🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏

🌹G. THIRU.JCB.OP🌹
939 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
AI indicator
🕉️🕉️🕉️ஓம் நமசிவாய போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 சிவன் ஸ்டேட்டஸ்💫💫💫💫 #ஓம் நமச்சிவாயா #om namachivaya #om namachivaya🔱
saravanan
1.1K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 திருப்பதிகம்🌷...! *🌷நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்🌷...!* *🌷அருளிச்செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்...🌷* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶 பாடல் 1 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே. *விளக்கம்:* புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும். *தொடரும்...* 🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨
saravanan.
593 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
*_வருடத்தில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும் தமிழகத்தின் அதிசயக் கோயில்_* * 🛕🛕🛕காஞ்சிபுரத்தில் #🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பழமையான 1008 சிவன் கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு காமாட்சி அம்மன் கோவில் தவிர மற்ற எந்த சிவன் கோவிலிலும் அம்பாளுக்கு சன்னதி இருக்காது என்பது எப்படி ஆச்சரியப்பட வைக்கும் விஷயமோ அதே அளவிற்கு ஆச்சரியத்தை தரக் கூடியது தான் வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் திறக்கப்படும் சிவன் கோவில். இது போன்ற அதிசய சிவன் கோவில்கள் வட மாநிலங்களில் இருப்பதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தமிழகத்தின் காஞ்சிபுரத்திலும் இப்படி ஒரு கோவில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? > கோவில் மாநகரம் எனப் போற்றப்படும் ஊர்களில் ஒன்று காஞ்சிபுரம். நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை, வாழ்ந்தால் முக்தி தரும் ஊர் காஞ்சிபுரம். காஞ்சி நகரின் ஆன்மீக சிறப்புகளை, ஆச்சரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். காஞ்சிபுரம் என்றதும் நினைவிற்கு வருவது காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய மூன்றும் தான். ஆனால் வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் திறக்கப்படும் அதிசயமான கோவிலும் இங்கு தான் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அது எந்த கோவில், ஏன் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கிறார்கள்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தலத்தை, கி.பி. 300 முதல் 850 வரை, மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, பல்லவ மன்னர்கள் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். மணிபல்லவம் என அழைக்கப்பட்ட தீவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் இம்மன்னர்களின் கொடி, சிம்மக் கொடி. அவர்களின் ஆட்சியில் காஞ்சியில் எழுந்த கற்றளிக் கோயில்கள் இன்று கூட கலைநயத்தின் சாட்சிகளாக நிற்கின்றன. அவற்றில், சிவகாஞ்சி பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோவில் உலகப்புகழ் பெற்றவை. ஆனால், இவை தவிர பெரும்பாலோர் அறியாத ஆறு அபூர்வக் கோயில்கள் சிவகாஞ்சி பகுதியில் அமைந்துள்ளன. அவற்றில் மிக மர்மமானது, "பிறவாதீசுவரர்" திருக்கோயில். வருடத்தில் ஒருநாள் மட்டுமே திறக்கும் அதிசயம் கோவில் இது தான். அந்த ஒரு நாள், மகாசிவராத்திரி திருநாள் தான். மகா சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். வருடம் முழுவதும் மூடியிருக்கும் இந்தக் கருவறை, அந்த ஒரு இரவில் ஆன்மிகத் தீபம் போல ஜொலிக்கிறது. மகாசிவராத்திரி அன்று இரவில், கோயில் வாசல் திறக்கும் அந்த நொடியில் பக்தர்கள், "இந்தப் பிறவியே கடைசி ஆகட்டும்; இனி ஒரு பிறவி வேண்டாம்" என்ற மனமுருக வேண்டுக் கொள்வார்கள். அந்த ஒரு இரவில் கிடைக்கும் தரிசனம், பிறவிப் பிணியை நீக்குவதாக அமையும். இந்த ஆலயத்தை கி.பி. 700–728 காலத்தில் ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. மணற்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு அடுக்கு விமானம், எண்கோண வடிவிலான கருவறை, செவ்வக முகமண்டபம் என அனைத்தும் பல்லவக் கட்டிடக் கலைக்குச் சான்றுகள். தல வரலாறு : இத்தல வரலாற்றில் வாமதேவ முனிவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தாயின் கருவில் இருக்கும் போதே, "மறுபிறவி வேண்டாம்" என்று இறைவனை வேண்டியதாக ஐதீகம் கூறுகிறது. கருவில் இருந்த படியே பிரார்த்தனை செய்த இவருக்கு இறைவன் அருள் காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை வழிபடு; பிறவி அணுகாது" என வரம் அளித்தார். பிறந்த பின் வாமதேவர் காஞ்சிக்குச் சென்று லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்து, மறுபிறவி இல்லா நிலையை அடைந்தார். இதனால் இத்தல ஈசன் "பிறவாதீசுவரர்" எனப் போற்றப்பட்டார். பிறவாதீசுவரர் என்றால் பிறவி நீக்கும் இறைவன் என்று அர்த்தம். வாமதேவ முனிவர் கருவில் இருந்த படி பிரார்த்தனை செய்த பலன் பெற்ற தலம் என்பதால், மகாசிவராத்திரி தவிர மற்ற அனைத்து நாட்களும் இக்கோவின் கருவறை, பூட்டப்பட்ட நிலையில் இருள் சூழ்ந்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. கருவறையில் லிங்கம் அருள்கூர, பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் பிரம்மா, விஷ்ணுவுடன் காட்சி தருகிறார். தேவகோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, கிழக்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மா, வெளிப்புறச் சுவர்களில் துர்கை, கஜலட்சுமி போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் பல்லவக் கலைநயத்தைக் காட்டுகின்றன. எங்கு அமைந்துள்ளது? இந்த மர்மத் திருக்கோவில் கம்மாளத் தெருவில், பச்சைவண்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. 🍁🍁🍁
saravanan.
656 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
#🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 இங்கே சென்றால் தலையெழுத்தே மாறும்! 🔥 சிவபெருமான் எடுத்த 8 விஸ்வரூபங்கள் – அஷ்ட வீரட்டானங்களின் ரகசியம் சிவபெருமான் தீமையை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்திய வீர தீர லீலைகள் நிகழ்ந்த எட்டு புனித தலங்களே “அஷ்ட வீரட்டானங்கள்” என அழைக்கப்படுகின்றன. இந்த தலங்கள் பைரவரின் வீரத்தையும், கருணையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சக்தி தலங்கள். இங்கே அடியெடுத்து வைத்தாலே — விதியும் மதியும் மாறும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. 🕉️ 1. திருக்கண்டியூர் (தஞ்சாவூர் அருகில்) இறைவன்: பிரமசிரக்கண்டீசுவரர் வீரச் செயல்: பிரம்மனின் அகந்தை அழிக்கப்பட்ட தலம் அகந்தை எத்தனை பெரியதாக இருந்தாலும், சிவ அருளின் முன் அது கரையும் என்பதை உணர்த்தும் தலம். வடமேற்கு மூலையில் பைரவரின் தனி சன்னதி அமைந்துள்ளது. 🕉️ 2. திருக்கோவிலூர் இறைவன்: அந்தகாசுர சம்ஹார மூர்த்தி அன்னை: சிவானந்தவல்லி அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்த இடம். ஆலயத்தின் ஈசானிய மூலையில் பைரவர் அருள் பாலிக்கிறார். 🕉️ 3. திருவதிகை (பண்ருட்டி அருகில்) இறைவன்: வீரட்டானேஸ்வரர் திரிபுர அசுரர்கள் எரிக்கப்பட்ட தலம். திருநாவுக்கரசரின் நோய் நீங்கியதும், சுந்தரமூர்த்தி நாயனார் தீட்சை பெற்றதும் இங்கேதான். 🕉️ 4. திருப்பறியலூர் (மாயவரம் அருகில்) இறைவன்: வீரட்டானேஸ்வரர் அன்னை: இளங்கொம்பனையாள் தட்சன் யாகம் அழிக்கப்பட்ட தலம். அகந்தையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் சக்தி தலம். 