தாய மூகாம்பிகை அம்மா

திரைபாரதி
3.1K views
2 days ago
AI indicator
திமுகவின் தோல்விக்கு குடும்ப அரசியல் காரணமா? பென் நிறுவனம் விஷயத்தில் திமுகவில் ஏற்பட்டது தடுமாற்றமா அல்லது நிகழ்ந்தது ஏமாற்றமா? சமீப காலமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படுவது கீழே வரும் கேள்விகள்தான். * திமுகவின் தோல்வி மறைமுக அதிகார மையங்களின் விளைவா? * உளவுத் தகவல்கள் தவறானதா? அதுதான் திமுகவின் தோல்விக்கு காரணமா? * இலவசங்களும் பணப்பட்டுவாடாவும் ஏன் வேலை செய்யவில்லை? * அதிகாரத்திற்கு வெளியே இருந்த பவர் சென்டர்கள் திமுகவை பலவீனப்படுத்தினவா? * திமுக தோல்வியின் உண்மையான காரணம் என்ன? தமிழக அரசியலில் சமீப காலமாக பேசப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று சபரீசன் தலைமையில் இயங்கியதாகக் கூறப்பட்ட “பென்” நிறுவனத்தின் செயல்பாடுகள். அந்த நிறுவனம் திடீரென இழுத்து மூடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுகிறது. தேர்தல் காலங்களில் உளவுத்துறையுடன் நெருக்கமாக இருந்து, மக்களின் மனநிலையைப் பற்றிய தவறான தகவல்களை பென் நிறுவனம் அரசுக்கு வழங்கியதா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உண்மையான தரவுகளுக்கு பதிலாக, வெற்றியை உறுதி செய்கிறதுபோல தகவல்கள் சென்றிருந்தால், அது ஆட்சியாளர்களை தவறான நம்பிக்கைக்குள் தள்ளியிருக்கலாம். அதே நேரத்தில், உதயநிதி மற்றும் அவருடைய சகோதரியின் கணவரான சபரீசன் இடையே அவர்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்து (அல்லது சொத்து பிரிவினை தொடர்பாக?) கருத்து வேறுபாடுகள் உருவானதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் குடும்ப உறவுகள் மற்றும் அதிகார மையங்கள் இணையும் போது, அவை கட்சியின் உள்கட்டமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. நேரடி அரசியல் பொறுப்பில் இல்லாதவர்களே அதிகார மையங்களாக மாறும்போது, அது கட்சியின் இயல்பான நிர்வாகத்தையும், தரைமட்டத் தொடர்புகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், திமுகவின் பின்னடைவை முழுமையாக இக்காரணங்களுக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது. தமிழக மக்களிடையே நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் ஒரு வித சலிப்பு உருவாகியுள்ளது. மாற்றத்திற்கான மனநிலை சமூகத்தில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஜோசப் விஜய் அரசியலுக்கு வந்தது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பின்புலத்தில்தான் அரசின் இலவசத் திட்டங்களும், தேர்தல் நேர பணப்பட்டுவாடாவும் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யவில்லை. மக்கள் இந்த முறை வேறுபட்ட அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் என்பதையே இந்த நிலை வெளிப்படுத்துகிறது. கடைசியில் மிகவும் முக்கியமாக திமுக விஜய்யின் பலத்தையும் அவருடைய தேர்தல் வியூகங்களின் தாக்கத்தையும் குறைத்து எடைபோட்டு அதிக நம்பிக்கையுடன் மெத்தனமாக இருந்ததுதான் அதன் தோல்விக்குக் காரணம். ஆனால், களநிலவரத்தை சரியாக கணித்து கட்சித்தலைமையை பென் நிறுவனம் எச்சரிக்கத் தவறிவிட்டது என்பதையும் மறுக்க முடியாது. 1967 தேர்தலை காங்கிரஸ் அரசு ஒருவித மெத்தனப் போக்குடன் எதிர்கொண்டது. It is often said that History Repeats Itself, first as tragedy, then as farce. அதாவது, வரலாறு, முதலில் துயர நாடகமாகவும், பின்னர் கேலிக்கூத்தாகவும் மீண்டும் நிகழ்கிறது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது! அதுதான் 2026 இல் நடந்திருக்கிறது. இது திமுகவிற்கு 'அரசியல்' ஆயுள் தண்டனையாகிவிடுமோ என்ற அச்சம் இப்போது கட்சியில் நிலவுகிறது. #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை