raj
1.3K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 17. சூனிய சம்பாஷணை* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *ஒன்பதாம் தந்திரத்தில் 17-வது அதிகாரமாக அமைவது "சூனிய சம்பாஷணை" ஆகும்.* *இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:* *'சூனியம்' என்பது வெளிப்படையான பொருளுக்கு அப்பாற்பட்ட மறைபொருளையும், 'சம்பாஷணை' என்பது உரையாடலையும் குறிக்கும். அதாவது, ஞானிகள் தங்களின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்களை மற்றவர்கள் எளிதில் உணராதபடி குறியீட்டு மொழியில் மறைபொருளாகக் கூறும் பாடல்களின் தொகுப்பு இதுவாகும்* *பாடல் எண்ணிக்கை: இதில் மொத்தம் 70 பாடல்கள் (மந்திரங்கள் 2865 முதல் 2934 வரை) இடம்பெற்றுள்ளன.* *சிறப்பு: இப்பாடல்கள் விடுகதைகளைப் போலவும், முரண்பாடான சொற்றொடர்களைக் கொண்டும் அமைந்திருக்கும். வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு பொருள் தரும், ஆனால் யோக மார்க்கத்தில் அல்லது ஞான மார்க்கத்தில் வைத்துப் பார்த்தால் மட்டுமே அதன் உண்மைப் பொருள் விளங்கும். இப்பாடல்களில் குளம், பூக்கள், பழங்கள் போன்றவை மனித உடலையும், அதில் உள்ள ஆதாரங்களையும், அதன் வழி அடையும் பேரின்பத்தையும் குறிக்கும் மறைபொருள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.* பாடல் வரிகள் : *17. சூனிய சம்பாஷணை* 2866 காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1 2867 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2 2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3 2869 வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4 2870 ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5 2871 பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 6 2872 மூவணை ஏரும் உழுவது முக்காணி தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும் நாஅணைகோலி நடுவில் செறுஉழார் காலணை கோலிக்களர்உழு வாரே. 7 2873 ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர் பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8 2874 பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9 2875 ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10 2876 தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல் மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11 2877 அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12 2878 இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக் கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13 2879 விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14 2880 களர்உழு வார்கள் கருத்தை அறியோம் களர்உழு வார்கள் கருதலும் இல்லைக் களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 15 2881 கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 16 2882 மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17 2883 பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 18 2884 ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19 2885 எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20 2886 போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21 2887 மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22 2888 பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23 2889 இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24 2890 ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25 2891 கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுகல் உறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26 2892 குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27 2893 காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும் மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவனை யாமே. 28 2894 கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29 2895 துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள் ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30 2896 பருந்துங் கிளியும் படுபறை கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் போலுரு வாகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31 2897 கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும் சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32 2898 இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33 2899 அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34 2900 கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35 2901 கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 36 2902 பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும் கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 37 2903 கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன் எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38 2904 தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 39 2905 ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே. 40 2906 கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங் கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 41 2707 ஏழு வளைகடல் எட்டுக் குலவரை யாழும் விசும்பினில் அங்கி மழைவளி தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. 42 2908 ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச் சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள் மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 43 2909 கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 44 2910 கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 45 2911 கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 46 2912 கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 47 2913 உழவொன்று வித்து ஒருங்கின காலத்து எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி தழுவி வினைசெய்து தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யோனே. 48 2914 பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 49 2915 தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர்மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50 2916 முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 51 2917 அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52 2918 பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53 2919 மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 54 2920 நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம் யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை கூரும் மழைபொழி யாது பொழிபுனல் தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55 2921 கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில் மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 56 2922 வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 57 2923 நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன் விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58 2924 தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 59 2925 குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 60 2926 போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே . 61 2927 பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 62 2928 கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள் வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 63 2929 வீணையும் தண்டும் விரவி இசைமுரல் தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64 2930 கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65 2931 போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66 2932 கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும் வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 67 2933 தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால் நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும் மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 68 2934 புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பின் அவளொடும் போகம் நுகரும் புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69 2935 தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.6K views
1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 10. ஞானோதயம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *ஒன்பதாம் தந்திரத்தில் உள்ள 10-வது பகுதி ஞானோதயம் ஆகும். இதில் தான் வேறு, இறைவன் வேறு என்ற நிலைமாறி, "தானே அவன்" (சிவோகம்) என்ற ஞானம் குருவருளால் உண்டாகும் நிலையை விளக்குகிறது. பற்றற்ற நிலையில், மனதின் தெளிவில் சிவனை உணர்ந்து, ஞான இன்பத்தில் நிலைத்திருப்பதை இப்பகுதி கூறுகின்றன. மேலும் ஞானோதயம் பெற்றவர், புற உலகில் உள்ள பொருள்களின் மீதான பற்றை விடுத்து, தங்களுக்குள் இருக்கும் சிவத்தை உணர்கின்றனர். இது முக்திக்கு முந்தைய நிலை எனவும் கூறப்படுகிறது.* பாடல் வரிகள் : *10. ஞானோதயம்* 2813 மனசந் தியில்கண்ட மனநன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1 2814 கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2 2815 மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3 2816 விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4 2817 தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5 2818 விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6 2819 முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம் ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7 2820 நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும் நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது நான்என்ற ஞான முதல்வனே நல்கினான் நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8 2821 ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல் ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9 2822 உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10 2823 காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும் பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11 2824 ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல் மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A Mohan Raj
1.9K views
1 months ago
AI indicator
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 8.5 பொற்றில்லைக் கூத்து* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *ஒன்பதாம் தந்திரத்தில் 8.5-வது பகுதியாக "பொற்றில்லைக்கூத்து" (பொன் தில்லைக் கூத்து) இடம் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் இறைவன் தில்லை (சிதம்பரம்) பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தைப் பற்றியும், அதன் தத்துவங்களைப் பற்றியும் திருமூலர் விளக்குகிறார். இந்தத் தந்திரம், சிவபெருமானின் பஞ்சகிருத்திய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) தொழிலை விளக்கக்கூடிய தில்லை நடனத்தின் உயர்வை உணர்த்துகிறது.* பாடல் வரிகள் : *8.5 பொற்றில்லைக்கூத்து* 2749 அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28 2750 குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29 2751 ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30 2752 கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31 2753 மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம் பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32 2754 இடைபிங் கலைஇம வானோடு இலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33 2755 ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34 2756 நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி போதத்தில் ஆடி புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35 2757 தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக் கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36 2758 ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும் கூறு சமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37 2759 அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38 2760 ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39 2761 இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