🕉️ 5. திருவிற்குடி (திருவாரூர் அருகில்) இறைவன்: ஜலந்தராசுரவத மூர்த்தி ஜலந்தராசுரனை அழித்த தலம். திருமால் சுதர்சன சக்கரம் பெற்ற இடம் என்பதால் இங்கே பைரவருக்கு துளசி அர்ச்சனை விசேஷம். 🕉️ 6. வழுவூர் இறைவன்: கிருத்திவாஸர் முனிவர்களின் அகந்தையை அழித்து ஞானம் அருளிய தலம். ஐயப்பன் அவதரித்த இடம் என்றும் கருதப்படுகிறது. சனி தோஷங்கள், ஏழரைச்சனி பரிகாரத்திற்கு மிகுந்த சக்தி பெற்ற தலம். 🕉️ 7. திருக்குறுக்கை இறைவன்: வீரட்டேஸ்வரர் அன்னை: ஞானாம்பிகை காமனை எரித்த புனித பூமி. மனக் கட்டுப்பாடு, பிரம்மச்சரிய சக்தியை உயர்த்தும் தலம். 🕉️ 8. திருக்கடையூர் இறைவன்: அமிர்தகடேஸ்வரர் அன்னை: அபிராமி எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனை காத்த தலம். ஆயுள் தோஷம், இதய நோய், மரண பயம் நீங்க வில்வ அர்ச்சனை சிறப்பு. 🌺 பைரவருக்கு பிரியமானவை 🔸 செவ்வரளி 🔸 வில்வம் 🔸 தீப ஆராதனை ✨ அஷ்ட வீரட்டானங்கள் என்பது கோவில்கள் மட்டுமல்ல — மனிதனின் அகந்தையை உடைத்து, விதியை திருத்தும் சிவ சக்தி நிலையங்கள். 🍁🍁🍁
saravanan.
2.5K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
#🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 பெற்ற சிவபெருமான் திருத்தலங்கள்... 1, திருவையாறு – ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது. 2, முக்கீச்சுரம் – உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது. 3, திருபூந்திருத்தி – நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல். 4, திருவீழிமிழலை – சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல். 5, கீள்வேளூர் – கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசனம் தரல். 6, திருக்கழுக்குன்றம் & திருப்பெருந்துறை – மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது. 7, கொட்டையூர் – சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல். 8, திருநல்லூர் – அமர்நீதி நாயனார் துலையேறிய போது இறைவன் காட்சி தரல். 9, திருவாவடுதுறை – முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது. 10, அச்சிறுப்பாக்கம் – திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி. 11, கஞ்சனூர் – பிரம்மனுக்கு திருமண காட்சி. 12, வடதிருமுல்லைவாயில் தொண்டமானுக்கு காட்சி. 13, திருவையாறு – காவிரி வெள்ளம் விலகி வழிபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி. 14, குடவாயில் – திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி. 15, கைச்சினம் – சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம். 16, திருப்புறம்பியம் – கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி. 17, கொள்ளம்புதூர் – சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல். 18, திருப்பைஞ்சிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது. 19, திருக்கானப்பேர் – இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது. 20, கடம்பந்துறை – கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல். 21, திருக்கண்டியூர் – சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா. 22, திருக்கானூர் – உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது. 23. திருவலம்புரம் – ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது. 24. திருத்தினைநகர் – பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல். நந்தி கொம்பு ஒடிந்த தலம்: திருவெண்பாக்கம் ஈசனோடு நந்தி இணைந்த உருவ தலம்: திருக்கூடலையாத்தூர், பவானி நந்தி விலகிய தலம் : திருப்புங்கூர் , பட்டீஸ்வரம் , திருப்பூவனம் திருப்பூந்துருத்தி நந்தி நின்ற தலம் : திருமால்பேரு நந்தி திருமண தலம் : திருமழபாடி நந்தி பிரதோஷ தலம் : திருஅரிசிலி நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல் திரும்பியவாறு கோபுரம் நோக்கிய தலம் : திருவோத்தூர் , திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.🍁