*ஏப்ரல் 06,*
*அழகப்பச் செட்டியார்*
விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய டாக்டர் அழகப்பச் செட்டியார் 1909ம் ஆண்டு ஏப்ரல் 06ம் தேதி சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்தார்.
இவர் மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள், விமானப் போக்குவரத்து நிறுவனம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
மேலும் இவர் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு காரைக்குடியில் நிலத்தை நன்கொடையாக வழங்கியதால் இவரை சோஷலிச முதலாளி எனப் புகழ்ந்தார் நேரு. இவரது முனைப்பால் தான் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. 1956-ல் பத்மபூஷண் விருது பெற்றார்.
வெற்றிகரமான தொழிலதிபரும், கல்வி வளர்ச்சிக்காக வாரி வழங்கிய வள்ளலுமான அழகப்பச் செட்டியார் 48-வது வயதில் (1957) மறைந்தார்.
#வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா