horror

சரவணகுமார்©183
591 views
6 days ago
•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்! 1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது. 1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது. •64 பொது மக்கள் கொல்லப்பட்டனர் •100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர் •50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். •சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. •40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன . •150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன. •வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை. வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் ம - ர். அப்படித்தானே? #@அமானுஷ்யம்@( HORROR ) #தமிழ்நாடு அரசியல் #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️
சரவணகுமார்©183
653 views
1 months ago
"லஞ்சம் கேட்ட போலீஸ்.. CM போர்ட்டலில் புகார் கொடுத்த விவசாயி மகன்! 😡 காவல் நிலையத்திற்கு வரவழைத்து அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்த கொடூரம்! உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்! இந்தியாவில் காவல்துறை அராஜகம் மற்றும் ஊழலின் உச்சக்கட்ட கொடூரத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 'சால்ஸ்டிஸ் மீடியா' பக்கத்தில் வெளியாகியுள்ள இந்தத் தகவல் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர வைத்துள்ளது. புகார் கொடுத்ததால் ஆத்திரம்: பாதிக்கப்பட்ட விவசாயியின் மகன், காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னிடம் ₹20,000 லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் ஆன்லைன் புகார் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவர்தன் காவல் நிலையத்தின் சௌக்கி பொறுப்பதிகாரி, அந்த இளைஞரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். காவல் நிலையத்தில் அராஜகம்: நிலுவையில் இருந்த புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி, அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பில் வெறித்தனமாகக் காலால் எட்டி உதைத்துத் தாக்கியுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலால் அந்த இளைஞரின் விதைப்பை முற்றிலும் சிதைந்து, அவர் கடுமையான மருத்துவப் பாதிப்புடன் உயிருக்குப் போராடி வருகிறார். மருத்துவமனையில் வலியால் துடிக்கும் அந்த இளைஞரையும், அவரது குடும்பத்தினரின் கண்ணீரையும் பார்க்கும் எவர் நெஞ்சமும் பதறுகிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே, ஊழலைத் தட்டிக்கேட்டதற்காக ஒரு சாமானிய குடிமகனை இந்த அளவிற்கு மிருகத்தனமாகச் சிதைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அராஜகப் போலீஸ் அதிகாரிகள் மீது அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பணிநீக்கம் செய்ய வேண்டும் என இணையத்தில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன! கேளுங்கள், தட்டிக்கேளுங்கள்! #UttarPradesh #TamilnaduNews #@அமானுஷ்யம்@( HORROR ) #தமிழ்நாடு அரசியல் #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️