இந்திய வரலாற்றில் இன்று

⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
597 views
2 days ago
*ஏப்ரல் 06,* *மீனாட்சிசுந்தரம் பிள்ளை* மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ம் ஆண்டு ஏப்ரல் 06ம் தேதி திருச்சியில் பிறந்தார். இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார். இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள். மாயூரம் வேத நாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் #வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா (1876) மறைந்தார்.
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
594 views
2 days ago
*ஏப்ரல் 06,* *அழகப்பச் செட்டியார்* விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய டாக்டர் அழகப்பச் செட்டியார் 1909ம் ஆண்டு ஏப்ரல் 06ம் தேதி சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்தார். இவர் மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள், விமானப் போக்குவரத்து நிறுவனம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். மேலும் இவர் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு காரைக்குடியில் நிலத்தை நன்கொடையாக வழங்கியதால் இவரை சோஷலிச முதலாளி எனப் புகழ்ந்தார் நேரு. இவரது முனைப்பால் தான் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. 1956-ல் பத்மபூஷண் விருது பெற்றார். வெற்றிகரமான தொழிலதிபரும், கல்வி வளர்ச்சிக்காக வாரி வழங்கிய வள்ளலுமான அழகப்பச் செட்டியார் 48-வது வயதில் (1957) மறைந்தார். #வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா