தற்போதைய செய்திகள்

Makkal Mugam
524 views
1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தருவையில் நான்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.ஆர். மனோகரன் வாக்கு சேகரித்தார் நெல்லை.ஏப்.15 நெல்லை மாவட்டம் தருவையில் நான்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.ஆர்.மனோகரன் தீவிர வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியின் முன்பு அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது. கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகைத் கிராமப் புறங்களைச் சேர்ந்த பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது.மீண்டும் இந்த ஆட்சி தொடர மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு உங்கள் ஆதரவு தந்து கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பாளையங்கோட்டை வட்டார தலைவர் கணேசன்.நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தருவை செல்வக்குமார். கிராம கமிட்டி தலைவர்கள் நந்தகோபால். சுப்பையா. பொருளாளர் ராமசுப்பு. முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகராமச்சந்திரன். மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
8.1K views
2 days ago
#செய்திகள் #தற்போது செய்தி ✍️🌹 மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பு ஈரோடு, ஏப்.14- ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நேற்று முன் தினம் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொல்லம் பாளையம் பகுதி வார்டு 56 - தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவரும் செய்த சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். ஈரோடு மாவட்டத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்து நிறைவேற்றபட்டன. தாங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நேற்று கிறிஸ்தவ நல அமைப்பு ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு சந்திப்பில் C.S.I பொதுசெயலாளர் வழக்கறிஞர் (தமிழக சிறுபான்மை மேம்பாட்டு கழகம்) பெர்ணான்ட்ஸ் ரத்தின ராஜா மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு மேற்கு சட்டமன்ற வேட்பாளர் சு.முத்துசாமி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், பழனியப்பன், மொடக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் செந்தில்நாதன், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிறப்புறை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
514 views
2 days ago
#செய்திகள் #தற்போது செய்தி அருப்புக்கோட்டை தொகுதி வெற்றிவேட்பாளர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பந்தல்குடி ரோடு 33 வது வார்டில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கொழுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பு. உடன் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் சோலையப்பன். மறவர் தெரு S.பாலன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
499 views
3 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 அருப்புக்கோட்டை தாசில்தாரை மாற்றம் செய்ய கோரி அதிமுக வேட்பாளர் சோலை சேதுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம்.அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் முறைப்படி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 3 மாதமாக நாங்கள் தாசில்தாரிடம் பலமுறை தேர்தல் விதிமுறைகளை கேட்டோம். எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால் இன்று அதிமுக அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சோலை சேதுபதி தலைமையில் நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Makkal Mugam
542 views
4 days ago
#செய்திகள் #தற்போது செய்தி ஈரோடு மாவட்டம் அமைச்சா முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பு
Makkal Mugam
519 views
4 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ராதாபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு பணகுடி.ஏப்.12 நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க வேட்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் த.வெ.க வேட்பாளர் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி த.வெ.க வேட்பாளர் டாக்டர் எஸ்.கே கிறிஸ்டோபர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இந்நிகழ்ச்சியின் முன்பு அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியான நந்தன்குளம். செல்வமருதூர். சிவன்கோவில். பள்ளிவாசல். மணலிவிளை.போஸ்ட் ஆபிஸ்.மன்னராஜா.கோவில்தெரு.எம்.எல்.மருத்துவமனை பஞ்சாயத்து அலுவலகம். திசையன்விளை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்காள பெருமக்களிடம் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் இந்நிகழ்வில். திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜகோபால். மாவட்ட கழக இணை செயலாளர் காட்வின் பிரசாத்.ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்