மகளிர் உரிமை தொகை ரூ.1000

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
820 views
3 months ago
தற்போது தேர்தல் வாக்குறுதி தயாரிப்பதற்கு என்றே குழுக்களை அமைத்து வருகின்றன. இதில் மகளிர் உரிமை தொகையை பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தப்படாது. அதேபோல் ஆயிரம் என்று வழங்கப்படும் இந்த உரிமை தொகை 1500 அல்லது 2000 ரூபாய் ஆக உயர்த்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் கட்சிகளை பொறுத்தவரை என்னென்ன வாக்குறுதிகள் வாக்காளர்களை சாதகமாக இருக்கும். நமக்கு உடனே வாக்களிக்க விரும்புவார்கள் என்பதை கவனமாக பார்க்கின்றன. இப்போது எல்லாம் நிபுணர் குழுவை வைத்து தொகுதிவாரியாக ஆய்வு செய்து பிரச்சனைகளை பட்டியிலிட்டு அதற்கு தகுந்தாற் போல் தான் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. அண்மை காலத்தில் இலவச வாக்குறுதிகள் பல ஏற்கனவே ஆண்ட அதிமுக மற்றும் தற்போது ஆண்டு வரும் திமுகவால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அண்மையில் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், குடும்பத்திற்கு ஒரு வீடு-மோட்டார் சைக்கிள் என்பது உள்பட 12 வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ்-மீனவ மக்களுக்கு வீடுகள் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். திமுகவை பொறுத்தவரை கடந்த சட்டசபை தேர்தலின் போது, அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்தது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து. இதன்படி ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை அளித்தது. இந்த பட்டியலில் விடுபட்ட நிறைய பெண்களுக்கு, தங்களுக்கும் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை அளித்தது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தமிழக அரசு விடுபட்ட பெண்களுக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விதிகளை தளர்த்தியது. அதன்படி 2-ம் கட்டமாக கடந்த 12-ந்தேதி முதல் மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இந்த சூழலில் "வெல்லும் தமிழ்ப்பெண்கள்" விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ரூ.1,000 வழங்குவது தொடக்கம் மட்டும்தான். இந்த தொகை நிச்சயம் உயரும் என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க பெண்களுக்கு ரூ.1,500 உரிமைத்தொகை அறிவித்து இருந்தது. எனவே இந்த முறையும் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்துக்கு மேலான ஒரு தொகையை கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் 1500 முதல் 2000 வரை மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும். அதேநேரம் அதனை ஈடுகட்ட சொத்து வரியை உயர்த்துவது, மதுபானங்களின் விலையை உயர்த்துவது, பத்திரப்பதிவில் உயர்த்துவது, உள்பட அரசு பல்வேறு வழிகளை கையாளவும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும், போக்குவரத்து, மின்சாரம், சொத்து வரி மற்றும் மதுபானங்களின் விலை ஆகியவற்றில் கைவைக்க அதிக வாய்ப்பும் உள்ளது. ##📰டிசம்பர் 22 முக்கிய தகவல்📺 #மகளிர் உரிமை தொகை ரூ.1000
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
668 views
4 months ago
மகளிர் உரிமை திட்டத்தில் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்தவகையில் அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது. அதன்படி 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிதாக விண்ணப்பத்தவர்களில் சுமார் 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 12ஆம் தேதி) மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றால் தகுதியான நபர்கள் அப்பகுதி கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இது தொடர்பாக அமைச்சர் சக்ரபாணி கூறிய போது, 29 லட்சம் மகளிர் உரிமைத் தொகை காண விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்தால் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார் #📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 #மகளிர் உரிமை தொகை ரூ.1000 #முன் கூட்டியே மகளிர் உரிமை தொகை.